குழப்பத்திலிருந்து விடுதலை பெற..!

*உச்சரிப்பு பற்றி விளக்குவோம்‌! என்று தொடங்கி, சில குறிப்புகளை தைத்திரீய உபநிஷதம்கூறுகிறது. ஒலி; ஏற்றம்‌, இறக்கம்‌; நீட்டல்‌, சுருக்கல்‌; உச்சரிப்பில்உள்ள முயற்சி, நிறுத்த வேண்டிய இடங்கள்பற்றிய விவரம்‌; உச்சரிப்பில்தெளிவுபோன்றவற்றின்முக்கியத்துவம்வலியுறுத்தப்படுகிறது. வேத மந்த்ரங்களைச்சொல்லும்போது, எழுத்து பிசகாமல்‌, வகுக்கப்பட்ட முறை யின்படி உச்சரித்து, சரியான ஏற்ற இறக்கங்களுடன்சொல்ல வேண்டும்‌ – என்பது பற்றி இந்தத்தொடரின்ஆரம்பத்திலேயே நாம்பார்த்தோம்‌. சப்த அலைகளுக்கு இருக்கும்சக்தி, விஞ்ஞானி களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம்‌. வேத மந்த்ரங்களை முறையாக ஓதும்போது, ஒரு அசாதாரண சக்தி பிறக்கிறது என்பதால்‌, உச்சரிப்பின்முக்கியத்துவத்தைப்பற்றிய விளக்கத்துடன்இந்த உபநிஷதம்தொடங்குகிறது

பின்னர்‌ – இந்த உலகம்‌; ஒலி; கல்வி; உயிர்களின்சிருஷ்டி; உடல்‌ – ஆகியவை பற்றிய சிந்தனை வற்புறுத்தப்படுகிறது. ஓங்காரத்தின்மேன்மை கூறப்படுகிறது. இதையடுத்து எல்லா இசைகளிலிருந்தும்நல்ல மாணவர்கள்தன்னிடம்வர வேண்டும்என்று குரு வேண்டிக்கொள்கிறார்‌. ஆன்மாவின்உயர்வு கூறப்படுகிறது.

ஓம்‌” என்று ஓதி பயிற்சியைத்தொடங்க வேண்டும்என்று குரு கூறுகிறார்‌. அந்த மந்த்ரத்தில்ஓங்காரத்தின்சிறப்பு விரிவாகக்கூறப்படுகிறது. ‘ஓங்காரமே இறைவன்‌. அனைத்தும்ஓங்காரமே. சரி என்பதற்குஓம்‌! என்று கூறப்படுகிறது. கேட்டுக்கொள்கிறேன்என்று சொல்வதற்கும்‌ ‘ஓம்‌’ என்றே சொல்லப்படு கிறது. ஸாம வேதத்தை இசைப்பவர்கள்‌ ‘ஓம்‌’ என்று கூறியே தொடங்குதிறார்கள்‌. ரிக்வேத மந்த்ரங்களும்அவ்வாறேஓம்‌’  என்று தொடங்கப்படுகின்றன. யாகத்தின்தலைவன்‌, வேள்வியின்‌  தொடக்கத்தில்உத்தரவு கேட்கும்பொழுது, யாகத்தை நடத்தி வைப்பவர்‌, ‘ஓம்‌” என்றே கூறுகிறார்‌. தலைமைப்புரோகிதர்‌ ‘ஓம்‌’ என்று கூறியே தனது சம்மதத்தைத்தெரிவிக்கிறார்‌. அக்னி ஹோத்ரம்செய்வதற்குஓம்‌” என்றே அனுமதி அளிக்கப்படுகிறது. வேத பாடத்தைக்கற்பதற்காக வருகிற மாணவர்களுக்கு குரு மார்கள்‌ ‘ஓம்‌! என்று கூறி கல்வியை ஆரம்பிக்கிறார்கள்‌. ‘ஓம்‌’ என்று தியானம்செய்பவன்இறைவனை அடைகிறான்‌. 

இதன்பின்னர்சில கடமைகள்வரையறுக்கப்படுகின்றன. ‘கற்பதும்‌, கற்பிப்பதும்முக்கிய கடமைகள்‌. ஒழுங்குமுறை கட்டுப்பாடாகிய ரிதம்‌, சத்யம்‌, தவம்‌, இந்திரியங்களை அடக்குதல்‌, அமைதிஆகியவை கடைப்பிடிக்கப்பட வேண்டும்‌. மனிதகுல நன்மையைப்பேண வேண்டும்‌. நல்ல பிள்ளைகளைப்பெற வேண்டும்‌. 

இதன்பிறகு ஒரு மாணவனுக்கு வர வேண்டிய தன்னம்பிக்கை புகட்டப்படுகிறது. தன்னுடைய முயற்சியை நம்பி, மாணவன்கல்வியைக்கற்க வேண்டும்என்பதால்‌, இது தொடர்பான மந்த்ரம்இப்படி கூறுகிறது; ‘வாழ்க்கை எனும்பெரும்மரத்தை வளரச்செய்பவன்நான்‌. என்னுடைய புகழ்‌, மலையின்சிகரம்போல்உயர்ந்திருக்கும்‌. அது புனிதம்வாய்ந்தது. சூரி/னைப்போல நான்அழிவற்றவனாகத்இிகழ்வேன்‌. ஒளி மிக்கவனாக இருப்பேன்‌. உணர்வு பெற்றவனாக இருப்பேன்‌’. இப்படிப்பட்ட தன்னம்பிக்கை ஒரு மாணவனுக்கு வர வேண்டும்‌. 

மாணவர்களுக்குச்சில கட்டளைகள்இடப்படுகின்றன. இவை வேதம்ஓதி முடிந்த பிறகு வருகிறவை. அதாவது குருகுலவாசம்முடிந்து மாணவன்குருவிடமிருந்து விடைபெறுகிறபோது, அவனுக்கு குருவினால்உபதேசிக்கப்படுகிற கட்டளைகள்இவை.

ஸத்யம்வத

தர்மம்சர

ஸ்வாத்யாயான்மா ப்ரமத:

ஆசார்யாய ப்ரியம்தனமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும்மா வ்யவச்சேத்ஸி: ஸத்யான் ப்ரமதிதவ்யம்

தர்மான் ப்ரமதிதவ்யம்

குசலான் ப்ரமதிதவ்யம்

பூத்யை ப்ரமஇதவ்யம்

ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் ப்ரமதிதவ்யம்

தேவபித்ரு கார்யாப்யாம் ப்ரமதிதவ்யம்

மாத்ரு தேவோ பவ

பித்ரு தேவோ பவ

ஆசார்ய தேவோ பவ

அதிதி தேவோ பவ

உண்மைமைப்பேசுங்கள்‌.

தர்ம வழியிலேயே செல்லுங்கள்‌.

கல்விப்பயிற்சியை விட்டு விடாதீர்கள்‌.

குரு தட்சணையை கொடுத்து ஆச்சார்யருக்கு மரியாதை செய்யுங்கள்

சந்ததிச் சங்கிலியை விட்டு விடாதீர்கள்

 உண்மையிலிருந்து விலக விடாதீர்கள்‌.

தர்மத்திலிருந்து விலக விடாதீர்கள்‌. நல்லவற்றிலிருந்து விலக விடாதீர்கள்

சமுகத்திற்கு நன்மை செய்யும்காரியங்களிலிருந்து வில& விடாதீர்கள்

கற்பதிலிருந்தும்‌, கற்பிப்பதிலிருந்தும்விலக விடாதீர்கள்‌.

தேவர்களுக்கும்‌, முன்னோர்களுக்கும்‌, செய்ய வேண்டிய காரியங்களிலிருந்து விலக விடாதீர்கள்‌.

தாயை தெய்வமெனப்போற்றுபவனாக இருங்கள்‌. 

தந்தையை தெய்வமெனப்போற்றுபவனாக இருங்கள்‌. 

ஆச்சார்யரை தெய்வமென போற்றுபவனாக இருங்கள்‌. 

விருந்தினரை தெய்வமென போற்றுபவனாக இருங்கள்‌. 

இதில்இந்த மாதிரி கட்டளைகள்இன்னமும்இருக்கின்றன. இவற்றில்என்ன புதிதாகச்சொல்லப்பட்டு விட்டதுஎன்று நினைத்துவிடக்கூடாது. ‘உண்மை பேசு, மாதா, பிதா, குருஆகியோரை தெய்வமெனப்போற்று. விருந்தினரை மதித்து நடந்து கொள்‌…” என்தற உபதேசமெல்லாம்மிகவும்பழகிப்போனது தானே என்று நினைத்துவிடக்கூடாது. இந்த மாதிரி உபதேசங்கள்‌, இப்போது பழகிப்போனவைதான்‌; ஆத்திச்சூடி சமாச்சாரங்கள்தான்‌. ஆனால்இந்த உபநிஷத உபதேசங்கள்‌, எப்போது சொல்லப்பட்டவை என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்‌. இவை என்று கூறப்பட்டவை என்று இன்று வரை எவராலும்நிர்ணயித்துச்சொல்ல முடியாத காலத்தைச்சார்ந்தவை இந்த உபதேசங்கள்‌. உலகின்பல பாகங்களில்மனித நாகரிகம்வளர்ச்சி அடையாத காலத்திலேயே, பாரத நாட்டுச்சிந்தனை இந்த உயர்வை எட்டி இருக்கிறது. அன்று சொல்லப்பட்ட இந்த உபதேசங்கள்‌, இன்று வரை வலியுறுத்தப்படுகிற சாஸ்வதமான தர்மங்களாக விளங்கு இன்றன. அதுதான்இவற்றின்உயர்வு

இந்த உபதேசங்களில்‌ ‘கற்பது, கற்பிப்பது இரண்டையும்விட்டு விடக்கூடாது! என்று வற்புறுத்தப்படுவதைப்பார்த்தோம்‌. கற்றவன்‌, தான்கற்றதை மற்றவர்களுக்குக்கற்பிக்கும்போதுதான்‌, அறிவு பரவுகிறது. அதே சமயத்தில்மற்றவர்களுக்குக்கற்பிக்கும்ஆச்சார்யன்கூட, தான்கற்பதை நிறுத்தி விடக்கூடாது. கற்பது என்பது, ஒரு நிலையில்முடிந்து விடுகிற விஷயம்அல்ல. அது முடிவில்லாமல்தொடர்க விஷயம்‌. இன்றும்கூட, உண்மை யான ஆசிரியர்கள்‌, தாங்கள்கற்பதை நிறுத்தி விடுவதில்லை; மேலும்மேலும்படித்துத்தெரிந்து கொள்கிறார்கள்‌. இதன்அவசியம்‌, அன்றே வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்உபதேசம்தொடர்கிறது : ‘தமையை ஏற்படுத்தாத காரியங்களைச்செய்ய வேண்டும்‌; மற்றவற்றைச்செய்யக்கூடாது. நல்ல பண்புகளை வளர்க்கிற காரியங்களையே செய்ய வேண்டும்‌; மற்றவற்றைச்செய்யக்கூடாது. ஈடுபாட்டுடன்தானம்செய்ய வேண்டும்‌; அலட்சியமாகச்செய்யக்கூடாது; வருமானத்இற்கேற்ப தானம்செய்ய வேண்டும்‌; பணிவுடனும்‌, மரியாதை யுடனும்‌, விவரமறிந்தும்தானம்செய்ய வேண்டும்‌’.

 தானம்செய்கிறபோது கர்வமோ, அலட்சியமோ தோன்றி விட்டால்‌, அந்த தானம்பயனற்றது என்பது, மேலே உள்ள மந்த்ரத்தில்வலியுறுத்தப்படுகிறது. தானம்பெறுகிறவனுக்குப்பணிவு வேண்டும்என்று சொல்லப்படவில்லை. தானம்செய்பவனுக்குத்தான்அந்தப்பணிவு முக்கியம்‌. அகந்தையுடன்செய்கிற தானம்‌, ஒரு நற்காரியமல்ல

சரி. ‘எது தர்மம்‌?! என்ற மனக்குழப்பம்ஏற்பட்டால்‌, அப்பொழுது என்ன செய்வது? அது குறித்த உபதேசமும்தைத்திரீய உபநிஷதத்தில்கூறப்படுகிறது. ‘கடமை பற்றியோ, நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியோ சந்தேகம்ஏற்படுமானால்‌ – அப்போது, நல்ல முறையில்சிந்திப்பவர்களும்‌, மனதை ஒரு நிலை யில்வைத்திருப்பவர்களும்‌, விபரீத புத்தி இல்லாதவர்களும்‌, நல்ல வழியில்நடப்பவர்களுமாக இருக்கிற தூயவர்கள்‌ – எப்படி நடந்து கொண்டார்களோ, அப்படி நடந்து கொள்ள வேண்டும்‌. 

அதாவது நமக்குச்சந்தேகம்ஏற்படுகிற சூழ்நிலையில்‌, நல்ல வர்களான அறிஞர்கள்சென்ற பாதையில்நாம்சென்றுவிட வேண்டும்‌. குழப்பத்தில்இருந்து விடுதலை பெற அதுதான்வழி. இப்படிச்சொல்லி விட்டு, கீழ்க்கண்ட மந்த்ரத்துடன்தைத்திரீய உபநிஷதம்இந்தப்பயிற்சியை முடிக்கிறது

ஏஷ ஆதேச

ஏஷ உபதேச

ஏஷா வேதோபநிஷத்‌ 

ஏதத்அனுசாஸனம்‌ 

ஏவம்உபாஸிதவ்யம்‌ 

ஏவமுசைதத்உபாஸ்யம்‌ 

இதுவே உத்திரவு  இதுவே உபதேசம்‌ 

இதுவே வேதம்கூறும்ரகசியம்‌ 

இதுவே பயிற்சி 

இதுவே வழிகாட்டுதல்‌ 

இதையே நடைமுறைப்படுத்த வேண்டும்‌ 

இதை இவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டும்‌. 

வேத ரகசியம்என்று இங்கே எது சொல்லப்படுகிறது என்று பார்த்தோமானால்‌, அது மாணவனுக்குக்கூறப்படுகிற அடிப்படை அறிவுரைகளே. உண்மை பேசு என்பதிலிருந்து, விருந்இனரை முறையாக உபசரிக்க வேண்டும்என்பது உட்பட, தானம்செய்வதில்அடக்கம்தேவை என்பது வரைகூறப்பட்ட எளிமையான தர்மங்களே என்றென்றும்கடைப்பிடிக்கப்பட வேண்டிய சாஸ்வதமான நெறிமுறைகள்‌. 

கல்விப்பயிற்சி பற்றிய பகுதி இத்துடன்முடிவடைந்து, அடுத்து ஆனந்தவல்லீ என்ற பகுதி தொடங்குகிறது. ஆன்மாவைப்பற்றிப்பேசுகிற இந்தப்பகுதியின்தொடக்கத்தில்‌, எல்லையற்ற வரான இறைவன்‌, இதய குகையில்வீற்றிருக்கிறார்என்ற உண்மையை உணர்பவன்‌, அந்த இறைவனையே அடைகிறான்என்று கூறப்படுகிறது. இந்த உபநிஷதம்மேலும்கூறுகிற விவரங்கள்இந்து உரைகளை உடைய மனிதனை (ஆன்மாவை/ப்பற்றியது. கோசம்என்றால்உரை. அன்னமய கோசம்‌, ப்ராண மய கோசம்‌, மனோமய கோசம்‌, விஞ்ஞான மய கோசம்‌, ஆனந்த மய கோசம்‌ – என்பவை இந்த ஐந்து உரைகள்‌, 

அன்னமய கோசம்என்பது, உணவினால்வளர்திற சரீரம்‌; பிராணமய கோசம்‌, அந்த சரீரத்தில்மூச்சு விடுகிற சக்தி; மனோமய கோசம்‌, எண்ணங்களைத்தோற்றுவிக்க தன்மை; அந்த எண்ணங்களில்எவை நல்லவை, எவை தள்ளத்தக்கவை என்று அறிய உதவுவது, விஞ்ஞான மய கோசம்‌; இந்த நான்கு உரைகளுக்குஅதாவது நான்கு கோசங்களுக்குஆதாரமாக இருப்பது, ஐந்தா வதாகிய ஆனந்தமய கோசம்‌; அங்கேதான்ஆன்மா பேரின்ப நிலையில்நிலை பெற்றிருக்கிறது. இப்படி நம்மால்இங்கே சுருக்க மாகச்சொல்லப்பட்டிருப்பது, சில உருவகங்களின்மூலமாக தைத்திரீய உபநிஷதத்தில்விவரமாக விளக்கப்பட்டிருக்கிறது– 

இதற்குப்பின்இன்பத்தைப்பற்றிய ஒரு விளக்கம்இடம்பெறுகிறது.