பலவீனமான படகுகள்!

ப்ரம்மத்தைப்பற்றிய அறிவை, அதாவது இறுதி உண்மை யைப்பற்றிய அறிவை, ப்ரம்ம தேவனிடமிருந்தே அதர்வன்பெற்றார்‌.அதன்பின்னர்அதர்வன்‌, அங்கிரருக்குச்சொன்னார்‌. அவர்ஸத்தியவஹனுக்கு இதை விளக்கினார்‌. ஸத்தியவஹன்‌, அங்கிரஸுக்கு இதை உபதேசித்தார்‌. இவ்வாறு இந்த ஞானம்குருவிடமிருந்து, சீடருக்கு வழி வழியாக வந்தது… 

என்று தொடங்குகிறது முண்டக உபநிஷதம்‌. ப்ரம்ம வித்யைஇறுதி உண்மையை இவ்வாறு அறிந்து அங்கிரஸை, செளனகர்அணுகி, ‘தெய்வத்திற்கு சமமானவரே! எதை அறி சந்து கொண்டால்எல்லாவற்றையும்அறிந்ததாகும்‌?’ என்று கேட்டார்‌. இப்படித்தன்னிடம்கேள்வியை எழப்பிய செளனகருக்கு, அங்கிரஸ்எடுத்துக்கூறிய விளக்கங்களே முண்டக உபநிஷதம்ஆகிறது. அங்கிரஸ்சொன்னார்‌: உயர்ந்தது மற்றும்சாதாரணமானது என்று இரண்டு வகை அறிவுகள்உள்ளன. இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்என்று மகான்கள்கூறுகிறார்கள்‌. நான்கு வேதங்கள்‌, உச்சரிப்பு, சடங்குகள்‌, இலக்கணம்‌, அகராதி, வான வியல்‌, ஜோதிடம்‌… போன்றவை எல்லாம்சாதாரண அறிவைச்சார்ந்தவை. அழிவற்றவராகிய இறைவன்‌, எந்த அறிவின்மூல மாக அடையப்படுகிறானோ, அதுவே உயர்ந்த அறிவு‘. 

இப்படிக்கூறிவிட்டு அங்கிரஸ்இறைவனின்தன்மையைப்பற்றி விளக்குகிறார்‌. ‘அவனைப்பார்க்க முடியாது; புரிந்து கொள்ளவும்முடியாது; அவனுக்கு ஆரம்பம்கிடையாது.

நிறங்கள்இல்லாதவன்‌. என்றென்றும்இருப்பவன்‌; எண்ணற்ற வடிவங்கள்உடையவன்‌; எங்கும்நிறைந்தவன்‌.மிகவும்நுண்ணி யமானவன்‌. அழிவற்றவன்‌, படைப்புக்கு மூலகாரணமானவன்‌. விழிப்படைந்தவர்கள்அவனை எங்கும்காண்கிறார்கள்‌.

அங்கிரஸ்கூறியதில்ஒரு முரண்பாடு இருப்பதாக சிலருக்குத்தோன்றலாம்‌. ‘அவரைப்பார்க்கவே முடியாது! என்று கூறி விட்டு, பின்னர்‌ ‘விழிப்புற்றவர்கள்அவரைக்காண்கிறார்கள்‌” என்றால்அது எப்படி? பார்க்கவே முடியாதவனை எப்படி சிலர்மட்டும்பார்க்கிறார்கள்‌? ஒரு சாதாரண உதாரணத்தின்மூலமா கவே கூட இந்தச்சந்தேகத்தை நாம்களைந்து விடலாம்‌. இருமி கள்இருக்கின்றன. அவை கண்களுக்குப்புலப்படாதவை. நிச்ச யமாக அவை நம்கண்களுக்குத்தெரியாது. ஆனால்மைக்ராஸ்கோப்மூலம்அந்தக்கிருமிகளை விஞ்ஞானிகள்பார்க்கிறார்கள்‌. அவற்றின்தன்மையைப்புரிந்து கொள்கிறார்கள்‌; ஆராய்ச்சியில்ஈடுபடுகிறார்கள்‌. மைக்ராஸ்கோப்மூலம்இட்டுகிற பார்வை, விசேஷமான பார்வை. சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்இருந்தால்‌, அதன்மூலம்கட்டுகிற விசேஷப்பார்வையைப்பயன்படுத்திக்இிருமிகளைப்பார்த்து விடலாம்‌. ஆன்மீக விஷயத்தில்விசேஷமான பார்வை என்பதற்கு மைக்ராஸ்கோப்எதுவும்இடையாது. அதற்கு விழிப்புற்ற நிலை வேண்டும்‌. அதுதான்மைக்ராஸ்கோப்‌.

அந்த விழிப்புப்பெற்ற நிலையை அடைவதற்குத்தவமும்‌, சிரத்தையும்‌, நம்பிக்கையும்தேவை. அதை அடைந்தவர்கள்இறைவனைக்காண்கிறார்கள்‌. மற்றவர்களால்காண முடியாது. இதில்முரண்பாடு எதுவும்இல்லை.

அங்கிரஸின்உபதேசம்தொடர்கிறது. ‘ஒரு சிலந்தி தன்னிட மிருந்து எவ்வாறு வலை நூலை வெளிப்படுத்தி, தன்னிடமே அடக்கக்கொள்ளவும்செய்கிறதோஎவ்வாறு பூமியிலிருந்து செடி, கொடிகள்தோன்றுகின்றனவோஒரு மனிதனின்உடலில்முடி எவ்வாறு தோன்றி வளர்கிறதோஅவ்வாறே அழிவற்ற இறைவனிடமிருந்து இந்த உலகம்தோன்றுகிறது. இறைவனிட மிருந்து தோன்றுகிற படைப்பு அவரிடமே ஒடுங்கவும்செய்கிறது என்பதுசிலந்தி உதாரணத்தின்மூலமாக விளக்கப்படு கிறது; இந்த உலகத்தைப்படைப்பதற்காக, இறைவன்பெரும்முயற்சி எடுக்கவில்லை என்பதும்‌, அவரிடமிருந்து இயல்பாகவே இந்த உலகம்தோன்றியது என்பதும்‌ – பூமியிலிருந்து செடி, கொடிகள்வளரும்உதாரணத்தின்மூலம்காட்டப்படுகிறது; மனி தனின்உடலில்முடி வளர்வது போலஎன்ற உதாரணத்தின்மூலம்‌, உலகத்தைப்படைக்கும்இறைவன்ஜடப்பொருள்அல்ல என்பதும்சொல்லப்படுகிறது

இவ்வாறு இறைவனின்தன்மையை விளக்கிவிட்டு அங்கி ரஸ்‌, யாகங்கள்முதலியவற்றைப்பற்றிப்பேசுகிறார்‌. ‘மந்த்ரங்களில்முனிவர்கள்கண்டறிந்த பல்வேறு கர்மங்கள்உள்ளன. அவை உண்மையானவையே. அவை வேதங்களில்மிகவும்புகழப்பட்டுள்ளன. உண்மையை நாடுகிறவர்கள்அவற்றைச்செய்ய வேண்டும்‌. இந்த உலகில்சிறப்பாக வாழும்வழி அது என்று கூறி, மேலும்யாகங்களின்பயனைப்போற்றி விளக்கம்அளிக்கிற அங்கிரஸ்‌,அடுத்துச்சொல்வது கொஞ்சம்வியப்பைத்தரக்கூடிய விஷயம்‌, 

இந்த யாகங்கள்எல்லாம்பலவீனமான படகுகளைப்போன்றவை. ஏனென்றால்‌, இவை சாதாரணமான கர்மங்களை அடிப்படையாகக்கொண்டவை. இவற்றையே சிறப்பானதாக நினைத்து மகிழ்கின்ற மூடர்கள்மீண்டும்மீண்டும்மூப்பிற்கும்‌, மரணத்திற்கும்ஆளாகிறார்கள்‌. 

உலக நடைமுறையின்நடுவில்வாழ்கின்ற மூடர்கள்‌, தங்களை அறிவாளிகள்என்றும்‌, பண்டிதர்கள்என்றும்நினைத்துக்கொண்டு மூப்பு, மரணம்ஆகியவற்றில்உழல்கிறார்கள்‌. குருட னால்வழிகாட்டப்பட்ட ஒரு குருடன்போல்இவர்கள்மீண்டும்மீண்டும்‌, பிறவிச்சுழலில்உழல்கிறார்கள்‌. தங்களுடைய லட்சியத்தையே அடைந்து விட்டதாக நினைக்கின்ற அவர்கள்‌, உண்மையை உணர்வதில்லை. அவர்கள்கர்மம்செய்யும்போது, மனதில்ஆசையுடன்அதைச்செய்கிறார்கள்‌. ஆகையால்‌, புண்ணியம்தீர்ந்து போனதும்ஸ்வர்க்கத்தில்இருந்து விழ்ந்து, மீண்டும்பிறப்பெய்துகிறார்கள்‌. அவர்கள்‌, யாகங்களே எல்லாம்என்று நினைக்கிறார்கள்‌. அதற்கு மேலான எதையும்அவர்கள்அறிவதில்லை. ஆகையால்புண்ணியத்தின்பலனை ஸ்வர்க்க லோகங்களில்அனுபவித்த பிறகு, அவர்கள்மீண்டும்பிறப்பெய்து கிறார்கள்‌. 

இந்த உலஇல்சிறப்பாக வாழ்வதற்கு வழி செய்கிற யாகங்கள்என்று கூறிவிட்டு, அவற்றையே இப்படி பயனற்றவை என்றும்அங்கிரஸ்கூறுகிறார்‌. யாகங்களைப்பற்றி இப்படிக்கூறிய அங்கிரஸ்‌, அதன்பிறகு யார்மேன்மை பெறுவார்கள்என்ப தைப்பற்றி பேசுகிறார்‌. ”மனம்ஒரு நிலையில்இருக்கும்தன்மை படைத்தவர்கள்‌, உண்மையான அறிவைப்பெற்று பிக்ஷை எடுத்து வாழும்வாழ்க்கையையோ, காட்டில்முனைப்புடன்செய்யக்கூடிய தவ வாழ்க்கையையோ மேற்கொள்கிறார்கள்‌. அவர்களுடைய வினைப்பயன்கள்எல்லாம்விலகுகின்றன

கர்மங்களால்இறைவனை அடைந்துவிட முடியாது. பற்நின்மையினால்தான்இறைவனை அடைய முடியும்என்பதை ஆராய்ந்து பார்த்து உணர்ந்து, பற்றின்மை என்ற நிலையை ஒரு வன்அடைய வேண்டும்‌. பிறகு இறைவனை உணர்வதற்காக வேதங்களை உணர்ந்த குருவை நாடி, உபதேசம்பெற்று, அமைதி யுள்ள மனதை அடையப்பெற்று, இந்திரியங்களை அடக்கி, முனைப்புடன்ஈடுபட்டு, இறைவனை அவன்அறிவான்‌. அதற்கு குரு, முறையான வழியில்உபதேசம்செய்ய வேண்டும்‌. 

அங்கிரஸ்கூறிய இந்த உபதேசங்களைப்பார்க்கிற பொழுது, நம்மனதில்ஒரு திகைப்பு ஏற்படக்கூடும்‌. ‘யாகங்களைச்செய்ய வேண்டும்‌. அது இந்த உலக வாழ்க்கைக்குச்சிறந்த வழி. வேத மந்த்ரங்கள்மிகவும்சக்தி வாய்ந்தவை! என்றெல்லாம்சொல்லி விட்டு, ‘இவையே மேன்மை யானவை என்று நினைத்துக்கொள்பவன்மூடன்‌! என்றும்‌, ‘அவன்பிறவித்துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பான்‌! என்றும்கூறினால்எப்படி? யாகங்களின்சிறப்பைப்போற்றி விட்டு, அவற்றை இகழ்ந்து, அவற்றினால்ஒருவன்மேன்மை அடைய முடியாது என்று கூறினால்‌, அது எவ்வாறு? காட்டிற்குச்சென்று சன்னியாச வாழ்க்கையை மேற்கொண்டு தவம்செய்து, இறைவனை அறியும்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்என்றும்‌, அதுதான்ஒரே வழி என்றும்கூறினால்‌ – எல்லோரும்சன்னியாசிகள்ஆகிவிட முடியுமா? இந்த உலகம்உய்வுற அதுதான்வழியா? இப்படி பல கேள்விகள்மனதில்எழத்தான்செய்யும்‌. 

ஆனால்நாம்கொஞ்சம்யோசித்தால்‌, இது பற்றிய ஒரு மனத்தெளிவை நாம்பெறலாம்‌. முண்டக உபநிஷதத்தில்அங்கிரஸ்கூறுகிற உபதேசங்களில்இதுவரை நாம்பார்த்த பகுதியின்சாராம்சம்என்ன? வேதங்களில்புகழப்படுகிற மந்த்ரங்களில்முனிவர்கள்கண்டறிந்த பல்வேறு கர்மங்கள்அடங்கி இருக்கின்றன; அவை அனைத்தும்உண்மையானவையே. அவற்றைத்தவறா மல்செய்ய வேண்டும்‌. இந்த உலகில்சிறப்பாக வாழ அது வழி. ஆனால்இதுவே எல்லா மேன்மையையும்தந்து விடும்என்று நினைத்துக்கொண்டு, இவற்றிலேயே ஈடுபடுகிறவர்கள்மூடர்கள்‌. அவர்கள்மீண்டும்மீண்டும்பிறப்பெய்துகிறார்கள்‌. யாகங்களும்‌, சாத்திரங்களில்கூறப்பட்டுள்ள நற்பணிகளுமே எல்லாம்என்றும்‌, அதற்கு மேல்எதுவும்இல்லை என்றும்இவர்கள்நினைக்கிறார்கள்‌. ஆகையால்தாங்கள்செய்த யாகங்கள்‌, நற்பணிகள்ஆகியவற்றின்மூலம்இிடைத்த புண்ணியத்தின்பல னாக ஸ்வர்க்கத்திற்குச்சென்று, அந்த புண்ணியங்கள்இர்ந்த வுடன்மீண்டும்பிறப்பெய்துகிறார்கள்‌. பிறவிச்சுற்றில்சிக்கு கிறார்கள்‌. இதைக்காட்டிலும்மேலான வழி உண்டு என்று அறிந்தவர்கள்‌, குருவை நாடுகிறார்கள்‌. உபதேசம்பெறுகிறார்கள்‌. சுகங்களைத்தியாகம்செய்கிறார்கள்‌. தவ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்‌. அவர்கள்அறிவொளி பெற்றவர்கள்‌. அவர்கள்மீண்டும்பிறப்பில்லாத நிலையை அடைகிற வாய்ப்பு பெற்ற வர்கள்‌. அவர்கள்இறைவனை உணர்கிறார்கள்‌. 

இதில்எந்தக்குழப்பமும்இல்லை, எந்த முரண்பாடும்இல்லை. சாதாரண அறிவு, மேலான அறிவு என்று இரண்டு வகைப்பட்டதாக அறிவு பிரித்துச்சொல்லப்பட்டது. அதன்பிறகு, வேதங்கள்‌, இலக்கணம்‌, பயிற்சி போன்றவை எல்லாமே சாதாரண அறிவு என்பதில்சேர்க்கப்படுகிறது. அது தேவைதான்‌, ஆனால்அதுவே எல்லாம்என்று நினைத்து விடக்கூடாது. பொறுப்புள்ள ஒரு தந்தை வெவ்வேறு கட்டங்களில்தன்மகனுக்குச்சொல்லக்கூடிய அறிவுரை போன்றதுஎன்று இதை நாம்பார்த்தால்‌, நமக்கு இதனுடைய உட்கருத்து விளங்க ஒரு வழி கிடைக்கும்‌. 

ஒரு பொறுப்புள்ள தந்தை வெவ்வேறு கட்டங்களில்தன்மகனுக்கு என்ன அறிவுரை சொல்வான்‌? ‘நன்றாகப்படி, கல்வி அறிவு மிகவும்தேவை! என்று ஒரு கட்டம்‌. பின்னர்‌ ‘நல்ல வேலையில்சேர்ந்து நன்றாகச்சம்பாதிக்க வேண்டும்‌. குடும்பத்தைப்பாதுகாக்க, பணம்அவசியம்தேவை. ஜாக்கிரதையாக செலவு செய்ய வேண்டும்‌. சம்பாத்தியத்தில்முடிந்த அளவு சேமிக்க வேண்டும்‌” என்ற வகையில்தந்தையின்அறிவுரை அமையும்‌. 

ஆனால்இதற்குப்பின்னர்வேறு ஒரு கட்டத்தில்‌, தந்தை யின்உபதேசம்முழுமையாக வேறு திசையில்செல்லக்கூடும்‌. மகன்பணம்ஒன்றையே பிரதானமாகக்கொண்டு, அதை சம்பா இப்பதிலும்‌, சேமிப்பதிலுமே கண்ணும்கருத்துமாக இருந்து கொண்டு மற்ற எதுவுமே வாழ்க்கையில்முக்கியமில்லை என்று நினைக்கத்தொடங்கி விட்டால்‌, அப்பொழுது தந்தை என்ன சொல்வான்‌? ‘இது முட்டாள்தனம்‌. பணமே வாழ்க்கையில்எல்லாவற்றையும்சாதித்துக்கொடுத்து விடாது. மேலும்மேலும்பணம்சம்பாதித்துச்சேமித்துக்கொண்டிருந்தால்போதும்என்று நினைத்துக்கொண்டிருந்தால்‌, அது உன்னை அழிவிற்குத்தான்இட்டுச்செல்லும்‌. வாழ்க்கையில்மேன்மையுற பல வழிகள்இருக்கின்றன. அவற்றை எல்லாம்மனதில்கொள்ளாமல்‌, அவற்றை எல்லாம்அலட்சியப்படுத்தி, பொருள்ஈட்டுவதிலேயே காலத்தைக்கடத்திக்கொண்டிருக்காதே. அது உன்னை நாசம்செய்து விடும்‌” என்று தந்தை அந்த கட்டத்தில்சொல்வான்‌. 

பணம்சம்பாதிக்க வேண்டும்என்று வற்புறுத்தியவனே, இப்பொழுது இப்படிச்சொல்வதா? என்றால்செல்வம்தேவை என்பது ஒரு நிலை; அந்தச்செல்வமே எல்லாம்என்று நினைத்து விடக்கூடாது என்பது மற்றொரு நிலை

இதே போலத்தான்யாகங்கள்நற்காரியங்கள்ஆகியவை ஒரு மனிதன்நிச்சயமாகச்செய்ய வேண்டியவை என்று உபதேசிக்கிற அங்கிரஸ்‌, பின்னர்‌ ‘அவையே எல்லாம்என்று நினைத்து விட்டால்அது மூடத்தனம்என்று எடுத்துரைக்கிறார்‌. ஆகையால்இதில்முரண்பாடு எதுவும்இல்லை. உலக நடைமுறையை ஏற்று வாழவும்‌, புண்ணியங்களைச்சம்பாதிக்கவும்‌, நற்காரியங்களையும்‌, யாகங்களையும்செய்கிற மனிதன்‌ – அறிவு முதிர்ச்சி பெறுகிற போது இறைவனை நாடும்வழியை யோசிக்க வேண்டும்‌. அதற்கான பாதையில்செல்ல வேண்டும்‌. இதையே முண்டக உபநிஷதம்கூறுகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின்பரி ணாம வளர்ச்சி இது

சரி, சந்நியாசம்தான்மேன்மையான வழி என்றால்‌, எல்லோ ரம்சந்நியாசிகள்ஆகிவிடமுடியுமா? அது நல்லதுதானா? – என்ற கேள்வி பிறக்கிறது.