உபநிஷத்துகளின் அணுகுமுறை!

108 உபநிஷத்துக்கள்இருப்பதாகக்கூறப்படுகிறது. இவற்நில்பல, குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை அல்லது தத்துவத்தைப்போற்றுவதையே நோக்கமாகக்கொண்டவை. பொதுவாக உபநி ஷத்துகள்என்று பேசப்படுகிறபோது, இந்த வகையானவை முக்இயமானவையாகக்கருதப்படுவதில்லை. எவைதாம்முக்கியமா னவை? அதற்கு என்ன அளவுகோல்‌? இதை நிர்ணயிக்க பரம்பரை பரம்பரையாக ஒரு வழிமுறை கண்டறியப்பட்டது

முதன்முதலில்உபநிஷத்துக்களுக்கு விளக்கங்களையும்‌, விரி வுரைகளையும்இயற்றியவர்ஆதிசங்கரர்‌. அவர்பதினொரு உப: நிஷத்துக்களுக்குத்தான்விளக்க உரை எழுதியிருக்கிறார்‌. அவையே முக்கியமானவை என்று ஏற்கப்பட்டுள்ளன. ஈசா வாஸ்ய, கேன, கட, பிரசன, முண்டக, மாண்டுக்ய, தைத்திரீய, ஐதரேய, சாந்தோக்ய, ப்ருஹதாரண்யக, ச்வேதஸ்வதர உபநிஷத்துக்கள்‌. இதில்கடைசியாகக்கூறப்பட்டதற்கு ஆதிசங்கரர்பெய ரில்வந்துள்ள விளக்கவுரை, அவரால்இயற்றப்பட்டது அல்ல என்று சிலர்கூறுகிறார்கள்‌. முதல்பத்து உபநிஷத்துக்களைப்பற்றி இந்த மாதிரி பிரச்னை இல்லை. ராமானுஜரும்தமது நூல்களில்கிட்டத்தட்ட பத்து உபநிஷத்துக்களில்இருந்துதான்மேற்கோள்காட்டுகிறார்‌. அவற்றில்சில ஆதிசங்கரரால்விளக்கவுரை எழுதப்படாதவை என்றும்சொல்கிறார்கள்‌. மத்வாச்சாரியார்உப நிஷத்துக்களுக்கு விளக்கவுரை இயற்றி இருக்கிறார்‌.

உபநிஷத்துக்களின்தத்துவ விசாரணை வழிமுறையும்‌, அவற்றின்நடையும்பலரைக்கவர்ந்தன. அதன்விளைவாக அவரவர்கள்துதித்த தெய்வத்தின்மீதே உபநிஷத்துக்களை இயற்றி விட்டார்கள்‌. ஸ்கந்த உபநிஷத்‌, ராமரகஸ்ய உபநிஷத்‌, வராஹ உப நிஷத்‌, கருட உபநிஷத்‌, வாசுதேவ உபநிஷத்‌… என்றெல்லாம்உபநிஷத்துக்கள்தோன்ற, இவற்றின்எண்ணிக்கை 108 ஆயிற்று. (இது எந்த அளவிற்குப்போய்விட்டது என்றால்‌, அக்பர்காலத்தில்‌ ‘அல்லா மீது கூட ஓர்உபநிஷத்இருந்தால்‌, நன்றாக இருக்குமே! என்று யாருக்கோ தோன்ற, ‘அல்லோபநிஷத்‌’ என்ற ஓர்உபநிஷத்கூட வந்தது

ஹிந்து மதம்ஒரு குறிப்பிட்ட மைய அதிகாரத்திற்கு உட்பட்ட தல்ல என்பதால்‌, இந்த மாதிரி நிகழ்ந்தது வியப்புக்குரியது அல்ல. அதே சமயத்தில்‌, எது ஆதாரபூர்வமானது என்று பார்ப்பதற்கு வேதத்தைத்தான்நாட வேண்டும்‌. நான்கு வேதங்களின்இறுதியில்வந்துள்ளவற்றையும்‌, முதலில்விளக்கவுரை இயற்ற ஆதிசங்கரர்எடுத்துக்கொண்டவற்றையும்‌, வைத்து மேற்கூறப்பட்ட பத்து அல்லது பதினொரு உபநிஷத்துக்களே முக்கியமான வையாகக்கருதப்படுகின்றன

உபநிஷத்துக்கள்பற்றி மறக்கக்கூடாத ஓர்அம்சம்‌, அவை யும்வேதங்களின்ஒரு பகுதியே என்பது. ஆகையால்அவையும்வேதங்களின்மற்ற பகுதிகள்போலவே. ரிஷிகளால்உணரப்பட்டவை. மேலைநாடுகளில்‌ ‘ஃபிலாஸஃபர்கள்‌’ என்று அழைக்கப்படுகிற தத்துவஞானிகள்‌, வாதங்களைச்செய்து, தத்துவங்களை முன்வைத்தனர்‌. உபநிஷத்துகளும்‌, பல வாதங்களைப்புரிந்து, பல கேள்விகளைக்கேட்டு, அவற்றுக்கு விடை காண முயன்று, தர்க்க ரீதியாக தத்துவங்களை முன்வைக்கின்றன. ஆனால்மேலைநாட்டுத்தத்துவஞானிகள்கூறியவற்றுக்கும்‌, உபநிஷத்துக்கள்கூறுவதற்கும்ஓர்முக்கிய வித்தியாசம்உண்டு. வேதங்களின்ஓர்அங்கமாகிய உபநிஷத்துக்கள்கூறுகிறவை தர்க்க ரீதியாக வந்தாலும்‌, அவை ரிஷிகளால்உணரப்பட்டவை. அதாவது இன்ட்யூஷன்‌, இன்ஸ்பிரேஷன்என்றெல்லாம்சொல்லப்படுகிற உள்ளுணர்வின்அடிப்படையில்‌, தாங்கள்கண்ட உண்மைகளை ரிஷிகள்முன்வைத்து, அவற்றை தர்க்க ரீதியாகவும்விளக்க முற்பட்டிருக்கின்றனர்‌. அவைதாம்உபநிஷத்துக்கள்‌. 

வேதங்களின்முந்தைய பகுதிகளில்காணப்படுகிற மந்த்ரங்கள்முதலியவை, ரிஷிகள்தாங்கள்உணர்ந்ததை அப்படியே சொல்லி இருப்பவை. உபநிஷத்துக்களோ, குருமார்களினால்சடர்களுக்கு போதிக்கப்பட்டவை. ஆகையால்தாம்உணர்ந்ததை சடனுக்கு உணர்த்த முற்பட்ட ரிஷி, அதற்கு சில வழிமுறை களைக்கையாண்டார்‌. கற்பனை உதாரணங்கள்கூறப்பட்டன. ஓர்உண்மையை விளக்க பல வினாக்களை எழுப்பி, ‘அது இல்லைஅது இல்லைஅது இல்லை! என்று பலவற்றை நிராகரித்து, இறுதியில்அது நின்றதே உண்மை என்று நிலை நாட்டப்பட்டது

இதற்குநேதி நியாயம்‌! என்று பெயர்‌. அதாவது அது இல்லைஅது இல்லைஎன்று ஒவ்வொன்றாக நிராகரித்துச்செல்கிற வழிமுறை

வேறொரு வழிமுறை – ‘அருந்ததி தரிசன நியாயம்‌’ என்பது. இருமணங்களில்மணப்பெண்அருந்ததி நட்சத்திரத்தைப்பார்ப்பது, இன்றும்நடைமுறையில்உள்ள வழக்கம்‌. ஆகாயத்தைப்பார்த்தாலே அருந்ததி நட்சத்திரத்தைப்பார்த்துவிட்ட மாதிரி ஒரு கற்பனை, அத்துடன்அருந்ததி தரிசனம்முடிந்து விடுகிறது

ஆனால்முன்பெல்லாம்ஒரு வழிமுறை கையாளப்பட்டது. அருந்ததி ஒரு மிகச்சிறிய நட்சத்திரம்‌. எளிதில்கண்ணில்பட்டு விடாது. ஆகையால்முதலில்ஒரு பெரிய நட்சத்திரத்தைக்காட்ட வேண்டியது. அதையடுத்துஅதுவல்ல அருந்ததி. அதற்குப்பக்கத்திலே பார்‌! என்று சொல்ல வேண்டியது; சற்றுத்தள்ளியுள்ள சுலபத்தில்பார்க்கக்கூடிய இன்னொரு நட்சத்திரத்தைக்காட்ட வேண்டியது. அதை மணப்பெண்பார்த்த பிறகு, ‘அதுவல்ல அருந்ததி. அதற்குப்பக்கத்திலே பார்‌! என்று எளிதில்பார்க்கக்கூடிய மற்றொரு நட்சத்திரத்தைக்காட்ட வேண்டியது. இப்படியே போய்அந்தப்பெண்ணின்பார்வையை அருந்ததி நட்சத்இரத்திற்கே இட்டுச்சென்று, ‘இதுதான்அருந்ததிஎன்று காட்ட வேண்டியது. இந்த வழிமுறைதான்‌, ‘அருந்ததி தரிசன நியாயம்‌”. இதையும்உபநிஷத்துக்கள்கையாளுகின்றன

இப்படிச்சுற்றி வளைக்கிற பல வழிமுறைகளைக்கையாள்வானேன்‌? சொல்லப்படுகிற விஷயம்அவ்வளவு சூட்சமமானது. ஒண்ணோன்ஒண்ணு.. ரெண்டோன்ரெண்டுஎன்று கூறி முடித்து விடுகிற விஷயம்அல்ல இறுதித்தத்துவம்‌. அதை உணர்வது மட்டும்அல்ல, உணரச்செய்வதும்கூட கடினம்தான்‌. அதற்காகத்தான்இப்படிப்பட்ட வழிமுறைகளைக்கொண்டு சட னுக்குத்தமது உபதேசத்தைக்குரு செய்தார்‌. 

உபநிஷத்துக்களிலேயே வருகிற ஓர்உதாரணத்தைப்பார்ப்போம்‌. இதை இரு. சங்கர நாராயணன்தமது பிரசங்கத்தில்குறிப்பிட்டிருந்தார்‌. இறைவனால்உலகம்எப்படிப்படைக்கப்பட்டது?’ என்ற கேள்வி எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த விவா தத்தைப்பார்ப்போம்‌. ‘மண்பாண்டங்களைச்செய்யும்ஒரு குய வன்‌, பானையைச்செய்யும்ஒரு குயவன்‌, போல இறைவன்இந்த உலகைச்சிருஷ்டி செய்தான்‌’. 

குயவன்பானைக்கு வெளியே இருக்கிறானே? இறைவனும்உலகத்திற்கு வெளியேதான்இருக்கிறானா?”

 ‘இல்லை. இதிலேயே இன்னொரு விஷயத்தைப்பார்‌. களி மண்தான்பானையாக உருவெடுத்துவிட்டது. அதே போல இறை வன்தான்இந்த உலகமாக உருவெடுத்தான்‌.’ 

களிமண்பானையில்இருக்கிறதே? பானையின்வெளியே அது இல்லையே? உலகை சிருஷ்டி செய்த இறைவன்‌, அதி லேயே இருக்க தீர்மானித்து, உலகிற்கு வெளியே இல்லாமல்உள்ளேயே இருக்கிறானா?” 

இல்லை. இறைவனுக்குக்களிமண்ணும்உதாரணம்‌. குயவ னும்உதாரணம்‌. எதற்குமே உபாதான காரணம்‌, நிமித்த காரணம்என்று உண்டு. அதாவது ஒரு வஸ்துவை எடுத்துக்கொண்டால்‌, அதற்கு இரண்டு காரணங்கள்‌ : ஒன்றுகச்சாப்பொருள்‌. மற்றொன்றுஅதை வைத்து வஸ்துவை உண்டாக்குகிறவன்‌. இங்கு, களிமண்ணும்‌, குயவனும்அந்த இரண்டு காரணங்களான்றன. இறைவனைப்பொறுத்த வரையில்அவன்இரண்டுமாகவே இருக்கிறான்‌.

ஆனால்இப்போது சொல்லப்பட்ட உதாரணத்தில்களிமண் வேறு, குயவன்வேறு.. வெவ்வேறான அவை, எப்படி ஒன்றாக இருக்க முடியும்‌?”

உண்மை. ஆகையால்இந்த உதாரணத்தை வைத்து, சிருஷ்டியை முழுமையாக விளக்கிவிட முடியாது. மேலும்ஊக்கத்தோடு முனைந்து பொருள்காண வேண்டும்‌. அதைச்செய்வோம்‌. ஒரு காலிப்பானையை மனதில்நினைத்துக்கொள்‌. அதன்உள்ளே காற்று இருக்கிறது. அந்தக்காற்று அந்தப்பானைக்கு வெளியேயும்இருக்கிறது. எப்படிப்பானையைச்சுற்றிலும்இருக்கிற காற்று, அதன்உள்ளேயும்இருக்கிறதோ, அது போல இறைவன்உலகைச்சூழ்ந்து கொண்டு, அதன்வெளியேயும்இருக்கிறான்‌. அதன்உள்ளேயும்இருக்கிறான்‌.

இதுவும்போதாது. இன்னமும்யோசிப்போம்‌. ஒரு துணி நெய்யப்படுகிறது. அதன்குறுக்கேயும்‌, நெடுக்கேயும்நூல்செல்கிறது. அந்தத்துணியைக்கிழித்துவிட்டால்மிஞ்சுவது நூல்தான்‌. ஆனால்‌, அந்த நூலை இணைத்துப்பிணைக்கும்போது அது துணியாகி விடுகிறது. அந்த நிலையில்அது நூல்அல்ல. நூல்தான் துணியாகவிட்டது என்றாலும்‌, துணியை நூல்என்று சொல்வதில்லை. அது போல உலகம்துணி என்றால்‌, இறைவன்நூல் என்று சொல்லலாமா? அல்லது பால்தயிராகி விடுவது போல, இறைவன்உலகமாக விட்டான்என்று சொல்லலாமா?”

பால்தரிந்துதானே தயிராகிறது? அதே போல இறைவனிடம்ஒரு மாற்றம்ஏற்பட்டு அவன்உலகமாகி விடுகிறான்என்று

சொல்வதா? அப்படியானால்அவனுடைய உண்மை சொரூபம்

என்ன? பாலில்ஏற்பட்ட ஒரு மாற்றத்தினால்அல்லவோ தயிர்

வருகிறது? அது போல்இறைவனிடமும்மாற்றம்ஏற்பட்டதா?”

ஆகையால்இந்த உதாரணமும்இதற்கு மேல்செல்லாது.

ஏனென்றால்இறைவனிடம்எந்த மாற்றமோ, வக்ரமோ ஏற்பட்டு

விடவில்லை. உலகம்அவனுடைய ஒரு அம்சம்‌. அவனுடைய ஒரு பகுதி. தீயில்இருந்து பொறி பறக்கிறது. ஒவ்வொரு இப்பொறியும்நெருப்பின்குணத்தைக்கொண்டவைதாம்‌. இறைவன்தீ என்றால்‌, அவன்சிருஷ்டித்த உலகமும்‌, அதில்உள்ள மனி தர்களும்‌, தீப்பொறிகள்‌. 

இப்படியே போகிற விவாதத்தின்இடையே, சிலந்தி உதா ரணம்ஒன்று சொல்லப்படுகிறது. சிலந்தி வலையைப்பின்னு கிறது. ஆனால்அந்த வலையின்உள்ளேயே அதுவும்இருக்கிறது. இறைவனின்நிலைக்கு இந்த உவமையும்கூறப்படுகிறது

வேறொரு கட்டத்தில்மேலும்ஓர்உதாரணம்‌. ‘தங்கம்வெவ்வேறு ஆபரணங்களாக உருவெடுக்கிறது. அதே போல, இறை வன்வெவ்வேறு ஜீவன்களாக உருவெடுக்கிறான்‌. ஆபரணங்களை உருக்கினால்அது தங்கமே. மனிதனும்அவ்வாறே இறை வனில்ஐக்கியம்‌. 

இப்படிக்கூறப்படுகிற விளக்கங்களுக்கு எல்லாம்அடிப்படை ரிஷியின்உள்ளுணர்வு, அவர்கண்டறிந்த உண்மை. அது மிகவும்சூட்சுமமானது; தவத்தினாலும்‌, மேன்மையினாலும்‌, தன்னுடைய உள்ளுணர்வின்மூலம்தத்துவத்தைக்கண்டறிந்த ரிஷிஅதைத்தர்க்க ரீதியாகச்சீடனுக்கு உபதேசிக்க முற்படுகிறார்‌. ‘இதனால்விளக்கம்ஏற்பட்டு விடுமா?’ என்று கேட்டால்‌, விளக்கத்தைப்பெற இது பாதைதானே தவிர, முழு விளக்கம்அல்லஎன்பதுதான்பதில்‌.