ஜோதிஷம் பற்றிய மஹாஸ்வாமிகளின் உபன்யாசங்களில் ஒன்று கூறப்பட்டிருக்கிறது. சகுனம் என்பது வேறு; நிமித்தம் என்பது வேறு. சகுனம் என்றாலே பறவை என்று அர்த்தம். பறவைகளால் ஏற்படும் குறிப்புகளுக்குத்தான் சகுனம் என்று பெயர். ஒரு பறவை வலம் இருந்து இடப்பக்கம் போனால், என்ன பலன் ஏற்படும்; ஒரு பறவை ஒரு நேரத்தில் கத்தினால் என்ன விளைவு உண்டாகும் – என்பதை எல்லாம் கூறுவது சகுன சாஸ்த்ரம். மற்றவை எல்லாம் நிமித்தம்.
அதாவது ஒரு பூனை குறுக்கே போனால், அது நிமித்தம். ஏனென்றால் அது பறவை அல்ல. கருடன் குறுக்கே போனால் அது சகுனம். ஏனென்றால் அது பறவை. ஒரு நிமித்தம் தோன்றுவதால் ஒரு விளைவு உண்டாவதும் இல்லை; ஒரு பலன் ஏற்படுவதும் இல்லை. ஒரு பலன் கிட்டப் போகிறது அல்லது ஒரு விளைவு ஏற்படப் போகிறது, என்பதை நாம் காண்கிற நிமித்தம் முன்கூட்டியே நமக்கு சமிக்ஞையாகத் தெரிவிக்கிறது. பூர்வ கர்மத்தின் விளைவாக, நமக்கு பல அனுபவங்கள் நிகழ்கின்றன; இதை நமக்கு நிமித்தம் எடுத்துக் காட்டுகிறது.
பூமிக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு என்பதை நியூட்டன்தான் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது வராஹமிஹிரரின் ப்ருஹத்ஸம்ஹிதையில் இருக்கிறது.
சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று மேலைநாட்ட வர்கள் வெகு நாட்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை மற்றவர்கள் கண்டுபிடிப் பதற்கு முன்பாகவே, நம் நாட்டில் வராஹமிஹிரர் முதலானவர்கள். சொல்லி இருக்கிறார்கள். சொல்லப் போனால், ‘சூரியன் இருந்தபடிதான் இருக்கிறது. பூமிதான் அதைச் சுற்றி வருது! என்பது ரிக் வேதத்திலேயே கூட வருகிறது.
இதே போல் ‘உலகம் தட்டையானது! என்று மேலைநாட்ட வர்கள் நினைத்தபோதே, பாரத நாட்டில், ‘உலகம் தட்டையானது அல்ல; முட்டை வடிவுள்ளது ‘ என்று கண்டுபிடித்தார்கள். அண்டம் என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். நக்ஷத்திர லோகங்களை யும் கொண்ட உலகை பிரம்மாண்டம் என்திறோம். பிரம்மனால் படைக்கப்பட்ட அண்டம், அது பிரம்மாண்டம். அதாவது முட்டை வடிவுள்ளது. நவீன விஞ்ஞானிகள் பூமி உருண்டை வடிவம் என்று கூறினாலும் – ‘அது சுத்தமான உருண்டை அல்ல; ‘ஓவல் ஷேப் உடையது; அதாவது முட்டை வடிவம் கொண்டது! என்று கூறி யிருக்கிறார்கள்.
ஜோதிஷத்தை அடுத்து வருவது கல்பம். இது வேத புருஷனின் ஆறாவது அங்கம். அவனுடைய கை. ‘எந்த கர்மாவை எப்படிச் செய்வது? யார் யார் எந்தெந்த காரியங்களைச் செய்ய வேண்டும்? த எந்தெந்த மந்த்ரம், எந்தெந்த பொருள், யாகங்களில் பயன்படுத்தப் பட வேண்டும்? எந்த மாதிரியான பாத்திரங்களை உபயோகப் படுத்த வேண்டும்? என்பதை எல்லாம் கல்ப சாஸ்த்ரம் நிர்ணயிக் கிறது. ஆபஸ்தம்பர், போதாயனர், பரத்வாஜர், ஆச்வலாயனர் போன்ற பலர், கல்ப ஸுத்ரங்களை இயற்றி இருக்கிறார்கள்.
வீட்டோடு பண்ணும் கர்மாக்களை விவரித்து, அவற்றிற்கான வழிமுறைகளைக் கூறுவது, க்ருஹ்ய ஸூத்ரம். வெளியே யாக சாலை அமைத்து செய்யும் கர்மாக்கள், ச்ரெளத ஸுத்ரத்தில் அடங்கும். மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ள, நாற்பது ஸம்ஸ் காரங்கள், கல்பத்தில் வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் க்ருஹ்ய ஸூத்ரங்களில் அடங்குகின்றன. சில, ச்ரெளத ஸூத்ரங்களில் வருகின்றன. இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில்தான் – உபநயனம், திருமணம், இறுதிச் சடங்கு… போன்றவை எல்லாம் அடங்கும். இவற்றில் சிலவற்றைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
இவற்றோடு கூட தர்ம ஸூத்ரங்கள் என்ற வகையில் அடங்கக் கூடிய, சில ஸலூத்ரங்களும் கல்பத்தில் இருக்கின்றன. இவற்றி லிருந்தே பிற்காலத்தில் தர்ம சாஸ்த்ரங்கள் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.
ஆக, வேதங்கள் (உபநிஷத்துக்கள் உட்பட) நான்கு; வேத அங்கங்கள் ஆறு – ஆக மொத்தம் பத்து. தர்மத்தை முழுமையாக அறிவதற்கு பதினான்கு வித்யைகளைக் கற்க வேண்டுமென்று கூறப்படுகிறது. இதில் இந்த பத்து போக, மீதமுள்ள நான்கு மீமாம்ஸை, நியாயம், புராணங்கள், தர்ம சாஸ்த்ரங்கள். இவை வேத உபாங்கங்கள் – உப அங்கங்கள்; அதாவது அங்கங்களுக்கு துணையாக இருக்கிறவை. இவற்றில் மீமாம்ஸை பற்றி ஏற் கெனவே நாம் பார்த்து விட்டோம். மீமாம்ஸை என்றால் கர்மாக் களை மிக முக்கியமாக வைத்து, ஈச்வரனைக் கூட கருதாமல் கர்மாக்களை செய்வதே மனிதனுக்கு ஏற்பட்டுள்ள வழிமுறை – என்றெல்லாம் பேசுகிற ‘பூர்வ மீிமாம்ஸை‘தான் எடுத்துக் கொள்ளப் படுகிறது. பாதராயணரின் (வியாஸரின்) ப்ரம்ம ஸூத்ரம், உத்தர மீமாம்ஸை என்று அழைக்கப்பட்டாலும், பொதுவாக மீமாம்ஸை எனும்பொழுது, பூர்வ மீமாம்ஸையைத்தான் குறிப்பிடுவதாசு எடுத்துக் கொள்ள வேண்டும். இது பற்றி நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
அடுத்து வருவது நியாயம். இது, பலவித விதிமுறைகளைக் கொண்டு, உலகைப் படைத்தது இறைவனே என்று தர்க்க ரீதியாக நிர்ணயிப்பது. நியாய ஸூத்ரத்தை இயற்றியவர், கெளதம மஹரிஷி. இவருடைய ஸுூத்ரங்களுக்கு பாஷ்யம் எழுதியவர் வாத்ஸ்யாயனர். கணாத மஹரிஷி என்பவரும் ஒரு ஸூத்ரம் இயற்றினார்.
இதை அடுத்து வருவது புராணம். இதை பின்னர் நாம் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். புராணத்திற்குப் பிறகு வருவது பதினாலாவது வித்தையாகிய தர்ம சாஸ்த்ரம். தர்ம ஸூத்ரங்கள் பற்றி மேலே நாம் பார்த்தோம். அவை சிறிய சிறிய வாசகங்கள். சுருக்கமாக விஷயத்தைச் சொல்பவை; தர்ம ஸுத்ரங்கள், கல்பத்தில் இடம் பெறுகிறவை. அவை எல்லா அம்சங்களையும் சொல்லி விடவில்லை.
ஆனால், தர்ம சாஸ்த்ரமோ ஒரு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பல தர்மங்களைப் பற்றி மட்டுமின்றி, வேறு பல விஷயங்களையும் விவரமாகச் சொல்கிறது. இந்த தர்ம சாஸ்த்ரங்கள்தான் ஸ்ம்ருதி என்பதில் அடங்கும். வேதம் – ச்ருதி அதாவது கேட்கப்பட்டது. இந்த தர்ம சாஸ்த்ரங்களோ ஸ்ம்ருதி, அதாவது நினைவுக் குறிப்புகள், அல்லது செய்யப்பட்டவை. நமது அடுத்த பார்வை ஸ்ம்ருதிகளைப் பற்றியது.
ஸ்ம்ருதிகள்தான் பொதுவாக தர்ம சாஸ்த்ரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு மனிதன் தனது சொந்த வாழ்க்கை யில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும், சமூகத்துடன் உள்ள தொடர்புகளை அவன் முறையாக நடத்திச் செல்ல வேண்டிய வழிமுறைகளும், தர்ம சாஸ்த்ரங்களில் விதிக்கப்படுகின்றன. வேதங்களில் இவையெல்லாம் ஆங்காங்கே சிறு குறிப்புகளாக வருகின்றன. அவற்றை எல்லாம் விரிவுபடுத்தி, வகைப்படுத்தித் தருவது தர்ம சாஸ்த்ரங்கள். அதாவது வேதங்கள்தான் இந்த ஸ்ம்ருதிகளுக்கெல்லாம் மூலம். தர்ம சாஸ்த்ரங்கள் எனப்படும் ஸ்ம்ருதிகளில், ஒரு விஇமுறை வேதத்திற்கு முரணாக இருந்தால், அது விடத்தக்கது, செல்லுபடியாகாதது.
ஸ்ம்ருதிகள் பல இருக்கின்றன. மனு, பராசரர், கெளதமர், ஹாரீதர், யாக்ஞவல்க்யர், விஷ்ணு, ப்ரஹஸ்பதி, அத்ரி, ஆபஸ் தம்பர்… போன்ற பதினெட்டு பேர்களால் ஸ்ம்ருதிகள் இயற்றப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஸ்ம்ருதிக்கும் அதை இயற்றியவர் பெயரே அமைந்திருக்கிறது. அதாவது மனு இயற்றியது, மனு ஸ்ம்ருதி. யாக்ளாவல்க்யர் இயற்றியது, யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி… இப்படி. இந்த ஸ்ம்ருதிகளைத் தவிர, உப ஸ்ம்ருதிகள் என்றும் பதினெட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இப்படி பல ஸ்ம்ருஇகள் இருக்கிறபோது, அவற்றை ஒருங் இணைத்துத் தர சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன. சில பண்டிதர்கள் இந்த ஸ்ம்ருதிகளை ஒருங்கிணைத்து, அவை கூறு வதன் அடிப்படையில் ‘நிபந்தனம்! என்ற நூல்களை இயற்றி இருக்கிறார்கள். நிபந்தனம் என்றால் ஒருங்கிணைப்பது என்று பொருள் உண்டு. இந்த மாதிரி நிபந்தனை நூல்களில் ஒன்று வைத்தியநாத இக்விதீயம் என்பது. சுமார், 200, 300 ஆண்டுகளுக்கு முன்பாக இது வைத்தியநாத இக்ஷிதர் என்பவரால் இயற்றப்பட்டது. கடைசியாகச் செய்யப்பட்ட நிபந்தனம் இதுவே. இப்போது தென்னாட்டில் உள்ளவர்கள், இந்த வைத்தியநாத இக்ஷியத்தில் உள்ள வழிமுறைகளைத்தான், தங்களுடைய பல வை$கக் காரியங்களிலும் கடைப்பிடிக்கிறார்கள்.
பல விஷயங்களை மிகவும் விவரமாக வைத்தியநாத தீக்ஷிதயம் கூறினாலும், ஸ்ம்ருதிகள் வெவ்வேறான கருத்தை தெரிவிக்கும் போது, வைத்தியநாத இக்ஷிதர் ‘ஒவ்வொரு பகுதியில் வாழ்கிற மக்கள், ஆங்காங்கே வழக்கில் உள்ள வழிமுறைகளின்படியும், தங்கள் தங்கள் குடும்பங்களின் (குலங்களின்) கடைப்பிடிக்கப் படுகிற வழிமுறைகளின்படியும் நடந்து கொள்ள வேண்டியது என்று சொல்லி விடுகிறார். அதாவது என்னதான் சட்டங்களை இயற்றினாலும், விதிமுறைகளை வகுத்தாலும், அவ்வப்போது அதற்குச் சில விதிவிலக்குகள் தேவைப்படத்தான் செய்யும்; அவை சமூகத்தின் வழக்கை ஓட்டி அமையும் என்பது நீக்ஷிதரால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது; இது அவர் கண்டுபிடித்த புது வழியும் அல்ல.
ஏனென்றால், தர்ம ஸுத்ரங்களில் ஒன்றாகிய ஆபஸ்தம்ப ஸலித்ரத்திலேயே கூட, (கல்பத்தில் வருவது) பல விஷயங்கள் விளக்கப்பட்டிருந்தாலும், ஒன்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘இந்த ஸலித்ரங்களில் நான் எல்லா தர்மங்களையும் கூறிவிடவில்லை. சொல்ல வேண்டியவை‘ இன்னமும் எவ் வளவோ இருக்கின்றன. பெண்களிடமிருந்தும், நான்காவது வர் ணத்தைச் சார்ந்தவர்களிடமிருந்தும், கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அவர்களிடம் கேட்டு, அவற்றைப் புரிந்து கொள்ளலாம்! என்று அவர் கூறி விடுகிறார். அதாவது யாரை எல்லாம் தர்ம சாஸ்த்ரங்கள் விலக்கி வைத் இருக்கின்றன என்று ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறதோ ‘அவர்களை எல்லாம் சேர்ப்பது மட்டுமல்ல, அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்! என்றே கூட கூறப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்ல, தாங்கள் வகுத்துள்ள வழிமுறைகள் அனைத்தும், எந்தக் காலத்திற்குமே நிலைத்து நிற்கக் கூடியவை என்று கூட, ஸ்ம்ருதிகளை இயற்றியவர்கள் சொல்லவில்லை. மாறாக, ‘சில விதிமுறைகள் ஒரு சமூகத்திற்கும், ஒரு காலகட்டத் இற்கும் ஒவ்வாமல் போக முடியும். ‘ஒரு காலத்தில் தர்மமாகப் பார்க்கப்பட்ட வழிமுறை, பிற்காலத்தில் மக்களால் வெறுக்கப் படுகிற நிலையை அடைந்தால், அந்த தர்மத்தைக் கைவிட்டுவிட வேண்டும்” என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி சொல்கிறது.
ப்ரஹஸ்பதி இயற்றிய தர்ம சாஸ்த்ர நூல், ‘சாஸ்த்ரத்தின்படி மட்டுமே ஒரு விஷயத்தைப் பார்க்கும்பொழுது, சில தவறுகள். நேர்ந்து விடலாம். நியாயமான காரணத்திற்கு உட்படாத, அந்த மாதிரி முடிவு தர்மத்திற்கு இழுக்காக அமையும். ஆகையால் நியாய சபையில் எடுக்கப்படும் முடிவுகள் சாஸ்த்ரத்தை ஒட்டி மட்டு மல்லாமல், நடைமுறை காரண காரியங்களையும் ஒட்டி அமைய வேண்டும்” என்று கூறுகிறது.
இதை எல்லாம் பார்க்கும்பொழுது, ஹிந்து மத தர்ம சாஸ்த்ரங்கள் நிர்ணயித்த நீதிமுறை முழுமையாக வெறுக்கத் தக்கது – என்ற பிரச்சாரம் மிகவும் தவறு என்பது புரியும்.