“உலக நடைமுறையிலேயே முழுமையாக ஈடுபட்டுள்ள மனிதர்கள் கூறுகின்ற வழிகளாலும், உபாயங்களாலும் ஆன்மாவை அறிந்து கொள்ள முடியாது. உண்மையை உணர்ந்தவனுடைய உபதேசங்களைப் பின்பற்றினால் குழப்பம் இருக்காது. ஆன்மா என்பது அணுவையும் விட நுட்பமானது. ஆகையால் அது வாதங்களுக்கு அப்பாற்பட்டது. உண்மையை அறிந்து கொள்: வதில் முழுமையான ஈடுபாடும், ஆர்வமும் உடைய உன்னைப் போன்ற மாணவர்கள் இடைப்பது அரிது. நசிகேதா! ஸ்வர்க்க லோகம் ஆசைகள் நிறைவேறுகிற இடம்; யாகங்களின் பலனாகக் , இடைக்கிற பயன்களின் இருப்பிடம்; அந்த : இடத்தில் பயம் இடையாது;: அது போற்றத் தகுந்தது; மிகவும் பெருமை வாய்ந்தது. ஆனால் இத்தனை இருந்தும் கூட ஒரு மனிதனுக்கு அது கிட்டும்போது, அது நிலையற்றதே. இந்த உண்மையைப் புரிந்து கொண்ட நீ, அதை அடைவதை ஒரு வரமாக ஏற்க மறுத்து விட்டாய்! – இவ்வாறு சொல்லி எமதர்மன் நசிகேதஸைப் பாராட்டினான்.
ஸ்வர்க்க லோகம் பற்றி முன்பே ஒரு “அத்தியாயத்தில் நாம் பார்த்தோம். அது நிலையற்றது என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. பெரும் புண்ணியங்கள் செய்திருந்தால் அவற்றின் பலனாக ஒரு மனிதன் ஸ்வர்க்க லோகத்தை அடைகிறான். அவனுடைய புண்ணியங்களின் பலன் தீர்ந்த பிறகு, அவன் மீண்டும் பிறப் பெய்துகறொன். ஆகையால், ஸ்வர்க்க லோகம் ஒருவனுக்குக் கிட்டினால், அது அவனுக்கு நிரந்தரமானது அல்ல. மோட்சம் இதிலிருந்து மாறுபட்டது. எல்லா ஜீவராசிகளிடத்திலும் உறைவது ப்ரம்மமே என்கிற உண்மையை உணர்ந்து, தன்னிலிருந்து மாறு: பட்டதாக வேறு எந்த ஜீவராசியையும் பார்க்காமல், சமப்பார்வை உடையவர்களாகத் இகழ்ந்து, ஆன்ம உணர்வைப் பெற்று, ஞான நிலையை அடைந்து, அதன் மூலம் ஒருவன் பெறுவது மோட்சம். அது நிலையானது. அதன் பிறகு பிறப்பு கிடையாது.
ஸ்வர்க்க லோகம் இப்படி நிலையானது அல்ல என்பதால் – அதை அடைவதற்கான வாய்ப்பைத் தருவதாக எமன் கூறியபோதும், நசிகேதஸ் அதை ஏற்க மறுத்து விட்டான். இந்தப் பக்குவ நிலையை நசிகேதஸ் அடைந்து விட்ட காரணத்தால், அவன் எமனிடம் பாராட்டுப் பெறுகிறான்.
ஆன்மாவின் மேன்மையைப் பற்றி விவரித்து விட்டு எம தர்மன், அத்யாத்ம யோகம் செய்து ஆன்மாவை நினைத்து தியா னித்து, ஒருவன் இன்ப துன்பங்களைக் கடக்க வேண்டும் என்று கூறுகிறான். யோகம் என்றால், பொருந்துதல், இணைந்து விடுதல் என்றெல்லாம் அர்த்தம் கொள்ளலாம். அத்யாத்ம யோகம் என்றால் ஆன்மாவுடனேயே இணைந்து விடுவது. அதாவது புறத்திலே இருக்கும் பொருட்களை எல்லாம், சிந்தனையில் இருந்து அகற்றிவிட்டு, அகத்தையே நினைத்து, மேலும் மேலும் அதிலேயே முனைவது. புறத்திலே இருப்பவற்றை எல்லாம் ஒதுக்க ஒதுக்க, அகத்திலே இறைவன் இருப்பதை உணர்ந்து கொள்ளும் தன்மையை ஒருவன் எய்துவான். அதற்கான முயற்சியே, அதற்கான முனைப்பே, அதற்கான தவமே, அத்யாத்ம யோகம்.
இதையடுத்து எமதர்மன், ‘எல்லா வேதங்களும் எந்த லட் சியத்தைக் கூறுகின்றனவோ, எந்த லட்சியத்திற்காக எல்லா தவங் களும் செய்யப்படுகின்றனவோ, எதற்காக பிரம்மச்சரியம் முதலான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவோ, அந்த லட்சியத்தை எட்டுவதற்கான மந்திரத்தை சுருக்கமாகச் சொல்வ தென்றால் அது – ஓம். இந்த மந்த்ரமே மிகவும் மேலானது. .. இந்த மந்த்ரத்தை யார் உண்மையிலேயே அறிந்து கொள்கிறானோ அவன் சிறப்பெய்துகிறான்’ என்று கூறினான்.
“ஓம்! என்பது ‘ப்ரணவ மந்த்ரம்” என்று பெயர் பெற்றது. மஹாஸ்வாமிகள் இது பற்றி கூறுகையில், இப்படிச் சொல்கிறார்: ‘அ–உ–ம்! என்ற மூன்றும் சேர்ந்து ஓங்காரமான ப்ரணவமாகிறது. அ” என்பது சிருஷ்டி; ப்ரம்மா. ‘உ! என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம் என்பது ஸம்ஹாரம்; ஈச்வரன். ஆக, படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் உள்ளடக்கி ப்ரம்ம ஸ்வரூபமாக நிற்பது, இந்த ‘ஓம்! என்கிற மந்த்ரம். இதுவே ப்ரம்மம் என்று கட உபநிஷதம் குறிப்பிடுகிறது.
மரணம் பற்றி நகேதஸ் கேட்டானல்லவா? எமன் சொல்கிறான். ‘ஆன்மா பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. இது எதி லிருந்தும் உண்டாவதுமில்லை; இதிலிருந்து எதுவும் உண்டாவதும் இடையாது. இது பிறப்பற்றது. என்றென்றும் நிலைத்திருப்பது. பழமையானது. உடல் அழிக்கப்பட்டாலும் அழியாதது*.
அதாவது மரணம் – அழிவு என்பது உடலுக்குத்தானே தவிர, ஆன்மாவுக்கு அல்ல. அதனால்தான் கட உபநிஷதம் ‘நம்முடைய உடலிலிருந்து ஆன்மாவைப் பிரித்துப் பார்க்க வேண்டும்” என்று வற்புறுத்துகிறது. ‘நாம் ஆன்மா” என்று உணர்ந்தால் நமக்கு மரண மில்லை. ‘இந்த உடல்தான் நாம்? என்று நினைத்தால், மரணம் ் உண்டு. அதுதான் அழிவு.
சொற்பொழிவுகளைக் கேட்பதாலும், படிப்பதாலும் ஆன்மாவை அறிந்து விட முடியாது என்பதை, மீண்டும் ஒருமுறை வற்புறுத்தி விட்டு எமதர்மன் சொல்கிறான். ‘தீய ஒழுக்கம் உடையவன், இந்திரியங்களை அடக்காதவன், மன ஒருமைப்பாடு இல்லாதவன், மன அமைதியற்றவன்… போன்றவர்கள் தங்களுடைய அறிவினால் இந்த ஆன்மாவை உணர்ந்து விடுவதில்லை‘.
தனது உபதேசத்தைத் தொடர்ந்த எமதர்மன் ஒரு உவமையைக் கூறி, நசிகேதஸுக்கு விளக்கம் அளிக்கிறான். ‘உடம்பு – ஒரு தேர்; புத்தி – தேரோட்டி; மனம் – கடிவாளம்; இந்திரியங்கள் – குதிரைகள்; நடைமுறை உலக விஷயங்கள் – இந்தத் தேர் செல்வ தற்கான பாதைகள்; ஆன்மா – பயணம் செய்பவன்.
“தெளிவு பெறாதவனும், ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்காத வனுமாக இருக்கிற மனிதனுடைய புலன்கள், தேரோட்டிக்கு அடங்காத குதிரைகளாக திகழ்கின்றன. தெளிவு பெறாதவனாக, அடங்காத மனதை உடையவனாக, தூய்மை இல்லாதவனாக இருப்பவன், இறைவனை அடைய மாட்டான். எவன் தெளிவு பெற்றவனாக, அடங்கிய மனதை உடையவனாக இருக் கிறானோ, எவன் எப்போதும் தூயவனாக வாழ்கிறானோ அவன் – எங்கே சென்றால், மீண்டும் பிறப்பு கிடையாதோ, அந்த இறை நிலையை அடைகிறான்”.
தேரோட்டி என்கிற புத்தி தெளிவு பெற்றதாக இருக்க வேண் டும். மனம் என்ற கடிவாளம் சரியாகப் பிடிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் புலன்கள் என்ற குதிரைகள் சரியான பாதை யில் செல்லும். பாதை என்பது உலக விஷயங்கள்தான். அதி லிருந்து முற்றிலும் விலகி, வேறெங்கோ சென்று விடுமாறு எமதர்மன் கூறவில்லை. நாம் செய்ய வேண்டியவற்றை எல் லாம், உலக விஷயங்களோடு வாழ்ந்தபடியேதான் செய்தாக வேண்டும். ஆனால் அதைத் தெளிவு பெற்ற புத்தியுடன் செய்ய வேண்டும். புலன்களாகிய குதிரைகளை மனமாகய கடிவாளம் ஒழுங்குப்படுத்துகிறது. ஆனால் அந்த மனமாகிற கடிவாளத்தின் செயல்பாடு, புத்தியாகிய தேரோட்டியைப் பொறுத்தது. ஆகையால், பாதையை முறையாகக் கடக்கிறோமா இல்லையா என்பது புத்தி யாய தேரோட்டியின் செயல்பாட்டில்தான் இருக்கிறது. அதனால் தான் அதற்கு தெளிவு தேவை என்று வற்புறுத்தப்படுகிறது.
எமதர்மன், நசிகேதஸைப் பார்த்து தொடர்ந்து பேசினான். எந்த மனிதனும், உள் மூச்சின் இயக்கத்தினாலோ, வெளி மூச்சின் இயக்கத்தினாலோ வாழ்வதில்லை என்றும்; இவை எதை ஆதார மாகக் கொண்டு இயங்குகின்றதனவோ, அதை ஆதாரமாகக் கொண்டே, எல்லா உயிரினங்களும் வாழ்கின்றன என்றும் எடுத்துச் சொல்லி விட்டு, அப்படிப்பட்ட ஆதாரம் உடலிலிருந்து வெளியேறி விட்டால், உடலில் வேறு என்ன மிஞ்சும் என்று கேட்டு, அதற்கு விடையும் அளிக்கிறான். ‘நீ கேட்ட பொருள் அதுதான்! என்று கூறுகிறான். அதாவது உடல் வெறும் சடலமாக விட்டபோது எஞ்சுவது என்ன? ஆன்மா. மரணத்துக்குப் பின் இருப்பது ஆன்மாதான்
மரணத்துக்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறு இன்றன என்றும், வேறு சில உயிர்கள். தாவரம் போன்ற நிலை களை அடைகின்றன என்பதையும் விளக்கி விட்டு, வினைப் பயனின்படி அடுத்த பிறவி அமையும் என்று எமதர்மன் கூறுகிறான். நெருப்பு, எவ்வாறு வெவ்வேறு பொருட்களில் அந்தந்தப் பொருளுக்குத் தக்கவாறு வடிவம் கொள்கிறதோ – அதே போல, ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு ஜீவராசிகளில் வெவ் வேறு வடிவத்தில் விளங்குகிறது. எல்லோருடைய காட்சிக்கும், ஆதாரமாக இருப்பவன் சூரியன். தன்னிடமுள்ள குறைபாடுகள் காரணமாக ஒருவன் சூரியனைப் பார்க்கவில்லை என்றால், அது சூரியனை பாதிக்காது. அதுபோல, ஒன்றே ஆன ஆன்மா எல்லோரிடத்தில் இருந்தாலும், உலகின் துக்கங்களால் அது பாதிக்கப்படு வதில்லை. ஏனெனில் அது அனைத்தையும் கடந்தது.
பின்னர் எமதர்மன், வாழ்க்கையை, தலைகீழாகக் காணப்படுகிற ஒரு அரச மரத்திற்கு ஓப்பிடுகிறான். ‘இந்த அரச மரம் மிகவும் பழமையானது. இதற்கு வேர் மேலே இருக்கிறது. களைகள் இழே உள்ளன. இது தூய்மையானது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் இதைச் சார்ந்திருக்கின்றன. இதை: யாரும் கடந்து செல்ல முடியாது” என்று எமதர்மன் சொல் இறான். ஒரு நீர்த்தேக்கத்தின் அருகில் நின்று ஒரு மரத்தின் பிரதி பிம்பத்தைத் தண்ணீரில் கண்டால், அது தலைகீழாகத் தெரியும். அதே போல வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம்தான் என்பதால் இந்த உவமை கூறப்பட்டது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
எல்லாவற்றையும் விட மேலானவன் இறைவன். அவர் எங்கும் நிறைந்தவர். எந்த அங்க அடையாளமும் அவருக்குச் சொல்ல முடியாது. அவரை உணர்வதால் ஒரு மனிதன் எல்லா தளைகளில் இருந்தும் விடுபடுகிறான். அவன் மரணம் இல்லா பெருநிலையை அடைகிறான். தெளிவு பெற்ற புத்தியுடன், ஆர்வ முள்ள மனதினால் தொடர்ந்து முயற்சித்தால், இறைவன் உணரப் படுவான். அவரை உணர்ந்தவர்கள், மரணம் அற்றவர்களாகிறார் கள். இந்திரியங்களை வசப்படுத்தி, நிலையாக நிற்கிற தன்மை தான் யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன், உணர்வு பெற்றவனாகிறான். அந்த யோக நிலை கூட, நசி கேதா! வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் உட்பட்டதே!” என்று எமதர்மன் கூறியுள்ளதலிருந்து, யோக நிலையை ஒருவன் அடைந்தால்கூட, அதை காப்பாற்றிக் கொள்ள முனைப்பு, சிரத்தை தேவை என்று ஆகிறது. எமதர்மன் இறுதியாக, ‘மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகுகிறபோது, மனிதன் மரணம் அற்றவனாகிறான். அவன் இறை நிலையை அங்கேயே அடைஇிறான்’ என்று கூறுகிறான்.
நசிகேதஸுக்கு, எமன் செய்த உபதேசத்திவிருந்து நாம் அறி வது என்ன? மரணம் என்பது உடலுக்குத்தானே தவிர, ஆன்மாவுக்கு அல்ல) மரணம் எய்திய பின் மனிதனுக்கு என்ன நடக்கிறது என்று கேட்டால் – அவனுடைய ஜீவன் அவன் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப ஸ்வர்க்க லோகத்தில் பயன்களை அனுபவித்து விட்டு, மீண்டும் பிறப்பெய்துகிறது; அந்தப் பிறப்பும் கூட ஏற்கெனவே செய்த வினைப் பயன்களின்படி அமை கிறது; நல்ல குருவை அடைந்து ஆர்வத்துடன் முனைந்து, உபதேசம் பெற்று, தெளிவு படைத்த புத்தியுடன் இயங்கி, இந்திரியங்களை: கட்டுப்படுத்தி, ஆசைகளை விட்டு விலகி ஒருவன் வாழ்ந்தால், அவன் தூயவனாகிறான். அப்படிப்பட்டவன் இறைவனை எய்து கிறான்.
‘இவை எல்லாம் சாத்தியம்தானா! என்ற கேள்வி எழலாம். நம்மைப் போன்றவர்களுக்கு இவை மிகவும் கடினமான விஷயங் களே. ஆனாலும் உய்வதற்கு வழி இது என்று தெரிந்து கொண் டால், தவறானவற்றைச் செய்வதிலிருந்து சில நேரங்களிலாவது நம்மை நாமே தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும் அல்லவா? அந்த அளவில் இந்த விஷயங்கள் நம்மை பாதித்தால், அதுவே நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு உதவிதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
அடுத்து ப்ரச்ன உபநிஷத்.