‘ஸ்வயம்பாகம்’ என்றால் தானே சமைத்துக் கொள்வது என்று அர்த்தம். பாகம் என்றால் சமையல், Paakam என்று உச்சரிக்க வேண்டும்; bhaagam இல்லை.
ஸ்வயம்பாகத்தை விஷயமாக எடுத்துக் கொண்டதில் நான் வழக்கமாகப் பாடும் பாட்டுக்கு வித்யாஸமாகப் பாடப் போகிறேன். வழக்கமான பாட்டு பொம்மனாட்டிகள் காலேஜ், ஆபீஃஸ் என்று போகாமல் அகத்திலேயே இருந்து சமைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பது. இப்போது பாடப்போகிற புதுப் பாட்டு, புருஷர்களும் சமைக்கக் கற்றுக்கொண்டு, எல்லாருமே ‘ஸ்வயம்பாகி’களாக வேண்டுமென்பது.