ஆபத்து தர்மம்!

சந்தோகன்என்றால்ஸாம வேதத்தை ஓதுகிறவன்‌ – ஸாம கானம்செய்கிறவன்‌. இதிலிருந்து வந்ததுதான்சாந்தோக்யம்என்று பெயர்‌. வேறு சில உபநிஷதங்களில்ஒரு ரிஷியின்உப: தேசங்களே இடம்பெற்றுள்ளன. அதுபோல்அல்லாமல்‌, சாந்தோக்ய உபநிஷதத்தில்பல ரிஷிகளின்உபதேசங்களும்‌, அறிவுரைகளும்இடம்பெறுகின்றன. பல நிகழ்ச்சிகளும்இந்த உபநிஷதத்தில்வர்ணிக்கப்படுகின்றன. அந்த நிகழ்ச்சிகளின்மூலமாக அறிவுரைகள்விளக்கப்படுகின்றன

ஓம்‌ – என்னுடைய அங்கங்கள்‌, வாக்கு, ப்ராணன்‌, வன்மை, கண்‌, காது முதலிய எல்லாம்தங்கள்தங்கள்தொழிலை நன்றாகச்செய்யும்திறனுடையவையாக விளங்கட்டும்‌. இவை அனைத்தும்உபநிஷதங்களில்கூறப்படும்ப்ரம்மமே. ப்ரம்மம்என்னைவிட்டு விலகக்கூடாது. நானும்ப்ரம்மத்தை விட்டு விலகக்கூடாது, அந்த அறுந்து போகாத உறவு, நிலை பெறட்டும்என்று வேண்டிக்கொள்கிறேன்‌. ஆன்மாவை உணர்ந்து வாழ்பவர்களிடம்என்ன: உபநிஷத தர்மங்கள்அடங்கி இருக்கின்னனவோ, அவை என்னிட மும்நிலை பெறட்டும்என்று வேண்டுகிறேன்‌’ – என்ற ப்ரார்த்த னையுடன்இந்த உபநிஷதம்தொடங்குகிறது

எடுத்த எடுப்பிலேயேஓம்‌’ என்பதன்முக்கியத்துவம்வலி யுறுத்தப்படுகிறது. இந்தஓம்‌’ என்ற சொல்லிற்கு, ‘உத்தம்‌’ எனப்பெயரிடுகிறது, சாந்தோக்ய உபநிஷதம்‌. ‘சகல ஜீவன்களின்ரஸம்

மண்‌ (ரஸம்என்றால்எஸென்ஸ்அதாவது சாரம்‌ – ஒரு பொருளில்உள்ள சத்து) மண்ணின்ரஸம்‌ – தண்ணீர்‌; தண்ணீரின்‌. ரஸம்‌ – தாவர வர்க்கம்‌; தாவரங்களின்ரஸம்‌ – மனிதன்‌; மனி தனின்ரஸம்‌ – வாக்கு; வாக்கின்ரஸம்ரக்‌ (மந்த்ரம்‌); ருக்கின்ரஸம்‌ – ஸாமம்‌: ஸாமத்தின்ரஸம்‌ – உத்கீதம்‌’. இப்படி ஓங்காரத்தின்பெருமையை கூறத்தொடங்குகிற இந்த உப நிஷதம்மேலும்சொல்கிறது

ஓங்காரத்தினாலேயே மூவகை அறிவு வியாபிக்கிறது. யாகங்களில்தேவர்களுக்குஓம்‌’ என்று அழைப்பு விடப்படுகிறது. ‘ஓம்‌! என்று தொடங்கியே ஸாம கானம்செய்கிறார்கள்‌. இந்தஓம்‌! என்ற சொல்மகிமை பொருந்தியது. இந்த சொல்லை உச்சரிப்பது, பரம்பொருளையே போற்றுவதாகும்‌. ஞானத்துடனும்‌, முனைப்புடனும்முறைப்படி எது செய்யப்படுகிறதோ, அது வீரியம்உடையது‘. 

இதை அடுத்து கண்முதலிய இந்திரியங்களை ஒவ்வொன்றாக உத்ததம்எனப்படுகிற ஓங்காரமாக நினைத்து, தேவர்கள்வர்ணித்ததும்‌; இறுதியில்ப்ராணனையே அவர்கள்உத்தீதம்என உணர்ந்து உபாரித்ததையும்‌, இந்த உபநிஷதம்சொல்றிது. அடுத்த  பகுதியில்ஒரு சிறிய நிகழ்ச்சியின்மூலம்ஒரு தர்மம்‌ – விதி முறை விளக்கப்படுகிறது

குருதேசம்ஒரு சமயத்தில்பஞ்சத்தில்சிக்கியது. உஷஸ்தி என்பவர்‌, மற்றும்அவர்மனைவி ஆகியோர்பசியில்வாடி மிகவும்துன்பமுற்று தவித்தார்கள்‌. செய்வதறியாமல்தவிக்கின்ற நிலையில்‌, யானைப்பாகர்களின்இராமம்ஒன்றில்அவர்தங்க நேர்ந்தது. அப்போது அங்கே ஒரு யானைப்பாகன்ஒரு தட்டில்கொள்ளை சமைத்து வைத்துத்இன்று கொண்டிருந்தான்‌. உஷஸ்தி அவனிடம்சென்று பிக்ஷை கேட்டார்‌. அவன்‌ ‘நான்இன்று மீதியாக விட்ட இந்தக்கொள்ளைத்தவிர வேறு ஒன்றும்என்னிடம்இல்லையேஎன்று கூறினான்‌.

 உஷஸ்திசரி, அதைத்தான்எனக்குக்கொடு! என்று கூற, அவனும்‌, அவருக்கு அதைக்கொடுத்தான்‌. உஷஸ்தியும்‌, அவர்‌  மனைவியும்‌, யானைப்பாகன்தின்று மீதி இருந்த கொள்ளைச்சாப்பிட்டார்கள்‌. 

அப்பொழுது யானைப்பாகன்‌ “இந்தாருங்கள்‌. நான்குடித்து மீதியான தண்ணீர்இருக்கிறது. அதையும்குடியுங்கள்‌! என்று அவரிடம்கொடுத்தான்‌. 

உஷஸ்தி, ‘வேண்டாம்‌. இந்தத்தண்ணீரை நான்‌. குடித்தால்எச்சிலை உண்டவனாவேன்‌. அது தவறுஎன்று கூறி மறுத்து விட்டார்‌. 

யானைப்பாகன்பார்த்தான்‌. ‘நான்உண்ட பின்மீதி இருந்த கொள்ளைத்இன்றீர்களே. அது மட்டும்எச்சில்இல்லையா? என்று கேட்டான்‌. 

உஷஸ்தி, ‘நான்பசியால்மிகவும்அவதியுறுகிற நிலையில்‌, அந்தக்கொள்ளை நான்சாப்பிட்டிருக்கா விட்டால்‌, உயிர்துறந்இருப்பேன்‌. ஆனால்கொள்ளைச்சாப்பிட்டவுடன்எனக்கு அந்த ஆபத்து நீங்கி விட்டது. அதன்பிறகு நான்தண்ணீரைக்குடித்தால்‌, அதை இருப்திக்காகத்தான்செய்ய வேண்டும்‌. அதுதான்தவறு! என்று விளக்கினார்‌. 

ஆபத்துக்காலங்களில்சில தர்ம நெறிமுறைகளிலிருந்து விதி விலக்குகள்அளிக்கப்பட்டிருக்கின்றன. அதையொட்டியே, உஷஸ்தி, யானைப்பாகன்தின்று மீதியான எச்சிலை உண்டார்‌. அதன்பிறகு தாக சாந்தி செய்து கொள்வது என்பது, ஆபத்தைப்போக்கு வதற்காகச்செய்யப்படுகிற காரியம்அல்ல; சாப்பிட்ட பிறகு ஒரு நிறைவுக்காகச்செய்யப்படுகிற காரியம்‌. ஆகையால்‌, விதி விலக்கு, இதற்கு ஒத்து வராது. இப்படி ஒரு சூட்சுமமான தர்மம்இருப்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இன்று இயற்றப்படுகிற சட்டங்களில்கூட தேவைப்பட்ட இடங்களில்விதி விலக்குகள்அளிக்கப்படுவதை நாம்பார்க்கிறோம்‌. 

இந்த வழிமுறை, தர்ம சாத்திரங்களிலும்அனுஷ்டிக்கப்படு கிறது. குருவைக்கொல்வது மஹாபாவம்‌. ஆனால்தன்னைத்தாக்க ஒரு குரு முனைந்தால்‌, அப்பொழுது அந்த குருவையே கொன்று விடலாம்என்று மனு நீதி சொல்கிறது. இவ்வாறு வெவ்வேறு சமயங்களில்‌, வெவ்வேறு காரணங்களுக்காக, விதிவிலக்குகள்அளிக்கப்படுகின்றன. இங்கே உஷஸ்தக்கு, எதையாவது உண்ணா விட்டால்உயிர்போய்விடும்என்கிற நிலை; ஆகையால்ஆபத்து தர்மத்தை அவர்கடைப்பிடித்தார்‌. 

இதையடுத்து காயத்ரியின்மேன்மை எடுத்துச்சொல்லப்படு இறது: மனித வாழ்வே ஒரு யாகம்தான்என்ற தத்துவம்விளக்கப்படுகிறது; ஆன்மாவின்சிறப்பும்கூறப்படுகிறது. ஜனஸ்ருதி என்ற மன்னன்பெரும்புகழ்படைத்தவனாக விளங்கியதும்‌; அவன்எதிரில்இரண்டு அன்னப்பறவைகள்ரைக்வன்என்பவனின்மேன்மையைப்பற்றிப்பேசியதும்‌; அந்த ரைக்வனைச்சந்திக்க மன்னன்செய்த முயற்சிகளும்‌; அந்த ரைக்வன்ஒரு கட்டை வண்டிக்காரன்என்பதும்‌; அவனிடம்இருந்து ஜனஸ்ருதி என்கிற மிகப்பெரிய அரசன்உபதேசம்பெற்றான்என்பதும்‌ – முன்னொரு அத்தியாயத்தில்நம்மால்பார்க்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி சாந்தோக்ய உபநிஷதத்தில்தான்வருகிறது. மேன்மை என்பது ஒருவனுடைய பிறப்பிலோ, வெளித்தோற்றத்திலோ இல்லை என்பதும்‌, தான்பெறுகிற ஞானத்தின்காரணமாகவே ஒருவன்உயர்ந்த மகானாகப்போற்றப்படுகிறான்என்பதும்‌, இந்த ரைக்வன்நிகழ்ச்சியிலிருந்து தெளிவாகின்றன

நம்மால்ஏற்கெனவே சுருக்கமாகப்பார்க்கப்பட்ட சத்யகாம ஜாபாலி என்பவரின்அனுபவம்பற்றிய நிகழ்ச்சியும்‌, சாந்தோக்ய உபநிஷதத்தில்தான்கூறப்பட்டிருக்றெது. கெளதமர்என்று ஒரு ரிஷி. அவருக்கு ஹாரித்ருமதர்என்ற பெயரும்உண்டு. அவரிடம்பயில விரும்பி, சத்யகாமன்என்ற சிறுவன்‌, அவரை அணுகினான்‌. 

அவர்அவனைநீ யார்‌?! என்று வினவினார்‌. 

தன்பெயரை அவன்சொன்னான்‌, தாய்‌, தந்தையரைப்பற்றி அவர்கேட்க, சத்யகாமன்தன்னுடைய தாயின்பெயர்ஜபாலா என்பதைத்தெரிவித்து விட்டு, தந்தையின்பெயர்தெரியாது என்று கூறினான்‌. மற்ற டர்கள்கேலியாகச்சிரித்துக்கொண்டிருந்த நிலையில்கெளதமர்‌, சத்யகாமனிடம்‌ ‘உன்தாயாரிடமே சென்று விவரங்களை அறிந்து வா! என்று கூறி அவனை அனுப்பினார்‌.

சத்யகாமன்‌, தன்னுடைய தாயாகிய ஜஐபாலாவை அணுகி இது பற்றி கேட்டபோது அவள்‌, ‘உன்தந்தை யார்என்பது எனக்குத்தெரியாது. என்னுடைய இளமைக்காலத்தில்நான்பலவிதமான பணிகளில்ஈடுபட்டிருந்தேன்‌. யார்யாரையோ சந்தித்தேன்‌. அந்தக்காலத்தில்தான்உன்னைப்பெற்றேன்‌. உன்தந்தை யார்என்று எனக்குத்தெரியாது. என்பெயர்ஜபாலா. உன்பெயர்சத்யகாமன்‌. ஆகையால்நீ குருவிடம்சென்று சத்யகாமன்என்ற ஜாபாலன்என்று உன்னை அறிமுகப்படுத்திக்கொள்வாயாக! என்று சொல்விவிட்டாள்‌. (ஜபாலாவின்மகன்என்பதால்ஜாபாலன்‌.) 

கெளதமரை அணுகிய சத்யகாமன்‌, ‘என்தாயாரை நான்விவரங்கள்கேட்டேன்‌. அவள்இளமைக்காலத்தில்பலவிதமான பணிகளில்ஈடுபட்டிருந்த நேரத்தில்என்னைப்பெற்றதால்‌, என்னுடைய தந்தை யார்என்பது தனக்குத்தெரியாது என்று சொல்லி விட்டாள்‌. தன்பெயர்ஜபாலா என்றும்‌, என்பெயர்சத்யகாமன்‌: என்றும்‌, அதனால்சத்யகாம ஜாபாலன்என்றும்என்தாய்கூறி னாள்‌! என்று கூறி, வணங்கி நின்றான்‌. 

கெளதமர்வியப்புடன்அவனைப்பார்த்தார்‌. உண்மையை இவ்வளவு தெளிவுடனும்‌, உறுதியுடனும்கூறுகிற உன்னை ப்ரா மணன்அல்ல என்று சொன்னால்‌ – அது தகுதியற்ற வார்த்தை யாக இருக்கும்‌. ஆழமான சிந்தனையுடையவனே! ஸமித்துகளை (சுள்ளிகளைக்‌) கொண்டு வா. உனக்கு நான்உபநயனம்செய்விக்கிறேன்‌. நீ ஸத்யத்திலிருந்து விலகாதவன்‌. உன்னை என்சிஷ்யனாக ஏற்கிறேன்‌’ என்று சொல்லி, கெளதமர்அவனைத்தனது ஆச்ரமத்தில்ஏற்றுக்கொண்டார்‌. 

இன்று இருக்கிற ஆயிரமாயிரம்ஜாதி வித்தியாசங்களுக்கு எல்லாம்அன்றைய வேதங்களைக்காரணமாக்குகிறவர்கள்‌, சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்‌. தந்தை யார்என்றே தெரியாத ஒரு சிறுவன்‌ – ஒரு பணிப்பெண்ணின்மகன்‌ – ப்ராமணன்என்று ஏற்கப்படுகிறான்‌. எதை வைத்து? பிறவியை வைத்தா? இல்லை. அவனுடைய குணத்தை வைத்து, அவன்ஏற்கப்படுகிறான்‌. சத்யம்தவறக்கூடாது என்பது ப்ராமணனுக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஒரு மிகப்பெரிய கடமை. அதை இயல்பாகவே கொண்டிருந்த ஸத்யகாமன்‌, அந்த ஒரு காரணத்தினாலேயே ப்ராமணன்என்று ஏற்கப்படுகிறான்‌. ஏற்றவரோ தர்ம சாத்திரங்களை அறியாதவர்அல்ல. வேதங்களைப்படிக்காதவர்அல்ல. கெளதமர்என்ற ரிஷி. அவர்‌, தந்தை பெயர்அறியாத அந்தச்சிறுவனைப்பார்த்து, “உன்னை ப்ராமணன்அல்ல என்று கூறினால்‌, அது தகுதியற்ற சொல்லாகும்‌” என்று சொல்கிறார்‌. அதாவது பின்னர்வந்த கால மாற்றங்களினால்‌, பிறப்பின்மூலமே ஒருவனுடைய வர்ணம்நிர்ணயிக்கப்படுகிறது என்ற நிலை தோன்றி விட்டாலும்‌ – வேத காலத்இல்‌, பிறப்பின்மூலமாக ஒருவன்ப்ராமணத்துவத்தை அடைந்து விடுவதாகச்சொல்லப்படவில்லை. இது பற்றிய விவரங்களை எல்லாம்பிறகு ஒரு கட்டத்தில்நாம்பார்ப்போம்‌. இப்போதைக்கு, வேத காலத்தில்காணப்பட்ட பரந்து, விரிந்த பார்வைக்கு சத்ய காம ஜாபாலியின்வரலாறே ஒரு சான்றுஎன்பதை நாம்கவனத்தில்கொண்டால்போதும்‌. 

இதே உபநிஷதத்தில்வருகிற மற்றொரு நிகழ்ச்சியும்கூட, ஞானம்என்பது ஒரு வர்ணத்தின்ஏகபோக உரிமையாக இருந்து விடவில்லை என்பதைக்காட்டுகிறது.