இப்படி இன்டிவிஜுவலாக நிற்கும்போதுதான் ஒருத்தன் சிஷ்யர்களை ஆகர்ஷிப்பதற்கு நிச்சயமாக சுத்தனாக இருந்தாக வேண்டும். சுத்தமான சரித்ரமும், நல்ல கனிந்த மனஸும் இல்லாத ஒருவனிடம் அவன் என்னதான் மஹா வித்வானென்றாலும், எந்தத் தகப்பனாராவது தன் சின்னப் பிள்ளையை, அந்தப் பிள்ளை தேஹரீதியிலும் புத்தியிலும் மனஸிலும் எல்லாவற்றிலுமே வாழ்க்கை முழுவதற்கும் அஸ்திவாரமான நல்ல வளர்ச்சியைப் பெற வேண்டிய ஸமயத்தில் பத்துப் பன்னிரண்டு வருஷம் குருகுலவாஸம் செய்யும்படியாக அனுப்பிவைப்பாரா?