இதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவதற்கில்லை. ரொம்பவும் பால்யத்திலேயே பட்டத்துக்கு வந்து, அந்த ஆதி காலத்தில் நல்ல யோக நியமங்களோடு வாழ்ந்தவர்கள் புருஷாயுஸ் என்கிற 120 வருஷம் ஜீவித்திருந்தால்கூட அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. அதனால் 80-90-100 வருஷம் என்பது மிகைப்படுத்தினதாக இருக்க வேண்டியதில்லை. நிஜமாகவே இருக்கும். நானே “போவேனா பார்!” என்று 55 வருஷமாக ஸ்வாமிகளாக உட்கார்ந்திருக்கவில்லையா1? ஆனபடியால் அந்தப் பூர்வாசார்யார்களின் பீடாதிபத்ய காலத்தில் கத்திரிக்கோல் போடத் தேவையில்லை!