விழிப்பு; கனவு; உறக்கம், துரியம்!

மண்டூகம்என்றால்தவளை. சிறிய அளவில்அமைந்திருக்இற மாண்டுக்ய உபநிஷதத்திற்கு இந்தப்பெயர்வரக்காரணம்என்ன என்பது பற்றி சில விளக்கங்கள்அளிக்கப்பட்டிருக்கின்றன. விழிப்பு, கனவு, தூக்கம்‌ – ஆகிய நிலைகளில்மனிதன்மாறி மாறி நிற்கிறான்‌; ஒரு தவளை குதிப்பது போல ஒரு நிலை யிலிருந்து மற்றொரு நிலைக்கு அவன்தாவுகிறான்‌; இதை விவ ரிப்பதால்இந்த உபநிஷதத்திற்கு மாண்டூக்ய உபநிஷத்‌! என்று பெயர்வந்ததாக ஒரு விளக்கம்இருக்கிறது. மற்றொரு விளக்கம்‌ “மாண்டுக்யர்என்ற பெயருடைய ரிஷி மூலமாக வந்ததால்‌, இதற்கு இந்தப்பெயர்வந்திருக்கலாம்‌! என்று கூறுகிறது. மூன்றாவது விளக்கம்‌ ‘வருண பகவானே மாண்டுக உருவமாக தஇகழ்ந்ததும்உண்டு; அவரிடமிருந்து கிடைத்த உபதேசம்இது என்ப தால்‌, இதற்கு மாண்டுக்ய உபநிஷதம்என்ற பெயர்வந்தது! என்று கூறுகிறது. வேறொரு விளக்கம்‌, முதல்விளக்கத்தையே வேறு விதமாகச்சொல்கிறது. விழிப்பு, கனவு, தூக்கம்என்ற மூன்று நிலைகளையும்கடந்து, நான்காவது நிலையை, ஓங்கார மந்த்ரத்தின்தியானத்தின்மூலமாக அடைந்து விடலாம்என்று சொல்லி, நான்காவது நிலைக்குத்தாவி விடுகிற வழியைக்கூறு வதால்‌, இதற்கு இந்தப்பெயர்வந்தது என்பது அந்த விளக்கம்‌. 

உபநிஷதங்களுக்குள்ளேயே மிகவும்சிறியதாகிய இதில்தான்ஆத்மாவும்‌, ப்ரம்மனும்ஒன்றே என்ற மஹா வாக்கியம்வரு இறது. ‘இந்த உலகம்அனைத்தும்ஓங்காரமேஎன்று தொடங்குகிற மாண்டுக்ய உபநிஷதம்‌, அதை அடுத்துசென்றவை, இருப்யவை, வருபவைஎல்லாமே ஓங்காரம்தான்‌. மூன்று காலங்களையும்கடந்ததாக எது இருக்கிறதோ, அது ஓங்காரமே! எல்லாமே இறைவன்தான்‌. இந்த ஆன்மாவும்இறைவனே! இந்த ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது

மேலே சொன்னதில்உள்ளஇந்த ஆன்மாவும்இறைவனேஎன்ற சொல்தான்ஆரம்பத்தில்குறிப்பிடப்பட்ட மஹா வாக்கி யம்‌. ‘அயம்ஆத்மா ப்ரம்மஎன்ற இது நான்கு மஹா வாக்கி யங்களுள்ஒன்று

சரி. ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது என்று எவ்வாறு கூறப்படுகிறது? இந்த உபநிஷதம்அடுத்து அதை விளக்கு கிறது. முதல்பரிமாணம்விழிப்பில்நிலை கொண்டிருக்கிறது என்றும்‌, அது வைச்வானரன்என்றும்மாண்டுக்யம்கூறுகிறது. இந்த உலகில்நடைமுறை வாழ்க்கையில்ஈடுபட்டிருக்கிற விழிப்பு நிலையில்‌, வைச்வானரன்என்ற பெயர்தாங்கப்படு கிறது. இரண்டாவது பரிமாணம்தைஜஸன்என்ற பெயரோடு கனவு நிலையில்திகழ்வது. மூன்றாவது பரிமாணத்தின்பெயர்ப்ராஜ்ஞன்‌. விழிப்பு நிலையில்உள்ளது போல இதில்ஆசைகள்கிடையாது; கனவுகளும்காணப்படுவதில்லை. இது அனுபவங்கள்ஓடுங்கிய நிலை. முதலாவது பரிமாணத்தில்‌ – புற உலக அனுபவங்கள்‌; இரண்டாவது பரிமாணமாகிய கனவு நிலையில்‌ – மனஉலக அனுபவங்கள்‌; மூன்றாவது நிலையாகிய உறக்க நிலையில்இது கிடையாது. அதனால்இது ஆனந்தத்தை அனுபவிக்கிற நிலை

மூன்று நிலைகளை இவ்வாறு விளக்கி விட்டு, மாண்டுக்யம்நான்காவது நிலையை விளக்குகிறது. அந்த விளக்கத்தின்படிநான்காவது பரிமாணம்புறமுக நிலை என்று கூறக்கூடிய விழிப்பு நிலையும்அல்ல; அகமுக நிலை என்று கூறக்கூடிய கனவு நிலையும்அல்ல; இவை இரண்டுமே ஐக்கியமாகி விடு கிற உறக்க நிலையும்அல்ல. இந்த நான்காவது பரிமாணம்‌, உணர்வு நிலையும்அல்ல; உணர்வற்ற நிலையும்அல்ல. அதைக் காண முடியாது. செயல்களற்ற, புரிந்து கொள்ள முடியாத, இந்தனைக்கு அப்பாற்பட்ட விளக்க முடியாத நிலை அது. இதற்கு துரியம்‌! என்று பெயர்‌. துரியம்என்றாலேநான்காவதுஎன்று பொருள்‌. அதை ஆன்ம உணர்வால்மட்டுமே அறிய முடியும்‌. அது மங்களகரமானது, சாந்தம்நிறைந்தது. அதுவே நான்காவது பரிமாணம்‌. அதுதான்ஆன்மா. அதை அறிய வேண்டும்‌. 

இப்படி நான்காவது பரிமாணத்தை விளக்கிவிட்டு, மாண்டுக்ய உபநிஷதம்ஓங்காரத்தைப்பற்றிக்கூறுகிறது: ‘இந்த ஆன்மாவை ஓங்காரம்என்று சொல்ல வேண்டும்‌. இதை எழுத்துக்களாகப்பிரித்துச்சொல்வதானால்அதில்உள்ள பகுதிகளே அதன்எழுத்துக்கள்‌, அதில்உள்ள எழுத்துக்களே அதன்பகுதிகள்‌. அவை , , ம்‌ – ஆகியவைவிழிப்பு நிலையை நிலைகளமாகக்கொண்ட வைச்வானரன்‌, ‘*காரம்‌. இது முதற்பகுதி; கனவு நிலையை தன்நிலைக்களமாகக்கொண்ட தைஜஸன்இரண்டாவது பகுதி. இதுகாரம்‌; ஆழ்ந்த உறக்கத்தை நிலைகள மாகக்கொண்ட ப்ராஜ்ஞன்மூன்றாவது பகுதி. இதுகாரம்‌. ஓங்கார மந்த்ரத்தின்நான்காம்பகுதியோ, பகுதி என்று சொல்லவே முடியாதது. அது செயல்களற்றது, உணர்வுகளைக்கடந்தது, மங்களமானது ‘. 

இவ்வாறு ஓங்காரத்தைப்பற்றிக்குறிப்பிட்டு விட்டு, இதை அறிபவன்உயர்நிலையை அடைகிறான்என்று கூறி, மாண்டூக்ய உபநிஷதம்முடிகிறது. இந்த ஓங்காரத்தை எப்படி தியா னம்செய்வது என்ற முறை பற்றி, ஆதிசங்கரரின்குருவிற்கு குரு வான கெளடபாதர்அளித்திருக்கும்விளக்கம்மாண்டுக்ய உபநி ஷதத்துடன்சேர்ந்தே சொல்லப்படுவது மரபு. அந்த விளக்கத்தில்ஒங்கார மந்த்ரத்தை உச்சரிக்கும்முறை, அதை இயானம்செய்யும்முறை போன்றவை எல்லாம்விளக்கப்பட்டிருக்கின்றன. அதைப்படித்து, அந்த வழிமுறைகளை அறிந்து கொண்டு விடுவது கடினம்‌; ஒரு குருவின்மூலமாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்அது

நாம்அடுத்து பார்ப்பது தைத்திரிய உபநிஷத்‌. யஜூர்வேதத்தில்கிருஷ்ண, யஜுர்வேதம்‌, சுக்ல யஜுர்வேதம்என்ற இரு பிரிவுகள்உண்டானது பற்றிய நிகழ்ச்சியை நாம்முன்பே ஒரு அத்தியாயத்தில்பார்த்தோம்‌. வைசம்பாயனரின்சிஷ்யர்யாக்ஞு வல்கியர்‌. சிஷ்யரின்மீது கோபம்கொண்ட வைசம்பாயனர்‌, ‘என்னிடம்கற்றதை கக்ஜிவிடுஎன்று சொல்ல, யாக்ஞவல்கயரும்தான்கற்றதை அங்கேயே விட்டு விட்டார்‌. இந்த நிகழ்ச்சியை உருவகப்படுத்தி வர்ணிக்கிறபோது, ‘யாக்ஞவல்இயர்கக்கினார்‌; வைசம்பாயனரின்உத்தரவின்படி மற்ற சிஷ்யர்கள்‌, இத்திரி என்ற வகையான புறாவின்உருவத்தை எடுத்துக்கொண்டு, யாக்ஞவல்இயர்கக்கியதை சாப்பிட்டார்கள்‌” என்று கூறப்படுகிறது. அதா வது யாக்ஞவல்கியர்வைசம்பாயனரிடம்கற்றதை அங்கேயே விட்டார்‌; மற்ற சிஷ்யர்கள்அந்தக்கல்வியைத்தொடர்ந்தனர்‌. இத்திரி பறவை என்று உருவகப்படுத்தும்முறையில்இந்த நிகழ்ச்சி வர்ணிக்கப்பட்டது. இப்படி தித்திரி பறவை என்ற வர்ணனை கொடுக்கப்பட்டதால்‌, வைசம்பாயனர்அளித்த வேத சாகைக்கு, அதாவது வேதப்பிரிவிற்கு, வேத கிளைக்கு, தைத்இரீய சாகை என்று பெயர்வந்தது. அதில்இடம்பெறுகிற உப நிஷதம்தைத்திரீய உபநிஷதம்‌. 

இந்த தைத்திரீய உபநிஷதம்சஷாவல்லீ, ஆனந்தவல்லி, ப்ருகுவல்லீ என்ற பெயர்களுடைய மூன்று பாகங்களாக அமைந்துள்ளன. வல்லீ என்றால்‌ – பகுதி, க்ஷாவல்லீயில்கல்விப்பயிற்சியைப்பற்றிய பல விஷயங்கள்கூறப்பட்டிருக்கின்றன. நான்கு ஆச்ரமங்களில்ஒன்றாகிய ப்ரம்மச்சரிய ஆச்ரமம்‌, அதனு டைய பெருமை, வேதத்தை அத்யயனம்செய்யும்முறை, ப்ரண வத்தை தியானிக்கும்முறைபோன்றவை இந்தப்பகுதியில்விவரிக்கப்படுகின்றன. இந்தக்கல்வி பெருக வேண்டும்என்ற ஆர்வத்தினால்ஆச்சார்யர்‌, தன்னிடம்ப்ரம்மசாரிகள்வந்து இதைக்கற்றுச்செல்ல வேண்டும்என்ற நோக்கத்தோடு, ஆவஹந்தி என்ற ஹோமம்செய்யவேண்டும்என்பது இதில்கூறப்படுகிறது. இத பற்றிக்குறிப்பிடுகையில்மஹா ஸ்வாமிகள்‌, ‘இன்றைக்கும்கூட இந்த ஹோமத்தைப்பண்ணிப்பார்த்ததில்‌ – பல இடங்களில்குற்றுயிரும்‌, குலை உயிருமாய்இருந்த வேத பாடசாலைகளில் புதிதாக மாணவர்கள்சேர்ந்து, அந்த வேத பாடசாலைகளுக்குப்புத்துயிர்உண்டானதை கண்கூடாகப்பார்த்திருக்கிறோம்‌’ என்று கூறுகிறார்‌. அடிப்படை நெறிகள்இந்தப்பகுதியில்உபதேசிக்கப்படுகின்றனசீக்ஷாவல்லீயை அடுத்து ஆனந்தவல்லீ என்ற பகுதி. ஆனந்த மயமான ப்ரம்மத்தைஅந்த நிலையைஅடைவது பற்றி இதில்விளக்கப்படுகிறது. ஆன்மா பற்றிய விவரங்கள்இதில்கூறப்படுகின்றன

ப்ருகுவல்லீ என்பது வருணபகவான்‌, தன்னுடைய மகனா யய ப்ருகுவிற்கு செய்த உபதேசத்தை விளக்குகிறது. தன்மகன்முயற்சி செய்து உண்மையை உணர்வதற்கு உரிய வகையில்வருண பகவான்‌, மீண்டும்மீண்டும்ப்ருகுவைத்தூண்டி விட, அவர்ஒவ்வொரு படியாக முன்னேறி, உண்மையை தனது அனுபவத்இன்மூலமாகவே தெரிந்து கொள்கிறார்‌. அதை விளக்குகிறது இந்தப்பகுதி. ப்ரம்மத்தை உணர்ந்து, இறை உணர்வில்நிலை பெற்ற பிறகும்கூட, இந்த உலக வாழ்க்கையில்தனக்குள்ள கட மைகளை ஒருவன்மறந்து விடக்கூடாது என்ற வகையான அறி வுரையுடன்‌, இந்த உபநிஷதம்நிறைவு பெறுகிறது

கீழ்க்கண்ட பிரார்த்தனையுடன்இந்த உபநிஷதம்தொடங்கு கிறது: _ 

ஓம்சம்நோ மித்ர: சம்வருண

சம்நோ பவத்வர்யமா 

சம் இந்த்ரோ ப்ருஹஸ்பதி

சம்நோ விஷ்ணுருருக்ரம

நமோ ப்ரஹ்மணே 

நமஸ்தே வாயோ 

த்வமேவ ப்ரத்யக்ஷம்ப்ரஹ்மாஸி 

த்வாமேவ ப்ரத்யக்ஷம்ப்ரஹ்ம வதிஷ்யாமி 

ரிதம்வதிஷ்யாமி 

ஸத்யம்வதிஷ்யாமி

தன்மாமவது தத்வக்தாரமவது 

அவதுமாம்‌ 

அவது வக்தாரம்‌ 

ஓம்சாந்தி: சாந்தி: சாந்தி

மித்ரன்நமக்கு நன்மை புரியட்டும்‌; வருணன்நமக்கு நன்மை செய்யட்டும்‌; அர்யமான்நமக்கு நன்மை செய்யட்டும்‌; இந்திர னும்‌, ப்ரஹஸ்பதியும்நமக்கு நன்மை செய்யட்டும்‌. எங்கும்வியா பித்திருப்பவராகிய விஷ்ணு நமக்கு நன்மை செய்யட்டும்‌. ப்ரம்மனை நமஸ்கரிக்கிறேன்‌. வாயு தேவனே! உன்னை நமஸ்கரிக்இறேன்‌. நீயே கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாய்‌, கண்கண்ட தெய்வம்என்று உன்னை நான்போற்றுகிறேன்‌. ஸத்யம்என்று உன்னை நான்கூறுகிறேன்‌. அந்தப்பரம்பொருள்என்னைக்காப்பாராக. அவர்ஆசிரியரைக்காப்பாராக. என்னைக்காப்பாராக. ஆசிரியரைக்காப்பாராக. மூவகை சாந்தி நிலவட்டும்‌. 

இந்தப்ப்ரார்த்தனை பற்றி ஒரு சில விளக்கங்கள்பகலுக்கு தேவன்மித்ரன்‌. இரவுக்கு வருணன்‌. சூரியனுக்கு அர்யமான்‌. வலிமைக்கு இந்திரன்‌. வாக்கிற்கு ப்ருஹஸ்பதி. பாதங்களுக்கு அபிமான தேவன்விஷ்ணு. இவர்களிடம்நமக்கு நன்மை புரியு மாறு வேண்டப்படுகிறது

அடுத்து, ரிதம்என்பது இந்த உலக இயக்கத்தின்ஒழுங்கு முறை சட்டம்‌. அதற்கு அடிப்படையாக விளங்குவது ஸத்யம்‌. எல்லாவற்றையும்இயக்குகிற இறைவன்ஆசிரியரையும்‌, மாண வனையும்காக்க வேண்டும்என்ற பிரார்த்தனையோடு இந்த மந்த்ரம்முடிகிறது

இதையடுத்து வேதம்ஓதுகையில்கவனத்தில்கொள்ள வேண்‌: பூய விஷயங்கள்பற்றிய விளக்கம்வருகிறது.