உண்மையைத் தேடி!

வேதங்களை ஒதும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள்‌. பற்றி, தைத்திரீய உபநிஷத்தில்இப்படிக்கூறப்படுகிறது

சீக்ஷாம்வ்யாக்யாஸ்யாம

வர்ண: ஸ்வர

மாத்ரா பலம்‌ 

ஸாம ஸந்தான

இத்யுக்த: சஷாத்யாய:’ 

உச்சரிப்புப்பற்றி விளக்குவோம்‌: 

ஒலி, ஏற்ற இறக்கம்‌? 

நீட்டல்‌ – குறுக்கல்‌, உச்சரிப்பதற்கான முயற்சி

நிறுத்தும்விவரம்‌, தெளிவான உச்சரிப்பு – 

உச்சரிப்புப்பற்றிய பாடம்இவ்வாறு கூறப்பட்டது

இதை வைத்துக்கொண்டு, சகைஷ எனும்உச்சரிப்புக்காவ பயிற்சி பற்றி என்ன அறிந்து கொள்வது

அரசியல்சட்டம்பற்றி அறிந்து கொள்வோம்‌’ என்று கூறிவிட்டு, விளக்கம்தொடங்கப்படுவிறது : ‘நிலப்பரப்பு, குடியுரிமை, அடிப்படை உரிமைகள்‌, மத்தியமாநில அமைப்புகள்‌, நீதித்துறை, பாராளுமன்றமும்‌ – சட்டசபைகளும்‌, நெருக்கடி காலம்‌, எஞ்சிய விஷயங்கள்‌. அரசியல்சட்டம்பற்றிய பாடம்இவ்வாறு  விளக்கப்பட்டது என்று சொன்னால்என்ன புரிந்து கொள்வது? அதைப்போல அல்லவா இருக்கிறது மேலே கூறப்பட்ட உபநிஷத்வாக்கியம்‌! 

இப்படி ஓர்எண்ணம்பலர்மனதில்எழக்கூடும்‌. இதுபற்றி ஸ்வாமி அரவிந்தர்வழியைப்பின்பற்றுகிற சங்கரநாராயணன்‌, தமது உரைகளில்ஒரு கருத்தைத்தெரிவித்தார்‌. ‘வேதங்களில்முதலில்வருகிற ஸம்ஹிதை, பிராம்மணம்போன்றவை ரிஷிகள்தாங்கள்உணர்ந்ததை அப்படியே கூறியவை. ஆனால்உபநிவத்துக்களோ, குருமார்களால்சிஷ்யர்களுக்கு உபதேசிக்கப்பட்டவை. அந்தச்சீடர்கள்‌, அந்த உபதேசங்களைக்குறிப்புகளாக எடுத்துக்கொண்டார்கள்‌. அவைதாம்நமக்குக்இிடைத்திருக்கின்றன

அதாவதுஇந்தக்கருத்தைக்கொண்டவர்கள்‌, ‘நமக்குக்இடைத்திருக்கும்உபநிஷத்துக்கள்‌, ரிஷிகளின்உபதேசங்களை முழுமையாகத்தந்து விடவில்லைஎன்றும்‌, ‘அந்த உபதேசங்கள்பற்றிய சுருக்கமான குறிப்புகள்தாம்நமக்குக்கிட்டியிருக்கின்றனஎன்றும்கூறுகிறார்கள்‌. 

இதை வேறு விதமாகவும்பார்க்கலாம்‌. அணு சக்தி பற்றி ஒரு விஞ்ஞானி மற்றொரு விஞ்ஞானியிடம்பேசினால்‌, எல்லா விவரங்களையும்தந்து கொண்டிருக்கமாட்டார்‌. அணு ஆராய்ச்சி யில்அடங்கி இருக்கக்கூடிய ஓர்அம்சம்பற்றி, ஒரு விஞ்ஞானி பேச ஆரம்பிக்கும்போதே மற்ற விஞ்ஞானி புரிந்து கொண்டு விடுவார்‌. இது முதல்வகை விளக்கம்‌. இது மிக சுருக்கமாகத்தான்இருக்கும்‌. 

பல பரீட்சைகளுக்குப்பிறகு, அணு ஆராய்ச்சி பற்றிக்கல்வி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாணவனுக்குச்சில விளக்கங்களைத்தர முற்படுகிற விஞ்ஞானி, ஓரளவிற்கு விரிவாகச்சொல்வார்‌. இது இரண்டாவது வகை

நம்மைப்‌ (அல்லது என்னை) போன்றவர்களுக்கு அணு சக்தியைப்பற்றி விளக்க ஒரு விஞ்ஞானி முற்பட்டால்என்ன நடக்கும்‌? விஞ்ஞானப்பயிற்சியே சற்றும்இல்லாதவனுக்கு என்ன. சொல்வது? ‘நீ போய்முதலில்விஞ்ஞான ஆரம்பப்பாடத்திலிருந்து, முழுமையான பயிற்சி பெற்று, பிறகு என்னிடம்வா என்று சொல்லலாம்‌. அல்லதுஅணுசக்தி பயங்கரமானது, உப யோகமானதும்கூட. பேரழிவுக்கும்அதைப்பயன்படுத்தலாம்‌. பெரும்முன்னேற்றத்திற்கும்பயன்படுத்தலாம்‌. அதுதான்அணுசக்திஎன்றும்சொல்லலாம்‌. 

உபநிஷத்துக்களைப்பொறுத்தவரையில்அவை மேலே சொன்ன இரண்டாவது வகையைச்சார்ந்தவை; தகுதி அடைந்துள்ள மாணவனுக்குக்கூறப்பட்டவை. என்னைப்போன்றவர்கள்‌, ‘என்ன இது? ஒன்றுமே புரியவில்லையே? விளக்கமாகவேஇல்லையே?” என்று கேட்பதில்பயனில்லை. ஏனென்றால்‌, உப நிஷத்துக்களின்உபதேசங்கள்என்னைப்போன்றவனுக்காகச்சொல்லப்பட்டவை அல்ல. கடுமையான பரீட்சைக்குப்பிறகு, தகுதி யும்‌, ஞானமும்‌, முயற்சியும்‌, சிரத்தையும்‌, முனைப்பும்உள்ளவன்இவன்என்று அறிந்து கொள்ளப்பட்ட பிறகுஅத்தகைய சீட னுக்கு உபதேசிக்கப்பட்டவை இந்த உபநிஷத்துக்கள்‌. 

இவை வாய்மொழியாகவே வந்தவை. அச்சு முதலியவை வந்த பிறகு, கற்பதற்கான நிபந்தனைகள்எல்லாம்தளர்ந்து போன நிலையில்‌, மேலை நாட்டவர்இவற்றை அறிந்து கொள்ள முயற்சிகளை எடுத்தபோது, இவை நூல்களாக வெளியாகவிட்டன. (அதற்கு முன்பாகவே பல ஆச்சார்யார்கள்‌, தங்களுடைய சீடர்களுக்கு இவற்றை எல்லாம்விளக்கினார்கள்‌. ஆதிசங்கரர்ஓர்உதாரணம்‌.) 

இப்படி நமக்கு இந்த உபநிஷத்துக்கள்இடைத்திருக்கின்றன. பத்திரிகை செய்திகளை வைத்தும்‌, சில கட்டுரைகளைப்படித்தும்‌, சில பிரசங்கங்களைக்கேட்டும்‌, அணுசக்தி பற்றி ஓரள வாவது அறிந்து கொள்ள நாம்முயற்சிப்பது போலவெளியாகி யுள்ள நூல்களைப்படித்தும்‌, பண்டிதர்களின்உரைகளை அறிந்து கொண்டும்‌, சில பெரியவர்களின்விளக்கங்களைக்கேட்டும்‌, உபநிஷத்துக்களைப்பற்றி நாம்ஓரளவு தெரிந்து கொள்ள முயற்இக்கலாம்‌. அவ்வளவுதான்‌. இதையெல்லாம்முழுமையாக உணர வேண்டும்என்றால்‌, தகுதி வேண்டும்‌. அந்தத்தகுதி தவத்தின்மூலமே கட்டும்‌. தவம்என்பது முனைப்பு; தளராத ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி.

இதிலும்ஒரு சிக்கல்இருக்கிறது. எளிமையான விஷயங்‌  களை மிகவும்விவரமாக எடுத்துச்சொல்கிற சில பண்டிதர்கள்‌, கடுமையான விஷயங்கள்வருகிறபோது, மூலத்தை அப்படியே சொல்லி, அத்துடன்விட்டு விடுவதும்உண்டு. இந்த மாதிரி பண்டிதர்களின்வழிமுறையைக்கண்டு, பொறுமை இழந்த நீலகண்ட இக்ஷிதர்இதைப்பற்றி, கிண்டலாக ஒன்று சொன்னார்‌ : விளக்கம்சொல்ல முன்வருகறவர்களுக்கே ஒரு விஷயம்விளங்கவில்லை என்றால்‌, அவர்ஒன்று செய்துவிட வேண்டும்‌. ‘மேலே போகப்போக அர்த்தம்புரிந்து விடும்‌” என்று சொல்லி விட வேண்டும்‌. ஸ்பஷ்டம்‌, அக்ரே, பவிஷ்யதி. இப்படி மேலே போகப்போக அர்த்தம்புரியும்என்கிற வகை விளக்கங்களும்சில நூல்களிலாவது இருக்கின்றன. விளக்கங்களோ இப்படிப்பட்டவை; நமக்கோ தகுதி குறைவு; விஷயமோ மிகவும்ஆழ மானது! அதுவும்உபநிஷத்துக்கள்விளக்குகிற இறுதி உண்மை என்பது எளிதில்பிடிபடக்கூடியது அல்ல

யதோ வாசோ நிவர்த்தந்தே 

அப்ராப்ய மனஸா ஸஹ 

மனதுடன்வார்த்தைகளும்எங்கிருந்து திகைத்துத்இரும்பு கின்றனவோ… 

தத்ர சக்ஷ£ர்கச்சதி 

வாக்கச்சதி 

அங்கே பார்வை செல்லாது

வாக்கும்செல்லாது

அதாவது புலன்களைப்பயன்படுத்தி உணர்ந்து கொண்டு விடுகிற விஷயம்அல்ல இறுதி உண்மை. முனைப்புத்தேவை. எப்படிப்பட்ட முனைப்பு? அதற்கு ஒரு நிகழ்ச்சியைப்பார்ப்போம்‌. 

ஒரு ரிஷியிடம்பயிற்சி பெற்று வந்த சீடர்களில்ஜகை மன்னனும்ஒருவன்‌. ஒருமுறை அந்த ரிஷி தமது உபதேசத்தைத்தொடங்காமல்‌, மிதிலை மன்னன்ஜனைனின்வருகைக்காகக்காத்இருந்தார்‌. மற்ற சடர்களுக்குப்பொறாமை வந்தது. ‘என்ன இருந்தாலும்‌, ஜனகன்ஓர்அரசன்அல்லவா? அதனால்தான்குரு அவனுக்காகக்காத்திருக்கிறார்‌’ என்று பேசிக்கொண்டார்கள்‌. 

அப்போது மிதிலை நகர்பற்றி எரிந்தது

ரிஷியின்ஆச்ரமமோ நகருக்குச்சற்றே தள்ளி இருந்தது. நகரில்பிடித்த தீ, வானில்பாய்ந்து, புகை மண்டலத்தை எழுப்ப, டர்கள்பதறிப்போய்‌, தங்களுடைய மிகவும்எளிமையான உடமைகள்சிலவற்றை நகரத்தில்இருந்து மீட்டுக்கொள்வதற்காக ஓட முற்பட்டார்கள்‌. அதற்குள்அங்கு வந்து சேர்ந்திருந்த ஜனக மன்னனோ, சற்றும்கவலைப்படாமல்அமர்ந்திருந்தான்‌. ‘நகரம்பற்றி எரிகறது. அரண்மனையும்‌, உன்னுடைய உடமைகளும்‌, உறவினர்களும்என்ன ஆவது?’ என்று மற்றவர்கள்கேட்க, ஜனக மன்னன்‌, ‘மிதிலை எரிவதால்என்னுடையது என்பது எதுவும்எரியவில்லை. என்னுடையது என்று எதுவும்இல்லைஎன்று சொல்லி, கலக்கமில்லாமல்அமர்ந்திருந்தான்‌. அப்பொழுது மிதிலை எரிவது போல்‌, குருவினால்ஏற்படுத்தப்பட்ட தோற்றம்மறைந்தது. மிதிலை எரியவில்லை. அது பற்றியும்ஜனகன்மகிழ்ச்சி அடைந்து விடவில்லை. தங்களிடையே, உண்மையை உணர்ந்தவன்அவன்ஒருவன்தான்என்பதை மற்ற 8டர்கள்புரிந்து கொண்டனர்‌. குரு அவனுக்கு அளித்த முக்கியத்துவம்முறை யானது என்பதையும்உணர்ந்து கொண்டனர்‌. இறுதி உண்மையை அறிய இந்த மாதிரி ஒரு தகுதி தேவை

அதுவும்அகம்பாவத்தையும்‌, தான்என்கிற எண்ணத்தையும்அழித்து விட்டுஉண்மையை அறிந்தவன்யாராக இருந்தாலும்சரி, அவனை அணுகி உபதேசம்பெற தயாராக இருக்க வேண்டும்‌. 

ஜனச்ருதி என்ற மன்னனுக்கு அதே பெயருடைய ஒரு பேரன்‌. இந்த ஜனச்ருதியும்சிம்மாசனம்ஏறினான்‌. செய்யாத நல்ல காரியம்இல்லை. ‘நிலத்திலிருந்து நீரை ஆவியாக்கி எடுத்துக்கொள்கிற சூரியன்‌, மீண்டும்அந்த நீரை அதே நிலத்திற்குப்பெரும்மழையாக்கித்தருவது போலஓர்அரசன்மக்களிடமிருந்து வசூலிக்கிற வரியைக்கொண்டு அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்‌” என்கிற வழிமுறையைப்பின்பற்றி அரசாண்டான்ஜனச்ருதி.

ஒருநாள்அவன்அரண்மனை உப்பரிகையில்அமர்ந்திருந்த போது, சில அன்னப்பறவைகள்பறந்து செல்வதைப்பார்த்தான்‌. அதில்ஓர்அன்னப்பறவை மற்றொரு அன்னப்பறவையைப்பார்த்து, “என்ன காரியம்செய்கிறாய்நீர மன்னன்ஜனச்ருதி யிடம்இருந்து ஆன்மீக ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. அதை மறைப்பது போல, அவன்எதிரே குறுக்கிட்டு நீ செல்கிறாய்‌. அவனுடைய ஆன்மீக சக்தி வானுலகை எட்டுவது என்பதை நீ அறிய மாட்டாய்போலும்‌” என்று கூறியது

இதைக்கேட்ட அந்தப்பறவை, ”சரி இருக்கட்டும்‌. ஆனால்‌, இந்த மன்னன்ஜனச்ருதி, ரைக்வனுக்கு நிகராவானா? இவன்பேரறிவாளனாக இருக்கலாம்‌. தார்மீகனாக இருக்கலாம்‌. ஆனால்‌, அவையெல்லாம்சாதாரணம்தான்‌. ரைக்வனின்பிரம்ம ஞானத்இற்கு ஈடான ஒரு தகுதி, இந்த மன்னனிடம்இருக்கிறதா?” என்று கேட்டது

அன்னப்பறவைகள்பறந்து சென்றுவிட்டன. பிரம்மத்தைப்பற்றிய உண்மையை அறியும்வேட்கையைத்தன்மனதில்வளர்ப்பதற்காக, தேவர்களே அன்னப்பறவைகளாக உருவெடுத்து இப்படிப்பேசி சென்றிருக்கின்றனர்என்பதை மன்னன்உணர்ந்தான்‌. தனது தேரோட்டியை அழைத்து, ரைக்வன்என்ற பெயருடைய ஞானி எங்கிருக்கிறான்என்று அறிந்து வரும்படி அவனுக்கு உத்தரவிட்டான்‌. நகரெங்கும்தேடியும்‌, அந்தப்பெய ருடைய ஞானியின்இருப்பிடத்தைத்தேரோட்டியினால்கண்டு பிடிக்க முடியவில்லை. தனிமையான இடங்களில்தேடுமாறு மன்னன்உத்தரவிட்டான்‌. 

இறுதியில்ரைக்வன்கிட்டினான்‌. ‘மிகவும்அருவருக்கத்தக்க சூழ்நிலையில்‌, தனது கட்டை வண்டியின்அருகே அமர்ந்திருந்தவன்தான்ரைக்வன்‌’ என்ற செய்தியை அரசனுக்குத்தேரோட்டி தெரிவித்தான்‌. அந்தக்கட்டை வண்டிக்காரனை மிகவும்அடக்கத்துடன்அணுகி, வணங்கி நின்று தனக்கு உபதேசம்செய்யுமாறு ஜனச்ருதி வேண்டிக்கொண்டான்‌. 

ஜனச்ருதி க்ஷத்ரியன்‌. மிகப்பெரிய மன்னன்‌. தர்மிஷ்டன்‌. ரைக்வனோ அருவருக்கத்தக்க சூழ்நிலையில்வாழ்ந்து கொண்புருந்த ஒரு கட்டை வண்டிக்காரன்‌. அவன்‌ ‘உணர்ந்தவன்‌’ என்பதால்‌, தன்னுடைய உயர்வை எல்லாம்உதறித்தள்ளி, ஜனச்ருதி அவனிடமிருந்து ஞானத்தைப்பெறுவதற்கு முற்பட்டான்‌. இது சாந்தோக்ய உபநிஷத்தில்வருகிற ஒரு நிகழ்ச்சி.

உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்என்ற முனைப்பு இருந்தால்‌, இப்படிப்பட்ட எண்ணம்தானாக வரும்‌.