யார் வெற்றுச் செயல்களில் மட்டுமே ஈடுபடுகிறார்களோ, அவர்கள் இருளில் மூழ்குகிறார்கள்; யார் ஞான நிலையிலேயே ஈடுபடுகிறார்களோ, அவர்கள் அதையும்விட இருளில் மூழ்கு கிறார்கள்! என்று ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறுகிறது.
செயல்கள் என்றால், யாகங்கள் போன்ற கர்மாக்களைச் செய் வது என்றும் கொள்ளலாம்; ஆனால் பொதுவாக ஒரு மனிதனின் இயக்கத்தில் அடங்கக்கூடிய எல்லாச் செயல்களையுமே இது குறிக்கும் என்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. செயல்களில் மட்டுமே மூழ்கிக் கிடப்பவர்கள், ஞானப்பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தை நினைத்தும் பார்ப்பதில்லை: அவர்கள் இருளில் மூழ்குகிறார்கள் என்றால் புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால் ஞான நிலையிலேயே ஈடுபட்டுக் கிடப்பவர் கள் அதையும்விட இருளில் மூழ்குகிறார்கள் என்பது எவ்வாறு?
இங்கே ஞானம் என்பது ஏட்டுச் சுரைக்காய் அறிவைக் குறிக்கிறது. ‘கற்றுக் கொண்டுவிட்டோம்; புரிந்து கொண்டுவிட் டோம்! என்ற அகங்காரத்தைத் தருகிற அறிவைக் குறிப்பது இது. தெய்வங்களின் தத்துவம் பற்றியோ, ப்ரம்மத்தின் பொருள் பற் நியோ, அறிய வேண்டியது அனைத்தையும் அறிந்துவிட்டதாக ஒருவன் நினைத்தால், அந்த அறிவு அவனை இருளில் வீழ்த்து கிறது; அது அறியாமை என்னும் இருளைவிட மோசமானது
இதனால்தான் இதற்குப் பின்னர், ஈசாவாஸ்ய உபநிஷதம் இப் படிக் கூறுகிறது :
வித்யாம் சாவித்யாம் ௪ யஸ்தத்
வேதோபயக்ம் ஸஹ
அவித்யயா ம்ருத்யும் இர்த்வா
வித்யயாம்ருதமச்நுதே
ஞானம், செயல்கள் இரண்டையும் சேர்த்து எவன் அறி கிறானோ, அவன் செயல்களால் மரணத்தைக் கடந்து, ஞானத் இனால் இறவா நிலையை எய்துகிறான்.
மரணத்தைக் கடப்பது என்றால், சாவே கிடையாது என்பது அல்ல. தன்னுடைய வினைப் பயன்களிலிருந்து விடுபடுவதே மரணத்தைக் கடப்பது என்று கூறப்படுகிறது. அதே போல இறவா நிலை என்பது, இறை நிலையை – ப்ரம்மத்தைச் சார்வது என்று அர்த்தம்.
விஞ்ஞானம், கலைகள், வேதங்களைக் கற்பது போன்றவை எல்லாம்கூட ‘அவித்யை‘ என்று கூறப்படுகின்றன. இறைவனை நாடுவது ஒன்றுதான் வித்யை. அதுதான் ஞானத்திற்கு இட்டுச் செல்வது. அதே சமயத்தில், செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் இந்த நிலையை அடைந்துவிட முடியாது. தன்னுடைய கடமை களைச் செய்வது, தானம், ஜெபம், சேவை போன்ற சாதனைகளைச் செய்வது போன்ற செயல்கள் மனதைத் தூய்மையாக்குகின்றன; ஆற்றலைத் தருகின்றன. இதைப் பெற்றவன் ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். அதாவது செயல்களின் மூலம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, முதற்படியைக் கடந்து, அதன் பிறகு ஞானப் பாதையில் செல்ல வேண்டும்.
செயல்கள், ஞானம் ஆகிய இரண்டுமே வெவ்வேறு நிலை களில் தேவை என்று மேற்கூறியவாறு சொல்கிற இந்த உப நிஷதம், உருவ வழிபாடு, உருவமற்ற நிலையாகிய ப்ரம்மத்தின் வழிபாடு – இரண்டுமே தேவை என்றும் கூறுகிறது. உருவ வழிபாட்டினால், மரணத்தைக் கடந்து – ப்ரம்மத்தைப் பேணுவ தால் இறவா நிலையை ஒருவன் அடைகிறான் என்று இந்த உபநிஷதம் சொல்கிறது. ஒரு தகுதியும் பெறாமலே, ‘உருவமுள்ள தெய்வங்களை நினைத்து வழிபடுவதில் அர்த்தமில்லை. நான் ப்ரம்மத்தையே நினைக்கிறேன்! என்று ஒருவன் சொல்லிக் கொண் டால், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்பவன். சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர், அம்பிகை, காளி என்ற பல்வேறு வடிவங்கள் ஒரே உண்மைப் பொருளின் மாறுபட்ட தோற்றங்களே. இந்த மாதிரி வழிபாட்டில் ஈடுபட்டுப் பின்னர் அதையும் கடந்து, ப்ரம்மத்தையே நினைப்பதில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், அவன் வினைப் பயன்களிலிருந்தும் மிள்கிறான்; இறுதியில் ப்ரம்மத்தையும் சார்கிறான்.
‘இந்த உடம்பு சாம்பலாகி விடும். உடலிலிருந்து வெளியேறு கிற பிராணன் எங்கும் நிறைந்த அழிவற்ற பிராணனுடன் கலந்து விடும். மனமே! செய்தவற்றை நினைத்துப் பார். மனமே! செய்த வற்றை நினைத்துப் பார்!” என்று இந்த உபநிஷதம் இறுதியில் வற்புறுத்துகிறது. வாழ்வு நிலையற்றது; இறுதியில் சாம்பலாவது. இது மறக்கத் தகாத உண்மை. அப்படிப்பட்ட வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் எத்தகையவை? அதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதால், நம்முடைய செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள் வது சாத்தியமாகும். ஏதாவது ஒரு நிலையிலாவது, நல்லது செய்ய, நம்மை. இந்தச் சிந்தனை தூண்டும். ‘இதுவரை என்ன செய்து வந்தோம்?! என்று அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொள்வது, நம்மை நாமே உயர்த்திக் கொள்கிற ஒரு வழி.
‘ஒளிப் பொருளே! அக்னி தேவனே! எங்களுடைய செயல்கள். எல்லாவற்றையும் நீ அறிவாய். எங்களைக் கொடிய தவறுகளி லிருந்து விலக்கி விடு! என்று வேண்டிக் கொள்வதுடன், ஈசா வாஸ்ய உபநிஷதம் முடிகிறது.
அடுத்து கேன உபநிஷதம். ‘கேன‘ என்றால் ‘யாரால்” என்று அர்த்தம். இந்தச் சொல்லுடன்தான் இந்த உபநிஷதமே தொடங்கு கிறது. ஒவ்வொரு உபநிஷதமும், ஒவ்வொரு சாந்தி மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். கேன உபநிஷதத்தின் சாந்தி மந்த்ரம், இவ்வாறு வேண்டுகிறது
ஓம் ஸஹ நாவவது. ஸஹ நெள புனக்து
ஸஹ விர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து –
மா வித்விஷாவஹை.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
(குரு, சடன் ஆகிய) நம் இருவரையும் இறைவன் காப்பாராக. நம் இருவரையும் ஊக்குவிப்பாராக. நாம் இருவரும் சேர்ந்து ஆற்ற லுடன் உழைப்போமாக! கற்றது, நமக்குப் பயனுள்ளதாக விளங் கட்டும். நாம் இருவரும் பரஸ்பரம் வெறுப்படையாமல் இருப் போமாக. மூவகை சாந்தி நிலவட்டும்.
மூவகை சாந்தி என்று ஏன் சொல்லப்படுகிறது? தடைகள் மூன்று வகையானவை. ஒன்று – ஆத்யாத்மிகம். நம்மால் வருகிற தடை; உடல் நோய், மனக் கவலைகள் போன்றவை. அடுத்தது ஆதி பெளதிகம் – பிற உயிர்களினால் ஏற்படுகிற தடை. அடுத்து ஆதி தைவிகம் – இயற்கையின் சக்திகளால் வருகிற தடை; பெரு மழை, புயல், தீ போன்றவற்றால் வருகிற தடைகள். இந்த மூன்று வகையான தடைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் “ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:’ என்று சொல்லப்படுகிறது.
யாரால் ஏவப்பட்டு மனம் இயங்குகிறது? எதனால் வாக்குப் பேசுகிறது? கண், காது போன்ற இந்திரியங்களை எந்தத் தேவன் செயல்படுத்துகிறான்?’ என்ற கேள்விகளுடன் இந்த உபநிஷதம் தொடங்குகிறது. பின்னர் ‘காதின் காதாக, மனதின் மனமாக, வாக் இன் வாக்காக, பிராணனின் பிராணனாக, கண்ணின் கண்ணாக இருப்பது ஆன்மா. இந்த உண்மையை உணர்பவன் இந்த உலகி விருந்து விலகி, மரணமற்ற நிலையை (வினைப் பயன்களிலிருந்து மிள்திற நிலையை) அடைகிறான்’ என்றும் இது விடையளிக்கிறது.
‘ஆன்மா எத்தகையது என்பதைப் புலன்களால் அனுபவித்து உணர முடியாது. ஆகையால் அதைப் புலன்களால் விளக்கவும் முடியாது. மேலும் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிலும், மனதின் ஒவ்வொரு இயக்கத்திலும், ஆன்ம உணர்வு வெளிப்படு வதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆன்மாவை அறிந்து கொண்டவன், ஆற்றல் பெறுகிறான். மரணமில்லாத் தன்மையை எய்துகிறான்’ என்று கேன உபநிஷதம் கூறுகிறது.
வேறு எந்த ஆற்றல் இருந்தாலும் அது கூடவே பயத்தையும் தருகிறது. ‘இந்த ஆற்றல் பயனற்றுப் போய் விடுமோ! என்ற அச்சத்தைத் தராத ஆற்றல் எதுவும் கிடையாது. மற்றொருவனின் ஆற்றல், சந்தர்ப்ப சூழ்நிலை, கால நேரம், இடம், பொருள்… போன்றவற்றில் ஏதாவது ஒன்று, பல வகையான ஆற்றல்களை பயனற்றதாகச் செய்துவிட முடியும். ஆனால் ஆன்ம உணர்வினால் கடைக்கும் ஆற்றல், இத்தகையது அல்ல. அந்த ஆற்றலை அழிக்கக்கூடிய சக்தி எதுவும் கிடையாது.
ஆன்மாவைப் பற்றியும், ஆன்ம உணர்வைப் பற்றியும் இப்படி எல்லாம் கூறிவிட்டு, குரு, ஒரு நிகழ்ச்சியைச் சீடனுக்கு வர்ணிக் கறார். ப்ரம்மம், அதாவது இறைவனாகிய இறுதித் தத்துவம், தேவர்களுக்காக வெற்றியைப் பெற்றுத் தந்தது. தேவர்களோ இந்த வெற்றி தங்களுடையதே என்று பெருமைப்பட்டார்கள். அவர்களு டைய எண்ணத்தைப் பார்த்த இறைவன், அவர்கள் முன் ஒரு யக்ஷன். வடிவில் தோன்றினான். அந்த யக்ஷன் யார் என்று தெரியாமல் தேவர்கள் குழப்பம் அடைந்தார்கள்.
அப்போது அவர்கள், ‘இந்த யக்ஷன் யார் என்பதை அறிந்து வர வேண்டும் என்று அக்னி தேவனிடம் கேட்டுக் கொண்டார்கள். அவனும் யக்ஷனிடம் விரைந்தான்.
அந்த யக்ஷன், அக்னி தேவனைப் பார்த்து, ‘நீ யார்?” என்று கேட்டான்.
‘நான் அக்னி. அனைத்தையும் அறிந்தவன்! என்று அக்னி தேவன் பதிலளித்தான்.
‘உன்னிடமுள்ள சக்தி என்ன?’ என்று யக்ஷன் கேட்டான்.
‘எல்லாவற்றையும் என்னால் எரிக்க முடியும் என்றான் அக்னி தேவன்.
இதைக் கேட்ட யக்ஷன், அக்னி தேவனின் முன்பாக, ஒரு புல்லை எடுத்துப் போட்டு, ‘இதை எரிப்பாயாக‘ என்றான்.
அக்னி, அந்தப் புல்லை வேகத்துடன் அணுகினான். அவனால் அதை எரிக்க முடியவில்லை. அவன் இரும்பிச் சென்று, மற்ற தேவர்களிடம் அந்த யக்ஷனைத் தன்னால் அறிந்து கொள்ள இயலவில்லை என்று தெரிவிக்க, அவர்கள் வாயு தேவனிடம் அந்த யக்ஷன் யார் என்று அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டனர். அவனும் யக்ஷனிடம் விரைந்தான்.
யக்ஷன் வாயு தேவனைப் பார்த்து, ‘நீ யார்?” என்று கேட்டான்.
‘நான் வாயு! வானவெளியில் சஞ்சரிப்பவன்’ என்றான் வாயு தேவன்.
‘உன்னிடம் என்ன சக்தி இருக்கிறது?
“அனைத்தையும் என்னால் தூக்கி அடிக்க முடியும். ‘
இவ்வாறு வாயுதேவன் சொன்னவுடன், அவன் முன்பாகவும் ஒரு புல்லை வைத்து, ‘இதைத் தூக்கு! என்றான் யக்ஷன். வாயு தேவன் அதை வேகமாக அணுகி, தூக்க முயல, அவனால் முடிய வில்லை. அவனும் அக்னியைப் போலவே மற்ற தேவர்களிடம் சென்று, அந்த யக்ஷன் யார் என்பதைத் தன்னால் அறிந்து கொள்ள. முடியவில்லை என்று தெரிவித்தான்.
அடுத்து தேவர்கள் இந்திரனிடம் கேட்டுக் கொண்டார்கள். அவன் யக்ஷனிடம் சென்றான். யக்ஷன் மறைந்தான். அப்போது அங்கே தோன்றிய உமா தேவியை இந்திரன் அணுகி, ‘இந்த யக்ஷன் யார்?” என்று கேட்டான். உமா தேவி விளக்கமளித்தாள்.
‘அது ப்ரம்மம். அவருடைய செயலைத்தான் உங்கள் வெற்றி யாக எண்ணி நீங்கள் மகழ்ந்தீர்கள். இவ்வாறு உமா தேவி கூறியதைக் கேட்டவுடன், யக்ஷனாகத் தோன்றியது ப்ரம்மமே என்: பதை இந்திரன் உணர்ந்து கொண்டான்.
தேவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான ஆற்றல் பெற்றவர்கள். ஆனால், அவர்களுடைய அந்த ஆற்றல்கள் ய௯ஷனின் முன்பு செயலற்றுப் போயின. இறுதி உண்மையாகிய இறைவன் அளித்த வெற்றியை, தங்களுடைய ஆற்றலினால் பெற்ற வெற்றி யாகக் கருதியதன் விளைவாக, அந்தத் தேவர்களின் ஆற்றல் செயல்படாமல் போயிற்று.
இந்த நிகழ்ச்சி மூலம், கூறப்படுகிற தத்துவம் என்ன?