அரசு பணத்தில் மோசடி, அன்றும் இருந்தது!

கிராம நிர்வாகம்பற்றி கூறுகையில்‌, யார்யாருக்கு நிலங்களை அளிக்கலாம்என்று விவரித்து விட்டு, ‘யார் யார்தங்கள்நிலங்களை பயிரிடாமலே வைத்திருக்கிறார்களோ, அவர்களிடமிருந்து நிலங்களை அரசன்பறிமுதல்செய்து, மற்றவர்களுக்கு அந்த நிலங்களைக்கொடுக்க வேண்டும்‌’ என்று அர்த்தசாஸ்திரம்கூறுகிறது. ‘நீர்ப்பாசன வசதிகள்முறையாகச்செய்யப்பட வேண்டும்‌; தண்ணீர்பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு, வேறு பகுதிகளிலிருந்து தண்ணீர்வருவதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்பட வேண்டும்‌… குழந்தைகள்‌, முதியவர்கள்‌, ஆதரவற்றவர்கள்போன்றவர்களையும்‌, மகப்பேறு இல்லாத பெண்மணிகளையும்‌, கவனிக்க யாருமில்லை என்றால்‌, அரசன்அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்‌… படையெடுப்பின்விளைவாகவோ, பஞ்சம்‌, நோய்ஆகியவற்றின்காரணமாகவோ பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்‌…’ என்றெல்லாமும்அர்த்த சாஸ்திரம்விதிக்கிறது

வனங்கள்பாதுகாப்பு, யானை முதலிய மிருகங்களுக்கு பாதுகாப்பு போன்ற பொறுப்புகள்‌, வனங்களின்அதிகாரியிடம்விடப்படுகின்றன. கூட்டமாகவோ, தனியாகவோ உலவிக்கொண்டிருக்கிற யானைகளின்கணக்கு முறையாக எழுதப்பட்டிருக்க வேண்டும்‌ – என்ற விதிமுறைகள்இந்த நூலில்காணப்படு வதிலிருந்து, இந்த மாதிரி விஷயங்களில்கூட எவ்வளவு அக்கறை அந்த காலத்தில்செலுத்தப்பட்டது என்பதை நாம்புரிந்து கொள்ளலாம்‌. 

ஒரு ஆறுதலான விஷயம்‌. கள்ள நாணயம்அடிப்பது அப்போதே இருந்திருக்கிறது! நாணயங்களை பரிசோதிக்கும்அதிகாரி ஏற்ற பிறகே, தன்னிடம்வரும்நாணயங்களை கிடங்கு களின்அதிகாரி ஏற்க வேண்டும்என்று அர்த்தசாஸ்திரம்கூறுகிறது; கள்ள நாணயங்கள்வெட்டிவிடப்பட வேண்டும்என்றும்இந்த நூல்கூறுகிறது; கள்ள நாணயங்களைக்கொண்டு வருவதற்கு அபராதமும்குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இந்த குற்றம்அப்போதே கூட செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. மனிதன்பேராசை பிடித்தவன்என்பது இன்றைய நவநாகரிகத்தின்விளைவு அல்ல. சில மனிதர்களின்இயல்பு அது. அதற்கு கடுமையான தண்டனை விதிக்கிற சமூகம்‌, ஒழுங்குமுறையைக்காப்பாற்றிக்கொள்‌: இறது; அன்றைய சமூகம்அப்படிப்பட்டதாக இருந்தது

இன்றைய நிதி நிர்வாகத்தின்சில அம்சங்கள்கூட அன்றே இருந்திருக்கின்றன. அன்றாட வருமானம்‌, செலவு; கையிருப்பு; அதிலிருந்து செலவு; ஒரு துறையிலிருந்து நிதி, மற்றொரு துறையின்செலவிற்கு மாற்றப்படுவதுஎன்றெல்லாம்வகைப்படுத்தப்பட்டு நிதி நிர்வாகம்சரமைக்கப்பட்டிருந்தது. இதை கெளடில்யர்மிக விரிவாகவே எடுத்துரைக்கிறார்‌. 

ஆவணங்களின்‌ – தஸ்தாவேஜுகளின்‌ – முக்கியத்துவம்வலி யுறுத்தப்படுகிறது. ‘ஒவ்வொரு துறையின்வருமானம்‌; பல்வேறு பொருட்கள்பயன்படுத்தப்படுவதில்‌, எது அதிகமாகிறது, எது குறைகிறது என்ற கணக்கு; உபரி செலவுகள்‌; ஊழியர்களின்ஊதியச்செலவு; நகைகள்பற்றிய தரம்‌, எடை. போன்ற கணக்குகள்‌; வன வளத்தின்மூலம்கிட்டும்வருமானம்‌; தங்கம்மற்ற வளங்கள்மூலமான வருவாய்‌; கிராமங்கள்எண்ணிக்கை; மக்கள்தொகை எண்ணிக்கை; இயற்கை சீற்றங்களை ஒட்டிய நிவாரணச்செலவு பற்றிய கணக்குகள்‌; எதிரிகளின்பகைகளை வென்று பெற்ற வகையறா.. போன்ற கணக்குகளும்‌, ஆவணங்கள்நிலையத்தில்பதிவாக வேண்டும்‌. அதுவரை இது, ஆவண அதிகாரியின்கட்டுப்பாட்டின்ழ்இருக்கும்‌! என்று கெளடில்யர்விவரிக்கிறார்‌. 

குறிப்பிட்ட இனத்தில்கணக்குகள்சமர்ப்பிக்கப்படும்‌; அப்போது கணக்குகளை சமர்ப்பிக்காத அதிகாரிகள்தண்டனைக்குள்ளாவார்கள்‌. இது தவிர, பொக்கிஷம்தொடர்பான மோசடிகள்நாற்பது வகைகள்என்று அர்த்தசாஸ்திரம்குறிப்பிடுகிறது

செய்யாத காரியத்தை செய்து முடித்ததாகக்காட்டுவது; செலுத்தப்படாத தொகையைச்செலுத்தப்பட்ட தொகையாகக்காட்டுவது; குறைந்த விலைக்குரிய பொருளை, அதிக விலை உள்ளதாகக்காட்டுவதுஎன்று தற்காலத்தில்நடக்கிற பல மோசடி வகைகள்அன்றே விவரிக்கப்பட்டிருக்கின்றன

இப்போது வருமான வரி இலாகா, சுங்கத்துறை போன்றவற்றுக்கு, தகவல்களைத்தெரிவிப்பவர்கள்அதற்காகசன்மானம்‌! பெறுகிறார்கள்‌. இந்த வழக்கமும்அன்றே இருந்இருக்கிறது! ‘இன்ஃபார்மர்கள்‌’ என்று இவர்களை அழைக்கிறோம்‌. இவர்களால்தகவல்தெரிவிக்கப்பட்ட விவகாரத்திற்கு என்ன மொத்த மதிப்போ, அதில்ஆறில்ஒரு பங்கு இவர்களுக்குத்தரப்பட வேண்டும்என்று விதிக்கிறது அர்த்தசாஸ்திரம்‌. 

வருமானத்திற்கு மீறிய சொத்து ஒருவரிடம்இருந்தாலோ, வருமானத்தை மீறுகிற செலவுகளை ஒருவர்செய்து கொண்டிருந்தாலோ, அவர்பக்கம்இன்றைய வருமானவரி இலாகாவின்பார்வை போகிறது. இது பற்றியும்கெளடில்யர்பேசுகிறார்‌ : ‘அளவான ஊஇயமே பெறுகிற அதிகாரி, நிறைய செலவுகளைச்செய்து கொண்டிருந்தால்‌, அவன்அரசு பணத்தை எடுக்கிறான்என்று புரிந்து கொள்ளலாம்‌ – என்று ஆச்சார்யர்கள்கூறியிருக்கிறார்கள்‌; உண்மை; இதை உளவாளிகள்மூலம்தான்கண்டறிய வேண்டும்என்றும்சொல்கிறான்கெளடில்யன்‌’ என்று அர்த்தசாஸ்திரம்கூறுகிறது

இது பற்றி அர்த்தசாஸ்திரம்தருகிற உதாரணங்களிலிருந்தே, இவ்விஷயத்தில்மிகவும்கவனம்தேவை என்பது, அக்காலத்திலேயே உணரப்பட்டிருந்தது என்பது புரியும்‌. 

நாக்கின்நுனியில்வைக்கப்பட்டு விட்ட தேனையோ, விஷத்தையோ, கொஞ்சமாவது விழுங்காமல்இருக்க முடி யாது; அதே போல அரசு நிதியை நிர்வகிப்பவர்கள்‌, ஒரு சிறிதளவேனும்அப்பணத்தை விழுங்குவார்கள்என்று நிச்சய மாக எதிர்பார்க்கலாம்‌ ‘. 

தண்ணீரில்நீந்திக்கொண்டிருக்கிற மீன்‌, அந்தத்தண்ணீரை கொஞ்சம்குடித்தால்‌, அதை கண்டுபிடிக்க முடியாது; அதே போல்பல காரியங்களுக்காக நியமிக்கப்படுகிற அரசு அதிகாரிகள்‌, எப்போது பணத்தை கையாடல்செய்கிறார்கள்என்பதை அறிந்து கொள்வதும்கடினமே‘. 

ஆகாயத்தில்பறந்து சென்று கொண்டிருக்கும்பறவைகள்போகிற பாதையைக்கூட கண்டுபிடித்து விடலாம்‌; ஆனால்‌ (அரசு பணத்தை கையாடல்செய்கிற) அதிகாரிகள்‌, தங்கள்எண்ணத்தை மறைத்துக்கொண்டு நடமாடுகிற வழிகளைக்கண்டுபிடிப்பது மிகவும்கடினம்‌”. 

இப்படி அரசின்பணத்தை கையாடல்செய்து, பெரும்நிதியைத்இரட்டி விட்டவர்களிடமிருந்து அது கைப்பற்றப்பட வேண்டும்‌; அவர்கள்அகற்றப்பட வேண்டும்‌”. 

தாமிரபரணி பகுதி, பாண்டிய நாடு ஆகியவற்றிலிருந்து வருகிற முத்துக்கள்பற்றி அர்த்தசாஸ்திரம்குறிப்பிடுகிறது. இவ்வாறே பல்வேறு உலோகங்களையும்‌, பொருட்களையும்‌, குதிரை, யானை போன்ற மிருகங்களையும்பெற்றுள்ள நாட்டின்பல பகுதிகள்குறிப்பிடப்படுகின்றன. உலோகங்கள்‌, அவற்றின்உபயோகங்கள்‌, அவற்றைக்கொண்டு பொருட்களைத்தயார்செய்யும்தொழிற்சாலைகள்பற்றியெல்லாம்கெளடில்யர்விதிமுறைகளை விதித்இருக்கிறார்‌. 

இந்த மாதிரி தொழில்கள்எவ்வளவு பரவியிருந்தால்‌, இதற்கான வழிமுறைகள்வகுக்கப்பட்டிருக்கும்‌’ என்று நாம்யூகித்துக்கொள்ளலாம்‌. உலோகங்களுக்கென ஒரு தனி துறையும்‌, தனி அதிகாரியும்குறிப்பிடப்படுகிறார்கள்என்பதும்கவனத்திற்குரியது

வர்த்தக அதிகாரிக்கு நிறைய கடமைகள்விஇக்கப்பட்டிருக்கின்றன. அயல்நாடுகளிடமிருந்து, கப்பல்கள்மூலமாக பொருட்கள்வருவதை (இறக்குமதி) ஊக்குவிக்க வேண்டும்என்கிறார்கெளடில்யர்‌; அம்மாதிரி பொருட்களை கொண்டு வருகிற வர்த்தகர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்என்று அவர்சொல்கிறார்‌; அவர்களுக்கு எதிராக, பண விஷயத்தில்வழக்குகளை பஇவு செய்யக்கூடாது என்றும்விதிக்கிறார்‌. இறக்குமதி அவ்வளவு முக்கியமாகக்கருதப்பட்டிருக்கிறது

அரசாங்கமே நடத்துகிற ரேஷன்கடைகளிலிருந்து, பல கடை களிலும்‌, வர்த்தகங்களிலும்‌, ‘எடை அல்லது அளவு மோசடிநடப்பதை இன்று நாம்பார்க்கிறோம்‌. அன்றும்இது இருந்திருக்கிறது என்பது அர்த்தசாஸ்இரத்தின்சில விஇமுறைகளிலிருந்து புரிகிறது

பொருட்களின்தர நிர்ணயமும்அன்றே வழக்கத்தில்இருந்இருக்கிறது. தங்கத்இலிருந்து, வெண்ணெய்வரை பல்வகைப்பொருட்களுக்கு தர நிர்ணயம்எவ்வாறு செய்யப்பட வேண்டும்என்பதை, கெளடில்யர்விவரமாக எடுத்துரைக்கிறார்‌. இந்த பொறுப்பும்‌, எடைகள்சரியாக இருக்க வேண்டியதை உறுதி செய்கிற பொறுப்பும்‌ – ‘தர நிர்ணய அதிகாரியினுடையது என்று அர்த்தசாஸ்திரம்கூறுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, எடைகள்பரிசோதிக்கப்பட்டு அரசு முத்திரையைப்பெற வேண்டும்‌- என்கிறது அர்த்தசாஸ்திரம்‌. அரசு முத்திரை பெற்ற எடைகளைப்பயன்படுத்துநவர்களுக்கு அபராதம்விதிக்கிற ஷரத்தும்‌, அர்த்த சாஸ்இரத்தில்இருக்கிறது

கிராமப்புறங்கள்‌, நகர்ப்புறங்கள்‌, அயல்நாடுகள்‌ – என்ற மூன்று வகையான இடங்களிலிருந்து வியாபாரத்திற்கு பொருட்கள்வரக்கூடும்என்று கூறுறெ இந்த நூல்‌, ‘வருநற மற்றும்எடுத்துச்செல்லப்படுகிற பொருட்கள்‌! என்று வகைப்படுத்தி, அவற்றிற்கான வரி விதிப்புகளை நிர்ணயிக்கிறது. வெவ்வேறு பொருட்களுக்கு, வெவ்வேறு விகிதத்தில்வரி, இந்த நூலில்நிர்ணயிக்கப்படுகிறது

துணி உற்பத்தி, விவசாயம்‌, உலோகம்‌, மதுபானம்‌… என்று பற்பல விஷயங்களுக்கு வெவ்வேறு இலாகாக்கள்உருவாக்கப்பட்டு, தனித்தனி அதிகாரிகள்நியமிக்கப்பட வேண்டும்என்றும்கெளடில்யர்கூறுகிறார்‌.

மதுபானம்குறிப்பிடப்பட்ட இடங்களில்தான்விற்பனை செய்யப்பட வேண்டும்என்றும்‌, மற்ற இடங்களில்மதுபான விற்பனை நடந்தால்‌, அது தண்டனைக்குரியது என்றும்அர்த்த சாஸ்திரம்விதிக்கிறது

கப்பல்போக்குவரத்து பற்றி இந்த நூலில்விசேஷ கவனம்செலுத்தப்பட்டிருக்கிறது. கடல்கடந்து சென்று வருகிற கப்பல்கள்வரி விதிப்புக்கு உள்ளாகின்றன. எதிரி நாட்டிலிருந்து வருகிற கப்பல்கள்அல்லது படகுகள்அழிக்கப்படத்தக்கவை என்றும்கெளடில்யர்எச்சரிக்கிறார்‌. 

நிர்வாகத்தை, பல பகுதிகளாக்கி, ஒவ்வொன்றுக்கும்அதிகாரிகளைக்குறிப்பிட்டு, அவர்களுடைய கடமைகளையும்பொறுப்புகளையும்விவரித்து, அதன்காரணங்களையும்கூறி, அர்த்தசாஸ்திரம்வகுத்துள்ள விதிமுறைகளைப்பார்க்கும்போது, ‘சுமார்இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால்‌, நம்நாட்டில்நிர்வாக சாத்திரம்இவ்வளவு சீராக அமைக்கப்பட்டதா!” என்ற பிரமிப்பு ஏற்படத்தான்செய்கிறது.