முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாகக் கூறப்படுவது, புராணங்களின் அடிப்படையில் வளர்ந்துள்ள நம்பிக்கை. ஆனால் வேதங்களில் இத்தனை தெய்வங்கள் இருப்பதாகக் கூறப்பட வில்லை. முப்பத்து மூன்று தெய்வங்களே வேதங்களில் குறிப் பிடப்படுகின்றன; அதுவும் மிக முக்கியமாக இந்திரன், அக்னி, வருணன், சூரியன், வாயு போன்றவர்களே துதிக்கப்படுகிறார்கள். ருத்ரனாகிய சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் வேதத்தில் இடம் இருந்தாலும், அவர்களை விடவும் அதிகமாகப் போற்றப்படு பவர்கள் இந்திரன், வருணன், சூரியன் போன்றவர்களே.
‘அப்படியானால், இன்று நாம் வணங்குகிற தெய்வங்களுக் கும், வேத கால தெய்வங்களுக்கும் தொடர்பே இல்லையா? விநாயகர், முருகன் போன்ற தெய்வங்கள் எப்படித் திடீரென்று வந்தன? பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற இருமூர்த்திகளுக்கே வேதங்களில் முக்கியத்துவம் இல்லையா? நவக்கிரஹங்களை வழிபடுகிறோமே, அதற்கும் கூட வேதங்களுடன் தொடர்பு இல் லையா?…’ என்ற கேள்விகள் பலர் மனதில் எழலாம். இந்த மாதிரி மனக்குழப்பம் அனாவசியமானது என்பதற்கான விளக் கங்கள் பலரால் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்ப்பதற்கு முன்பாக, மற்றொரு அடிப்படையான கேள்வியைப் பார்ப்போம்.
தெய்வங்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்றானா லும் சரி – வேதங்களில் கூறப்பட்டுள்ள முப்பத்தி மூன்றானாலும் சரி – பின்பு புராணங்களின் மூலம் வந்த முப்பத்து முக்கோடியானாலும் சரி – இத்தனை தெய்வங்கள் ஏன்? மற்ற பல மதங்களில் ஒரே ஒரு தெய்வம் குறிப்பிடப்படுகிற மாதிரி அல்லாமல், ஹிந்து மதத்தில் மட்டும் மூன்று, முப்பத்தி மூன்று, முப்பத்து முக்கோடி… என்று தெய்வங்கள் இருப்பானேன்?’ என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
வேறு எந்த மதமும் தோன்றுவதற்கு முன்பாகத் தோன்றிய ஹிந்து மதத்தில், வேறு எந்த மதமும் கூறுவதற்கு முன்பாகவே, தெய்வம் ஒன்றுதான்! என்பது வலியுறுத்தப்பட்டது. இதை வேதங்களே கூறுகின்றன.
“ஏகம் ஸத்: விப்ர: பஹுதா வதந்தி
உண்மை ஒன்றுதான். கற்றறிந்தவர்கள் அதைப் பலவாறாகக் கூறுகிறார்கள்.
இது வேத வாக்கியம். ‘இந்திரன், மித்ரன், வருணன், அக்னி, வாயு, கருடன் எனப் பலவாறாகப் பேசினாலும், உண்மை ஒன்று தான்; கற்றோர்கள் பலவாறாகக் கூறுகிறார்கள்! என்று வேதம் கூறுகிறது. இதில் உள்ள ‘ஏகம் ஸத்” – உண்மை ஒன்றுதான் என்: பது, ‘ஏகம் தத்! – ‘அது ஒன்றேதான்’ என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது இறைவன் என்பது – அதுவே உண்மை என்பதால், உண்மை என்பது – அது ஒன்றுதான் வேதங்கள் கூறுகின்றன. வேதங்களின் இறுதியில் வருகிற உபநிஷத்துக்கள் இதை மேலும் வலியுறுத்துகின்றன.
*மஹத் தேவானாம் அஸுரத்வம் ஏகம்”
பல தெய்வங்களுக்கும் உள்ள வலிமை (பெருமை) ஒன்றே – என்றும் வேதம் கூறுகிறது.
*யோ வேதாதெள ஸ்வார: ப்ரோக்த்:
வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய
ய: பர: ஸ மஹேச்வர:*
வேதத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் வலியுறுத்தப்படு வது மஹோன்னத தத்துவமான ஒரே ஈச்வரன்தான்
இவ்வாறு மஹா நாராயண உபநிஷத் கூறுகிறது. இப்படிப் பல உதாரணங்களைக் கூறலாம். ‘இப்படித் தெய் வம் ஒன்றுதான்! என்று உணர்த்திவிட்டு, பல தெய்வங்களைக் கூறுவானேன்? இது அபத்தமான நம்பிக்கை அல்லவா? மற்ற பல மதங்களில் உள்ளது போல, தெய்வம் ஒன்றே என்று கூறி விட வேண்டியதுதானே? என்ற ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன் சிறிது யோசிக்க வேண்டும்.
தெய்வம் ஒன்றே என்று கூறுகிற மதங்களில்கூட, அந்த தெய் வம் ஸர்வ வல்லமை படைத்த தெய்வம், ஒரே உருவத்துடன் அல்லது உருவமே இல்லாத தன்மையுடன், அப்படியே தான் இருக்குமா? நினைத்த உருவத்தை எடுக்கும் தன்மை இல்லை யென்றால், அதற்கு ‘ஸர்வ வல்லமை படைத்தது‘ என்கிற வர் ணனை எப்படிப் பொருந்தும்?
ஹிந்து மத நம்பிக்கையின்படி, ‘அது‘ என்றும், “ஸத்யம்” என்றும், ‘ப்ரும்மம்” என்றும் கூறப்படுகிற தெய்வம், ஸர்வ வல் லமை படைத்ததாக இருப்பதால், நினைத்த உருவத்தில் காட்சி அளிக்கக்கூடிய தன்மையையும் பெற்றிருக்கிறது.
அஜாயமானோ பஹுதா விஜாயதே
பிறப்பே இல்லாத அவன் பல்வேறு வடிவங்களில் தோன்று கிறான் என்று வேதம் கூறுகிறது. வேதங்களின் சாரமாக வந்தி ௬க்கிற பகவத் கீதையில், பரமாத்மா இவ்வாறு சொல்கிறார்:
யே யதா மாம் ப்ரப்த்யந்தே
தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ, அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
மீண்டும் கீதையில் இதே கருத்து கூறப்படுகிறது:
யோ யோ யாம் யாம் தனும் பக்த:
ச்ரத்தயார்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம்
தாமேவ விததாம்யஹம்
எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன், எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனவனுடைய அசையாத நம்பிக் கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்கிறேன்.
வேதங்களிலும் சரி, புராணங்களிலும் சரி, இறைவனைத் துதிப்பவர்கள், அவனை அழைக்க, அவன் வந்ததாகவே பல நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. பகவான் அவதாரம் எடுத்து வரு வது என்பது, ஹிந்து மதத்தில் மட்டும் காணப்படுகிற ஒரு விசே ஷம். அவதாரம் என்றால் இறங்கி வருவது. இது இறைவன், மனிதர்களுக்காகச் செய்யும் சேவை. நிர்குணம், சற்குணம் என்ற இருவகைகள் இறைவனுக்கு உண்டு. அதாவது, ஒன்று – எந்த ஒரு வர்ணனைக்கும் பிடிபடாமல், உருவமற்ற ஒரு நிலை; இரண்டு – உருவம் எடுத்துக் காட்சி அளிக்கிற மற்றொரு நிலை.
ஸர்வ வல்லமை படைத்தவன் என்பதால், இது இறைவ னுக்குச் சாத்யமே.
இப்படிப் பக்தர்கள் தன்னைத் துதிக்கிற வகையில் காட்சி அளிப்பதால், இறைவனை நாம் பல வகைகளில் பார்க்கிறோம். மற்ற மதங்கள் இறைவனை நெருங்க முடியாதவையாகப் பார்க் இன்றன; ஹிந்து மதத்திலோ, இறைவனை நண்பனாக, சேவக னாக, அரசனாக, தளபதியாக, குருவாக, தந்தையாக, தாயாக, தனயனாக – ஏன், காதலனாகக்கூட பார்த்த பக்தர்கள் உண்டு. இப்படிப் பலவிதமாகக் காண்பவர்களின் பக்தி, உண்மையான தாக இருந்ததால், அந்தந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளித் தான். அவரவர் பெற்ற காட்சியே, அவரவருக்குப் பெரிதாகத் தோன்றியதால், அதற்கு இணை எதுவுமில்லை என்று அவரவர் நம்பினர்.
“இது என்ன அவரவருக்கு ஒரு தனி தெய்வமா?! என்றால், ஆம்! அது முடியும். ஏனென்றால், ஹிந்து மதம் ஒவ்வொரு தனி மனிதனையும் பார்த்துப் பேசுகிறது. மற்ற மதங்கள், மனித சமூ கத்தைப் பார்த்துப் பேசுகின்றன; ஹிந்து மதம் அவ்வாறு சமூ கத்தைப் பார்த்துப் பேசுகிற இடங்களும் உண்டு என்றாலும், பல நேரங்களில் இம்மதம் , தனி மனிதனையே பார்த்துப் பேசுகிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைத் தானே உயர்த்திக் கொண் டால், சமூகம் தானாக உயர்ந்து விடும். வேத காலத்திலிருந்து, இதிஹாஸ, புராண காலங்கள் தொடர்ச்சியாக, சரித்திர காலம் வரை இதுதான் ஹிந்து மத நம்பிக்கை, முயற்சி, முனைப்பு, எல் லாம்.
இறை தத்துவம் ஒன்றே என்று உணரக்கூடிய ஞானத்தைப் பெறுகிற வரையில், நம்மை அனாதைகளாக ஹிந்து மதம் விட்டு விடவில்லை. நம்மைக் கரை சேர்க்க, ஞானத்தின் பாதையில் நம்மை இட்டுச் செல்ல, சில அடிகளாவது எடுத்து வைத்து, ‘அது ஒன்றே‘ என்ற நிலையை நோக்கி நாம் செல்ல, சற்குணம் பொருந்திய இறைவன் உருவெடுத்து வருகிறான். அதுவும், அவ ரவர் விரும்பியபடி.
இந்தப் பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு, முப்பத்து மூன்று வேத கால தெய்வங்கள் எவை என்று பார்ப்போம். இதைத் தவிரவும் தெய்வங்கள் குறிப்பிடப்படுகின்றன என்றா லும், விரிவுரையாளர்கள் கருத்துப்படி இவையே வேதம் கூறும் முப்பத்து மூன்று தெய்வங்கள்.
எட்டு வஸுக்கள், பதினொரு ருத்ரர்கள், பன்னிரண்டு ஆதித் யர்கள், மற்றும் இந்திரன், பிரஜாபதி, ஆக முப்பத்து மூன்று தெய்வங்கள் – விண்ணுலக தெய்வங்கள்; மண்ணுலக தெய்வங் கள்: இடைப்பட்ட வானுலக தெய்வங்கள் என்று மூன்றாகப் பார்க்கப்படுகின்றன.
இதில் ஆதித்யர்கள், உலகத்தையும் மனிதர்களையும் கட்டுப் படுத்துகிற விதிமுறைகளின் இருப்பிடம். மனிதர்கள் தங்களுக் குள்ளேயும், இயற்கையின் சக்திகளுடனும் ஏற்படுத்திக் கொள் திற தொடர்புகள் அனைத்தும், இந்த ஆதித்யர்களின் கட்டுக்குள் அடங்குபவை. இவர்கள் ஒளியைச் சார்ந்தவர்கள். நண்பன் எனக் கூறப்படக்கூடிய மித்ரன்; பரந்து விரிந்து கட்டுப்படுத்துகிற வரு ணன்; எதிரிகளை அழிக்கும் அர்யமான்; திறமை படைத்த தக்ஷன்; வள்ளலாகிய பகன்; தாராள குணமுடைய அம்சன்; ௨௬ வமைக்கும் த்வஷ்டா; உயிரளிக்கும் ஸவித்ரு; புஷ்டியளிக்கும் பூஷன்; பெரும் சக்தி படைத்த சக்ரன்; பேரொளி வீசும் விவஸ் வான்; எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணு – ஆகியோர் ஆதித் யர்கள்.
எட்டு வஸுக்கள், இயற்கையின் தன்மைகளைப் பிரதிபலிப் பவர்கள். பூமியாகிய தரா; நெருப்பாகிய அனலன்; நீராகிய அபு; காற்றாகிய அனிலன்; நக்ஷ்த்திரமாகிய துருவன்; சந்திரனாகிய ஸோமன்; விடியலாகிய பிரபாஸன்; ஒளியாகிய ப்ரத்யூஷன்.
ருத்ரர்கள் ஜீவராசிகளின் பிராணன்; பத்து சூக்ஷ்ம மூச்சுக் களும், மனமும் சேர்ந்து பதினொரு ருத்ரர்கள் யார் யார் என்பது “ பற்றி, வெவ்வேறு நூல்கள் வெவ்வேறாகக் கூறினாலும் – பவன், ஸர்வன், ஈசானன், பசுபதி, பிமன், உக்ரன், மஹா தேவன், ருத் ரன் ஆகியேர் ருதீரர்கள் எண்வர் என்று பலராலும் கூறப்படுகிறது.
இதெல்லாம் இவ்வாறிருக்க, வேதங்களில் மிகவும் முக்கிய மாக வர்ணிக்கப்படுகிற சில தெய்வங்களைப் பார்ப்போம். இந் இரனைத் துதிக்கிற வேத மந்திரங்கள் அநேகம். இவன் வஜ்ரா யுதத்தை உடையவனாகவும், மனதைவிட வேகமாகச் செல்கிற ரதத்தில் செல்கிறவனாகவும் பார்க்கப்படுகிறான். இருளை நீக்கி, ஒளியைத் தருபவனாகவும் இவன் கூறப்படுகிறான். யுத்தகள தலைவனாக இவன் வர்ணிக்கப்படுவதால், பின்னர் யுத்தங்களைச் சந்திக்கச் சென்ற போர் வீரர்கள், முதலில் இந்திரனை வணங்கி விட்டுச் சென்றதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. இந்திர விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டதாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.
அக்னியும் வேதங்களில் முக்கியத்துவம் பெற்ற ஒரு தெய் வம். பூமியில் நெருப்பிலும், வானுலகில் மின்னலிலும், விண் ணுலகில் சூரியனிலும் இவனுடைய அம்சமே காணப்படுவ தாகச் சொல்லப்படுகிறது. மனிதர்கள் படைப்பதை, தெய்வங் களுக்கு எடுத்துச் செல்கிற தேவதூதனாகவும் இவன் வர்ணிக்கப் படுகிறான். மிகவும் சக்தி படைத்த இவன், கருணை மிக்கவன். இவன் இல்லாமல் பூவுலகு இல்லை என்று கூறப்படுகிறது.
அஸ்வினி தேவர்கள் இருவர். இவர்கள் பூமியும் – வான மும்; இருளும் – ஒளியும் என்றெல்லாம் வெவ்வேறாக வர்ணிக்கப்படுகின்றனர். இந்த இரட்டையர்கள் இளமையும் அழகும் பொருந்தியவர்கள். மருத்துவத்தில் நிபுணத்துவம் உடையவர்கள். ஆரோக்கியம், செல்வம், உணவு ஆகியவற்றை அளிக்கிறவர் களாக இந்த இரட்டையர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
சூரியன், வாயு என்று இன்னமும் கூறப்பட்டுள்ள சில தெய் வங்களைப் பார்ப்போம். அதோடு, இது பற்றியெல்லாம் எழக் கூடிய கேள்விகளையும், அவற்றுக்கான விளக்கங்களையும் பார்ப்போம்.