வள்ளலாக வாரிக் கொடுத்துக் கவிஞர்களையும் அறிஞர்களையும் ஆதித்தவன் போஜராஜா. அவனுடைய ஆஸ்தான கவியாகக் காளிதாஸன் இருந்தான். போஜனுக்கு நல்ல ராஸிக்யம் உண்டு. அவனுக்கேகூடக் கவி பண்ணும் ஸாமர்த்யமுண்டு. அதனாலே ஆதரிக்கிற ராஜா, அவனால் ஆதரிக்கப்படும் கவி என்ற அந்த இரண்டு பேரும் இல்லாமல் கவியோடு இன்னொரு கவி என்று ஸமதையாக, ஸ்நேஹிதமாக equal level-ல் (ஸம மட்டத்தில்) பழகி வந்தார்கள். இப்படிப் பழகிப்பழகி ஒருத்தருக்கொருத்தர் பரம ப்ரியமாய் விட்டார்கள்.