இந்திரன் நாடிய உண்மை!

நாரதர்நிகழ்ச்சிக்கு வருவோம்‌. நாரதர்கற்றது எல்லாம்வெறும்பெயர்களே என்று ஸநத்குமாரர்கூறிய பிறகு, நாரதர்‌ “பெயரளவேயான இவற்றை எல்லாம்விட எது பெரிதோ அதை நீங்கள்எனக்கு உபதே9ிக்க வேண்டும்‌” என்று கேட்டுக்கொண்டார்‌. ஸநத்குமாரர்‌ ‘வாக்கு, பெயரினும்பெரிது; மனதோ வாக்கினும்பெரிது; இர்மானம்மனஇனும்பெரிது; அதைக்காட்டிலும்சித்தம்பெரிது; தியானம்இத்தத்திலும்பெரிது; தியா னத்தைக்காட்டிலும்உணர்ந்து கொள்வது பெரிது…” – என்று சொல்லிக்கொண்டே போய்ஆன்ம உபதேசத்தை நாரதருக்குச்செய்தருளினார்‌. 

இவ்வாறு ஆன்ம உபதேசத்தைச்செய்த ஸநத்குமாரரைப்பற்றி, ‘அவர்‌, ஸ்கந்தர்எனக்கூறப்படுகிறார்‌! ஸ்கந்தர்எனக்கூறப்படுகிறார்‌!” – என்று வலியுறுத்திக்கூறுகிறது சாந்தோக்ய உபநிஷதம்‌. இப்படி ஸ்கந்தர்என்று கருதப்படுகிற ஸநத்குமாரர்‌, நாரதருக்குச்செய்த உபதேசத்தை அடுத்து, சாந்தோக்ய உபநிஷதம்கூறுந நிகழ்ச்சியிலிருந்து, ஒரு விஷயம்தெளிவாகும்‌ : ஒரே தத்துவத்தை இருவரிடம்விளக்கினால்‌, புரிந்து கொள்ளப்படுகிற அர்த்தம்வெவ்வேறாக விடக்கூடும்‌. கேட்பவனின்தன்மையை  யொட்டி கூறப்படுகிற தத்துவத்தின்பொருள்மாறிவிடலாம்‌.

ஆன்மாவைப்பாவம்இண்டாது; அது இழப்பருவம்அடை யாது; சாவற்றது; பசி, தாகமற்றது; இன்ப, துன்பமற்றது. அந்த ஆன்மாவை அறிந்தவன்மேன்மையுறுகிறான்‌’ என்று ப்ரஜாபதி கூறினார்‌. இதை தேவர்கள்‌, அசுரர்கள்என்ற இரு வகைப்பட்ட வர்களும்கேட்டார்கள்‌. ஆன்மாவைத்தேடிக்காண்போம்என்று இருவருமே இர்மானித்துக்கொண்டார்கள்‌. தேவர்களில்இந்திரனும்‌, அசுரர்களில்விரோசனனும்‌, ப்ரஜாபதியை அணுகினார்கள்‌. (ப்ரம்ம தேவன்தான்இந்த இடத்தில்ப்ரஜாபதி என்று கூறப்படு கிறான்‌ – என உபநிஷதத்தின்விளக்கங்கள்கூறுகின்றன. வேறு ஒரு சமயத்தில்‌, பல ப்ரஜாபதிகளில்ஒருவரான காச்யபரையே இந்தச்சொல்குறிக்கும்என்றும்அந்த விளக்கங்கள்சொல்கின்றன. இங்கே குறிப்பிடப்படுவது ப்ரம்ம தேவன்‌.) 

இந்திரனையும்‌, விரோசனனையும்சில வருடங்கள்தவ மிருக்குமாறு ப்ரஜாபதி கூறினார்‌. அவர்களும்அவ்வாறே செய்த பின்னர்‌, ப்ரஜாபதி, ‘கண்ணில்காணும்புருஷன்எவனோ, அவனே ஆத்மா. அந்த ஆத்மா சாவற்றது, பயமற்றது. அதுதான்ப்ரம்மம்‌” என்று கூறினார்‌. 

காண்பவனை ஆன்மா என்று குறிப்பிட்டார்ப்ரஜாபதி. ஆனால்அவர்சொன்னதைக்கேட்டுக்கொண்ட இந்திரனும்‌, விரோசனனும்‌, காணப்படுகிற சரீரத்தையே ஆன்மா என்று தவ றாகப்புரிந்து கொண்டு விட்டார்கள்‌. ஒரு பாத்திரத்தில்நீரை வைத்து, அதில்தங்களைப்பார்த்துக்கொள்ளுமாறு ப்ரஜாபதி சொல்ல, அவர்களும்அவ்வாறே செய்தார்கள்‌. அதுதான்ஆன்மா என்று ப்ரஜாபதி சொல்லி விட்டார்‌. ‘சாவற்றது; இன்ப, துன்ப மற்றது; பசி, தாகமற்றதுஎன்றெல்லாம்ப்ரஜாபதி குறிப்பிட்டது இதைத்தானா?’ என்று அவர்கள்யோ9ிக்கவில்லை

விரோசனனை பொறுத்தவரையில்அவன்ஒரு இீர்மானத்திற்கே வந்துவிட்டான்‌. அலங்கரிக்கப்பட்ட தன்னுடைய உருவத்தை நீரில்பார்த்து, அதுவே ஆன்மா என்று அவன்முடிவு செய்து கொண்டான்‌. ஆகையால்‌ ‘சரீரத்தைத்தான்‌. போற்ற வேண்டும்‌. அதுதான்மேன்மைக்கு வழி என்று அவன்புரிந்து கொள்ள, அதுவே அசுரர்களின்வழியாக விட்டது. இதனால்உலக இன்பமே, அசுரர்களின்நம்பிக்கையாக விட்டது

இந்திரனும்முதலில்இப்படி நினைத்தாலும்‌, மற்ற தேவர்களிடம்சென்று தான்அறிந்ததைச்சொல்வதற்கு முன்பாக, அவன்இது பற்றி மீண்டும்யோசித்தபோது, அவனுக்கு ஒரு சந்தேகம்வந்தது. ‘சரீரம்அலங்கரிக்கப்பட்ட போது, நீரில்காணப்பட்ட பிம்பமும்அலங்கரிக்கப்பட்டதாக இருந்தது. ஆகை யால்‌, இந்தச்சரீரத்தில்ஒரு அங்கஹீனம்இருந்தால்‌, பிம்பத்திலும்அது இருக்கும்‌. தேஹமே இல்லாமல்நாசம்அடையும்போது, இதுவும்இல்லாமல்போகும்‌. அப்படியிருக்க, இதை ஆன்மா என்று! எப்படி நினைத்துக்கொள்வது?! – இவ்வாறு சிந்தனை செய்த இந்திரன்‌, மீண்டும்ப்ரஜாபதியை அணுகி, தன்சந்தேகத்தை விவரித்தான்‌.

அவர்‌, அவனை மேலும்தவம்புரியச்சொல்ல, அவனும்அவ்வாறே செய்தான்‌. ‘கனவில்எவன்சஞ்சரிக்கிறானோஅவனே ஆத்மா! என்று ப்ரஜாபதி இம்முறை கூறினார்‌. இந்திரன்இருப்தியுடன்விடைபெற்றான்‌. ஆனால்மீண்டும்அவனுக்குச்சந்தேகம்வந்தது. ‘சரீரத்தில்உள்ள குறைகளினால்கனவுக்காட்சி குறைவு அடையாவிட்டாலும்‌, அந்தக்காட்சியிலும்சரீரம்பல துன்பங்களுக்கு உள்ளாவது போலத்தான்தெரிகிறது. ஆகையால்‌, இது இன்பமும்இல்லை, ஆன்மாவும்இல்லைஎன்று அவன்இந்தித்து, மீண்டும்ப்ரஜாபதியை அணுகினான்‌.

ப்ரஜாபதி அவனை மேலும்தவம்புரியச்செய்து, ‘கனவை யும்தாண்டிய உறக்கத்தில்‌ (‘ஸுஷுப்திஎன்று இந்த நிலை விளக்கப்படுகிறது) எவன்பரம சாந்தனாக உறங்குகிறானோ அவனே ஆன்மா என்றார்‌. முன்பு போலவே முதலில்திருப்தி அடைந்த இந்திரன்‌, பின்னால்இதிலும்சந்தேகத்தினால்வாட்டப்பட்டான்‌.

அந்த நிலையில்‌, தன்னையும்அந்த மனிதன்அறிவதில்லை. அழிவடைந்து விட்டவன்போல்இடக்கிறான்‌. ஆகையால்‌, அந்த நிலையில்இருப்பவன்அல்ல ஆன்மா என்று இர்மானித்து ப்ரஜா பதியை அணு, மீண்டும்உபதேசத்தைக்கோரினான்‌. அப்போது ப்ரஜாபதி தனது இறுதி உபதேசத்தைச்செய்தார்‌. இப்படி படிப்படி யாக உபதேசத்தைச்செய்யும்முறையை ஏற்கெனவே பார்த்தோம்‌. இங்கும்அவ்வாறே இந்திரன்உபதேசிக்கப்பெறுகிறான்‌. இந்திரன்பெற்ற ஆன்மா பற்றிய உபதேசத்துடன்சாந்தோக்ய உபநிஷதம்நிறைவு பெறுகிறது.

முக்கியமான உபநிஷதங்களின்வரிசையில்நாம்இறுதியாக பார்க்கப்போவது, ப்ருஹதாரண்யக உபநிஷதம்‌. மற்ற எல்லா உபநிஷதங்களைக்காட்டிலும்இது பெரியது. ப்ருஹத்என்றாலே பெரியது என்றுதான்அர்த்தம்‌. இதனுடைய சாந்தி மந்த்ரம்‌, ஈசா வாஸ்ய உபநிஷதத்திற்கும்சாந்தி மந்த்ரமாக அமைந்திருப்பது; நம்மால்‌ 29-ஆம்அத்தியாயத்தில்அது பார்க்கப்பட்டது.

இதன்தொடக்கமாக வருகிற மந்த்ரத்தில்‌, கீழ்க்கண்ட பகுதி யும்இருக்கிறது.

அஸதோ மா ஸத்கமய

தமஸோ மா ஜ்யோதிர்கமய

ம்ருத்யோர்மா அம்ருதம்கமய

தோற்றத்தில்இருந்து என்னை, மெய்யிற்கு அழைத்துச்செல்‌;

இருளில்இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச்செல்‌; அழி விலிருந்து என்னை அழியாமைக்கு அழைத்துச்செல்‌, 

இப்போதும்கூட பல சந்தர்ப்பங்களில்பயன்படுத்தப்படு கிறது இந்த மந்த்ரம்‌. சில சந்திப்புகளையும்‌, சில விவாதங்களை யும்விவரிக்கிற இந்த உபநிஷதம்‌, அவற்றின்மூலம்ஆன்ம தத்துவத்தை வலியுறுத்துவதோடு மட்டுமல்ல, வேறொரு உண்மை யையும்எடுத்துக்காட்டுகிறது. உபதேசம்செய்கிறவன்‌, ப்ராமண னாகத்தான்இருக்க வேண்டும்என்ற அவசியமில்லை; விவரம்அறிந்தவன்எவனோ, அவன்உபதேசம்செய்ய அருகதை உள்ளவன்‌. இந்த உபநிஷதத்தில்காணப்படுகிற சில நிகழ்ச்சிகள்மூலம்இது தெளிவாகிறது

கார்க்யர்என்பவர்‌, வேதங்களின்கருத்துக்களை விளக்கிச்சொல்வதில்இிறமை பெற்று, அதனால்பெருமிதம்கொண்டவர்‌. அவர்ஒருமுறை காசி ராஜாவாகிய அஜாதசத்ருவை அணு, ப்ரம்ம ஞானத்தைப்பற்றி அவனுக்கு உபதேப்பதாகக்கூறினார்‌. அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலின்விளைவாக, கார்க்யர்அறிந்ததில்முழுமை இல்லை என்பது தெளிவாகவே, அஜாதசத்ருவிடம்உபதேசம்பெற்றுச்சென்றார்கார்க்யர்‌. உப தேசத்தவர்க்ஷத்ரியன்‌; உபதேசம்பெற்றவர்பிராமணன்‌. 

பெண்களுக்கும்கூட ஞானப்பாதை தடுக்கப்படவில்லை என்பதும்‌, அவர்களும்ஆண்களுக்கு நிகராக சம உரிமை பெற்நிருந்தார்கள்என்பதும்‌ – மற்றொரு நிகழ்ச்சியில்தெரிகிறது. யாக்ஞவல்கியர்ஒரு மஹான்‌. அவர்தன்னுடைய இல்லறத்தைத்துறந்து, ஸந்யாசியாக விரும்பினார்‌. தனது முடிவை தன்னுடைய இரண்டு மனைவிகளிடமும்தெரிவித்தார்‌. அவர்களில்இளைய வளாகய மைத்ரேயி, ”இந்த பூமி செல்வம்நிறைந்தது. அதையே நான்அடைந்து விட்டாலும்கூட, அதன்மூலம்எனக்குச்சாகா நிலை கட்டுமா?! என்று கேட்டாள்‌. 

யாக்ஞவல்தயர்‌, கிட்டாது; உலக இன்பங்களை அனுபவிப்பவர்களின்வாழ்க்கை எத்தகையதோ, அத்தகையதாகவே உன்வாழ்க்கை அமையும்‌. செல்வத்தின்மூலம்சாகா நிலை என்ற அம்ருதத்துவத்தை அடைந்துவிட முடியாதுஎன்று பதில்கூறினார்‌. 

அப்படியானால்‌, நீங்கள்விட்டுச்செல்வதை வைத்துக்கொண்டு, நான்என்ன செய்யப்போகிறேன்‌? நீங்கள்சாகா நிலைக்கு இட்டுச்செல்லும்வழியை அடையத்தான்‌, இதையெல்லாம்உதறி விட்டுச்செல்கிறீர்கள்‌, அந்த வழி எதுவோ, அதை எனக்கும்சொல்லுங்கள்‌!” என்று மைத்ரேயி கேட்டுக்கொண்டாள்‌. 

நீ பேசுவது எனக்குத்இருப்தியைத்தருகிறது. நான்சொல்வதைக்கவனமாகக்கேட்டுக்கொள்‌! என்று கூறி, அவர்தன்னுடைய விளக்கத்தைத்தொடங்கினார்‌.

ஒரு கணவன்‌, தன்னுடைய மனைவியிடம்அன்பு காட்டு வது, அவள்பொருட்டல்ல. இப்படிச்செலுத்தப்படுகிற அன்பு, ஆத்மாவின்பொருட்டானது. ஆத்மாவின்பொருட்டே, மனைவி, மக்கள்‌, செல்வம்என்று எல்லாமே அன்பிற்கும்‌, அக்கறைக்கும்உரியவை ஆகின்றன. அந்த ஆன்மா அறியப்பட வேண்டும்‌. அதை அறிந்தால்‌, எல்லாவற்றையும்அறிந்ததாக விடும்‌” என்று யாக்ஞவல்கியர்சொன்னார்‌.

இங்கே மனைவியிடம்செலுத்துகிற அன்பும்‌, பிள்ளைகளிடம்செலுத்தப்படுகிற அன்பும்‌ – எல்லாமே ஆத்மாவின்பொருட்டுத்தான்என்று கூறப்படுவதற்கு விரிவுரைகள்சொல்கிற விளக்கம்இது : ஒருவரிடம்அன்பு காட்டும்போது, அதன்மூலம்நாம்இருப்தி அடைகிறோம்‌; ஒரு தன்னிறைவு ஏற்படுகிறது. தனக்கு மகிழ்ச்சி உண்டாகும்என்கிற காரணத்தை நாம்அறியா விட்டா லும்‌, அந்தக்காரணம்தான்நம்மை அன்பு செலுத்தத்தூண்டு இறது. ஆகையால்தான்‌, “ஆத்மாவின்பொருட்டே எதனிடமும்நாம்அன்பு செலுத்துகிறோம்‌” – என்று யாக்ஞவல்இயர்விளக்குகிறார்‌.

இப்படி அன்பு செலுத்தத்தூண்டுகிற ஆத்மா, அன்பு நிறைந்த தாகத்தானே இருக்க முடியும்‌? அதை அறிந்து கொண்டு விட்டால்எல்லோரிடமும்நமக்குச்சமபார்வை தோன்றும்‌. தன்னுடையது, தனக்குச்சொந்தம்‌ – என்ற உணர்வுகள்அகன்று, அனைத்தையும்சமமாகப்பார்த்து அன்பு செலுத்துவோம்‌. ஏனென்றால்‌, அன்பு காட்டப்படும்பொருளினால்‌, உண்டாவதல்ல அன்புஎன்பதை யும்‌, ஆத்மாவின்காரணமாக உண்டாவதே அன்பு என்பதையும்அந்த நிலையில்நாம்உணர்ந்து கொள்வோம்‌. யாக்ஞவல்இயர்கூறியதற்கு இந்த விளக்கத்தைப்பண்டிதர்கள்கூறுகிறார்கள்‌.