வெளிநாட்டுப் புறச் சமயத்தினரின் அரசாட்சி ஏற்பட்டதிலிருந்து இந்த அரசாங்க போஷணை நலிவு காணத் தொடங்கியது. அப் புறச் சமயத்தினரில் மேல் நாட்டிலிருந்து வந்த வெள்ளையரின் ஆட்சி ஏற்பட்ட பின்னரோ, அவர்தம் வாழ்க்கை முறையிலேயே மோகிக்கத் தொடங்கிச் சொந்தமான சமயக் கலாசாரத்தைப் புறக்கணிக்கத் தலைப்பட்ட ஹிந்து சமுதாய மக்களும் தங்களது மதரட்சணையில் அக்கறை இழக்கலாயினர்.