இம்மை என்று எடுத்துக் கொண்டால் இந்தத் தமிழ் தேசத்துடைய இயற்கை வளத்துக்கு முதல் காரணமாயிருப்பது காவேரிதான். அந்தக் காவேரி இங்கே வரக் காரணம் யார்? பிள்ளையார்தானே? அவர் காக்கா ரூபத்தில் கொடகுக்குப் போய் அகத்தியருடைய கமண்டலுவைக் கவிழ்த்துவிட்டதில்தானே காவேரி உண்டாயிற்று? அவருடைய ஸம்பந்தத்தால் இம்மைக்குப் பயிர் – பச்சையும் உயிருக்கு ஜீவாதாரமான தீர்த்தமும் நமக்குத் தாயாராகக் காவேரி தருகிறாள்