எல்லோருமே ஸந்யாஸிகள் ஆகிவிட வேண்டும் என்ற வற் புறுத்தலோ, அப்படி ஒரு எதிர் பார்ப்போ, முண்டக உபநிஷதத் இல் இல்லை. துறவின் உயர்வைப் பற்றி பேசுகிறபோது, இறை வனை உணர, அந்த நிலை மிகவும் உதவும் என்றுதான் இந்த உபநிஷதம் கூறுகிறது.
ஸந்யாஸத்தைப் பற்றி, வேறு கட்டத்தில் நாம் சற்று விவரமாகப் பார்ப்போம். இப்போது கவனிக்கத்தக்க விஷயம், அந்த வார்த்தையே கூட முண்டக உபநிஷதத்தில் இல்லை. ஆனால் காட்டிலே சென்று நடத்தக்கூடிய தவ வாழ்க்கை போன்றவற் றின் உயர்வு பேசப்படுவதால், இது ஸந்யாஸம் பற்றி இந்த உப நிஷதம் பேசுவதாக ஆகிறது.
ஸந்யாஸம் என்ற சொல்லிற்கு, ‘விடுவது, துறப்பது” என்று பொருள். ஸந்யாஸி, எல்லாவற்றையும் துறந்தவர். உறவு, உடமை, பாசம், பற்று… போன்ற அனைத்தையும் துறந்தவன் ஸந்யாஸியாகி, சமப் பார்வை பெற்றுத் திகழ்கிறான். இப்படிப் பட்ட நிலை, எல்லோருக்கும் கிட்டக் கூடியது அல்ல. அத னால், இது வற்புறுத்தப்படவும் இல்லை; ஆனால் இந்த நிலை யின் மேன்மை, எடுத்துக் கூறப்படுகிறது. உண்மையாகவே அந்த நிலையை முயன்று அடைவது, ஆன்ம அறிவுக்கு இட்டுச் செல்லும் நேர் பாதை என்பதைத்தான் முண்டக உபநிஷதம் கூறுகிறது.
இறைவனை உணர்ந்து கொள்வதும், ஆன்ம அறிவு பெறுவதும் எல்லோராலும் முடிகிற காரியம் அல்ல என்பதால்தான், கர்மங்களை முறையாகச் செய்து, தர்ம காரியங்களைச் சிரத்தை யுடன் செய்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையில் சிறப்புப் பெற்று, நல்ல உலகங்களை அடைய முடியும் என்பதை ஒரு முறைக்கு, பலமுறைகள் இந்த உபநிஷதம் கூறுகிறது – என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இந்த உபநிஷதம் மேற்கொண்டு சொல்வதைப் பார்ப்போம்.
‘நன்றாக எரிகின்ற நெருப்பிலிருந்து, எவ்வாறு, அதே நெருப் பின் தன்மையை உடைய நெருப்புக் பொறிகள் ஆயிரக்கணக்கில் உண்டாகி பரவுகின்றனவோ – அவ்வாறே இறைவனிடமிருந்து, உயிரினங்கள் உண்டாகின்றன.
இறைவன் ஒளிமயமானவன். உருவமற்றவன். பிறப்பற்றவன். மேலானவன். அவனிடமிருந்தே பிராணன், மனம், புலன் கள், காற்று, நீர், நெருப்பு, பூமி… என்ற எல்லாமே தோன்றின. அந்த இறைவனே எல்லா உயிர்களின் உள்ளும் உறைகிறான். இதய குகையில் உறைகிற இறைவனை அறிபவன், அறியாமை என்ற பிணைப்பிலிருந்து விடுபட்டு விடுகிறான்”.
மனிதனின் – ஒவ்வொரு ஜீவனின் – ஆன்மா இறைவனே என்று கூறி, இந்த உபநிஷதம் ‘அது ஒளிமயமானது; வேறெதையும் விட அருகில், இதயக் குகையில் உறைவது. மூச்சு விடு கின்ற அனைத்து ஜீவராசிகளும் அதையே சார்ந்துள்ளன! என்று விளக்குகிறது. பின்னர் இந்த உபநிஷதம் பேசுவது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. ‘ஆன்மா ஜீவராசிகளின் அறிவிற்கு அப்பாற்பட்டது; அதை அறிய வேண்டும்! என்று கூறு கிறது முண்டக உபநிஷதம்.
‘அறிய முடியாது! என்று கூறிவிட்டு, ‘அறிய வேண்டும்’ என்றால் எப்படி – என்ற குழப்பம் ஏற்படுகிறது. முன்பு சொன்ன மைக்ராஸ்கோப் உதாரணத்தை நினைத்துப் பார்த்தால், இந்தக் குழப்பம் தீரும். ‘தண்ணீரில் சார்ந்துள்ள பொருட்களை உன்னால் பார்க்க முடியாது; ஆனால் அவற்றை நீ பார்க்க வேண்டும்! என்று ஒரு பரிசோதனைக் கூட்டத்தில், ஒரு விஞ்ஞானியிடம் கூறப்பட்டால், அதில் குழப்பம் இருக்காது; விசேஷ கருவிகளைக் கொண்டு, கண்ணால் பார்க்க முடியாததை அவர் பார்க்க வேண் டும். காதால் கேட்க இயலாத ஒலிகள் இருக்கின்றன; ஆனால் அவற்றையும் கேட்பது ஆராய்ச்சியாளர்களின் பணி.
விஞ்ஞானத் தேடலில் ஈடுபடுகிறவன், கண்ணால் பார்க்க முடியாததைப் பார்த்து, காதால் கேட்க முடியாததைக் கேட்பது போல ஆன்மீகத் தேடலில் ஈடுபடுகிறவன், புலன்களால் உணர முடியாத இறைவனை – ஆன்மாவை உணர வேண்டும். விஞ்ஞானி, கருவியின் மூலம் விசேஷப் பார்வைப் பெறுகிறான்; ஆன்மீகவாதி, தவம், சிரத்தை, முனைப்பு போன்றவற்றின் மூலம் விசேஷப் பார்வை பெறுகிறான். இதைத் தான் முண்டக உபநிஷதம் ‘ஆன்மாவை அறிய முடியாது; அதை அறிய வேண்டும்’ என்று கூறுகிறது.
முண்டக உபநிஷதம் ஆன்மாவைப் பற்றி அணுக்களில் எல் லாம் அணுவானது; அழிவற்றது‘ என்று வர்ணித்து மேலும் கூறுகிறது: ‘அதுவே இறைவன்; அது உண்மையானது; மரணமற்றது‘.
இதன் பின்னர், ஆன்மாவை அறிய, ஒருவன் எடுக்க வேண் டிய முயற்சியில் எவ்வளவு முனைப்பு தேவைப்படும் என்பதை இந்த உபநிஷதம் விளக்குகிறது. ‘உபநிஷத்துக்கள் கூறுகிற சிறந்த ஆயுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தினால் கூர் ஏற்றப்பட்ட அம்பை அதில் பூட்ட வேண்டும்; இறைவன் பற்றிய நினைப்பி னால் நிறைந்த மனதை நாணாக்கி, இலக்கை குறி வைத்துச் செலுத்த வேண்டும்; அந்த இலக்கே இறைவன் என்றும், ‘உப நிஷத்துக்கள் கூறுகிற ஓங்கார மந்திரமே வில்! என்றும் இந்த உபநிஷதம் சொல்கிறது. அதை சிரத்தையுடன் உச்சரித்து, ஆன்ம அறிவைப் பெற இயானம் செய்து, இறைவனை உணர வேண்டும் என்பது இதன் சாராம்சம்.
இதையடுத்து, முன்பு இந்தத் தொடரில் கூறப்பட்ட ‘ஒரு மரத்தில் இரு பறவைகள்! உதாரணத்தை விளக்குகிற மந்த்ரம் இடம் பெறுகிறது. ஒரு மரத்தில் இரு பறவைகள்; ஒன்று பழத் தைக் கொரித்துத் இன்கிறது; மற்றொன்று பழத்தைத் தின்னாமல், வெறும் பார்வையாளனாகத் திகழ்கிறது. ருசித்துத் தின்கிற பறவை – ஜீவன்; மனிதன். அதைப் பார்த்துக் கொண்டிருக்கிற பறவை ஆன்மா.
புருஷனும் (மனிதனும்) ஆன்மாவும் ஒரே உடலில்தான் இருக்கின்றனர். புருஷன் (மனிதன், ஜீவன் என்றும் சொல்ல லாம்) மோகத்தினால் கவரப்பட்டு, துன்புறுகிறான். வழிபடு வதற்குரிய தனது ஆன்மாவை எப்போது அவன் உணர்கிறானோ, அப்போது துன்பத்திலிருந்து விடுதலை பெறுகிறான் என்று விளக்குகிறது முண்டக உபநிஷதம்.
பழத்தைத் தின்பது – வாழ்க்கையில் நாம் இன்பங்கள் என்று கருதுவதை அனுபவிப்பது. அந்த அனுபவங்களின் விளைவு மகிழ்ச்சி என்று நினைத்தால், அது தவறு. அவற்றின் விளைவு, துன்பமும் கூட. செல்வத்தைத் தேடுவதிலிருந்து, மற்ற பல சுகங் களை நாடுகிறவன், கவலையில் மூழ்குகிறான். சில கசப்பான அனுபவங்கள் ஏற்படுகின்றன. செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்ற கவலை, அவனை தர்மத்தின் பாதை யிலிருந்து விலக்குகிறது; மேலும் செல்வம் ஈட்ட வேண்டும் என்ற ஆசை, அவனைப் பேராசை பிடித்தவனாக அலைய வைக்கிறது. மற்ற இன்பங்களை நாடுகிறபோதும் இதே கதிதான் ஏற் படுகிறது. இருப்தி என்பது இல்லாமல், இன்னமும் வேண்டும் என்ற ஆசையும், இருப்பது போய் விடுமோ என்ற பயமும், மனிதனை வாட்டுகின்றன. வாழ்க்கையின் இன்பத்தை நுகர்ந்து கொண்டே காலம் கழிக்கிறவன் – பழத்தைத் இன்கிற பறவை; அவன் உயர்வு பெற மாட்டான்; அவனுக்கு நிம்மதி என்பது கிடையாது.
ஆனால் பார்த்துக் கொண்டிருக்கிற பறவை – இனிப்பையும் தின்னவில்லை. கசப்பையும் ரசிக்கவில்லை. அது, தன்னிலேயே நிறைவு கண்டு அமைதி குலையாமல் இருக்கிறது; இன்பம் என்று நினைத்து, அலை பாய்கிற மனம் உடையவனாகக் கவலையில் உழல்கின்ற மனிதன், அந்த நிலை உயர்வு தராது என்பதை உணர்ந்து, ஆன்ம அறிவைப் பெற்றால், அவன் அந்த பார்த்துக் கொண்டிருக்கிற பறவையின் நிலையை எய்துகிறான். அதுவே இறை உணர்வு
‘ஆன்மாவை எப்போது ஒருவன் உணர்கிறானோ, அப்போது அவன் புண்ணிய பாவங்களை எல்லாம் உதறிவிட்டு, துன்பமே இல்லாத மேலான சமநிலையை அடைகிறான்! என்று இந்த உபநிஷதம் கூறுகிறது.
இதையடுத்து, உண்மையின் மேன்மையை கூறுகிற இந்த உப நிஷதத்தின் சொல்தான், ஏற்கெனவே கூறியது போல இந்நாட் டின் ‘மோட்டோ‘வாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. அந்த மந்த்ரம் இவ்வாறு அமைந்துள்ளது.
ஸத்யமேவ ஜயதே ந அன்ருதம்
ஸத்யேன பந்தா விததோ தேவயான:
யேனாக்ரமந்தி ரிஷயோ ஹி ஆப்தகாமா
யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதானம்
உண்மையே வெல்லும்; உண்மையற்றது அல்ல. ஆன்மிக வழி, உண்மையால் அமையப் பெற்றது. விருப்பங்கள் நிறைவேற்றப் பட்டவர்களாக, முனிவர்கள் அந்த வழியில் செல்கிறார்கள். உண்மையின் உயர்ந்த இருப்பிடம் அங்கேதான் இருக்கிறது.
புலன்களினால் மட்டுமல்ல, வெற்றுத் தவத்தினால் கூட ஆன் மாவை அறிந்து விட முடியாது; புத்தி தெளிவடைந்து, அகத் தூய்மை பெற்று, சமப்பார்வையுடன் தியானம் செய்பவனே ஆன்மாவை அறிவான் என்றும் இந்த உபநிஷதம் சொல்கிறது. ஆசை களை வளர்த்துக் கொள்பவன், அந்த ஆசைகளின் காரணமாக, அவற்றையே அவன் நாடுவதன் காரணமாக, மீண்டும் மீண்டும் பிறப்பெய்துகிறான்.
ஆனால் ஆசைகள் ஒடுங்கினால், நிறைவேற்றிக் கொள்ள எந்த விருப்பமும் மீதி இல்லை; அப்படிப்பட்ட நிலையை அடை இறவன் ஆத்ம ஞானியாகிறான். ‘அவன் இறைவனை அடைந்து, அவனிடமே நிலை பெறுகிறான். பெருக்கெடுத்துப் பாய்கின்ற நதிகள், சமுத்திரத்தில் கலக்கின்ற போது, தங்கள் வடிவத்தையும் பெயரையும் துறக்கின்றன. அது மாதிரி, ஒளியுடைய பரமாத்மாவை அறிகிற மனிதன் தனது அடையாளங்களிலிருந்து விடுபட்டு, அவனுள் ஐக்கியமாகிறான்’ என்று கூறி இந்த உபநிஷதத்தில் கண்டுள்ள விளக்கங்களை அளித்து முடிக்கிறார் அங்கிரஸ்.
இதுபற்றி, மீண்டும் மீண்டும் நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. துறவு நிலை, ஆன்மீக அறிவுக்கு இட்டுச் செல்லக் கூடிய உயர்ந்த நிலை என்: நாலும் – அது எல்லோருக்கும் விதிக்கப்படவில்லை. முனைப்பு, சிரத்தை, தியாகம், சமப்பார்வை – ஆகியவற்றின் மூலம் ஆன்மீக அறிவைப் பெறலாம்.
இது தவிர, ஆன்ம அறிவு பெற்றவன் கூட, எந்தக் காரியத் இலும் ஈடுபடாதவனாக, ‘சும்மா இருப்பதே சுகம்” என்று வாழ வேண்டியதில்லை. இந்த உபநிஷதமே அப்படிப்பட்ட நிலைப் பற்றிப் பேசுகிறபோது இவ்வாறு கூறுகிறது :
ப்ராணோஹ்யேஷ ய: ஸர்வபூதைர்விபாதி
விஜானன் வித்வான் பவதே நாதிவாதி
ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவான்
ஏஷ ப்ரஹ்மவிதாம் வரிஷ்ட:
எல்லா ஜீவராசிகளிலும் இயங்குவது ப்ராணனே என்று எந்த அறிவுடையவன் உணர்கிறானோ, அவன் தேவையற்றுப் பேசிக் கொண்டிருப்பதில்லை. ஆன்ம உணர்வில் இன்பம் காண்பவ னாக, அதில் களிப்படைந்து, அவன் தனது வேலைகளைச் செய் இறான். ஆன்ம ஞானிகளில் அவன் சிறந்தவன்.
ஆன்ம ஞானிகளில், யார் சிறந்தவன் என்று இங்கே கூறப்ப டுகிறது. ஆன்ம ஞானம் பெற்று விட்டதால், சும்மா இருப்ப வன் அல்ல, சிறந்தவன். அந்த அறிவில் பெறுகிற இன்பத் துடன், தனது வேலையைச் செய்கிற ஆன்ம ஞானியே சிறந்தவன்.
ஆக, துறவு நிலையின் மேன்மையைக் கூறுகிற முண்டக உப நிஷதம், அதற்காக உயர்ந்த மனிதர்கள் தங்கள் பணிகளைக் கவ னிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று கூறவில்லை. ஆன்ம ஞானியும் தனது பணிகளைச் செயல்படுத்துவான்; ஆனால் அதன் பலனில் பற்றற்றவனாக, அவன் தனது கடமையைச் செய்வான்.
அடுத்து மாண்டூக்ய உபநிஷத்.