எமன் செய்த உபதேசம்!

எமன்பார்த்தான்‌. ‘நசிகேதா! நூறாண்டு காலம்வாழக்கூடிய மகன்களையும்‌, பேரன்களையும்கேள்‌; தருகிறேன்‌. ஏராளமான பசுக்கள்‌, யானைகள்‌, பொற்குவியல்கள்‌, குதிரைகள்போன்ற வற்றைக்கேள்‌; தருகிறேன்‌. பூமியில்ஒரு விரிந்து பரந்த அரசை ஆளும்வாய்ப்பைக்கேள்‌; தருகிறேன்‌. நீ எவ்வளவு காலம்வாழ விரும்புகிறாயோ, அவ்வளவு காலம்உன்னை வாழ விடு இறேன்‌. உன்ஆசைகளை எல்லாம்அனுபவிக்கக்கூடிய வாய்ப்பைத்தருகிறேன்‌. மானிட உலகில்எவராலும்அடைய முடியாத ஆசைகள்என்னென்ன உண்டோ, அவை அனைத்தையும்நீ அடையலாம்‌. மரணத்தைப்பற்றி மட்டும்கேட்காதே! நீ கேட்ட வரத்திற்கு இணையான வரமாக எதை நினைக்கிறாயோ, அதைக்கேள்‌; தருகிறேன்‌. இதைக்கேட்காதே! என்று கூறினான்‌. 

ஆனால்நசிகேதஸோ இதனால்எல்லாம்மயங்கவில்லை. “மாணதேவனே! நீ சொல்கிற சுகங்கள்‌, இன்பங்கள்எல்லாமே நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்களின்ஆற்றல்களை எல்லாம்வீணாக்குபவைவாழ்வோ மிகப்பெரியது. அந்த வாழ்க்கையில்அனுபவிக்கக்கூடிய இன்பங்கள்அனைத்தையும்தருவதாக நீ சொல்கிறாய்‌. அது உன்னிடமே இருக்கட்டும்‌. பணத்தினால்ஒரு மனிதன்இருப்தி அடைந்துவிட முடியாது. உன்னை நான்பார்த்ததாலேயே, வேண்டிய செல்வத்தை நான்அடைவது. உறுதிதான்‌. ஆயுளோ, செல்வமோ எனக்கு வேண்டாம்‌. நான்கேட்ட வரம்எனக்கு வேண்டும்‌. கிழ வயதும்‌, மரணமும்வந்து சேர்கிற பூவுலகில்வசிப்பவன்நான்‌. அப்படிப்பட்ட நான்‌, மரணமற்றவரான உன்னை அடையும்வாய்ப்பைப்பெற்றேன்‌. அப்படிப்பட்ட வாய்ப்பைப்பெற்ற நான்‌, நீ எவ்வளவு நீண்ட ஆயுள்தருவதாக இருந்தாலும்‌, அது தரக்கூடிய வாழ்க்கையில்ஆசை வைப்பேனா? மறு உலக விஷயத்தைப்பற்றிய எந்த விளக்கத்தை அறிந்து கொண்டால்‌, நான்பலன்அடைவேனோ, அந்த விஷயத்தை நான்அறிந்து கொள்ள விரும்பு இறேன்‌. எந்த உண்மை மிகவும்ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ, அதைப்புரிந்து கொள்ள நான்விரும்புகிறேன்‌. வேறு எந்த வர மும்எனக்கு வேண்டாம்‌. 

இவ்வாறு நசிகேதஸ்தனது நிலையிலேயே பிடிவாதமாக நின்று விட்டான்‌. ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டால்கூட, அவற்றை அனுபவிப்பதால்எந்த மனிதனும்இருப்தி அடை வதில்லை. அது பணமாக இருந்தாலும்சரி, வேறு எந்த வசதி யாக இருந்தாலும்சரி. அல்லது இன்பமாக இருந்தாலும்சரிஅதை அனுபவிக்க, அனுபவிக்க மனிதனுக்கு மேலும்மேலும்ஆசை தான்வளருகிறதே தவிர, இருப்தி ஏற்படுவதில்லை. அவை புலன்களை அழிக்கின்றன. இதை உணர்ந்த நிலையில்நசிகேதஸ்இருந்ததால்தான்‌, தான்கேட்ட வரத்திற்கு பதிலாக எமன்அளித்த வரங்களை எல்லாம்அவன்நிராகரித்தான்‌. 

நசிகேதஸ்கேட்ட மூன்று வரங்களும்கூட ஒரு விஷயத்தை நமக்குப்புகட்டுகின்றன. முதல்வரமாகதந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌” என்று நசிகேதஸ்கேட்டான்‌. குடும்பத்தில்நல்ல அமைதி நிலவ வேண்டும்‌; சுமுகமான உறவு இருக்க வேண்டும்‌; அதற்காக இந்த வரம்‌. அடுத்ததாக நசிகேதஸ்கேட்டது ஒரு யாகம்பற்றிய வரம்‌. கர்மங்களைக்கடைப்பிடித்து மனிதன்தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்‌. இது இரண்டாவது நிலை. மூன்றாவதாக நசிகேதஸ்கேட்டதுஉயர்ந்த தத்துவம்பற்றியது. தன்னை பக்குவப்படுத்திக்கொண்ட நிலையில்‌, இறை தத்துவத்தை உணர மனிதன்முயற்சிக்க வேண்டும்‌. அதில்முழு சிரத்தையுடன்ஈடுபட வேண்டும்‌. அதைக்காட்டும்வகையில்நசிகேதஸ்எமன்காட்டிய ஆசைகளை எல்லாம்நிராகரித்து, உண்மையை அறிய வேண்டும்என்பதிலேயே குறியாக நின்றான்

நசிகேதஸின்மன உறுதியைக்கண்டு மகிழ்ந்த எமதர்மன்‌, அவனுக்குத்தன்னுடைய உபதேசத்தைச்செய்யத்தொடங்கினான்‌. 

மேலானது என்பது வேறு; சுகம்தருவது என்பது வேறு. இவை இரண்டும்மாறுபட்ட பலன்களைத்தருகின்றன; அவற்நின்மூலம்மனிதனைப்பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம்தருவதையே நாடு இறவன்வீழ்ச்சி அடைகிறான்‌. அறிவுடையவன்‌, சுகம்தருவதை விட்டு விட்டு மேலானதையே தேர்ந்தெடுக்கிறான்‌. மூடனோ தனக்கு நலன்விளைவிக்கக்கூடியது என்று எண்ணி, சுகம்தரு பாதையையே நாடுகிறான்‌’. 

மேலானதுச்ரேயஸ்‌’ என்றும்‌, சுகமானது என்பதுப்ரேயஸ்‌’ என்றும்கட உபநிஷதத்தில்குறிப்பிடப்படுகின்றன. பணத்தி லிருந்து நாம்பெறுகிற பல வகை சுகங்கள்நிம்மதியைத்தருபவை அல்ல. அவை நம்மை அமைதிக்கு இட்டுச்செல்வதில்லை. பெரும்புகழ்படைத்தவன்கூட, பல நேரங்களில்அவதியுறு கிறான்‌. புகழ்பறி போய்விடுமோ என்ற அச்சம்‌; அல்லது தன்னை விட வேறொருவன்புகழ்வாய்ந்தவனாக இருக்கிறானே என்ற பொறாமை. மேலும்புகழ்ஈட்டினால்அது பெருமையாக இருக்குமே என்ற ஆதங்கம்‌ – போன்றவை அம்மனிதனை வாட்டிக்கொண்டே இருக்கின்றன. இந்தப்புகழ்நிலையானது அல்ல என்பதை உணர்ந்து, அதைப்பெரிதாக நினைக்காமல்இருக்க ஒருவன்கற்றுக்கொண்டால்‌, அவன்நிம்மதி அடைகிறான்‌. ஆனால்அந்தப்புகழே பெரிது என்று ஒருவன்கருதினால்அவனுக்கு என்ன நடக்கும்‌? கவலைதான்மிஞ்சும்‌. அந்தப்புகழை தவற விட்டு விடக்கூடாது என்ற நோக்கமே மனதில்மேலோங்கி நிற்க, புகழைத்தக்க வைத்துக்கொள்ளவும்‌, வளர்த்துக்கொள்ளவும்‌, மற்றவர்களுக்கு அது கட்டாமல்பார்த்துக்கொள்ளவும்வழி களை ஆராய்ந்து, அதிலேயே நாட்டமுடையவனாக அவன்அலைவான்‌. பணத்தாசை, பொருளாசை, புகழாசைஎன்று எந்த ஆசையை எடுத்துக்கொண்டாலும்இதே கதிதான்‌. 

பெரிய மனிதர்கள்‌, பெரிய தலைவர்கள்‌, புகழ்பெற்ற பல பிரபலஸ்தர்கள்‌ – என்று யாரை எடுத்துக்கொண்டாலும்அவர்களுடைய நிலை இதுதான்‌. அவர்களுக்கு நிம்மதி என்பது கிடை யாது. வெளித்தோற்றத்தில்அவர்கள்மகிழ்ச்சியுடனும்‌, பெருமை யுடனும்திகழ்வது போல்காணப்பட்டாலும்‌, மனதிற்குள்அவர்கள்படுகிற பாட்டை அவர்கள்தான்அறிவார்கள்‌. ‘நமது பணி யைச்செய்தோம்‌; அதன்காரணமாக வந்து சேர்வது வரட்டும்‌; அல்லது வராமலே போகட்டும்‌; அது பற்றி கவலை இல்லை என்ற எண்ணம்அவர்கள்மனதில்வளர்ந்தால்‌, இந்த மாதிரி அச்சங்கள்அவர்களை வாட்டாது. ஆனால்அந்த நிலையை எய்துவது மனிதர்களுக்குக்கடினமாக இருக்கிறது

ஆனால்நசிகேதஸோ, சர்வ சாதாரணமாக, இயல்பாகவே அந்த நிலையில்நின்றான்‌. அதைக்கண்டு மகிழ்ந்த எமதர்மன்‌, ‘நசிகேதா! நீ நன்றாக சிந்தனை செய்து, செல்வங்கள்‌, பல வசதிகள்போன்ற வற்றை ஒதுக்கித்தள்ளி விட்டாய்‌. எந்தப்பாதையில்பெரும்பாலான மனிதர்கள்உழன்று கொண்டிருக்கிறார்களோ, அது செல்வத்தையோ, வசதியையோ, குறிக்கோளாகக்கொண்டது. அதை நீ தேர்ந்தெடுக்கவில்லை

இறை நெறியும்‌, உலக நடைமுறையும்வேறுபட்டவை. இவை நேர்மாறானவை. இவை வேறு வேறான வழிகளில்செல்இன்றன. நீ இறை நெறியில்நாட்டமுடையவனாக விளங்குகிறாய்‌. நசிகேதா! உலக நடைமுறையில்ஊறிக்கிடக்கின்ற அறிவற்றவர்கள்‌, தங்களை பெரும்அறிவாளிகள்என்றும்‌, கற்று உணர்ந்தவர்கள்என்றும்கருதிக்கொண்டு, குறுக்கு வழிகளைத்தேடுகிறார்கள்‌. அவர்கள்குருடனால்வழிகாட்டப்பட்ட குருடனைப்போல, மீண்டும்மீண்டும்பிறவிச்சுழலில்சிக்கித்தவிக்கிறார்கள்‌. எல்லாமே இந்த உலக இன்பம்தான்என்று நினைக்கிற அவர்கள்‌, மீண்டும்மீண்டும்என்னைத்தான்‌ (மரண தேவனைத்தான்‌) வந்தடையிறார்கள்‌’. 

எமதர்மன்மேலும்தொடர்ந்தான்‌ : ‘ஆன்மாவைப்பற்றி உப தேசம்பெற நினைக்கிறவர்களும்சரி, அதை உபதேசிக்கக்கூடிய வர்களும்சரி, மிகவும்அரிதானவர்களாகவே இருக்கிறார்கள்‌ ‘. 

இந்த உபநிஷதமும்சரி. இதை உள்ளடக்கிய வேதங்களும்சரி. எப்பொழுது தோன்றியவை என்பது யாருக்குமே தெரியாது. அவரவர்தங்கள்இஷ்டப்படி யூகிக்கிறார்களே தவிர, இது என்று தோன்றியது என்பது எவருக்கும்நிச்சயமில்லை. அப்படிப்பட்ட, பல பல பற்பல ஆயிரம்வருடங்களுக்கு முன்பாக, ரிஷிகளால்கூறப்பட்டு உலகிற்குக்கிடைத்த இதிலேயே, ‘ஆன்மா பற்றி அறிய முயற்சிப்பவனும்‌, அரிதானவன்‌; அதை உபதேசம்செய்யக்கூடியவனும்அரிதானவன்‌’ என்று கூறப்படுகிறது. அன்றே அந்த நிலைதான்இருந்தது என்றால்‌, இன்றைய நிலை பற்றிக்கேட்கவே வேண்டாம்‌. அன்று அது அரிதாக இருந்தது: இன்று அது காணக்கிடைப்பதே இல்லை

ஆன்மா பற்றி அறிந்து கொள்வது! என்றால்‌, சில புத்தகங்களைப்படித்தோ, பிரசங்கங்களைக்கேட்டோ, அதைப்புரிந்து கொண்டு விடுகிற முயற்சி அல்ல. அது ஆன்ம அறிவைத்தந்து விடாது. பின்ஏன்பிரசங்கங்களைக்கேட்க வேண்டும்‌? ஏன்இது சம்பந்தமான நூல்களைப்படிக்க வேண்டும்‌? அதற்கு ஒரு பலன்இருக்இறது. இது பற்றிய ஒரு ௬சி நமது மனதில்ஏற்படும்‌; அதுதான்பலன்‌. நாம்எல்லோருமேப்ரேயஸைநாடுகிற மனிதர்கள்தான்‌. நமக்கு சுகங்கள்வேண்டும்‌. இன்பங்கள்வேண்டும்‌. செல்வம்வேண்டும்‌. பெருமை வேண்டும்‌. புகழ்வேண்டும்‌. ஆகையால்நாம்ச்ரேயஸை நாடுவதில்லை. ஆனால்‌ ‘ச்ரேயஸ்அதாவது மேலானது என்பது ஒன்று இருக்கிறதுஅதை உணர்ந்து கொள்ள முயற்சிப்பது நமக்கு உயர்வைத்தரும்‌ – அதனால்நாம்மேன்மை யுறுவோம்‌! – என்றெல்லாம்சில சமயங்களிலாவது சிந்தித்துப்பார்க்க, இது பற்றிய நூல்களும்பிரசங்கங்களும்உதவும்‌. இன்று நமக்கு இருக்கிற வழி அது ஒன்றுதான்என்பதால்‌, அதை அலட்சியப்படுத்தி விடாமல்இருப்பதுதான்நல்லது

அதே சமயத்தில்‌, இந்த மாதிரி சில பண்டிதர்களினால்செய்யப்படுகிற பிரசங்கங்களிலிருந்தும்‌, சிலரால்எழுதப்படுகிற நூல்களி லிருந்தும்ஆன்ம அறிவை நாம்பெற்று விடலாம்என்று கருதி விடக்கூடாது. அப்படிக்கருதினால்‌, ஏதோ கொஞ்சம்படித்து விட்டு அல்லது கேட்டுவிட்டு, ‘இனி நாம்இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும்இல்லைஎன்று நினைக்கத்தூண்டு கிற அகங்காரம்‌ மட்டுமே மிஞ்சும்‌. ஆகையால்‌ இவற்றினால்‌ கிடைக்கக்‌ கூடிய பலன்‌ ஒரு கட்டுக்கு அடங்கியதுதான்‌ என்பதைப்‌ புரிந்து கொண்டு, இவற்றை நாம்‌ நாட வேண்டும்‌.

எமதர்மன்‌, நசிகேதஸுக்கு மேலும்‌ சொல்கிற வார்த்தைகளி’ லிருந்தே இது நமக்குப்‌ புரியும்‌.