குருவுக்கு நெருக்கமாக இருந்து

குருவிற்கு நெருக்கமாக இருந்து…  நான்யார்‌? நீ யார்‌? இந்த உலகம்எத்தகையது? இது எப்படி உண்டாகியது? இதன்காரணகர்த்தா யார்‌? மரணம்என்பது என்ன? அதற்குப்பின்நடப்பது என்ன? ஆன்மா என்பது என்ன? ஜீவாத்மா எது? பரமாத்மா யார்‌? ப்ரும்ஹம்என்கிற இறைவன்எத்தகையவன்‌? அவனை உணர்வது எவ்வாறு?… என்பன போன்ற மிகவும்சிக்கலான கேள்விகளுக்கு விடை காண முயல்இன்றவை, உபநிஷத்துக்கள்‌. அவற்றைப்படித்து, இந்தக்கேள்வி களுக்கான விடைகளைப்புரிந்து கொண்டு, ப்ரம்மனை உணர்ந்து விடலாமா? அது அவ்வளவு எளிதான விஷயமல்ல

இதை உபநிஷத்துக்களே கூறுகின்றன

நாயமாத்மா ப்ரவசனேன லப்யா

நமேதயா பஹுூனா ச்ருதேன

அதாவதுபிரசங்கங்கள்மூலமாகவும்‌, அறிவுத்திறன்கொண்டும்‌, பெரிய படிப்பினாலும்மட்டுமே இதை அறிந்து கொண்டு விட முடியாது

பின்எப்படித்தான்புரிந்து கொள்வது? அதுவும்கூறப்பட்டிருக்கிறது

தத்வித்தி: ப்ரணிபாதேன 

பரிப்ரசச்னேன ஸேவயா

 தன்னடக்கத்துடன்தன்னை அர்ப்பணித்து விடுவதாலும்‌,  விடா முயற்சியுடன்உணர்ந்து கொள்ள முனைவதாலும்‌, பணி விடையினாலும்இதை அறியலாம்‌. 

அதாவது தவம்செய்ய வேண்டும்‌. தவம்என்றால்நெருப்பின்மீது நிற்பதோ, ஆணிகள்மீது நிற்பதோ, வெய்யில்‌ – மழை பாராமல்பட்டினி கிடந்து, வெட்டவெளியில்ஒற்றைக்காலில்நிற்பதோ அல்ல. முனைப்புதான்தவம்‌. ‘தபஸ்‌’ என்ற சொல்லிற்கு தகப்பது, உஷ்ணம்என்ற பொருள்கள்உண்டு. ஒரு விஷ யத்தைத்தொடர்ந்து அழுத்தத்துடன்செய்தால்‌, ஃப்ரிக்ஷன்மூல மாக உஷ்ணம்உண்டாகிறது. அதுவே சக்திஎனர்ஜி. விடா முயற்சியுடன்‌, ஒரு விஷயத்தில்ஒருவன்முனையும்போது, ‘தவம்கிடக்கிறான்‌’ என்று இன்றும்பேசுகிறோம்‌. அந்த முனைப்பு தான்தவம்‌. 

ஒரு விஞ்ஞானி, ஒரு பரிசோதனையைப்பற்றி விடாமல்சிந்இக்கிறான்‌; ஓர்ஓவியன்தான்வரைய இருக்கும்சத்திரம்பற்றிச்சிந்தித்துக்கொண்டே இருக்கிறான்‌; ஒரு கவிஞன்தான்எழுத நினைக்கிற கவிதை பற்றி முனைப்புடன்சிந்தனை செய்கிறான்‌. இதுதான்அப்யாஸம்‌. இந்த அப்யாஸம்கடுமையாகப்பின்பற்றப்படுகிறபோது, அதுவே தவம்‌. 

யஸ்மின்விஞ்ஞாதே ஸர்மிதம்‌ 

விஞ்ஞானம்பவதி 

இதை உணர்ந்து கொண்டால்‌, அறிய வேண்டியவை அனைத்தையும்அறிந்து கொண்டதாகும்‌. 

உபநிஷத்துக்கள்கூறுகிற தத்துவங்கள்இத்தகையவை எனில்‌, அவற்றைப்பற்றி இந்தத்தொடரில்அளிக்கப்படுகிற விளக்கங்களைக்கொண்டு, அந்த உண்மைகளைப்புரிந்து கொள்வது எப்படி? புரிந்து கொண்டுவிட முடியாது; ஓர்அறிமுகம்பெறலாம்‌. இந்தத்தொகுப்பின்நோக்கம்‌ – பயனுள்ள ஓர்அறிமுகத்தைத்தருவதுதானே தவிர, இவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம்‌, சந்தேகமற விளக்கி விடுவது அல்ல. அறிமுகம்பெறுவோம்‌. 

உபநிஷதம்என்ற சொல்லிற்குஅருகே அமர்வது! என்று ஒரு பொருள்‌. குருவுக்கு நெருக்கமாக இருந்து, சடன்பெறுகிற உபதேசம்இது.

வேறு ஒரு வகையிலும்‌, இந்தத்தத்துவ போதனைகளுக்கு, ‘உபநிஷத!’ என்ற பெயர்பொருந்துகிறது. ‘ஸத்‌’ என்ற சொல்லிற்கு தளர்த்துவது, அழிப்பது, செல்வது என்ற அர்த்தங்கள்உண்டு. சம்ஸாரத்தளைகளைத்தளர்த்திவிட்டு, அறியா * மையை அழித்து, பிரும்ஹனைப்பற்றிய உணர்வுக்கு இட்டுச்செல்வது, உபநிஷத்‌. 

சீடனுக்கு, குரு உபதேசித்தார்என்றால்‌, அவர்களிடையே இருந்த நெருக்கம்சாதாரணமானது அல்ல. சீடனுக்குஅந்தே வாஸி! என்று ஒரு பெயர்உண்டு. இதற்குமிக அருகில்இருப்பவன்‌’ என்றும்பொருள்கூறலாம்‌. ‘உள்ளே இருப்பவன்‌! என்றும்சொல்லலாம்‌. அதாவது குருவின்உள்ளேயே இருப்பவன்போல, குருவிற்கு அவ்வளவு நெருக்கமாகச்சீடன்இருக்க வேண்டும்‌. 

இன்றுஇன்னார்என்குருஎன்று நாம்சர்வ சாதாரணமாகக்கூறுகிறோம்‌. இன்னாரை நான்மதிக்கிறேன்‌’ என்றோ, ‘வணங்கு இறேன்‌’ என்றோ, ‘இன்னாரிடம்பக்தி செலுத்துகிறேன்‌’ என்றோ சொன்னால்கூட தவறில்லை. ஆனால்‌ ‘இன்னார்என்குருஎன்று சொல்வது, அநேகமாக எல்லா சமயங்களிலுமே தவறான வார்த்தை யாகி விடுகிறது. குருவினால்ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்உள்ளே உறைவது போல்‌, அவ்வளவு நெருக்கமாக இருந்து, அவருக்குப்பணிவிடை செய்து, அவருடைய ஆரியின்மூலம்உபதேசம்பெறுகிறான்சீடன்‌. அதை இவ்வளவு சாதாரணமாக, “இவர்என்னுடைய கணக்கு வாத்தியார்‌! என்று கூறுவது போல, ‘இவர்என்னுடைய குரு! என்று சொல்வது, பொருத்தம்இல்லாத பேச்சு

இந்தக்குருசிஷ்ய தொடர்பு பற்றி இவ்வளவு பேசுவா னேன்‌ – என்ற கேள்வி சிலர்மனதில்எழலாம்‌. இந்தத்தொடர்பு இல்லையென்றால்உபநிஷத்துக்களே இல்லை. ஹிந்து மதமே இல்லை. குருசிஷ்ய உறவு முறை அவ்வளவு முக்கியத்துவம்வாய்ந்தது. ஒரு குரு, ஒரு சீடனுக்கு உபதேசிப்பதற்கு முன்பாக, அவனுக்கு எவ்வளவு கடுமையான பரீட்சைகளை வைத்தார்என்பதைப்பார்க்கும்போது, இந்தக்குருசிஷ்ய உறவின்தன்மை புரியும்‌.

உத்தாலகன்என்ற சீடனின்குரு அவனைப்பார்த்து, ‘மழைத்தண்ணீர்வெள்ளம்போல வருகிறது. வயல்களில்இந்தத்தண்ணீர்பாய்ந்தால்‌, பயிர்நாசமாகிவிடும்‌. அந்தத்தண்ணீரைத்தடுத்து, வயலில்அது பாயாமல்பார்த்துக்கொள்‌! என்று கட்டளை இட்டார்‌.  உத்தாலகன்‌, மண்ணைப்போட்டு, கல்லைப்போட்டு, மரத்தைப்போட்டு, வயலுக்குள்மழைத்தண்ணீர்போகிற வழியை அடைக்க முயற்சித்தான்‌. முடியவில்லை. குருவோ அந்த வழியை அடைக்குமாறு கட்டளையிட்டுவிட்டார்‌. 

உத்தாலகன்பார்த்தான்‌. ஒரு முடிவிற்கு வந்தவனாக, தானே அந்த வழியை அடைத்துக்கொண்டு படுத்துவிட்டான்‌. பொழுது விடிந்தது. குரு வந்து பார்த்தார்‌. உத்தாலகன்விறைத்துக்இடந்தான்‌. 

குருவின்கட்டளையை நிறைவேற்ற, தன்னையே தியாகம்செய்ய முன்வந்த சீடனின்செயல்குருவின்மனதை நிரப்பியது. அவனை எழுப்பி, ‘நீ இந்த விநாடியிலிருந்து, எல்லாவற்றையும்உணர்ந்தவன்ஆவாயாகஎன்று ஆசிர்வதித்து, உபதேசம்செய்தார்‌. 

இதே போல, மற்றொரு இதிஹாச நிகழ்ச்சி. மாடுகளை மேய்க்கும்பணியை தமது சீடனிடம்ஒரு குரு ஒப்படைத்தார்‌. காலையிலிருந்து மாலை வரை இந்த வேலையைச்செய்தும்களைப்புறாத சீடனைப்பார்த்து, ‘எப்படி இவ்வளவு தெம்புடன்இருக்கிறாய்‌?” என்று குரு கேட்டார்‌. சிஷ்யன்‌ ‘நான்தான்மாடு கள்சிலவற்றின்பாலைக்கறந்து குடித்து விடுகிறேனே! அத னால்களைப்பு இல்லை! என்றான்‌. 

அவ்வாறு செய்வது தவறு என்று குரு சொல்லி அனுப்ப, மீண்டும்சில நாள்கள்கழித்து, சடன்முன்பு போலவே இருப்பதைப்பார்த்த குரு, அது எவ்வாறு என்று கேட்டார்‌. ‘பசுக்களி டம்பால்குடித்த கன்றுகளின்வாய்களில்இருக்கும்நுரையை நான்சாப்பிட்டு வருகிறேன்‌! என்றான்‌. 

அதையும்குரு கண்டித்துத்தடுத்தார்‌. சீடனின்ஆரோக்கியம்பழுதில்லாமல்தொடர்ந்தது. எப்படி என்று குரு விசாரிக்க, ‘பல வீடுகளுக்குச்சென்று பிக்ஷை (யாசகம்‌) பெற்று உண்கிறேன்‌. அதனால்களைப்பு இல்லைஎன்று கூறினான்சிஷ்யன்‌. 

பிகைஷ, குருவைச்சார்ந்தது என்பதால்‌, சீடன்அதை தன்னி டம்சேர்ப்பிக்க வேண்டும்என்றும்குரு சொல்ல, அதுவும்நின்றது

சில நாட்கள்கழித்து சடனைக்காணாமல்அவனைத்தேடிச்சென்ற குரு, ஒரு கிணற்றில்அவன்விழுந்து கிடப்பதைப்பார்த்தார்‌. ‘பசியைத்இர்த்துக்கொள்ள எனக்குத்தெரிந்த வழிகளை, தவறு என்று நீங்கள்கூறியதால்விட்டு விட்டேன்‌. உங்கள்சொல்லை மீற எனக்கு மனம்வரவில்லை. ஆகையால்பசியை அடக்க, கையில்இடைத்ததைச்சாப்பிட்டேன்‌. அது எருக்கம்பூ. கண்பார்வை போய்விட்டது. கிணற்றில்விழுந்தேன்‌’ என்றான்சடன்‌. 

அவனுடைய உண்மைப்பற்றைக்கண்டு வியந்த குரு அவ னுக்கு, அஸ்வினி தேவர்களைத்துதிக்கும்சில மந்திரங்களை உபதேசிக்க, அவன்அவற்றைக்கூறி கண்பார்வையை மீண்டும்பெற்றான்‌. பின்னர்குரு அவனுக்கு முழுமையான உபதேசத்தைச்செய்தார்‌. 

இந்த இதிஹாஸக்கதைகள்எடுத்துக்கூறுவதுபோல, கடும்பரீட்சைக்குப்பின்னரே, ஒருவனைத்தமது சீடனாக குரு ஏற்றார்‌. அப்படி ஏற்கப்பட்ட சீடர்களுக்கு, ரிஷிகள்செய்த உபதே சங்கள்‌ – உபநிஷத்துக்கள்‌. 

ரிஷிகள்தாங்கள்உணர்ந்ததைகண்டதைஅப்படியே சொல்லியது, வேத மந்த்ரங்களாக வந்திருக்கின்றன. இவை வேதங்களின்முதற்பகுதியான ஸம்ஹிதை, இரண்டாவது பகுதி யாய பிராம்மணம்‌, மூன்றாவது பகுதியாகிய ஆரண்யகம்ஆகிய வற்றில்அடங்குகின்றன. வேதங்களின்இறுதிப்பகுதியாகிய உப நிஷத்துக்களில்ரிஷிகள்தாங்கள்உணர்ந்ததைக்கூறியதோடு மட்டுமல்லாமல்‌, அவற்றைப்பற்றித்தர்க்க ரீதியான விவாதங்களை ஏற்று, விளக்கங்களை அளித்தனர்‌. 

அறிவுப்பூர்வமான இந்த அணுகுமுறையைப்பாராட்டுக்குரி யதாக நினைத்த மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள்‌, ‘உபநிஷத்துக்கள்வேதங்களுக்கு நெடுங்காலத்திற்குப்பிறகு வந்தவை சொல்லப்போனால்வேதங்களை எதிர்த்து, அவற்றை நிராக ரித்து வந்தவை இவைஎன்று இீர்ப்பளித்துவிட்டனர்‌.

இது ஏற்கக்கூடியது அல்ல என்பதை, பண்டைய நூல்களும்அவற்றை ஏற்கிற ஆய்வாளர்களும்ஆதாரங்களுடன்விளக்கு கிறார்கள்‌. உபநிஷத்துக்கள்வேதங்களின்முற்பகுதியில்கூறப்பட்‌ _ டுள்ள விஷயங்களை ஏற்று, அவற்றை மீண்டும்கூறுகின்றன. இவற்றைக்கண்ட ரிஷிகள்உபநிஷத்துக்களில்போற்றப்படு கிறார்கள்‌. யாகங்களை, செயலைவேதங்கள்வற்புறுத்தின. அந்த செயலுக்குப்பின்‌, அந்தச்செயலினால்தூய்மை பெற்று, ஞானத்தை நாட வேண்டிய வழிகளைஉபநிஷத்துக்கள்வற்புறுத்தின. ஒன்று ஆரம்பம்‌; மற்றது முடிவு. இரண்டும்‌, ஒன்றின்இரு பகுதிகளே தவிர, வெவ்வேறானவை அல்ல.