மூன்று வரங்கள்!

முன்று தினங்கள்வாயிலில்காத்திருந்துவிட்ட நரிகேதஸை, முறையாக உபசரிக்க வேண்டும்என்று மந்திரிமார்கள்எமதர்ம னிடம்கூறியது, சாத்திர ரீதியான தர்மம்‌. 

விருந்தாளிகளை அவமதிக்காமல்அவர்களைக்காத்திருக்கச்செய்யாமல்‌, அவர்களுக்கு எல்லா உபசாரங்களையும்செய்ய வேண்டும்‌ – என்று நமது தர்ம சாத்திரங்கள்பல இடங்களில்வற்புறுத்துகின்றன. அதுவும்தூயவனாகிய ஒருவன்விருந்தாளி யாக வந்தால்‌, அது மிகப்பெரும்பாக்கியம்‌. அவனைத்தக்க முறையில்உபசரிக்க வேண்டும்‌. இந்தப்பண்பாடு நமது இதிகாசங்களிலும்‌, புராணங்களிலும்தர்ம சாத்திர நூல்களிலும்எடுத்துச்சொல்லப்படுகிறது. அந்தத்தர்மம்தான்இங்கே எம தர்மனுக்குக்கூறப்படுகிறது

மந்திரிகள்மேலும்கூறினார்கள்‌ : ‘எவனுடைய வீட்டில்தூய வனாகிய ஒருவன்உணவின்றி இருக்க நேர்கிறதோ, அந்த அற்ப புத்தியுடையவனின்நம்பிக்கைகளும்‌, எதிர்பார்பபுகளும்அழிகின்றன. அவன்ஏதாவது புண்ணியங்கள்செய்திருந்தால்அவற்றின்பலன்‌; அவன்இனிமையாகப்பேசியிருந்தால்அதனுடைய பலன்‌; யாகங்கள்முதலியவற்றைச்செய்திருந்தால்அவற்றுடைய பலன்‌; அவன்செய்திருக்கக்கூடிய நற்பணிகளின்பலன்‌ – எல்லாவற்றை யும்அவன்இழந்து விடுகிறான்‌. அவனுடைய மக்கட்செல்வ மும்‌, கால்நடைச்செல்வமும்அழிகின்றன.

இவ்வாறு தர்மம்எடுத்துரைக்கப்பட்டபோது, எமதர்மன்‌, நசிகேதஸிடம்சென்று அவனை உபசரித்து, ‘தரயவனே! வணங்கத்தக்கவனாகத்தெரிகிற நீ, விருந்தாளியாக வந்து, உணவின்றி என்வீட்டில்மூன்று இரவுகள்தங்க நேர்ந்துவிட்டது. குற்றம்எதுவும்இல்லாத பாலனே! நான்செய்த தவறு என்னைப்பாதிக்காமல்‌, எனக்கு நன்மை உண்டாகட்டும்‌; உன்னை வணங்குகிறேன்‌. நீ மூன்று இரவுகள்தங்க நேர்ந்ததற்காக, என்னிடமிருந்து நீ மூன்று வரங்களைப்பெற்றுச்செல்வாயாக!” என்று கூறினான்‌. 

இவ்வாறு கூறிய எமதர்மனுக்கு நசிகேதஸ்பதில்அளித்தான்‌ : ‘எமதர்மனே! உன்னிடமிருந்து இரும்பிச்செல்கிற என்னை, எனது தந்தை சரியாகப்புரிந்து கொள்ள வேண்டும்‌. என்னை ஏற்றுக்கொண்டு, தெளிந்த மனமுடையவராக, என்மீது எந்தக்கோப: மும்இல்லாதவராக அவர்என்னுடன்பழக வேண்டும்‌. நீ அளிக்கிற மூன்று வரங்களில்‌, இதையே முதல்வரமாக நான்கேட்கிறேன்‌”. 

நசிகேதஸ்கேட்ட இந்த வரத்தை எமன்அளித்தான்‌. 

அதையடுத்து நசிகேதஸ்இரண்டாவது வரத்தைக்கோரினான்‌: ‘ஸ்வர்க்கத்தில்பயம்என்பது கிடையாது. அங்குப்பசி, தாகம்போன்றவை இல்லை. அங்கே இருப்பவர்கள்கவலையற்றவர்களாக இருக்கிறார்கள்‌. அவர்கள்தேவத்தன்மையைப்பெறு கிறார்கள்‌. அங்கே அழைத்துச்செல்லக்கூடிய யாகம்பற்றி நீ நன்றாக அறிந்திருப்பாய்‌. சிரத்தையுடன்கேட்கிற எனக்கு அதைப்பற்றிச்சொல்‌. இதைத்தான்நான்இரண்டாவது வரமாகக்கேட்றேன்‌”. 

ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச்செல்கிற யாகம்பற்றி நசிகேதஸ்கேட்ட கேள்வியை, பெரியவர்கள்இவ்வாறு விளக்குகிறார்கள்‌ : யாகங்கள்இரு வகைப்பட்டவை என்று கொள்ளலாம்‌. ஒன்றுபுறத்தே செய்யப்படுவது; அதாவது ஹோம குண்டம்வளர்த்து, வேத மந்த்ரங்களை ஓதி, காணிக்கைகளைச்செலுத்தி, குறிப்பிட்ட பொருள்களை அக்னியில்சமர்ப்பித்துத்தெய்வத்தை வேண்டிக்கொள்வது; இன்னின்ன காரியத்திற்கு, இன்னின்ன வகையில்யாகம்செய்ய வேண்டும்என்ற விதிமுறைகளையொட்டி, அவற்றைச்செய்வது. இன்னொரு வகைஅகத்தே செய்யப்படும்யாகம்‌. அதாவது மனதை ஒருமுகமாக்கி, இறைவனையே தியானித்து, மனதாற எல்லாவற்றையும்இறை தத்துவத்திற்கே அர்ப்பணித்து, இயானத்தினால்செய்யப்படுகிற யாகம்‌. இங்கே நசிகேதஸ்அறிந்து கொள்ள விரும்பியது இரண்டாவது வகையில்செய்யப்படுகிற யாகம்என்றும்சில விளக்கங்கள்கூறுகின்றன; அது புறத்தே செய்யப்படுகிற யாகம்தான்என்றும்பல விளக்கங்கள்சொல்கின்றன

நசிகேதஸ்கோரிய இந்த இரண்டாவது வரத்தையும்எமன்அளித்தான்‌. ‘நசிகேதா! ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச்செல்கின்ற யாகத்தைப்பற்றிக்கேட்டாய்‌. அது எனக்குத்தெரிந்ததே. அதை உனக்குச்சொல்கிறேன்‌. விழிப்புள்ள மனதுடன்அதைக்கேட்பாயாக! சுத்தத்தைத்தருவதும்‌, உலகத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்னி, இதய குகையில்உள்ளது‘. இதைக்கூறிவிட்டுக்கட உப நிஷதம்மேலும்சொல்கிறது

அந்த யாகத்திற்கான விவரங்களையெல்லாம்எமதர்மன்வர்ணித்தான்‌. அவன்கூறியவற்றை நசிகேதஸ்அப்படியே இரும்பவும்ஒருமுறை சொன்னான்‌. தான்கூறியதை நசிகேதஸ்நன்றாகப்புரிந்து கொண்டான்என்பதில்எமதர்மன்மகிழ்ச்சி அடைந்து, ‘உனக்கு இதோ இன்னொரு வரம்தருகிறேன்‌. இந்த யாகம்இனி உன்பெயராலேயே விளங்கும்‌! பல வர்ணங்களைக்காட்டி, ஒளி வீசுகின்ற இந்த மாலையையும்நீ பெற்றுக்கொள்வாயாக! என்று கூறி ஒரு மாலையையும்அளித்தான்‌”. 

எமன்வர்ணித்த அந்த யாகம்‌, அதாவது நசிகேத யாகம்ஒரு வித்யையாக வர்ணிக்கப்படுகிறது. வித்யை என்பது பற்றி ஏற்கெனவே நாம்பார்த்தோம்‌. அந்த உயர்ந்த ஸ்தானத்தை இது பெறுகிறது. ஆனால்இது பற்றிய விவரங்கள்கட உபநிஷதத்தில்இல்லை. உபநிஷதங்களில்கூறப்படும்வித்யைகள்பற்றிய விவரங்கள்நமக்குக்இடைக்கவிவ்லைஎன்று பலர்விளக்கி இருப்பதையும்நாம்ஏற்கெனவே கண்டோம்‌. அவற்றில்ஒன்று தான்இந்த நசிகேத வித்யை. இங்கே குறிப்பிடப்படுகிற இதய குகையில்உள்ள அக்னி, ஆன்ம அக்னி. இதை விளக்கத்தினால்மட்டும்ஒருவர்பெற்றுவிட முடியாது. இதைப்பற்றிய உணர்வு வந்தால்தான்இதைப்பெற முடியும்‌. 

இதை நாம்கற்றுக்கொள்ள முடியாதா?! என்ற கேள்வி எழலாம்‌. கற்றுக்கொள்ள முடியும்‌. தகுந்த குரு அமைய வேண்‌: டும்‌. அதாவது, எமதர்மன்போன்ற ஒரு குருவை நாம்பெற வேண்டும்‌. அது மட்டுமல்ல. அந்தக்குருவிடமிருந்து உபதேசம்பெறுகிற தகுதியும்நமக்கு இருக்க வேண்டும்‌. அப்பொழுது நாமும்இதைக்கற்றுக்கொள்ளலாம்‌. இது தொடர்பாக ஒரு சிறிய உதாரணத்தைப்பார்க்கலாம்‌. ஒருமுறை கிருபானந்த வாரியார்ராமா யணத்தைப்பற்றிக்காலட்சேபம்செய்து கொண்டிருந்த பொழுது, கூட்டத்திலிருந்த ஒருவர்‌, ‘பலை, அதிபலை என்கிற இரண்டு மந்த்ரங்களைக்கற்றுக்கொண்டு, ராமர்பசி, தாகமற்று இருந்தார்என்று சொல்கிறீர்கள்‌. அந்த மந்த்ரங்கள்என்ன? அதைச்சொல்லுங்கள்‌. நாங்களும்கற்றுத்தெரிந்து கொண்டு, பசி, தாகமற்று இருக்கிறோமேஎன்று கேட்டாராம்‌. 

அதற்கு கிருபானந்த வாரியார்‌, ‘செய்யலாம்‌. ஆனால்ஒரே ஒரு பிரச்னைஅந்த மந்த்ரங்களைத்தெரிந்து கொண்டு உபதேசம்செய்கிறவனுக்கு, விச்வாமித்திரருக்கு உள்ள தகுதி இருக்க வேண்டும்‌. அதைக்கேட்டுக்கொண்டு, பலனைப்பெறுகிறவருக்கு ராமருக்கு உள்ள தகுதி இருக்க வேண்டும்‌. விச்வாமித்திரருக்கு உள்ள தகுதி எனக்கும்‌, ராமருக்கு உள்ள தகுதி உமக்கும்இருந்து, நான்உங்க ளுக்கு அந்த மந்த்ரங்களைத்தெரிந்து கொண்டு உபதேசம்செய்தால்‌, அது உங்களுக்குப்பயன்அளிக்கும்‌. அந்த மாதிரி தகுதி நம்மிடம்இருக்கிறதா?” என்று கேட்டாராம்‌. கேள்வியை எழுப்பியவர்பேசாமல்அமர்ந்துவிட்டார்‌. 

இந்த மாதிரி விஷயங்களை எல்லாம்‌, அதாவது மிக உயர்ந்த பொருளை எல்லாம்‌, புரிய வைப்பதற்கு ஏற்ற குரு அமைய வேண்டும்‌. அதை கிரஹித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு, தகுதியுள்ள சிஷ்யன்அமைய வேண்டும்‌. அந்த மாதிரி தகுதிகள்இல்லாத நிலையில்‌, ‘நசிகேத வித்யையை நான்கற்றுக்கொண்டு, ஸ்வர்க்கத்தை அடைந்து விடலாமாஎன்று கேட்பதில்அர்த்தமில்லை.

இதற்கு வேண்டிய தகுதி பற்றி இந்த உபநிஷதமே சொல்இறது. ‘நசிகேத யாகத்தை மூன்று முறை செய்தவன்‌, மூவரிடம்தொடர்பு கொண்டு, மூன்று பயிற்சிகளைச்சரியாகச்செய்யும்பொழுது, பிறப்பையும்இறப்பையும்கடக்கிறான்‌’.  

மூவருடன்தொடர்புஎன்றால்என்ன? தாய்‌, தந்தை, குரு ஆய மூவர்காட்டும்வழியில்செல்ல வேண்டும்‌. தாயின்அன்பு, தந்தையின்நடைமுறை வழிகாட்டுதல்கள்‌, அகத்தூய்மை பெற குருவின்உபதேசங்கள்ஆகிய மூன்றுடனும்நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்‌. இவற்றில்ஒன்று இல்லாமற்போனாலும்கூட, ஒருவனுடைய வாழ்வு, அவனுடைய இயக்கம்‌, முழுமை பெறுவதில்லை

மூன்று பயிற்சிகள்என்பவை என்ன? சொந்தத்தேவைகளை யும்‌, ஆசைகளையும்சுருக்கிக்கொள்வது; தன்னுடைய வாழ்க்கை பிறருக்குப்பயனுள்ளதாக அமையும்வழியில்நடந்து கொள்வது இது ஒன்று. தர்ம சாத்திரங்களை நன்றாகக்கற்றறிதல்‌, நல்ல கருத்துக்களைப்பிறருக்குச்சொல்லுதல்போன்றவைஅடுத்த பயிற்சி. மூன்றாவதாக, தானங்களைச்செய்வது. (இறைவனை உணரும்முயற்சியில்ஈடுபடுவது என்றும்சில விளக்கங்கள்கூறு  இன்றன). இவ்வாறு மூன்று பயிற்சிகளையும்ஒருவன்பெற்‌  றால்‌, அவன்நசிகேத யாகம்செய்யலாம்‌. ஸ்வர்க்கத்திற்குப்போகும்பாதையில்செல்லலாம்‌.

அதையே மூன்று முறை செய்தால்‌, அவன்அமரத்துவம்எய்தலாம்‌.  இந்த யாகம்நசிகேதஸின்பெயரிலேயே வழங்கும்என்ற வரத்தையும்அளித்த எமதர்மன்‌, மூன்றாவது வரத்தைக்கேட்கு மாறு நசகேதஸிடம்கூறினான்‌. நரிகேதஸ்‌, ‘மரணத்திற்குப்பிறகு வாழ்வு இருக்கிறது என்று சிலரும்‌, இல்லை என்று சிலரும்கூறுகிறார்கள்‌. இந்தச்சந்தேகத்தை உன்னிடம்கேட்டுத்தெளிவு பெற நான்விரும்புகிறேன்‌. நான்கேட்க விரும்பும்மூன்றாவது வரம்இதுவேஎன்று கூறினான்‌. 

எமதர்மன்‌, ‘இந்த விஷயம்பற்றித்தேவர்களுக்கும்கூட சந்தேகம்இருக்கிறது. இது மிகவும்நுணுக்கமானது. எளிதாக அறிந்து கொண்டுவிட முடியாது. ஆகையால்‌, நீ வேறு வரம்எதையாவது கேள்‌. என்னைக்கட்டாயப்படுத்தாதேஎன்று கேட்டுக்கொண்டான்‌. 

ஆனால்நசிகேதஸோ பிடிவாதமாக இருந்தான்‌. ‘எமதர்மனே! இதை எளிதாக அறிந்து கொள்ள முடியாது என்று நீயே சொல்கிறாய்‌. ஆகையால்இதைப்பற்றி எனக்கு உபதேசம்செய்வ தற்கு உன்னைப்போல வேறு ஒருவர்கிடைக்கமாட்டார்‌. எனக்கு இந்த வரம்தான்வேண்டும்‌. வேறு எந்த வரமும்இதற்கு ஈடாகாது! என்று கூறிவிட்டான்அவன்‌.