ஆசாரம் என்பதில் எல்லா ஸாமான்ய தர்மங்களும் அடக்கம் என்கிற மாதிரியே இன்னம் அநேக ஸமாசாரங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. ‘ஹெல்த்’துக்காக, ‘ஹைஜீனுக்’காக ஆன ஸுகாதார விஷயங்கள், வைத்ய சாஸ்திர ஸம்பந்தமான விஷயங்கள், ஸைகலாஜிகலான விஷயங்கள், ‘மொராலிடி’, அன்பு முதலானவற்றின் மீதான ஸமாசாரங்கள் எல்லாமே நம் ஆசாரங்களில் வந்து விடுகின்றன. இது அத்தனையையும் ஆத்ம ஸம்பந்தமாக உசத்திக் கொடுப்பதுதான் அதன் சிறப்பு.