தீட்டால் விளையும் தீமை

தீட்டும் மடியும் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் ‘ஸுபர்ஸ்டிஷன்’ என்கிறார்கள். ஆனால் தீட்டுக் கலப்பதால் என்னென்ன உத்பாதங்கள் உண்டாகுமென்று சாஸ்திரத்தில் போட்டிருக்கிறதோ அதெல்லாம் கண்ணுக்குத் தெரியும்படியாக இப்போது உண்டாகி வருவதைப் பார்க்கிறோம். தனி மனிதனின் வியாதி வக்கை, மஹாக்ஷேத்திரங்களிலும் விபத்து, natural calamities — இயற்கையின் சீற்றம் – என்கிற வெள்ளம், வறட்சி, பூகம்பம் எல்லாமே மடித் தப்பான காரியங்கள் அதிகமானபின் விருத்தியாகிக் கொண்டிருப்பதைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம். அப்படியும் அந்த effect-க்கு [விளைவுக்கு] இந்த cause [காரணம்] என்று ஒப்புக் கொள்ளமாட்டோமென்றால், இதுதான் எனக்குப் பெரிய ஸூபர்ஸ்டிஷனாகத் தெரிகிறது.