நான்கு வேதங்களில் ரிக் வேதம் முதலிலும், அதைத் தொடர்ந்து பெரிய கால இடைவெளியில், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் வந்தன என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறு வதை, ஹிந்து மத மஹான்கள் ஏற்பதில்லை. இவை எல்லாமே ஒரே சமயத்தில் கிட்டியவை என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள்; ரிக் வேதத்திலேயே, மற்ற வேதங்களைப் பற்றிய குறிப்புகள் வருவதால், இந்த நம்பிக்கையே ஏற்புக்கு உரியதாக இருக்கிறது. ஒவ்வொரு வேதத்திலும் சில கிளைகள் – சாகைகள் இருக் இன்றன. இது தவிர ஒவ்வொன்றும் மூன்று பகுதிகளாக இருக் இன்றன. இவற்றிற்கு முறையே ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண் யகம் என்று பெயர். ‘ஸம்ஹிதை’ என்றால் ஒரு தொகுப்பு; இது மந்த்ரங்கள் அடங்கியது. நான்கு வேதங்களின் ஸம்ஹிதைகளில், 20,000 மந்த்ரங்களுக்கு மேல் அடங்கியிருக்கின்றன.
‘புனிதமான நூல்! என்று ஓர் அர்த்தமுடைய ‘பிராம்மணம்’ என்ற பகுதியில், வேத ரீதியான சடங்குகள் விவரிக்கப்படுகின்றன. இந்தச் சடங்குகள் எப்படிச் செய்யப்பட வேண்டும், மந்த்ரங்களின் பொருளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் – என்பதையெல் லாம் பிராம்மணம் விவரிக்கிறது. யாகங்களுக்கான வழிமுறையை யும், அந்த யாகங்களில் பயன்படுத்தப்படும் மந்த்ரங்களின் தன்மையையும் கூறுகிற விளக்க உரை என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து வருவது ‘ஆரண்யகம்’. ஆரண்யம் என்றால் காடு. இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் யாகங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. அவை, இல்லறத்தைத் துறந்து, காடுகளுக்குச் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, தனிமையில் வாழ் பவர்களுக்காக நியமிக்கப்பட்டவை அல்ல. ஆனால், வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள், வாழ்க்கை நலன்களைத் தருவன மட்டும் அல்ல: ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ள மந்த்ரங்களை, பிராம்மணத்தில் விவரிக்கப்பட்டுள்ள முறையில் பயன்படுத்தி, சடங்குகளைச் செய்து வருகிறவன், தூய மனதையும் பெறுகிறான். அப்படி மனத் தெளிவு பெற்றுவிட்ட நிலையில், அவன் தனிமையை நாடுகிறான். அவன் மனம் தத்துவ விசாரணையில் இறங்குகிறது. அந்த நிலையில் ஒருவனுக்கு வழி காட்டுவதே ‘ஆரண்யகம்’ என்ற பகுதி.
‘பிராம்மணத்தில் கூறியுள்ளது போல யாகங்களை ஏன் செய்கிறோம்? அதில் பயன்படுத்தப்படுகிற, ஸம்ஹிதையில் வருகிற மந்த்ரங்களின் உட்பொருள் என்ன?” என்பதை ஆரண் யகம் விளக்குகிறது. ஆரண்யகங்களின் முடிவில் வருவது உபநிஷத்துக்கள். இது வும் வேதத்தின் ஒரு பகுதியே; ஆனால் இது பற்றித் தனியே பல பண்டிதர்கள் விளக்க உரைகள் கூறியிருப்பதாலோ என்னவோ – உபநிஷத்துக்கள், நடைமுறையில் வேதங்களுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட விஷயமாகப் பேசப்படுகின்றன. ஆனால் உண்மையில், இதுவும் வேதத்தைச் சார்ந்ததே; வேதத்தின் முடிவு உபநிஷத்து. ஸம்ஹிதை – ஒரு மரமென்றால், பிராம்மணம் – அதன் பூக்கள்; ஆரண்யகம் – அதில் உள்ள காய்; உபநிஷத்து – அது தருகிற பழம் என்று காஞ்சி மஹாஸ்வாமிகள் விளக்கியிருக்கிறார். ஞானப் பாதையின் வழியே, இறை தத்துவம் பற்றியும், ஆத்மா பற்றியும் புரிந்து கொண்டு, தளைகளை வெட்டி எறிந்து, மன விடுதலை பெறுகிற மார்க்கத்தைப் போதிப்பவை உபநிஷத்துக்கள்.
உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்று அழைக்கப்படுகின்றன. அந்தம் என்றால் முடிவு; ‘ஆதியோடு அந்தமாக‘ என்றால் ஆரம்பம் தொட்டு முடிவு வரை. வேதத்தின் முடிவு வேதாந்தம்; அது உபநிஷத்து. இந்தச் சொல்லிற்கு அர்த்தம் – அருகே அமர்வது. ‘சடன் குருவின் அருகே அமர்ந்து கற்பது; இறைவனின் அருகே நெருங்க வழி காட்டுவது! என்ற விளக்கங்கள் உபநிஷத்து என்ற சொல்லிற்குக் கூறப்பட்டுள்ளன.
ரிக் வேத ஸம்ஹிதையில், அக்னி, இந்திரன், வாயு, வருணன், விஷ்ணு, ருத்ரன், ஸரஸ்வதி… என்று பல தேவர்கள் போற்றப் படுகின்றனர். திருமணச் சடங்குகளில் இன்றும் கையாளப்படுகிற சடங்குகள், ரிக் வேதத்தில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமைந்துள்ளன. பின்னர்ப் புராணங்களில் கூறப்படுகிற சில நிகழ்ச்சிகளும், இந்த மந்த்ர பாகமாகிய ஸம்ஹிதையில் குறிப் பிடப்படுகின்றன. வியாதி, விஷத்தினால் வரும் விளைவு ஆகிய வற்றை நீக்குகிற மந்த்ரங்கள், கர்ப்பமாக உள்ள பெண்மணிக்குச் சுகப் பிரசவம் ஆவதற்காக உதவுகிற மந்த்ரம் போன்றவை இதில் உள்ளன. ‘ரிக்’ என்பதே மந்த்ரங்களைக் குறிக்கும் சொல்தான்; அவையே ரிக் வேதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
பசுக்களின் மேன்மை; உழவர்களின் உயர்வு; நதிகள் சிலவற் றின் பெருமை, மழை பொழிவதற்கான மந்த்ரம்; கிருஷ்ண அவ தாரம், ராமாவதாரம்… ஆகியவை பற்றிய சில குறிப்புகள்… என்று பல விஷயங்கள் அடங்கியது ரிக் வேத ஸம்ஹிதை.
யஜுர் வேதத்தில் முக்கியமாக பல யாகங்கள் விவரிக்கப்படு இன்றன. யஜுஸ் என்றால் துதிப்பது எனப் பொருள் கொள்ளலாம். யாகம் எனப்படுகிற யக்ஞம் என்பதும், இந்த வேரிலிருந்து வரு வதுதான். யாகங்களுக்கான சடங்கு ரீதியான வழிமுறைகளைக் கூறுவது யஜுர் வேதம். இந்த வேதம், கிருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம் என்ற இரண்டு கிளைகளாகப் பிரிந்திருக் இறது. கிருஷ்ண என்றால் கறுப்பு; கிருஷ்ணனுக்கு ‘கரிய திரு மேனி! என்று கூறுகிறோம் அல்லவா? சுக்ல என்றால் வெண்மை. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ரிஷி யார், அது எந்தச் செய்யுள் இலக் கியத்தில் அமைந்துள்ளது, அதன் குறிப்பிட்ட தேவதை யார் – என்பதையெல்லாம் தெளிவாக விவரிப்பதால், வெளிப்படையாக – வெண்மையாக உள்ளது; அது சுக்ல யஜுர் வேதம், மற்றொரு பிரிவு இப்படி ரிஷி, தேவதைகளின் விவரங்களைத் தெளிவாகக் கூறவில்லை; அது கிருஷ்ண யஜுர் வேதம்.
இப்படி இந்த வேதத்தில் இரு பிரிவுகள் உண்டானது தொடர் பான நிகழ்ச்சி, ஸ்ரீமத் பாகவதத்திலும், விஷ்ணு புராணத்திலும் வர்ணிக்கப்படுகிறது. வைசம்பாயனர் என்கிற வியாஸரின் சீடர், கடமை தவறிய குற்றத்திற்கு உள்ளானார். அதைப் போக்கிக் கொள்ள, பிராயச்சித்தம் செய்வதற்காக முனைந்து அந்தப் பொறுப்பைத் தமது €டர்களிடம் ஒப்படைத்தார். அவர்களில் யாக்ஞவல்கியர் “மற்ற சீடர்கள், இதையெல்லாம் சரியாக அறிந்தவர்கள் அல்ல. இந்தக் கடமையைச் செய்து முடிக்கும் திறன் படைத்தவன் நான்தான்! என்று கூறினார். யாக்ஞவல்கியரின் இந்தப் பேச்சில் ‘தான்’ என்கிற கர்வம் தொனித்ததால், அவரைப் பார்த்து, ‘என் னிடம் நீ கற்ற வேதத்தைக் கக்கி விடு! என்று வைசம்பாயனர் உத்தரவிட்டார். யாக்ஞுவல்கியரும் அவ்வாறே கக்கிவிட்டார். வைசம்பாயனரின் வேறு சில டர்கள் ‘தித்திரி என்ற பறவையாக மாறி, இதை உண்டு விட்டனர். இத்திரி சாப்பிட்டது என்பதால், இது ‘தைத்திரிய ஸம்ஹிதை! ஆயிற்று.
இந்தக் கதையின் பொருளை நேரிடையாகப் பார்ப்பவர்கள் ‘அட! ஒருவர் கக்கினாராம்! மற்றவர் அதைச் சாப்பிட்டாராம்! அது ஒரு வேத ஸம்ஹிதையாம்!’ என்று நினைக்கலாம். இது தவறு. ‘அவன் உண்மையைக் கக்கிவிட்டான் என்று சொல்கிறோம்; ‘அவன் உண்மையை வாயின் வழியே வாந்தி எடுத்துவிட்டான்” என்றா அதற்கு அர்த்தம்? அவன் உண்மையைச் சொல்லிவிட்டான் என்பதுதானே பொருள்?
அதே போல இந்த நிகழ்ச்சிக்கு – குரு வின் கோபத்திற்கு ஆளான யாக்ஞவல்கியர், தாம் கற்றதை அங்கேயே விட்டுவிட்டார் – என்பதுதான் அர்த்தம். ‘தித்திரி‘ என்ற பறவையாக மாறி, சில €டர்கள் அதைச் சாப்பிட்டனர் என்பதற்கும் பொருள் உள்ளது. ‘அவன் அப்படியே கொத்திக் கொண்டு போய் விட்டான்” என்றால் ‘வாயால் கவ்விக் கொண்டு போய்விட்டான்” என்று அர்த்தமல்ல. ‘ஒரு விஷயம் சொன்னால் போதும்; அப்ப டியே கப்பென்று பிடித்துக் கொள்வான்’ என்றால், கையில் இறுக அந்த விஷயத்தைப் பற்றிக் கொள்வான் என்பதல்ல அர்த்தம். ‘சொன் னதை கிரஹித்துக் கொள்வான்’ என்பதே பொருள். ‘இத்திரி‘ என்ற ஒரு ரிஷி இருந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது என்பதை மனஇல் கொண்டால் – ‘இத்திரி, யாக்ஞவல்கியர் கற்ற பாடத்தைக் கற்றார் என்பதே இதற்குப் பொருள்! என்ற விளக்கம் ஏற்புடையது என்பது விளங்கும்.
இத்திரி என்ற ரிஷி மூலமாக வெளிவந்ததால், அது தைத்திரிய ஸம்ஹிதை. யாக்ஞுவல்கியரோ, குருவின் ஆணைக் குப் பணிந்து, தாம் கற்ற விஷயங்களில் எந்த அதிகாரமும் தமக்கு இல்லை என்ற வகையில் அதைத் துறந்து – பின்னர்த் தாமே முனைந்தார்; அவர் மூலமாக சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதை வந்தது. நமது நூல்கள் எல்லாம் பிதற்றல் – என்று ஒரு தீர்மானத்தைச் செய்து கொண்டு, அந்த அடிப்படையில், இந்த மாதிரி விஷயங் களுக்கு நேரிடை அர்த்தம் எதுவோ, அதையே எடுத்துக் கொண்டு ‘அவர் கக்கினார்; இவர் சாப்பிட்டார்; ஆக மொத்தம் அசிங்கம்’ – என்று முடிவு செய்பவர்கள், எப்படிப்பட்டவர்கள்?
‘உன்னுடைய பாட்டனார், திருக்குறளைப் பரிமேலழகர் உரையோடு அப்படியே, பக்கம் பக்கமாகக் கரைத்துக் குடித்தவர்! என்று ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘ஐயய்ய/ நம்ம தாத்தா இப்படிப் பட்டவரா? திருக்குறளையும், அதற்கு பரிமேலழகர் எழுதிய உரை யையும், பக்கம் பக்கமாகக் இழித்து, தண்ணீரில் கரைத்து, அதைக் குடித்தாராமே! நல்ல தாத்தா வாய்த்தார் நமக்கு! சரியான பைத்தியம்!” என்று அர்த்தம் செய்து கொள்கிறவருக்கு நிகரானவர்கள் இவர்கள். பாட்டனார் மீது மரியாதை உள்ளவன், ‘ஆஹா! நமது பாட்டனார் எப்படிப்பட்ட சாதனையாளர்! இவ்வளவு உயர்ந்த விஷயத்தை, இத்தனை ஆழமாகக் கற்றவர் அவர் என்பது எவ்வளவு பெருமை யாக இருக்கிறது?! என்றுதான் நினைப்பான். அம்மாதிரி அணுகு முறையோடு, இந்த விஷயங்களை நாம் அணுக வேண்டும். நமது இதிஹாசங்களையும், புராணங்களையும் எழுதியவர்கள் மஹா கவிகள். உபமான, உபமேயங்களைக் கையாள்வதில் வல்ல வர்கள். அந்தப் பாண்டியத்துடன் விளங்கிய அவர்கள் கூறிய வற்றை, அதற்குரிய ரஸனையோடு நாம் அணுகினால், விஷயம் ஓரளவாவது புரியும். இல்லாவிட்டால், அர்த்தம் அனர்த்தமாகும்.
அக்னி ஹோத்ரம் பற்றியும், ராஜஸுூயம், அச்வமேதம் போன்ற பல யாகங்கள் பற்றியும் யஜுர் வேதம் விளக்குகிறது. வாக்கிற்கும், மனதிற்கும் ஏற்பட்ட போட்டி; விஸ்வாமித்திரருக்கும் வசிஷ்ட ருக்கும் இடையே ஏற்பட்ட உரசல் – போன்றவை கூறப்படு இன்றன. ஸ்ரீ ருத்ரம் என்ற, இன்றும் மிகப் பரவலாக ஓதப்படுகிற சிவஸ்துதியும், விஷ்ணுவின் வராஹ அவதார மகிமையும் இதில் உள்ளன.
கணிதம், கலாச்சாரம், அந்தக் கால நாகரிகம் போன்றவற் றைப் பற்றியும் யஜுர் வேதத்தின் மூலம் அறியலாம். ‘ஸாம‘ என்றால் மன அமைதி, சமாதான வழிமுறை. ஸாம வேதத்தில், அநேகமாக எல்லாமே ரிக் வேத மந்த்ரங்களாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றைச் சொல்கிற முறை வேறானது. அக்னி, இந்திரன், ருத்திரன், விஷ்ணு போன்றவர்கள் போற்றப் படுகிறார்கள். விஷ்ணுவின் அவதாரங்களில் சில பற்றியும் ஸாம வேதம் கூறுகிறது. ‘ஸாமத்தை ஓதுவதால் – ஸாமத்தை இசைப்ப தால் – இன்புறுகிறவளே!’ என்று அம்பிகையை, லலிதா ஸஹஸ்ர நாமம் துதிக்கிறது. எனென்றால், இதை ஓதுகிற முறை சங்கீதம் போல அமைக்கப்பட்டிருப்பதால், இது காதுகளுக்கு மிகவும் இனிமை யானது.
அதர்வண என்றால் புரோகிதன். இந்தப் பெயரில் ஒரு ரிஷி யும் இருந்திருக்கிறார். ரிக் வேத மந்த்ரங்கள், தேவர்களைப் போற்று இன்றன; அதர்வண வேத மந்த்ரங்கள் அவர்களைப் போற்றி, காரியங்களை வேண்டுகின்றன. அறிவு வளர்ச்சி; நோய் தீர்ப்பு: வெற்றிக்கு வழி; சுகப் பிரசவம்; சிறுநீரகக் கோளாறு நீங்குதல்; இதய நோய் அகலுதல்; பாபத்தை நீக்குவது; பயத்தை விலக்குதல்; ப் பயிர்கள் செழித்தல் – போன்றவைக்கெல்லாம் பல மந்த்ரங்கள். அதர்வண வேதத்தில் உள்ளன. விவசாய மற்றும் வர்த்தக விதிமுறை கள்; அரசு நிர்வாகம்; படை அமைப்பு; இதய நோய், சருமநோய் நீங்குகிற வழிகள்; மூலிகை ரகஸ்யங்கள் போன்றவையும் பேசப் படுகின்றன. அரசியல், மருத்துவம், ஆயுதக் கலை போன்றவற்றுடன், இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பு பற்றிய விஷயங் களும் அதர்வண வேத ஸம்ஹிதையில் இருக்கின்றன. இவை பற்றியெல்லாம் பெரியவர்கள் பலர் சொல்லியிருப் பதை, நான் தந்துள்ளேனே தவிர, இவற்றை எல்லாம் படித்துத் தேர்ச்சி பெற்று விடவில்லை. சட்டம் பற்றி ஓர் அறிமுகமாவது இருக்க, வக்கல்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். வேதங்கள் போன்ற நூல்கள் பற்றி அறிமுகம் கிட்ட, பண்டிதர்களிடமும், பெரியவர்களிடமும் விளக்கம் பெற வேண்டும். அந்த முயற்சியை மேலும் தொடர்வோம்