மனு ஸ்ம்ருதியை தவிர உள்ள வேறு பல ஸ்ம்ருஇகளில், பராசர ஸ்ம்ருஇக்கு ஒரு முக்கிய ஸ்தானம் அளிக்கப்படுகிறது. இது மிகப் பழமையானது. யுத்த காலம், பயண காலம் போன்றவற்றில் தர்ம விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பது கடினம் என்பதால், அந்த மாதிரி நேரங்களில் பல விதிவிலக்குகளை பராசரர் ஏற்படுத்தி இருக்கிறார். இது மனுஸ்ம்ருஇக்கும் கூட முந்தையது என்ற கருத்து பண்டிதர்களிடையே நிலவுகிறது.
யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி, ஹிந்து சட்ட வழிமுறைகளுக்கு முன்னோடியாகத் இகழ்வது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் விதி முறைகளை வகுப்பதில், இது மனுஸ்ம்ருதியை விட ஏற்புடையது என்ற கருத்து உண்டு. எழுத்து மூலமான பத்திரங்களின் முக்கியத்துவம், அடமானம், கூட்டு வர்த்தகம், போன்றவற்றைப் பற்றிய விஇமுறைகள், போன்றவற்றிற்கு மனு ஆரம்பம் செய்து வைத்தார் என்றால், யாக்ஞவல்க்யர் இந்த விதிமுறைகளை மிகவும் தெளிவாக்கி இருக்கிறார். பல சிவில், மற்றும் கிரிமினல் சட் டங்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்கிற இந்த ஸ்ம்ருதிக்கு, எழுதப்பட்டுள்ள ‘மிதாக்ஷரம்’ என்ற நூல், சமீப காலம் வரை, ஹிந்து சட்டத்தைப் பொறுத்தவரையில், நீதிமன்றங்களில் இறுதியான ஆதாரமாகக் கருதப்பட்டு வந்த நூல். மனுஸ்ம்ருதியை ஒட்டியே, பிற்கால ஹிந்து சட்டங்கள் வகுக்கப்பட்டன என்ற கருத்து முற்றிலும் சரியானதல்ல. யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியின் விதிமுறைகளை ஒட்டித்தான் பிற்கால ஹிந்து சட்டங்கள் வகுக்கப் பட்டன. மனுஸ்ம்ருதி காட்டிய கடுமையான அணுகுமுறை யில் பல யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியில் பெரிதும் தளர்த்தப்பட்டன என்பது கவனத்திற்குரியது.
நாரத ஸ்ம்ருதியில், பல வைதிக விஷயங்கள் தவிர்க்கப்பட்டு, சிவில் மற்றும் கிரிமினல் சட்ட விதிமுறைகளே முக்கியத்துவம் பெற்றன. இந்த வகையில், இது வேறு பல ஸ்ம்ருதிகளிலிருந்து மாறுபட்டது. நீதி பரிபாலன நடைமுறை பற்றி விரிவான விதிமுறைகளை வகுக்கிற நூல் இது. இன்று மிகவும் புரட்சிகர மான கருத்துக்கள் என்று வர்ணிக்கப்படுகிற பல சட்டத் தத்துவங்கள் நாரத ஸ்ம்ருதியில் காணப்படுகின்றன.
ஒருவர் மரணமடைந்த பின், அவருடைய சொத்தில் மகன் களைப் போலவே, அவனுடைய மனைவிக்கும் சம பங்கு; கல்யாணமாகாத பெண் இருந்தால் அவளுக்கும் மகன்களைப் போலவே சொத்தில் பங்கு… என்றெல்லாம் பெண்கள் சொத்து உரிமைக்காக வழி செய்திருக்கிறது நாரத ஸ்ம்ருதி. ஆக, இந்த மாதிரி எண்ணமே இப்போதுதான் தோன்றிய விஷயம் என்று நினைப்பது தவறு. இந்த ஸ்ம்ருதியின்படி காணாமற் போய்விட்ட கணவன், குறிப்பிட்ட காலத்திற்கு இரும்பி வரவில்லை என்றால் – அவனுடைய மனைவி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறாள். அதைப் போலவே விதவை விவாஹம் செய்து கொள்வதும், இந்த ஸ்ம்ருதியில் அனுமஇக்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்ட, லைசென்ஸ் பெற்ற சூதாட்டம் இந்த ‘ஸ்ம்ருதியில் அனுமஇக்கப்படுகிறது.
இன்றைய சட்டத்தில், கூட்டு வர்த்தகம் நடக்கிறபோது, அந்த கூட்டில் (பார்ட்னர்ஷிப்) உள்ள ஒரு கூட்டாளியின் (பார்ட்னரின்) வர்த்தக நடவடிக்கைகள், மற்ற கூட்டாளிகளையும் கட்டுப்படுத்தும். ‘அவன் செய்து விட்டான்; எங்களுக்குத் தெரியாது; நாங்கள் பொறுப்பல்ல! என்று கூறி மற்ற பார்ட்னர் தப்பிக்க முடியாது. அவர்களும் பொறுப்பேற்க வேண்டும். முன்னேறிய உலகின் இந்த சட்ட வழிமுறை, அன்றே ப்ருஹஸ்பதி ஸ்ம்ருதியில் காணப்படு கிறது. இதுவும் நாரத ஸ்ம்ருதி போலவே, வைதீக விஷயங்களை எடுத்துக் கொள்ளாமல், சிவில் மற்றும் கிரிமினல் சட்ட வழி முறைகளையே பேசுறது.
ஸ்ம்ருதி நூல்களில் கடைசியாக வந்ததாகக் கருதப்படுவது காத்யாயன ஸ்ம்ருதி. கடைசியாக வந்தது என்றால், ஏதோ சமீப காலத்தில் வந்தது அல்ல. இதுவே, கி.பி. 300-ஆவது நூற்றாண்டில் வந்தது என்று கூறப்படுகிறது. கடைசியாக வந்தது ஸ்ம்ருதி நூலே, 8300 ஆண்டுகளுக்கு முன்பாக வந்தது என்றால், அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னதாக வந்த மற்ற ஸ்ம்ருதி நூல்கள் எவ்வளவு பழமையானதாக இருக்க வேண்டும்!
காத்யாயன ஸ்ம்ருதியில், இன்றைய சட்டத் தத்துவங்களில் ஒன்றாகிய ‘ரெஸ்ஜுடிகேடா‘ என்ற தத்துவம் காணப்படுகிறது. அதாவது, ஏற்கெனவே இர்மானமாதி, தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்ட விஇமுறை. ஏற்கெனவே இர்ப்பாகி உறுதி செய்யப்பட்டு விட்ட விஷயத்தை ஒட்டியே மீண்டும் மீண்டும் வழக்கு தொடரப் படுவதைத் தடுக்கிற வழிமுறை கூட ஒரு ஸ்ம்ருதி நூலில் வகுக்கப் பட்ட வழிமுறைதான் என்பது, நமது சிந்தனையாளர்கள் எவ்வளவு ஆழமாக யோசனை செய்து இந்த விதிமுறைகளை எல்லாம் வகுத்துள்ளார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
வழக்குத் தொடுப்பவர், வேறு ஒருவர் உதவி கொண்டு (வழக்கில் வைக்கிற வழிமுறை) தனது வழக்கை நடத்த காத்யாயன ஸ்ம்ருதி வழி செய்கிறது. ஒரு சொத்து, உரிமையாளனாகவே இருந்தால் கூட, அது அடமானம் வைக்கப்படலாம் என்ற விதி முறையையும் இந்த நூல் வகுத்திருக்கிறது. நீதிமன்றத்திற்கு உதவுகிற ஜூரி வழிமுறை கூட இந்நூலில் காணப்படுகிறது. மனு சமர்ப்பிப்பது, எழுத்து மூலமான ஆதாரங்களைக் கொடுப்பது, சாட்சியங்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது, போன்ற வற்றிற்கான விதிமுறைகளையும் இந்நூல் விவரிக்கிறது. ப்ராம்மணனுக்கு தூக்குத் தண்டனை கிடையாது என்ற விதிமுறையை மாற்றி, இந்த ஸ்ம்ருதி சில குற்றங்களுக்கு ப்ராமணனுக்கும் தூக்குத் தண்டனை உண்டு என்ற விதிமுறைகளைக் கொண்டு வந்தது. இது நடந்தது 2300 வருடங்களுக்கு முன்பாக என்பதை நாம் மறக்கக் கூடாது.
இப்படி பல ஸ்ம்ருதிகள் உள்ளன. இவற்றைத் தவிர, ‘ஸுத்ரங்கள்! என்ற நூல்களும், பல விதிமுறைகளை வகுத்திருக்கின்றன. இவை மூன்று வகையானவை. ச்ரெளத ஸுத்ரங்கள், யாகங்கள் போன்ற சடங்குகளின் விதிமுறைகளை வகுப்பவை; க்ருஷ்ய ஸுத்ரங்கள், மனிதனின் குடும்ப வாழ்க்கையை ஒட்டிய விதிமுறை களைக் கூறுபவை; தர்ம ஸூத்ரங்கள்; சட்டத் இட்டங்களை வகுப்பவை – இவைதான் ஹிந்து தர்மத்தின்படியான சட்ட நூல்களின் ஆரம்பம்; ஸ்ம்ருதி நூல்களுக்கும் இவை முற்பட்டவை என்பது பண்டிதர்களின் அபிப்பிராயம்.
இவற்றுள் கெளதம தர்ம ஸூத்ரம் மிகவும் பழமையானது. வைதீக காரியங்கள்; மற்றும் சட்டத் இட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய விதிமுறைகளை இது கூறுகிறது. விவசாயிகள், வர்த்தகர்கள், வட்டிக்கு பணம் தருபவர்கள் போன்ற பல துறையினரின் பழக்க வழக்கங்களால் ஏற்பட்டு விட்ட விதிமுறைகளுக்கு, இந்த நூல் சட்ட அந்தஸ்தை அளிக்கிறது.
போதாயன தர்ம ஸுத்ரம், வர்த்தகம் அரசனின் கட்டுப்பாட்டுக் குள் அடங்கியதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது; கடல் கடந்து செய்யப்படுகிற வர்த்தகத்திற்கு வரி விதிப்பு, இன்றைய எக்ஸைஸ் ட்யூட்டி போல, உற்பத்தி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பு என்ற வழிமுறையை ஏற்படுத்தியுள்ள நூல் இது.
தர்ம ஸூத்ரங்களுக்கு இடையே சில மாறுபட்ட அணுகுமுறை கள் காணப்பட்டன. காலத்தை ஒட்டிய மாறல்களில் விளைந்த மாற்றங்கள் இவை. இதற்கு முந்தைய சில ஸூத்ரங்களைப் போல் அல்லாமல், வசிஷ்ட தர்ம ஸூத்ரம் சுவீகாரம் எடுப்பதை அனு மதிக்கிறது. ஆபஸ்தம்ப ஸூத்ரம், சுவீகாரத்தை தடை செய்கிறது. வைதீக சடங்குகள், விவாகங்கள் போன்றவற்றிற்கெல்லாம் வழி முறைகளும், விதிமுறைகளும் வகுத்துள்ள இந்த நூலில் இறுதியாகச் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம், மிகவும் முக்கியமானது. “நான் எல்லாவற்றையும் சொல்லி விடவில்லை. ஆகையால் சந்தேகம் ஏற்படுகிறபோது, ஸ்த்ரீகளையும், நான்காவது வர்ணத் தாரையும் கலந்து ஆலோசித்து, அவர்கள் சொல்கிறபடி செய்யவும்’ என்று கூறுகிறார் ஆபஸ்தம்பர்.
சாத்திர அறிவு, பழக்க வழக்கங்களை அனுசரித்தே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது ஆபஸ்தம்பரின் இந்த பிரகடனம்.
இதைத் தவிர ஹரித தர்ம ஸூத்ரம், விஷ்ணு தர்ம ஸித்ரம், என்றும் வேறு தர்ம ஸூத்ரங்களும் உள்ளன. உலகில் வேறு எந்த பகுதியிலும், மனித வாழ்க்கைக்கோ, விலங்கினங்களுக்கோ, விரிவான சட்டத் இட்டங்கள் எதுவும் வகுக்கப்படாத நிலையில், அதைப் பற்றிய சிந்தனையே அங்கெல்லாம் எழாத சமயத்தில், பாரத நாட்டில் இது பற்றி எல்லாம் விரிவான நூல்கள் இயற்றப் பட்டன என்பது பெருமைக்குரிய விஷயம். இப்படி சட்டத் இட்டங்களை வகுத்ததோடு மட்டுமல்லாமல், இவையெல்லாம் காலப் போக்கில், மாறுதலுக்குட்படக் கூடியவை என்பதையும் அன்றைய சிந்தனையாளர்கள் உணர்ந்திருந்தது, அவர்களுடைய விரிந்த பார்வைக்கு அத்தாட்சியாக இருக்கிறது.
ஒரு காலத்தில் தர்மம் என கருதப்பட்ட வழிமுறை, பின்னொரு காலகட்டத்தில் மக்களால் வெறுக்கப்படுகிற நிலையை அடைந் தால், அப்போது அந்த வழிமுறைகளை கைவிட வேண்டும் என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி கூறுகிறது.
ப்ருஹஸ்பதி இயற்றிய நூல் இப்படியும் கூறுகிறது : சாத்திரத்தின்படி மட்டுமே விஷயத்தைப் பார்க்கும்போது, தவறு நேர்ந்து விடலாம்; நியாயமான காரணத்திற்கு உட்படாத அம்மாதிரி முடிவு தர்மத்திற்கே இழுக்காகும். ஆகையால் நியாய சபையில் எடுக்கப்படுதிற முடிவுகள், சாத்திரத்தை மட்டுமல்லாமல், நடை முறை காரண காரியங்களை ஒட்டியும் அமைய வேண்டும்’,
அதாவது கண்மூடித்தனமாகவோ, பிடிவாதமாகவோ எந்த சாத்திர விதிமுறையையும் வற்புறுத்தி விடாமல், நடைமுறை காரண காரியங்களும் அன்றைய நூல்கள் ஏற்றன. காலத்திற்கு ஏற்றவாறு: மாறுதல்களைச் செய்து கொள்ளவும் வழி செய்யப்பட்டது. இவ்வளவு நியாயமாகவும், ஆழமாகவும் செய்யப்பட்டுள்ள சிந்தனைகளை– சில தவறான பிரச்சாரங்களினால் மயங்கி, ஒதுக்கத் தக்கவையாக நாம் நினைத்து விடக் கூடாது. நமது அரசியல் சட்டத்தின் வயது: அறுபதுக்குட்பட்டது; ஆனால் இந்த பழைய நூல்களின் விதிமுறைகளோ பற்பல நூற்றாண்டுகளுக்கு முற்பட் டவை. இன்றைய அரசியல் சட்டத்திவேயே பல மாறுதல்கள் தேவைப்படுகின்றன; அப்படியிருக்க, மிகப் பழமையான நூல் களில் கூறப்படுகிற விதிமுறைகளில் சில மாறுதல்களுக்குட்பட வேண்டும் என்றால், அந்த நூல்களையே நிராகரிப்பது அறிவுடமை ஆகாது.
அர்த்தசாத்திரம் சொல்வதை அடுத்துப் பார்ப்போம்.