வேத காலத்தில் அரசர்கள்

ஹிந்து மதம்என்ற பெயர்எப்படி வந்தது என்பதைப்பார்த்தோம்‌. அதைத்தொடர்ந்துஇறைவனின்சுவாசக்காற்றாக, அவனுடன்சேர்ந்தே வேதங்களும்இருந்தன என்பதால்‌, வேதங்களின்தொடக்கத்தை யாராலும்அறுதியிட்டுக்கூற முடி யாது என்பதையும்கவனித்தோம்‌. அவற்றை வரிசைப்படுத்தி, வகுத்து, இன்று காணக்கிடைக்கிற அமைப்பில்தந்தவர்வியாசர்என்பதையும்‌, இது வாய்மொழியாகவே வந்திருக்கிறது என்ப தையும்பார்த்தோம்‌… 

மேலும்‌, வேத மந்த்ரங்களின்அர்த்தத்திற்கு மட்டுமல்லாமல்‌, ஒலிக்கும்உள்ள சக்தி; மந்த்ரங்களின்அர்த்தங்கள்பல இடங்களில்மறைபொருளாக அமைந்திருக்கும்விவரம்‌; மந்திரங்களின்தொகுப்பாகியசம்ஹிதை‘, சடங்குகள்விவரிக்கப்படுகிறப்ராம்மணம்‌’, இவற்றை விளக்கிச்சொல்கிறஆரண்யகம்‌’ – என்று மூன்று பகுதிகளாகவும்‌ – அதைத்தொடர்ந்து இறுதிப்பகுதியாக உபநிஷத்துகளும்‌, வேதங்களில்அடங்கி இருக்கின்றனஏன்ற விவரம்‌… 

ஸோமபானம்அமிர்தத்திற்கு நிகரானது என்று கூறப்பட்டு இருப்பதையும்‌, சுராபானம்தான்மதுவே தவிர, ஸோமபானம்அல்ல என்ற விளக்கமும்‌; இரு பொருளுடைய வேத வாக்கியங்கள்பல உண்டு என்பதற்குச்சில உதாரணங்கள்‌; யாகங்களில்உயிர்பலி இல்லை என்ற விளக்கம்‌; வேதங்களில்கூறப்பட்டு இருக்கிற பல நன்மொழிகளும்‌, அவற்றில்வலியுறுத்தப்பட்டி. ௬க்கிற அனைவரும்சமமே என்ற கருத்தும்‌… 

யாகங்கள்போன்ற கர்மங்களைச்செய்வதே போதும்என்று வலியுறுத்திய பூர்வமீமாம்ஸை பற்றிய தகவல்கள்‌; இதைப்பெரிதும்பரப்பிய குமாரிலபட்டர்வரலாறு; குமாரிலபட்டர்உயிர்த்தியாகம்செய்ய இருந்த நிலையில்அவரைச்சந்தித்த ஆதிசங்க ரர்‌, பின்னர்மண்டனமிச்ரர்என்ற பூர்வமீமாம்ஸகரைச்சந்தித்தது; அவர்கள்இருவருக்கும்இடையே நடந்த விவாதத்தின்இறுதி யில்‌, ஆதிசங்கரர்முன்வைத்த வாதங்களால்கவரப்பட்டு, மண்டனமிச்ரர்ஞானமார்க்கத்தை ஏற்றது… 

ஆறு தத்துவங்கள்பற்றிய விவரங்கள்‌; சிருஷ்டியைப்பற்றிக்கூறுகிற புருஷ ஸூக்தம்‌; அனைவருக்குமே யாகங்களைச்செய்ய அதிகாரம்உண்டு என்பதற்கான ஆதாரம்‌… 

வேதங்களில்கூறப்படுகிற தெய்வங்கள்‌; இன்று வணங்கப்படுகிற தெய்வங்களின்குணாதிசயங்களுக்கும்‌, வேதத்தில்கூறப்படுகிற தெய்வங்களுக்கும்இடையே இருக்கும்ஒற்றுமைகள்‌; மும்மூர்த்திகள்பற்றி வேதங்கள்சொல்வது…  _

ஆகியவற்றை இதுவரை பார்த்தோம்‌. 

இனி, வேதங்களின்இறுதிப்பகுதியாகிய, உபநிஷத்துக்கள்பற்றிய ஓர்அறிமுகத்தைப்பார்ப்பதற்கு முன்பாக, வேதங்களில்காணப்படுகிற வேறு சில விஷயங்களைப்பார்ப்போம்‌. 

உலக அமைதிக்காக வேண்டிக்கொள்கிற மந்த்ரங்களை வேதங்கள்கூறுகின்றன. அதே சமயத்தில்‌, ஒரு மக்களுக்கு விரோதி கள்வளரக்கூடும்என்பதையும்உணர்ந்து, எதிரிகளை அழிப்ப தற்கான மந்த்ரங்களையும்வேதங்கள்சொல்கின்றன. கல்வி அறிவு பெறுவதற்காக, அறவழி மேலோங்குவதற்காக, நியாய மான ஆசைகள்நிறைவேறுவதற்காக, நீண்ட ஆயுளுக்காக, வியாதி நீங்குவதற்காக, பாம்புக்கடியின்விஷம்அகலுவதற்காக, ஓதப்பட வேண்டிய வெவ்வேறு மந்த்ரங்களும்வேதங்களில்உள்ளன. இவற்றில்பலவற்றுக்குத்தேவைப்படுகிற மூலிகைகள்பற்றியும்வேதங்கள்பேசுகின்றன. இறக்கும்தருவாயில்இருக்கிற மனிதனைக்காப்பாற்றி, நல்ல ஆரோக்கியத்துடன்வைப்பதற்கான மந்த்ரமும்இருக்கிறது. பாதுகாப்பிற்காகவும்‌, பல நன்மைகளைப்பெறுவதற்காகவும்அணிய வேண்டிய மணிகள்பற்றிய குறிப்புகளும்இருக்கின்றன

ஆட்சி முறை பற்றி வேதம்விரிவாகக்கூறுகிறது. அரசனுக்கு முடிசூட்டும்விழா நடக்கிற போது, அவனைப்பார்த்து, ‘இந்த ராஜ்யத்திற்கு அதிபதியாக நீ முடி சூட்டப்படுகிறாய்‌. நீயே எங்கள்அரசன்‌; எப்போதும்நெறி தவறாமலும்‌, உறுதி குன்றாமலும்இருப்பாயாக! மக்களில்அனைவரும்உன்னை விரும்புகிற மாதிரி நடந்து கொள்வாயாக! இந்த மாபெரும்ராஜ்யத்திற்கு உன்னால்எந்தத்இங்கும்நேரிடாமல்இருக்கட்டும்‌! – என்று மந்த்ரங்கள்ஓதப்படுகின்றன. மேலும்அரசனுக்குக்கூறப்படுகிற வாழ்த்துக்களில்‌, வேதகால சிந்தனை வெளிப்படுகிறது

உண்மையின்பாதையிலேயே செல்வாயாக; செயல்திறனும்‌, _ அறிவுத்திறனும்கொண்டுசெயல்படுவாயாக; உன்னுடைய பட்டாபிஷேக நேரத்தில்உன்னைத்தெய்வங்கள்ஆசர்வதக்கட்டும்‌; ராஜ்யத்தில்உணவு தானியங்களின்உற்பத்தி மேலோங்கட்டும்‌; உன்னால்ஆளப்படுகிற மக்கள்எல்லா செழிப்பையும்‌, புகழை யும்பெற்று விளங்கட்டும்‌; மகிழ்ச்சியின்ஊற்றாக நீ விளங்கு வாயாக! மனிதர்களிலேயே சிறந்தவனாக நீ திகழ்வாயாக! மக்களை நீ ஹிம்சிக்காதே; அவர்கள்உனக்குத்தீங்கு நினைக்கமாட்டார்கள்‌. உன்னால்எல்லா நன்மைகளும்விளையட்டும்‌’ – இப்படி முடிசூட்டப்படுகிற அரசன்‌, பதவிப்பிரமாணம்ஏற்பது போல சில வாக்கியங்களைச்சொல்ல வேண்டும்‌. 

இந்நாட்டின்அரசனாக நான்பொறுப்பேற்கிறேன்‌. இந்த நாட்டுனுடைய நிர்வாக அம்சங்கள்பலவும்என்னுடைய உடலின்அங்கங்களாகத்இகழும்‌. ராஜ்யத்தின்செழிப்புஎன்னுடைய முகம்ஆகும்‌. ராஜ்யத்தில்வாழ்பவர்களின்வாழ்க்கைஎன்னு டைய உயிர்மூச்சு ஆகும்‌. இந்தச்சிம்மாசனம்‌ – என்னுடைய கண்கள்‌. அறிவுசான்ற மக்களின்சபைகள்‌ – என்னுடைய காதுகள்‌. தர்ம நெறிகளால்கட்டுப்படுத்தப்பட்டு, அவற்றின் பெயராலேயே என்ஆட்சி நடக்கும்‌” – இவ்வாறு பதவிப்பிர மாணம்ஏற்கிற அரசன்‌, சில வாக்குறுதிகளைக்கூறுகிறான்‌. 

அன்பான வார்த்தைகளையே என்நாக்கு பேசும்‌. என்சொற்கள்ராஜ்யத்திற்கு மேன்மை தரும்‌. தீயவர்களின்பால்பெரும்கோபத்தை, என்மனம்விளைவிக்கும்‌. என்னுடைய தோள்கள்ராஜ்யத்தைத்தாங்கும்‌. என்னுடைய கைகள்பலம்பெற்றுத்திக மும்‌. என்னையே நான்கவனித்துக்கொள்வது போல, என்மக்களை நான்கவனித்துக்கொள்வேன்‌. இந்த ராஜ்யத்தின்மேன்மை யும்‌, செழிப்பும்ஒங்கி நிற்பதற்கு நான்உழைப்பேன்‌. மேலோர்கள்வாழ்த்துகிற வகையில்என்ஆட்சி அமையும்‌. இந்தப்பணி யில்‌, தெய்வங்கள்என்னைக்காக்கட்டும்‌”. 

இதைத்தொடர்ந்து, ராஜ்யத்திற்கே மேன்மை தருகிற வகை யிலும்‌, மக்களுக்கு நன்மை புரிகிற வகையிலும்‌, தான்ஆட்சி செய்வதற்காகத்தெய்வங்களை எல்லாம்அரசன்வேண்டிக்கொள்கிறான்‌. 

ஆட்சியைப்பற்றி வேதங்கள்கூறுகிறபோது, ‘ராஜ்யம்மனித உடலைப்போன்றது. பாசறைகள்‌ – அந்த உடலின்தோள்கள்‌; அறநெறி வகுக்கிற பாதைஅந்த ராஜ்யத்தின்ஆன்மா; கற்றறிந்தவர்கள்‌ – அந்த ராஜ்யத்தின்கால்கள்‌. எந்த உடலிலுமே கால்கள்அதிதியினுடையவை. அதுவே ஒரு ராஜ்யத்தின்அரசனுக்கு ரிய இடமாகிறதுஎன்று சொல்கிறது

இந்த இடத்தில்நாம்ஒன்றை உணர்ந்து கொள்ளலாம்‌. புருஷ ஸூக்தத்தில்‌, ‘ப்ராமணன்வாயிலிருந்தும்‌, க்ஷத்ரியன்தோள்களி விருந்தும்‌, வைசியன்தொடையிலிருந்தும்‌, சூத்ரன்கால்களி லிருந்தும்தோன்றினார்கள்‌! என்று கூறப்பட்டிருப்பதை வைத்து, பல விமர்சனங்கள்எழுந்துள்ளதை முன்பே கவனித்தோம்‌. கால்கள்இழிவுடையவை அல்ல என்பதை, இங்கே அரசனே கால்களோடு ஒப்பிடப்படுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்‌. அது மட்டுமல்ல, கால்களுக்குரியவள்அதிதி என்றும்கூறப்படுகிறது. அதிதிதான்தேவர்களின்தாய்‌. ஆகையால்கால்கள்என்று சொன்னாலே ஏதோ இழிவு என்று நினைத்துக்கொள்வது தவறு. உட லைத்தாங்கி நிற்பவை கால்கள்‌; ராஜ்யத்தைத்தாங்கி நிற்பவன் அரசன்‌; தேவர்களைத்தாங்கி நிற்பவள்அதிதி; சமூகத்தைத்தாங்கி நிற்பவன்சூத்ரன்‌. அதனால்தான்அரசனும்‌, அதிதியும்‌, சூத்ரனும்கால்களோடு ஒப்பிடப்படுகிறார்கள்‌. சூத்ரன்என்ற வார்த்தையின்வேரைப்பார்த்தால்‌, ‘தாங்குவதுஎன்பதே மூலச்சொல்‌. தாங்கி நிற்பவன்சூத்ரன்‌. ஆகையால்அதில்இழிவு கிடையாது

வருடத்திற்கு மூன்று முறை அரசன்தன்னுடைய ராஜ்யத்தைச்சுற்றிலும்பயணம்செய்து, மக்களை நேரில்சந்தித்து, அவர்களு டைய குறைகளைக்கேட்டறியும்வழக்கமும்வேதங்களில்குறிப்பிடப்படுகிறது. எந்தெந்த பணிக்கு என்ன என்ன தகுதியும்‌, அனு பவமும்உடையவர்கள்நியமிக்கப்பட வேண்டும்என்பதும்விவ ரிக்கப்படுகிறது. ‘எல்லாவற்றையும்பற்றிக்கேள்வி கேட்பவனை நியமித்தால்‌, அவன்மூலமாகச்சிந்தனை தூண்டப்பட்டு அரச னின்அறிவு வளர்ச்சி பெறும்என்றுகூட வேதம்கூறுகிறது

உளவாளிகள்எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்‌; எதிரிகளிடையே பிளவைத்தோற்றுவிக்க எத்தகையவர்களை நிய மிக்க வேண்டும்என்பதெல்லாமும்விவரிக்கப்படுகின்றன. குளங்களைச்சுத்தப்படுத்தி தூர்வாருவது முதல்‌, ராணுவத்தைச்சீராக வைப்பது வரை பல்வேறு பணிகளும்விவரிக்கப்படுகின்ஐன. ‘அரசனே! உன்னுடைய பிரதம நிர்வாகி நன்கு கற்றறிந்தவ னாக இருக்க வேண்டும்‌. உன்னுடைய செயல்களில்உள்ள குறை களைத்தயங்காமல்எடுத்துச்சொல்பவனை இந்தப்பணியில்அமர்த்தினால்‌, அரசு காரியங்கள்செவ்வனே நடக்கும்‌! என்றும்வேதம்அரசனுக்கு அறிவுரை கூறுகிறது

வேதங்கள்தோன்றிய காலம்எது என்பதே தெரியாது. அவை அவ்வளவு பழமையானவை. அப்போது, ஆட்சி முறை என்று ஒன்று உலகில்எங்கும்அமைந்ததே கிடையாது. அரசன்என்றும்‌, நிர்வாகிகள்என்றும்‌, ராணுவ வீரர்கள்என்றும்‌, வெவ்வேறு பணிகளுக்கான தனித்தனி அதிகாரிகள்என்றும்‌, உலகில்வேறு எந்தப்பகுதியும்கேள்விப்பட்டதும்கிடையாது. அப்ப டிப்பட்ட ஒரு காலகட்டத்தில்‌, இங்கே இவையெல்லாம்தெளி வாகக்கூறப்பட்டிருக்கின்றன. அறநெறி சார்ந்த ஆட்சி முறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எந்தப்பாகுபாடும்இல்லாமல்மக்கள்அனைவரையும்பாதுகாப்பது அரசனின்கடமை என்பதும்மீண்டும்மீண்டும்கூறப்படுகிறது

இவை எல்லாவற்றையும்விட அதிசயிக்கத்தக்க ஓர்அம்சமும்உண்டும்‌. பாராளுமன்ற ஆட்சி முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷார்தான்என்பது தற்கால சரித்திரம்‌. ஆனால்வேதங்களிலேயே இதற்கான தொடக்கம்இருக்கிறது. அடுத்த அத்தியாயத்தில்அதைப்பற்றிய விவரங்களைப்பார்ப்போம்‌.