தத்துவங்கள் மூன்றானாலும்…

ஜீவாத்மா பரமாத்மா என்று இரண்டு கிடையாது; ஆத்மா ஒன்றுதான்‌. அதுதான்ப்ரம்மம்‌ – என்கிற அத்வைத தத்துவத்இலிருந்து, விசிஷ்டாத்வைதம்என்கிற சித்தாந்தம்மாறுபடுகிறது. போதாயனர்முதல்பலர்இதை விளக்கி இருந்தாலும்‌, இதை மிகச்சிறப்பாக ஸ்தாபித்தவர்ராமானுஜர்‌. ஆத்மாவும்‌, ப்ரம்மமும்ஒன்றே தவிர, இரண்டானதல்லஎன்று கூறுகிற அத்வைத சத்தாந்தத்தை விசிஷ்டாத்வைதம்ஏற்கவில்லை. ‘இரண்டானது அல்ல தான்‌ – ஆனால்சில விசேஷங்களுடன்‌’ என்று விசிஷ்டாத்வைத சித்தாந்தம்கூறுகிறது. இதன்படி ஜீவாத்மா என்பது பரமாத்மா வினுடைய சரீரம்‌, உடல்‌. அதாவது பரமாத்மா, ஜீவாத்மாவின்ஆன்மா. ”ஒரு விளக்கு அல்லது சூரியன்இருக்கிறது. அதிலிருந்து ஒளி வருகிறது. ஒரு வகையில்பார்த்தால்‌, அந்த ஒளி, அந்த விளக்கு அல்லது சூரியனைச்சார்ந்ததுதான்‌. ஆனால்விளக்கிலிருந்தும்‌, சூரியனிலிருந்தும்அந்த ஒளி மாறுபட்டதாகவும்இருக்கிறது. அது வேறு, இது வேறு என்று ஆகிறது. இதனால்தான்‌, ‘இரண்டானது அல்லஆனால்சில விசேஷங்களுடன்‌’ என்று கூற வேண்டி இருக்கிறது.” இது விசிஷ்டாத்வைதம்சொல்வது

ஆத்மாவைசரீரிஎன்று இந்த சித்தாந்தம்வர்ணிக்கிறது. சரீரத்இற்கும்‌, சரீரிக்கும்உள்ள தொடர்பு விசிஷ்டாத்வைத சம்பிர தாயத்தின்மிக முக்கியமான அம்சமாகும்‌. சரீரம்‌, சரீரியினால்தாங்கப்படுகிறது. அதாவது தாயின்கர்பத்தில்ஆன்மா உட்புகுந்து சரீரம்பிறக்கிறது. ஆன்மா விலகும்போது சரீரம்அழிகிறது; மரணம்எய்துகிறது. சரீரம்இயங்குகிற வரையில்‌, அது ஆன்மாவுக்குக்கட்டுப்பட்டு இருக்கிறது. சொல்லப்போனால்‌, ஆன்மாவின்இஷ்டங்களைப்பூர்த்தி செய்வதற்காகத்தான்சரீரமே இருக்கிறது. மனதின்வழியாக, ஆன்மா ஒரு செயலை விரும்புகிறது; அதற்கேற்றபடி சரீரம்இயங்குகிறது. தாங்குதல்‌, கட்டுப்படுத்துதல்‌, அதிகாரம்செலுத்துதல்‌ – என்ற மூன்றையும்இந்த சரீரத்தைப்பொறுத்து ஆத்மா செயல்படுத்துகிறது. இது, சரீரசரீரி தொடர்பு முறை பற்றிய சுருக்கமான விளக்கம்‌. 

இந்த சரீரி அல்லது ஜீவாத்மாவிற்கு, ஓர்ஆத்மா உண்டு; அதுதான்ப்ரம்மம்‌, பரமாத்மா. ஜீவாத்மாக்கள்கணக்கற்றவை. அவை ஒரு சரீரம்சாய்கிறபோது, அதை விட்டு வேறு ஒரு உட லுக்குப்போகின்றன. ஆனால்பூர்வஜன்ம கர்மத்திற்கேற்றபடி அவற்றின்நிலை அமைகிறது. ஒருவன்மரணமடைகிறபோது, ஜீவாத்மா அந்த உடலிலிருந்து பிரிகிறது. அது மோட்சத்தை அடைந்து பரமபதத்தைப்பெறலாம்‌; அல்லது சுவர்க்கத்திற்குச்சென்று, தான்செய்த புண்ணியங்களுக்கேற்ப பலன்களை அனுபவித்து, பின்னர்மீண்டும்ஒரு சரீரத்தில்புகுந்து பூமிக்கும்இரும்பலாம்‌. அந்தப்பிறவி மனிதப்பிறவியாகவும்அமையலாம்‌; அல்லது மிருகம்‌, பறவை என்றவாறும்அமையலாம்‌. இது பூர்வஜன்ம கர்மத்தைப்பொறுத்தது

பரமாத்மாவிற்கும்‌, ஜீவாத்மாவிற்கும்உள்ள தொடர்பு என்ன? எள்ளில்எண்ணெய்இருப்பது போல, தயிரில்வெண்ணெய்இருப்பது போல, மரத்தில்நெருப்பு இருப்பது போலஜீவாத்மாவில்‌, ப்ரம்மம்ஆகிய பரமாத்மா இருக்கிறான்‌. புண்ணிய பாவங்களினால்அவன்இண்டப்படுவதில்லை. ஜிவாத்மாவிற்கு செயல்படும்தன்மையை ப்ரம்மம்அளிக்கிறது. அந்த வகையில்அனைத்திற்கும்காரணம்ப்ரம்மமே; ஆனால்‌, செயல்படுவது ஜீவாத்மாதான்‌. இதை விளக்க ஓர்உதாரணம்கூறப்படுகிறது. ஒரு செடி வளர்வதற்கு நிலம்‌, தண்ணீர்‌, விதை ஆகியவை தேவைப்படுகின்றன. நிலமும்‌, தண்ணீரும்எல்லா செடிகளுக்குமே ஒன்றுதான்‌. ஆனால்‌, விதைகள்வெவ்வேறா னவை. எல்லா செடிகளுக்கும்பொதுவான நிலமும்‌, தண்ணீரும்‌, செடி வளர்வதற்கு உதவுகின்றன; அதுதான்ப்ரம்மம்‌. அதே சமயத்தில்விதையும்தேவைப்படுகிறது; இது பல வகை யானது; அதுதான்ஜீவாத்மா. நிலமும்‌, தண்ணீரும்உதவினாலும்கூட, செடியின்தன்மை, விதையையும்பொறுத்து இருக்கிறது. அதுபோல, ப்ரம்மத்தினால்இயக்கப்பட்டாலும்‌, ஜீவாத்மாவின்செயல்பாடுகள்ஓரளவு சுதந்திரமுடையவை

விசிஷ்டாத்வைதம்மேலும்இப்படிச்சொல்கிறது : ஜீவாத்மா வின்ஆன்மாவாக ப்ரம்மம்இருந்தாலும்‌, அவன்எந்த விதத்இலும்பாதிக்கப்படுவதில்லை. தாமரை இலை மீது இருக்கிற தண்ணீர்‌, அந்தத்தாமரை இலையின்தன்மைகளால்எப்படிப்பாதிக்கப்படுவதில்லையோ, அது போல ப்ரம்மம்இருக்கும்‌. ஜீவாத்மா அப்படி அல்ல. அது பாதிக்கப்படுகிறது. இதற்கு ஆதாரமாக விசிஷ்டாத்வைதிகள்‌, முண்டக உபநிஷத்திலிருந்து, ஒரு பகுதியைச்சுட்டிக்காட்டுகிறார்கள்‌. 

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா 

ஸமானம்வ்ருக்ஷம்பரிஷஸ்வஜாதே

தயோரன்ய: பிப்பலம்ஸ்வாத்வத்தி

னச்னன்அன்யோ அபிசாகசதி 

இணை பிரியாத, ஒரே மாதிரி இரண்டு பறவைகள்ஒரே மரத்தில்அமர்ந்திருக்கின்றன. அவற்றுள்ஒன்று, பழத்தை ருசித்துச்சாப்பிடுகிறது. மற்றொன்று, அப்படித்இன்னாமல்பார்த்துக்கொண்டிருக்கிறது

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி, அந்த மரம்‌ – மனித உடல்‌; இரண்டு பறவைகள்‌ – ஜீவாத்மாவும்‌, பரமாத்மாவும்‌; ஜீவாத்மா, கர்மத்தின்பலன்என்ற பழத்தைத்இன்கிறது; அதாவது பூர்வஜன்ம கர்மபலனுக்கு உரிய வகையில்இன்ப, துன்பங்களை ஜீவாத்மா அனுபவிக்கிறது; பரமாத்மாவோ, அதே உடலில்இருந்தாலும்கூட, இந்த இன்ப துன்பங்களினால்பாதிக்கப்படாமல்‌, அவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.

ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்பதற்கும்‌ – அவை இரண்டும்சரீரத்ிதிவேயே உறைகின்றன என்பதற்கும்‌ – ஜீவாத்மா போல பரமாத்மா புண்ணிய பாவங்களினால்பாதிக்கப்படுவதில்லை என்பதற்கும்‌ – முண்டக உபநிஷத்தில்வருகிற இந்தப்பகுதியை விசிஷ்டாத்வைதம்எடுத்துக்காட்டுகிறது

அத்வைதமோ, அதே முண்டக உபநிஷத்‌, இதற்கு அடுத்துச்சொல்வதையும்சுட்டிக்காட்டுகிறது. புருஷனும்‌, ஆன்மாவும்ஒரே மரத்தில்உள்ளனர்‌. புருஷன்‌ – அதாவதுமனிதன்அறி யாமையில்மூழ்கி, மோக வசப்பட்டு வருந்துகிறான்‌. ஆன்மா வின்மகிமையை அவன்உணர்ந்து பார்க்கும்போது, இந்தக்கவலையிலிருந்து விடுபடுகிறான்‌! என்றும்முண்டக உபநிஷத்கூறுகிறது. ஆக, அத்வைத சித்தாந்தத்தின்படி பழத்தைத்தின்கிற பறவை மனிதன்‌ – ஜீவன்‌ – புருஷன்‌; அது நிழல்‌. பழத்தைத்தின்னாமல்இருக்கிற பறவை ஆன்மாப்ரம்மம்‌; அது ஸத்யம்‌. 

சில வேத (உபநிஷத்துக்கள்உட்பட) வாக்கியங்கள்விசிஷ்டாத்வைதத்திற்கு வலுவூட்டுகின்றன; வேறு சில வாக்கியங்களோ அத்வைதத்திற்கு வலுவூட்டுகின்றன. இன்னும்சில, த்வைதம்என்றஇரண்டானதுதான்‌’ என்கிற சித்தாந்தத்திற்கு  க்வலுவூட்டுகின்றன

வேதங்களில்‌, இந்த மூன்று சித்தாந்தங்களுக்குமே ஆதாரமாக அமையக்கூடிய வாக்கியங்கள்இருப்பதால்‌, அந்த மாதிரி பகுதிகளைப்பண்டிதர்கள்மூன்று விதமாகப்பிரிக்கிறார்கள்‌. ஒன்றுஅபேத ஸ்ருதி; அதாவதுஇரண்டல்லஎன்று கூறுகிற அத்வைத சித்தாந்தத்திற்குப்பொருந்துகிற பகுதிகள்‌. இரண்டுபேத ஸ்ருதி; அதாவது இரண்டானதுதான்என்று சொல்கிற த்வைத தத்துவத்திற்குப்பொருந்துகிறவை. மூன்றுகடக ஸ்ருதி; இந்தப்பகுதிகள்ப்ரம்மத்திற்கும்‌, ஜீவாத்மாவிற்கும்உள்ள தொடர்பைக்கூறுபவை; முதல்இரண்டு வகையான பகுதி களையும்இணைத்து, அவை முரண்பாடற்றவை என்று நிவை நிறுத்துபவை; இந்தப்பகுதிகள்விசிஷ்டாத்வைதத்திற்கு மிகவும்பொருந்தும்‌. ஆக, இந்த மூன்று சித்தாந்தங்களுக்குமே வேதமும்‌, அதன்இறுதிப்பகுதியாகிய உபநிஷத்துக்களும்தான்அடிப்படை என்பதை மறந்துவிடக்கூடாது

உலகமே மாயையான ஒரு தோற்றம்‌’ என்று அத்வைதம்சொல்வது உபநிஷத்துக்களின்அடிப்படையில்தான்‌. இதை விசிஷ்டாத்வைதம்மறுப்பதும்‌, உபநிஷத்துக்களின்அடிப்படையில்தான்‌. ‘உலகம்மாயை என்று உபநிஷத்துக்களில்கூறப்பட்டிருந்தாலும்‌, நிறைய இடங்களில்அப்படி இல்லை என்பதால்‌, ‘உலகம்மாயை அல்ல! என்று விசிஷ்டாத்வைதிகள்கூறுகிறார்கள்‌. ஆனால்அத்வைதம்‌, ப்ரம்மத்தைத்தவிர வேறு எதுவுமே முழுமை யான ஸத்யம்அல்ல என்று கூறுகிறது. ‘இருட்டிலே ஒரு கயிறு கடக்கிறது. அதைப்பார்த்துப்பாம்பு என்று நினைத்து ஒருவன்பயப்படுகிறான்‌. அங்கே கொஞ்சம்வெளிச்சம்போட்டால்‌, அது பாம்பல்ல, கயிறுதான்என்று புரிகிறது. மாயை விலகுகிறது. உலக மும்இப்படிப்பட்டதுதான்‌’ என்று அத்வைஇகள்கூறுவார்கள்‌. 

த்வைதத்தை எடுத்துக்கொண்டால்‌, ‘ஜீவாத்மாவும்‌, பரமாத்மா வும்எப்போதுமே வெவ்வேறானவைதாம்‌. இவை ஒன்றுதான்என்று கூறுகிற அத்வைதமும்தவறு; சரீரசரீரி தொடர்பு முறை பற்றிப்பேசுகிற விசிஷ்டாத்வைதமும்தவறு. இவை இரண்டான தல்ல என்ற கருத்தை வலியுறுத்துகிற உபநிஷத்வாக்கியங்கள்குறைவான எண்ணிக்கையில்தான்இருக்கின்றன என்பதால்‌, அவற்றை விட்டுவிட வேண்டும்‌! என்று அந்தத்தத்துவம்கூறுகிறது

ஆனால்அத்வைதிகளோ, சென்ற அத்தியாயத்தில்குறிப்பிட்ட மஹா வாக்கியங்களை மிகவும்முக்கியமாகக்கருதுகிறார்கள்‌. ‘மனிதனின்உடலில்உள்ள ஜீவாத்மாவினுடைய ஆத்மாதான்பரமாத்மா! என்று கூறுகிற விசிஷ்டாத்வைதம்‌, இந்த மஹா வாக்இயங்களை நிராகரிக்கவில்லை. ‘நீயே ப்ரம்மம்‌” என்றால்‌, ‘உன்னுடைய ஆத்மாவினுடைய ஆத்மாவாக இருப்பது ப்ரம்மமேஎன்றுதான்பொருள்‌ – என்று விசிஷ்டாத்வைதம்கூறுகிறது. மற்ற மஹா வாக்கியங்களும்இந்த அடிப்படையிலேயே விளக்கப்படுகின்றன

இப்படி கூறுகிற விசிஷ்டாத்வைதம்பற்றி, அத்வைதம்என்ன சொல்கிறது என்பதை மஹா ஸ்வாமிகள்விளக்கி இருக்கறார்‌. அத்வைதம்என்பது த்வைதம்‌, விசிஷ்டாத்வைதம்ஆகிய வற்றையும்தழுவி, முதல்படிகளில்அவற்றை ஒப்புக்கொள்இறது. இப்போது, விவகாரத்தில்உள்ளபடி, இது பேதமுடைய பிரபஞ்சமாகத்தான்தெரிகிறது என்பதால்‌, அத்வைதியானவன்ஆரம்ப நிலையில்‌, த்வைதத்தை ஒப்புக்கொள்கிறான்‌. அதன்பின்னர்‌, ‘இத்தனை பேதங்களுக்குள்ளும்உயிருக்கு உயிராக, ஒரே பொருள்இருக்கிறதுஎன்று கூறி பேதம்‌, அபேதம்இரண்டையும்ஏற்கிற விசிஷ்டாத்வைதத்தையும்‌, அத்வைதி ஒப்புக்கொள்கிறான்‌. இந்தப்படிகளில்ஏறித்தான்பேதமில்லாத ஜீவ, ப்ரம்ம ஐக்கியத்தை அடைய வேண்டும்என்று அத்வைத சொல்கிறான்‌.” இப்படிச்சொல்லி விட்டு, மஹாஸ்வாமிகள்மேலும்‌, உபநிஷத்வாக்கியத்தை மேற்கோள்காட்டிக்கூறுகிறார்‌ : “முடிந்த முடிவாக மாண்டூக்ய உபநிஷத்தில்ப்ரணவ ஸ்வரூபத்தைப்பற்றி, ‘எல்லா நிலைகளையும்தாண்டி பிரபஞ்சம்ஒடுங்கி, லயிக்கின்ற இடம்எதுவோ, அதுவே சவம்‌ (உயர்ந்த க்ஷேமம்‌) – அத்வைதம்‌; இப்படி இருக்கிற இந்த ஓங்காரம்‌, ஆத்மாதான்‌. எவன்இதை அறிந்தவனோ, அவனே அறிந்தவனாகிறான்‌’ என்று தெளிவாக அத்வைத நிலை பற்றிச்சொல்லி இருக்கிறது

இப்படி, மூன்று சித்தாந்தங்களுக்கும்இடமளிக்கிற வகை யில்‌, உபநிஷத்துக்களில்பல்வேறு பகுதிகள்இருப்பதைப்பற்றி வியப்பதற்கு இடமில்லை. ‘நமது அரசியல்சட்டம்ஒரு ஐக்கிய அரசைத்தான்அமைக்கிறது என்று வாதிடும்சட்ட நிபுணர்கள்இருக்கிறார்கள்‌; இது தவறு என்றும்‌, ‘நமது அரசியல்சட்டம்பல சமஷ்டி அரசுகளைக்கொண்ட ஒர்அமைப்புஎன்று விளக்குகிற சட்ட வல்லுனர்களும்இருக்கிறார்கள்‌; ‘ஓர்ஐக்கிய அமைப்பின்தன்மைகளையும்கொண்ட, ஒரு சமஷ்டி அமைப்பைத்தான்நமது அரசியல்சட்டம்வகுக்கிறதுஎன்று கூறுகிற சட்ட அறிஞர்களும்இருக்கிறார்கள்‌. இதனால்அரசியல்சட்டம்குழப்பமானது என்று அர்த்தமாகிவிடாது. சட்டம்அறிந்த பண்டிதர்களின்பார்வை வெவ்வேறு கோணத்தில்அமைகிறது. மத்திய அமைப்பின்இறுதி அதி காரத்தை மூன்று வகை நிபுணர்களுமே ஏற்கிறார்கள்‌.

இதே போலத்தான்உபநிஷத்துக்களின்அடிப்படையில்ஆதி சங்கரர்‌, ராமானுஜர்‌, மத்வாச்சாரியார்ஆகியோர்பிரபலப்படுத்திய அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சத்தாந்தங்களும்இறுதி நிலை யாகிய மோக்ஷத்தை அடைகிறபோது, ப்ரம்மமே அடையப்பெறு இறது என்பதை ஏற்கின்றனர்‌. 

இனி முக்கியமான பத்து உபநிஷத்துக்களிலிருந்து ஒரு சில பகுதிகளைப்பார்ப்போம்‌.