*யாகங்களில் உயிர் பலி இருந்தது” என்ற விமர்சனம், தற்கால ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது என்பதையும்; பல சொற்களுக்கு இருக்கிற சில வேறு அர்த்தங்களில், விகாரமானதை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த அடிப்படையில் இந்த மாதிரி விமர்சனங்கள் செய்யப்படுகின்றன என்பதையும் – சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இம்மாதிரி விமர்சனங்கள், வேதங்களையும், ஹிந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்திப் பேச வேண்டும் என்ற நோக்க முடையவர்கள் செய்வது. அதனால், அவர்களுடைய விமர்சனம் உள்நோக்கம் உடையது; அதன் காரணமாகவே அவர்கள் சரியான பொருள் இருக்கும்போதுகூட, அதைப் பார்க்க மறுத்து விடு கிறார்கள்.
வேறு சிலர், இம்மாதிரியான உள்நோக்கம் எதுவும் இல்லா மலேயே, வேதங்களின் சிறப்புகளை ஏற்றுக் கொண்டே, ‘யாகங் களில் மாமிசம் பயன்படுத்தப்பட்டது’ என்று கூறுகிறார்கள். அவர் களுடைய வாதம் கவனிக்கத்தக்கது. அதைச் சற்றுப் பார்ப்போம். ”இயற்கையில் ஒன்று, மற்றொன்றிற்கு உணவாகிறது. நிலத் இன் சத்தை உண்டு – செடி, கொடிகள் வளர்கின்றன. செடி, கொடிகள் தரும் காய்கறிகளும், பழங்களும், பயிர்கள் தரும் தான்யங்களும் – பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உணவு; அந்த பறவைகளும், மிருகங்களும் – மனிதனுக்கு உணவு ஆகின்றன. சிறிய மீன், பெரிய மீனுக்கு உணவு; பெரிய மீனோ முதலைக்கு உணவாகிறது. ஒரு சிறிய மிருகம், ஒரு பெரிய மிருகத்திற்கு உணவு; அதன் உடல், பிணம் தின்னி மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாஙிறது. ”இது இயற்கை விதி; படைப்பின் நியதி. படைப்புக்கு வழி செய்த சக்தி, அழிவுக்கும் வழி செய்திருக்கிறது. இல்லாவிட் டால் பூமி தாங்காது. இது இவ்வாறென்றால், மனிதன் யாருக்கு உணவு? அவன் யமனுக்கு – காலதேவனுக்கு – அதாவது காலத் திற்கு உணவாகிறான்.
இதை வைத்தே, தேவர்களுக்கு மனிதன் அன்னமாகிறான் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி உணவாகிற மனிதன், காலத்தின் நியதிப்படி இரையாகி விடுவதற்கு முன்பாக, தானாகவே முன்வந்து, தன்னையே இயாகம் செய்ய வேண்டும். தன்னையே தியாகம் செய்வது என்றால் – தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது அல்ல பொருள். ‘தான்’ என்கிற அகந்தையை, அந்த அகங்காரத்தை, அந்த ‘ஈகோ‘வைத் தியாகம் செய்ய வேண்டும்.
”அகங்காரத்தினால் – தான் என்கிற எண்ணத்தினால் நிரப்பப் பட்டவனிடம், எந்த நல்ல விஷயத்திற்கும் இடம் இருக்காது. ஒருவன், ஒரு குருவிடம் சென்று தத்துவ போதனை செய்ய வேண் டும் என்று கேட்டுக் கொண்டான். அந்த குரு, அவனுக்குப் பதில் எதுவும் கூறாமல், ஒரு கோப்பையில் பழ ரஸத்தை ஊற்றிக் கொண்டேயிருந்தார். கோப்பை நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. வந்தவன், குரு கவனமாக இல்லை என்று நினைத்து, ‘நிறுத் துங்கள்; கோப்பை வழிகிறது; அதில் இடமில்லை‘ என்று கூறி னான். குரு ‘உன் நிலையும் அதுதான். தான் என்கிற எண்ணத்தை வெளியே கொட்டி, நல்ல விஷயங்களைக் கேட்டுக் கொள்ள இடம் ஏற்படுத்திக் கொள். அதன் பிறகு, உபதேசத்தை ஆரம் பிக்கிறேன்’ என்று அவனிடம் கூறி அனுப்பினார். ”இப்படி அகங்காரத்தினால் நிரப்பப்பட்ட மனிதன், தியாகம் செய்யும் வழிமுறைதான் யாகம். அதில், தனக்கு மிகவும் பிரிய மான பொருட்களை அவன் தெய்வத்திற்கு அளிக்கிறான். காய்கறி உண்பவன் – அதைத் தெய்வத்திற்கு தருவான். அதே போல மாமிசம் உண்பவன், அதைத் தெய்வத்திற்கு தருகிறான். இதில் எந்தத் தவறும் இல்லை. அதைத் தருகிறபோது, தன்னுடையது என்கிற எண்ணமில்லாமல் தர வேண்டும். இதனால்தான் இன்னும் கூட, சாதாரணமான ஹோமங்களில் கூட, ஒரு சமர்ப்பணம் முடிந்த வுடனேயே, ‘ந மம! – இது என்னுடையது அல்ல – என்று கூறப்படுகிறது.
அதாவது, ‘இந்த்ராய ஸ்வாஹா – இந்த்ராய இதம் ந மம! – என்று ஹோமம் நடக்கிறது. ‘இந்திரனுக்குச் சமர்ப் பணம்; இது இந்திரனுடையது; என்னுடையது அல்ல‘ என்று கூறப்படுகிறது. ‘இதனால்தான், மாமிசம் இடம் பெறாமலும் யாகங்கள் நடந் தன. மாமிசம் தீயிலிடப்பட்ட யாகங்களும் நடந்தன. அவரவர் களுக்கு எது விருப்பமான உணவோ, அதைத் தெய்வத்திற்கு படைத்தனர்”, இவ்வாறு யாகங்களுக்கு விளக்கம் தருகிறவர்கள் உண்டு; இவர்களுடைய விளக்கம் முழுமையாக ஏற்கக் கூடியது அல்ல என்பதைக் கீழே பார்ப்போம்.
அதே சமயத்தில் – யாகங்களில் மாமிசம் பயன்படுத்தப்படுகிற வழக்கம், காலப்போக்கில் எப்படித் _ தோன்றியது என்பதற்கு இந்த அணுகுமுறை, சரியான விளக்கமாக இருக்கும். யாகங்களில் உயிர் பலி கிடையாது என்று கூறுகிற பெரியவர் களின் வாதங்கள் மிகவும் வலு உள்ளனவாக இருக்கின்றன. அவற் றைச் சிறிது பார்ப்போம். வேதத்தில் ‘பசுக்களைக் காப்பாற்றுவாயாக; பசுக்களையும், ஆடுகளையும், குதிரைகளையும், எந்தப் பிராணிகளையுமே கொல் லாதே; மனிதனை மனிதன் கொல்லாதே; எந்த ஜீவராசியையும் ஹிம்சை செய்யாதே! என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு முறை, ஓர் இடம் அல்ல; பல இடங்களில் பல முறைகள் இது மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. அப்படியிருக்க, யாகத்தில் மிருகத்தையோ, மனிதனையோ கொல்ல வேண்டும் என்று அதே வேதம் எப்படிக் கூறும்?
‘கோஅக்னோ அதிதி:’ என்று ஒரு வாக்யம். ‘விருந்தாளிக் காகப் பசுவைக் கொல்! என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்; அதே சமயத்தில் இதற்கு ‘விருந்தாளிக்குப் பசுவைத் தானம் செய்! என்றும் அர்த்தம் வருகிறது. இரண்டாவது அர்த்தத்தை எடுத்துக் கொள்வதுதானே முறை? விருந்தாளிக்கு, அதிதிக்கு, பசுவை தானம் கொடுப்பதால் அவனுக்கு ‘கோக்னன்’ என்றும் பெயர் உண்டு என்று விளக்கப்பட்டிருக்கிறது. இதே போல் ‘அஜ‘ என்ற வார்த்தைக்கு ‘ஆடு‘ என்றும் அர்த்தம் உண்டு; ‘அன்னம்’ என்றும் பொருள் உண்டு. அன்னத் இனால் யாகம் செய்ய வேண்டும் என்பதை விட்டு விட்டு – ‘ஆட்டைப் பலி கொடுத்து யாகம் செய்ய வேண்டும்! என்று அர்த்தம் செய்து, ‘ஐயைய்யோ! மிருக பலி! என்று கண்டனம் செய்வது என்ன நியாயம்? இதோடு மட்டுமல்ல. இந்த விஷயம் வேதங்களில் நன்றா கவே விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பெரியவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதர்வண வேதம் இதை விளக்குகிறது; யஜுர் வேதத்திலும் இந்த விவரம் வருகிறது.
‘அரிசிதான் பசு; அரிசியில் உள்ள கருமை, மாமிசம்; அதில் உள்ள சிவப்புத் தன்மை ரத்தம்… என்றெல்லாம் அதர்வண வேதம் கூறுகிறது. மாவினால் செய்யப்படுகிற படையலை, ரிக் வேதம் பசுவாக உருவகப்படுத்திக் கூறுகிறது. அந்த மாவினால் செய்யப்பட்ட படையலில், தவிடு – பசுவின் இந்த அங்கம், நொய் – இந்த அங்கம்… என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ‘ஆலபனம்’ என்ற சொல்லிற்கு ‘கொல்வது‘ என்ற அர்த்தமும் உண்டு, ‘தொடுவது‘ என்ற பொருளும் உண்டு. உபநயனத்தில் குரு சிஷ்யனைத் தொடுகிறபோது, ‘ஹ்ருதயம் ஆலபதே‘ என்றே மந்திரப் பிரயோகம் உள்ளது. ஆகையால் கவாலம்பம் என்றால், பசுவைக் கொல்வதோ, அச்வாலம்பம் என்றால் குதிரையைக் கொல்வதோ அல்ல. பசு தொடப்பட்டு, தானம் செய்யப்படு கிறது: குதிரை தொடப்பட்டுத் தானம் செய்யப்படுகிறது. மீமாம்ஸை என்ற விளக்க நூலை இயற்றிய ஜைமினி, பசுவைக் காணிக்கையாக – தட்சிணையாகக் கொடுப்பது போல், குதிரையும் தானம் செய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
இது தவிர, மாமிசம் விழாத அக்னியே புனிதமானது என்று ரிக் வேதம் கூறுகிறது. இதை விளக்க ஒரு கதை, ரிக் வேதத்தில் கூறப்படுகிறது. ஒருமுறை யாரை அல்லது எதை ஒரு பசுவாகப் பாவித்து யாகம் செய்வது என்று முடிவு செய்ய முடியாத தேவர்கள், மனிதனைப் பசுவாகப் பாவிக்கத் தீர்மானித்தனர். அப்போது அவனுடைய ஆவி, ஒரு குதிரையிடம் சென்றதைப் பார்த்து, அந்தக் குதிரை யையே பசுவாகப் பாவிக்க அவர்கள் நினைத்தபோது, அந்த ஆவி ஒரு பசு மாட்டினிடம் செல்லவே, அதையே பசுவாகப் பாவிக்கத் இர்மானித்தனர். ஆனால் அந்த ஆவியோ பசு மாட்டினிடம் இருந்து, செம்மறியாடு, செம்மறியாட்டிடமிருந்து, வெள்ளாடு என்று மாறி மாறி, இறுதியாக வெள்ளாட்டிலிருந்து பூமியினுள் பிரவேசித்து, தானியமாகவிட்டது.
ஆகையால் தானியமே உயர்ந்தது என்றும், அதுவே பசுவாகப் பாவிக்கப்படத் தகுந்தது என்றும் அந்த தேவர் கள் முடிவு செய்தனர். இந்தக் கதை மூலம், மாமிசம் யாகத்தில் பயன்படுத்தப்படத் தகாதது என்பது விளக்கப்பட்டிருக்கிது. மிக உயர்ந்த தகுதிகளைப் பெற்று, மேல் உலகிற்கும் செல்லத் தக்க வன்மை படைத்தவனாகத் திகழ்ந்த உபரிசரவஸு என்கிற மன்னனைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியில், யாகங்களைப் பற்றிய இந்த விஷயம் விவாதிக்கப்படுகிறது.
சில தேவதைகள், யாகத்தில் ஆடு களைப் படைக்க வேண்டும் என்று கூற, அங்கிருந்த ரிஷிகள் ‘இது மிகவும் தவறு. ‘அஜ‘ என்ற சொல் ஆட்டை மட்டுமல்லாமல், தானங்களையும் குறிப்பிடுகிறது. உயர்ந்த கொள்கைகளை எடுத்துச் சொல்கிற போதனைகள், மிருக பலியை நிர்ணயிக்காது. ஆகையால் நீங்கள் கூறுவது தவறு. மிருக பலி கூடாது‘ என்று கூறினார்கள். இந்தச் சர்ச்சை நடந்து கொண்டிருந்தபோது, அங்கே உபரிசர வஸு வந்தான். கற்றறிந்தவன், உண்மையே பேசுபவன் என்ப தால், அவனிடம் இது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது. அவனோ, தேவர்களைத் திருப்தி செய்வதற்காக ‘மிருக பலியில் தவறில்லை என்றான். இப்படிக் கூறியதால், அவன் உடனே சபிக்கப்பட்டு. பறக்கும் சக்தி படைத்த தனது விமானத்திலிருந்து தள்ளப்பட்டு, கழே விழுந்தான்.
தன்னுடைய புண்ணியத்தினால் காப்பாற்றப் பட்ட அவன், நாராயணனைத் துதித்து, தனது உயர்ந்த நிலையை மீண்டும் அடைந்தான். மஹாபாரதத்தில், சாந்தி பர்வத்தில் இந்த நிகழ்ச்சி பீஷ்மரால் வர்ணிக்கப்படுகிறது. இப்படிப் பல இடங்களில் பல விவரங்கள் கூறப்பட்டிருப்ப தால், மிருக பலி என்பது, சொற்களையும், வாக்கியங்களையும் தவறாகப் புரிந்து கொண்டதால் வந்த வினை என்பதுதான் ஏற்புக் குரிய விளக்கமாக இருக்கிறது. யாகத்திற்கெல்லாம் முன்னோடி யாகிய, படைப்பு யாகத்தை வேதம் புருஷஸுக்தத்தில் வர்ணிக் கிறது. அதில் எல்லாமே உருவகங்களாகவே கூறப்படுகின்றன. இளவேனிற் காலம் – நெய்; கோடைகாலம் – நெருப்பில் இடப் படுகிற சுள்ளிகள்; பனிக்காலம் – படையல்… என்றெல்லாம் அந்தப் படைப்பு யாகம் வர்ணிக்கப்படுகிறது.
இதில் உலகைப் படைத்தவனே யாகப் பசு. ‘பசு‘ என்பது பசு மாட்டை மட்டுமல் லாமல், பல்வேறு மிருகங்களை மட்டுமல்லாமல், தேவர்களுக்குக் கொடுக்கத் தகுதியுள்ள எந்தப் பொருளையும் கூட குறிக்கும். சருஷ்டிக்காக நடந்த யாகத்தில் விராட புருஷனே பசு. அதாவது, ் ப்ரும்மா தன்னைத்தானே யாகத்தில் அர்ப்பணித்து, சிருஷ்டியைச் செய்தான். இதிலிருந்தே – யாகத்தைப் பற்றிய வேத விதிமுறைகளும், விளக்கங்களும், ‘அஜ‘ என்றால் ஆடு, ‘அச்வ‘ என்றால் குதிரை. பசு” என்றால் பசு மாடு… என்ற அடிப்படையில் புரிந்து கொள்ளத் தக்கவை அல்ல என்பது விளங்கும். இன்றும்கூட புரோகிதர்கள், ஒரு ஹோமத்தை நடத்துகிறபோது, ‘ச்ரத்தா பத்னி, சரீரம் இத்ம:’ என்று ஓதுகிறார்கள். முனைப்பே உன் மனைவி: உன் சரீரமே நெருப்பில் இடப்படுகிற சுள்ளி – என்பது இதன் பொருள். அதாவது, அப்படிப் பாவிக்கப்படுகிறது, உருவகம் செய்யப்படுகிறது. முன்பே கூறியபடி வேதம், மறைபொருள் உடையது. அதை உணர்ந்து கொண்ட பெரியவர்கள் கூறியுள்ள விளக்கங்களைக் கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான், வேதங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் கிட்டுவதற்கு உதவும்.
சரி, யாகங்களில் எந்த வேதம் ஓதப்பட்டது? நான்கு வேதங் களுக்குமே யாகங்களில் முக்கியமான பங்கு உண்டு. ரிக் வேத மந்திரங்கள் ஒருபுறம் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும்; இதன் பொறுப்பை ஏற்பவர் ஹோதா. யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி யாகம் செய்விக்கப்படும்; இந்தப் பொறுப்பைக் கவனிப்பவர் அத்வர்யு; ஸாம வேத கானங்கள் இசைக்கப்படும்; இந்தப் பொறுப்பு ‘உத்காதா‘ வைச் சார்ந்தது. இவை எல்லாவற்றையும் அதர்வண வேத முறையில் கவனித்து, ஏற்பவர் – ‘ப்ரும்மன்’. இப்படி நான்கு வேதங்களுக்கும் யாகத்தில் சிறப்பு உண்டு. யாகங்கள் ராக நடத்தப்பட்டால், நாட்டில் மழை பொழியும், பயிர்கள் செழிக் கும், மக்கள் மேன்மையுறுவார்கள் – என்பது நம்பிக்கை.