நூறு ஆண்டு காலம் வாழ்வாயாக!

உபநிஷதங்கள்பல இருந்தாலும்‌, அவற்றில்பத்து உபநிஷதங்கள்முக்கியமானவையாகக்கருதப்படுகின்றன. ஆதி சங்கரர்இவற்றுக்குத்தான்விளக்கங்களை அளித்தார்‌. ராமானுஜ ௬ம்‌, மத்வாச்சாரியாரும்கட இவற்றுக்கு விளக்கம்அளித்இருக்கிறார்கள்‌. இவ்வாறு ஆச்சாரியர்கள்பத்து உபநிஷதங்களுக்கு விளக்கம்அளித்தபொழுது, அவற்றை அவர்கள்கீழ்க்கண்ட வரிசையில்எடுத்துக்கொண்டார்கள்‌. ஈசாவாஸ்ய உப நிஷதம்‌, கேன உபநிஷதம்‌, கட உபநிஷதம்‌, ப்ரச்ன உபநிஷதம்‌, முண்டக உபநிஷதம்‌, மாண்டுக்ய உபநிஷதம்‌, தைத்திரீய உப நிஷதம்‌, ஐதரேய உபநிஷதம்‌, சாந்தோக்ய உபநிஷதம்‌, ப்ருஹ தாரண்யக உபநிஷதம்‌. அதே வரிசையில்இந்த உபநிஷதங்கள்கூறுவதைச்சுருக்கமாகப்பார்ப்போம்‌. 

இந்தப்பத்து உபநிஷதங்களில்மிகவும்சிறியது ஈசாவாஸ்ய உபநிஷதம்‌. ஆனால்அதில்பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்களுக்கு, இன்றும்கூட பலவித வியாக்யானங்கள்செய்யப்பட்டு வருகின்றன. இது யஜூர்வேதத்தைச்சார்ந்தது. இதன்தொடக்கத்இல்வருகிற சாந்தி மந்திரத்தை ஏற்கெனவே 22-ஆவது அத்தி யாயத்தில்பார்த்தோம்‌. ‘இறைவன்முழுமையானவன்‌; இந்த உலகம்முழுமையானது; முழுமையான இறைவனிலிருந்து முழுமை யான உலகம்தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து, முழுமையை எடுத்த பின்பும்முழுமையே எஞ்சியுள்ளது. இது சாந்தி மந்த்ரம்‌. ஒவ்வொரு உபநிஷதத்தின்தொடக்கத்திலும்இம்மாதிரி ஒரு சாந்தி மந்த்ரம்வருகிறது.

எந்தக்காரியத்தை எடுத்துக்கொண்டாலும்‌, அதற்கான மன நிலையுடன்அதைத்தொடங்க வேண்டும்‌. ஓர்உபநிஷதத்தைப்படிப்பதற்கு முன்பாக, நமது மனநிலையைச்சீர்படுத்தி, பார்க்கப்போகும்கருத்துடன்நாம்ஒருமைப்பட்டு நிற்பதற்கு, சாந்தி மந்த்ரம்உதவுகிறது. மேற்கூறப்பட்ட சாந்தி மந்த்ரம்‌ ‘உலகம்முழுமை யானதுதான்என்றாலும்‌, அது ஒரு தோற்றமே. அதனால்முழுமை யான இறைவனிடமிருந்து, இந்த முழுமையான உலகம்எடுக்கப்பட்ட பின்பும்‌, இறைவனின்முழுமை அப்படியே இருக்கிறது என்று கூறுகிறது. இறை தத்துவத்தை உணர்த்துகிற உபநிஷதக்கருத்துக்களைப்படிப்பதற்கு முன்பாக, இறைவன்எப்படி வியா பித்து நிற்கிறான்என்பதை உணர்ந்து கொண்டு, படிக்கத்தொடங்கு வதற்கு இந்த சாந்தி மந்த்ரம்ஓர்அறிமுகமாக அமைகிறது.

ஈசாவாஸ்ய உபநிஷதத்தில்முதல்மந்த்ரம்இப்படி அமைந்திருக்கிறது.

ஓம்ஈசாவாஸ்யமிதக்ம்ஸர்வம்

யத்கிஞ்ச ஜகத்யாம்ஜகத்

தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத:

கஸ்யஸ்வித்தனம்‌.

மாறுகிற இயல்புடைய இந்த உலகில்உள்ள அனைத்தும்இறைவனால்சூழப்பட்டவை. அந்தத்தியாக மனப்பான்மையுடன்வாழ்க்கையை அனுபவிப்பாயாக. செல்வம்யாருடையது? அதற்காக நீ ஆசைப்படாதே. உலக வாழ்க்கையைத்துறந்து காட்டுக்கு ஓடிப்போய்‌, தனிமை யில்வாழுமாறு இந்த மந்த்ரம்கூறவில்லை. ‘வாழ்க்கையின்தன்மையை உணர்ந்து, உன்வாழ்க்கையை நடத்து! என்றுதான்சொல்கிறது. எல்லாவற்றிலும்இறைவன்தான்நிரம்பியிருக்கிறான்‌; அவனால்தான்எல்லாமே சூழப்பட்டிருக்கின்றனஎன்கிற எண்ணம்வந்துவிட்டால்‌, அதன்பிறகு விரோதங்கள்ஏது? மத, ஜாதி, பகைமைகள்ஏது? உன்னிலும்இறைவன்இருக்கிறான்‌, என்னிலும்இருக்கிறான்என்ற சமப்பார்வை இட்டிவிட்டால்‌, அதன்பிறகு துன்பம்இல்லை. வாழ்க்கையை அப்படி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்என்று கூறுகிறது இந்த மந்த்ரம்‌. 

எல்லா செல்வங்களும்இறைவனுடையவை. அவன்தான்எல்லா வற்றிலும்நிரம்பி இருக்கிறான்‌. அப்படி இருக்க, என்னுடையது என்ற எண்ணம்கொண்டு துன்பத்தில்உழல்வானேன்‌? ஏனென்றால்‌, என்னுடையது என்கிற எண்ணத்தினால்தான்பிரச்னைகள்வருகின்றன; கவலைகள்தோன்றுகின்றன; ஆசைகள்வளருகின்றன. சமுத்திரத்தைப்பார்க்கிறோம்‌, அது என்னுடையது என்ற நினைப்பு மனிதனுக்கு வருவதில்லை. அவன்அதன்அற்புதக்காட்சியை அனுபவித்து விட்டுப்போகிறான்‌. மழை பொழிநெது. ‘இந்த மழை என்னுடையது! என்ற எண்ணம்மனிதனுக்குத்தோன்றுவதில்லை. அதனால்அவன்அந்த இன்பத்தை நுகர்கிறான்‌. இதிலேயேஎன்னுடையதுஎன்ற எண்ணம்வந்துவிட்டால்‌, அடுத்த வீட்டுக்காரனுக்கு மழை பொழியக்கூடாது என்கிற துவேஷ எண்ணம்வரும்‌. மழை நீர்அனைத்தையும்சேகரித்து வீட்டுக்குள்எடுத்துக்கொண்டு போய்வைத்துக்கொண்டுவிட வேண்டும்என்ற பேராசைகூட வரலாம்‌. 

எல்லோருக்கும்பொழியும்மழை என்றால்‌, அது ஈச்வரனின்வடிவம்‌. அதை நடைமுறையிலேயே, நம்மைப்போன்ற சாதா ரண மனிதர்கள்கூட உணர்வதால்‌, அதில்உன்னுடையது, என்னுடையது என்ற பிரச்னை வருவதில்லை. இதே போன்ற எண்ணம்‌, ஒரு மனிதனுக்கு மனித வளங்கள்எல்லாவற்றையும்பற்றி ஏற்பட்டுவிட்டால்‌, அதன்பின்னர்அவனுக்கு நிம்மதிதான்‌. 

இதற்கு அடுத்த மந்திரம்இப்படிச்சொல்கிறது

கடமைகளைச்செய்தபடியே நூறு ஆண்டு காலம்வாழ விரும்புவாயாக. இப்படிப்பட்ட மனிதனாக நீ வாழ்ந்தால்‌, உன்செயல்கள்உன்னைப்பற்றிக்கொள்வதில்லை. இதைத்தவிர, (இந்நிலையை அடைவதற்கு) வேறு வழி கிடையாது

நமக்குரிய வேலைகள்எதையும்செய்யாமல்‌, எல்லா கர்மங்களையும்துறந்து வாழ்வதுதான்சிறந்தது என்று இந்த மந்த்ரம்சொல்லவில்லை. ‘உன்னுடைய பணிகளை நீ செய்‌, ஆனால்அவற்றை உனது கடமைகளாக நினைத்து நிறைவேற்று. மனதில்பேராசை கொண்டு, இதைச்செய்வதால்என்ன பலன்இட்டும்என்பதை மட்டுமே கவனத்தில்வைத்து நீ காரியத்தைச்செய்தால்‌, அந்தச்செயல்உன்னைப்பற்றிக்கொள்ளும்‌. அதன்பலன்களை நீ அனுபவிக்கத்தான்வேண்டி இருக்கும்‌. ஆனால்எல்லாம்ஈச னுடையவை என்ற நினைப்புடன்‌, உன்னுடைய கடமைகளை நீ செய்து கொண்டு போனால்‌, அவற்றின்பலன்கள்உன்னைக்கட்டுப்படுத்தாது. உபநிஷத்துக்களின்சாரமாகிய பகவத்கீதையும்இதைத்தான்உபதேசம்செய்கிறது

ஒரு ட்ரஸ்ட்‌ – அறக்கட்டளை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்‌. அதற்கு நிறைய சொத்துக்கள்இருக்கின்றன. டிரஸ்டிகள்அதை நிர்வகிக்கிறார்கள்‌. அவர்கள்அதைத்தங்க ளுடைய சொத்து என்று நினைத்து நிர்வகிப்பதில்லை. ‘இதை நிர்வகிப்பது நமது கடமை என ஏற்றிருக்கிறோம்‌; அதைச்செய்து முடிப்போம்‌! என்று நினைத்து அதைச்செய்கிறார்கள்‌. அந்த நிர்வாகத்தில்பல காரியங்கள்நடக்கும்‌. அவற்றின்விளைவுகள்இந்த புரஸ்டிகளைப்பாதிக்கப்போவதில்லை. அவர்களுடைய தனிப்பட்ட சொத்துக்கள்அப்படியேதான்இருக்கப்போகின்றன. அவற்நிற்கு எந்தப்பாதிப்பும்கிடையாது. டிரஸ்டின்சொத்துக்கள்வளர்ந்தால்‌, டிரஸ்ட்மேன்மையுறுகிறது. ஏதோ சில தவறுகள்காரண மாகவோ, எதிர்பாராத நிகழ்ச்சிகள்காரணமாகவோ தவறான முத லீடு போன்றவை நிகழ்ந்துவிட்டால்‌, பாதிக்கப்படப்போவது டிரஸ்ட்தானே தவிர, அந்த டிரஸ்டி அல்ல. அவர்கள்உண்மையாக வேலை செய்தால்‌ – இது நமது கடமை என்று நினைத்து அந்த டி.ரஸ்ட்டை நிர்வகித்தால்‌ – விளைவு அவர்களைச்சாரப்போவ இல்லை. இதே போல, ‘நமக்கு இருக்கும்செல்வம்‌, நமக்கு இருக்கும்தொழில்‌, நமக்கு இருக்கும்குடும்பம்எல்லாமே ஒரு டிரஸ்ட்‌. இறைவன்நம்மிடம்ஒப்படைத்திருக்கும்ஓர்அறக்கட்டளை! என்று நினைத்துக்கொண்டுவிட்டால்‌, அதன்பிறகு நம்முடைய செயல்களின்விளைவு நம்மைப்பாதிக்காது

டிரஸ்ட்சொத்தைத்தன்னுடைய சொத்தாக நினைத்துக்கொண்டு, தனக்கு இதில்என்ன பலன்கடைக்கும்என்று ஆசைப்பட்டு, வேலை செய்ய ஆரம்பித்தால்என்ன நடக்கும்‌? டிரஸ்ட்சொத்தில்ஒரு பங்கு வீட்டுக்குப்போய்ச்சேரும்‌; உண்மைதான்‌. ஆனால்வழக்குகள்வரும்‌. புகார்கள்எழும்பும்‌. ஊரில்பெயர்கெட்டுப்போகும்‌. நடவடிக்கைகள்வரும்‌. பொறாமைகள்வளரும்‌. இன்னொரு டிரஸ்டி நம்மைவிட அதிகமாக எடுத்துக்கொண்டு போய்விட்டால்‌, அவர்மீது பொறாமை வரும்‌. இந்த கையாடலில்கூட்டாளிகளும்வந்து சேருவார்கள்‌. அவர்களோடு மோதல்கள்வரும்‌. மொத்தத்தில்நிம்மதி குலையும்‌. இது நம்செயலின்விளைவு. இந்த மாதிரி விளைவுகள்நம்மைப்பற்றாமல்இருக்க வேண்டுமென்றால்‌, ‘இது நமது கடமைஎன்று ஏற்று டிரஸ்டின்காரியங்களைச்செய்து முடிக்க வேண்டும்‌. கர்ம பலனும்இப்படித்தான்‌. செய்கின்ற பணியை, செய்கின்ற கர்மத்தை, ஒரு கடமை யாக நாம்செய்து முடித்தோமேயானால்‌, கர்மபலன்நம்மை அணு காது. இதைத்தான்ஈசாவாஸ்ய உபநிஷதம்கூறுகிறது

ஆன்மா பற்றியும்‌, இந்த உபநிஷதம்சொல்கிறது.

 ‘அது அசைகிறது; அது அசைவது கிடையாது. அது மிகத்தொலைவில்உள்ளது; அது மிகவும்அருகில்இருக்கிறது. அது அனைத்துக்கும்உள்ளே இருப்பது; அது அனைத்துக்கும்வெளியே இருப்பது‘. 

ஆன்மா பற்றி இப்படி உபநிஷதம்சொல்வது முரண்பாடுகள்நிறைந்ததாக தோற்றம்அளிக்கலாம்‌. ஆனால்சிந்தித்துப்பார்த்தால்‌, இதனுடைய தத்துவம்புரியும்‌. உலகின்இயக்கங்கள்எல்லா வற்றுக்கும்ஆதாரமாக இருப்பதுஆன்மா; ஆகையால்அது அசைகிறது; ஆனால்எங்கும்நிறைந்த நிலையில்இருக்கும்போது, அதற்கு அசைவு கிடையாது. ஒவ்வொரு மனிதனின்உள்ளேயும்ஆன்மா இருக்கிறது; ஆகையால்அது மிகவும்அருகில்உள்ள ஒன்று; அதை நாம்உணராத நிலையில்இருப்பதால்‌, அது மிகவும்தூரத்தில்உள்ளது. இதே காரணத்தினால்தான்‌, அது அனைத்தின்உள்ளேயும்உள்ளது. ஆனால்ப்ரம்மம்என்ற நிலையில்‌ – நாம்அடைய முயற்சிக்கும்அந்த நிலையில்‌ – அது அனைத்துக்கும்வெளியேயும்இருப்பது.

தன்னை உணர்ந்தவனைப்பற்றி, அதாவது ஆத்மாவை அறிந்தவனைப்பற்றி, ஈசாவாஸ்ய உபநிஷதம்இப்படிச்சொல்கிறது :

யஸ்து ஸர்வாணி

பூதான்யாத்மன்யேவானுபச்யதி

ஸர்வபூதேஷு சாத்மானம்

ததோ விஜுகுப்ஸதே

யார்எல்லா உயிரினங்களையும்ஆத்மாவிலும்‌, ஆத்மாவை எல்லா உயிரினங்களிலும்பார்க்கிறானோ, அவன்யாரையும்வெறுப்பதில்லை

இதற்கு அடுத்த மந்திரமும்இதே கருத்தை மேலும்வலியுறுத்து இறது

ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும்ஆகயிருக்கின்ற ஒருமை உணர்வைப்பெறுகின்ற ஒருவனுக்கு, மன மயக்கம்என்ன, கவலை என்ன

தன்னிலும்ஆத்மாவைக்கண்டு, மற்ற எல்லா உயிரினங்களி லும்அதையே பார்ப்பவனுக்கு வெறுப்பு, துவேஷம்‌, பொறாமை போன்ற உணர்ச்சிகளைப்பெறும்வாய்ப்புக்கிடையாது. அது வேறு, நாம்வேறு என்று நினைத்து ஒரு பொருளையோ, மனிதனையோ பார்க்கும்போதுஆசை, அன்பு, பற்று, பொறாமை, இழப்பு போன்ற பலவித உணர்வுகள்நம்மைத்இண்டுகின்றன. நம்மில்உள்ள ஆன்மாவையே மற்றவர்களிடமும்நாம்காணும்போது, இதற்கெல்லாம்இடமில்லாமல்போய்விடுகிறது. வெற்றிதோல்வி, சுகம்‌, துக்கம்‌ – போன்றவற்றையெல்லாம்இவர்கள்கடந்து விடுகிறார்கள்‌. 

இது எல்லோராலும்முடிகிற காரியம்இல்லைதான்‌. ஆனால்‌, அந்த மாதிரி நிலையை அடைந்த மகான்கள்‌, நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள்‌. இன்னமும்கூட பலர்இருப்பார்கள்‌. அந்த நிலையை அடைந்தால்என்ன மேன்மை இட்டும்என்பதை இந்த மந்த்ரங்கள்சொல்கின்றன. நம்மைப்போன்றவர்களுக்கு, அது இயலாது என்பதால்தான்‌, முதற்படியாகஎல்லாம்இறைவனுடையவை என்று உணர்ந்து கொண்டு, உன்னுடைய கடமையைச்செய்து, நூறாண்டு காலம்வாழ்வாயாக! – என்ற நடை முறைக்கேற்ற உபதேசத்தையும்‌, இந்த உபநிஷதம்ஆரம்பத்திலேயே செய்து விடுகிறது

பல மாணவர்கள்பரீட்சை எழுதுகிறார்கள்‌. ஒருவன்தான்முதலில்வரப்போகிறான்‌. அதற்காக மற்ற மாணவர்கள்எல்லாம்முதலிலேயேஒருவன்தானே முதலாவதாக வரப்போகிறான்‌; இது நம்மால்நடக்கிற காரியமல்ல; நமக்கேன்இந்த வம்பு? – என்று நினைத்துவிட்டால்‌, பரீட்சையில்தோல்வி அடைய வேண்முயதுதான்‌. முதலாவதை நோக்கிச்செல்ல வேண்டும்என்ற ஆர்வம்உடையவர்கள்‌, அதற்கான முயற்சியை மேற்கொண்டால்‌, முதலாவ தாக இல்லாவிட்டாலும்‌, இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வருகிறார்கள்‌. முதலாவதாக இல்லாவிட்டாலும்‌, நல்ல மார்க்பெற வேண்டும்என்ற முயற்சி உடையவன்‌, பரீட்சையில்தேறு இறான்‌. ஆக, இலக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும்‌. 

அது என்ன இலக்கு? ஆன்மாவை எல்லாவற்றிலும்கண்டு, எல்லாவற்றிலும்ஆன்மாவைக்காண்பதுதான்மேன்மை. அதுதான்லட்சியம்‌. அதுதான்இலக்கு. அதை அடைவது மிக மிகக்கடினம்என்பதால்‌, அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல்விட்டு விடுவது நம்மைத்தாழ்வுக்குத்தான்இட்டுச்செல்லும்‌. அந்தச்சிந்தனை மனதில்இருந்தால்‌, அந்த லட்சியம்நம்முன்னே ஒரு தோற்றமாகவாவது இருந்தால்‌, அது நம்மைச்சில படிகள்உயர்த்திக்கொள்ள பயன்படும்‌. உபநிஷத உபதேசங்களை இந்த வகையிலாவது அணுகுவது, நம்மைப்போன்றவர்கள்ஒரு சில படிகளாவது ஏற்றம்அடைய உதவும்‌.