ப்ரம்ம ஞானத்தை நாடிய தனது மனைவி மைத்ரேயிக்கு மேலும் சில விளக்கங்களை அளித்து, தன்னிலிருந்தோ மற்ற எதனிடமிருந்தோ, பரம்பொருளைப் பிரித்துப் பார்க்க முடியாது என்று எடுத்துக் கூறினார் யாக்ஞவல்கியர்.
‘சங்கு ஒலிக்கிறது – அதிலிருந்து புறப்படும் ஒலியைத் தனியே பிரித்து, பிடித்து விட முடியாது; பேரிகை முழங்குகிறது – அதிலிருந்து புறப்படும் சப்தத்தைத் தனியே பிரித்து, பிடித்து விட முடியாது; வீணையின் நாதத்தை அடைய, அந்த ஒலியை மட்டும் தனியே பிரித்து, பிடித்து விட முடியாது. சங்கையும் அதை ஊதுகிறவனையும், பேரிகையையும் அதை முழங்கு கிறவனையும், வீிணையையும் அதை மீட்டுகிறவனையும் அடைந் தால்தான் அந்த ஒலியை அடைய முடியும். அது போலவே இதுவும்! என்று கூறினார் யாக்ஞவல்8யர்.
எல்லாவற்றிலும் உறைவது பரம்பொருளே என்பதால், அதை தனியே பிரித்துப் பார்க்கிற முயற்சியை விட்டுவிட்டு, தன்னிலே உறைவது ஆன்மா – அதாவது பரம்பொருள் என்பதை உணர்ந்து, அதை நாட வேண்டும்.
இங்கே அத்வைத சித்தாந்தம் பேசுபவர்களுக்கு வலு ஊட்டு கிற வகையில், யாக்ஞவல்கியர் ஒரு விளக்கம் தருகிறார். இரண்டு அல்ல – என்பது அத்வைதம்; அதாவது, தான் வேறு, பரம்பொருள் வேறு அல்ல. யாக்ஞுவல்இயர், மைத்ரேயியிடம் “எந்த நிலையில், இரண்டானவை என்கிற எண்ணம் உண்டோ – அங்கேதான் ஒருவன், வேறொன்றைப் பார்க்கிறான், நுகர் கிறான், உணர்கிறான். ஆனால் ‘ஆன்மாவே எல்லாம்” என்கிற நிலையில், எதை நுகர்வது, எதைப் பார்ப்பது?” என்று எடுத்துச் சொல்கிறார். அதாவது ‘தான் வேறு, பரம்பொருள் வேறு என்ற இரண்டான நிலை இல்லை! என்று ஒருவன் உணர வேண்டும் என அவர் வற்புறுத்துகிறார்.
‘அனைத்தும் ஆன்மாவே. அதுவே அமிர்தம். அதுவே ப்ரம்மம்” என்று கூறிய யாக்ஞவல்கியர்,
அயமாத்மா ப்ரம்ம
இவ்வாத்மாவே ப்ரம்மம்.
– என்று கூறி தனது விளக்கத்தை முடிக்கிறார். ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில், அடுத்து ஜனக மன்னர் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி வர்ணிக்கப்படுகிறது. ஜனக மன்னர் ஒரு யாகம் நடத்தினார். வேறு தேசங்களிலிருந்தும் கூட, கற்றறிந்த ப்ராமணர்கள் அந்த யாகத்திற்கு வந்தனர். இத்தனை பேரில், யார் மிகவும் கற்று, முற்றும் உணர்ந்தவர் என்பதை அறிய வேண்டும் என்று ஜனக மன்னர் நினைத்தார். அதற்காக அவர் ஒரு வழி யைக் கையாண்டார். ஓரிடத்தில் ஆயிரம் பசுக்கள் கட்டப்பட்டன; ஒவ்வொரு பசுவின் கொம்புகளிலும், குறிப்பிட்ட அளவு தங்கம் கட்டப்பட்டது.
கூடியிருந்த, வேதம் அறிந்த, ப்ராமணர்களைப் பார்த்து ஜனகர், ‘உங்களுக்குள் எவர் பெரிதும் அறிந்தவரோ, அவர் இப்பசுக்களை ஓட்டிச் செல்லலாம்! என்று கூறினார்.
கூடியிருந்தவர்களில் யாருமே அரசனின் அறிவிப்பின்படி பசுக்களை ஓட்டிச் செல்ல முன்வரவில்லை. அப்போது, யாக்ஞு வல்இயர் தன் சிஷ்யன் ஒருவனைப் பார்த்து ‘அன்புக்குரியவனே! இப்பசுக்களை ஓட்டிச் செல்வாயாக!” என்று கூறினார்.
அந்தச் சீடனும் பசுக்களை ஓட்டிச் செல்லத் தொடங்கினான்.
‘இவர் எப்படி தன்னை சிறந்தவராகக் கருதிக் கொள்ளலாம்? என்று பலர் கோபமுற்றனர்.
யாகத்தில் முக்கிய பங்கேற்று இருந்த ஆச்வலர், நமக்குள்ளே நீங்கள்தான் ப்ரம்ம நிஷ்டரோர (ப்ரம்ம வித்தை அறிந்த கற்ற வரோ?)” என்று கேட்டார்.
யாக்ஞவல்கியர் ‘ஆச்வலரே! நாம் அனைவருமே பசுக்களை விரும்புகிறவர்கள்தான். ஆனால் சிறந்தவனை வணங்கச் கடமைப் பட்டவர்களாகிறோம்’ என்று பதில் அளித்தார்.
இதையடுத்து, அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், ஒருவர் பின். ஒருவராக கேள்விகள் கேட்க, அவற்றுக்கு யாக்ஞவல்&யர் பதில் அளிக்கத் தொடங்கினார்.
ஆச்வலர், உஷஸ்தர், கஹோலர், உத்தாலக ஆருணி…. என்று பலர் கேள்விகள் கேட்க, யாக்ஞவல்கியர் அவற்றிற்கெல்லாம் உரிய விளக்கங்களை அளிக்க, இறுதியில் கார்க்கி என்ற பெண் மணி எழுந்து, ‘நான் இவரை இரண்டு கேள்விகள் கேட்க விரும்பு கிறேன். அக்கேள்விகளுக்கு இவர் விடை அளித்து விட்டால், அதன்பின் இவர் வெல்லப்பட முடியாதவர் என்பதை ஒப்புக் கொள்ளலாம்! என்று கூறினாள்.
கற்றறிந்தவர்கள் கூடிய சபையில், கற்றறிந்த பல ப்ராமணர் களுக்குச் சமமாக அமர்ந்து, ஒரு பெண்மணியும் ‘ப்ரம்மஞானம் பற்றிய தர்க்கம்! என்திற உயர்ந்த விவாதத்தில் பங்கேற்கலாம் என்ற வழிமுறை, வேத காலத்திலேயே இருந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சி பற்றி விவரிக்கிற ப்ருஹதாரண்யக உப நிஷதம், இது ஏதோ விதி விலக்காக நடந்த நிகழ்ச்சி என்று கூற வில்லை. அந்த சபையில் நடந்த விவாதத்தில் கார்க்கி என்ற பெண்மணி சர்வ சாதாரணமாகப் பங்கேற்று, மிகவும் கற்றறிந்த யாக்ஞுவல்கியரை, சோதனைக்கு உள்ளாக்குகிற எண்ணத்துடன் கேள்விகள் கேட்டாள்.
‘பெண்கள் அடக்கி வைக்கப்பட்டனர்; ஆண்களுக்குச் சம மாக அவர்களுக்கு ஒரு உரிமையும் கிடையாது…’ என்றெல்லாம் அக்காலத்தைப் பற்றி இப்போது விமர்சிக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்ன? வேத காலத்திலேயே, ஒரு மாபெரும் சபை யில், ஒரு மாபெரும் தத்துவம் பற்றி, ஒரு மாபெரும் பண்டிதர் கூட்டத்தில், ஒரு மாபெரும் ப்ரம்மஞானியை கேள்வி கேட்டு திணற அடிப்பதற்கு முயற்சிக்கும் உரிமை, பெண்ணிற்கு இருந்திருக்கிறது.
அதுவும், அடக்க ஒடுக்கத்தோடு பேச வேண்டிய நிர்பந்தம் கூட அந்தப் பெண்மணிக்கு இருக்கவில்லை. கேள்வியைக் கேட் பதற்கு முன்பாக அவள் மிக்க பெருமிதத்துடன் பேசுகிறாள்.
“யாக்ஞுவல்கியரே! காசி ராஜனின் வீர மகனோ அல்லது, விதேஹ தேசத்து வீர புத்திரனோ, தளர்ந்த வில்லை நிமிர்த்தி, நாணேற்றி, எதிரிகளை மிகவும் வருத்தக்கூடிய பாணங்களை கையில் எடுத்துக் கொண்டு, எதிரியின் முன் எப்படி நிற்பார்களோ – அப்படி உமக்கு முன்னால் நான் என் கேள்விகளுடன் நிற் . இறேன். பதில் சொல்லும்…”
– இப்படி ஆரம்பித்தாள் கார்க்கி. இதுவா சம உரிமை இல்லை என்பதற்கு அத்தாட்சி? இதுவா பெண்கள் ஒடுக்கப்பட்டனர் என்பதற்கு உதாரணம்? சரி, கார்க்கியின் கேள்விக்கு வருவோம்.
‘எது வானத்திற்குக் மேலும், பூமிக்குக் கீழேயும், வானத்திற் கும் பூமிக்கும் இடையிலும் கூட உள்ளதாகவும் – இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உள்ளதாகவும் – கூறப்படுவது எதுவோ, அது எதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டுள்ளது?’ என்று கேட்டாள் கார்க்கி.
யாக்ஞவல்கியர் ‘வானவெளியில் (52806) அது கோர்க்கப்பட் டுள்ளது! என்று பதில் அளித்தார்.
மேலும் அவர் சொன்னார் : ‘ப்ரம்மத்தை உணர்ந்தவர்கள் அதை அக்ஷரம் எனக் கூறுகிறார்கள். (அக்ஷரம் – என்றால் அழிவற்றது) அது பார்வைக்கு உட்பட்டதுமல்ல – அப்பாற் பட்டதுமல்ல; அது குட்டையானதுமல்ல – உயரமானதுமல்ல; நெருப்பு போல இறந்ததும் அல்ல – தண்ணீரைப் போல ஈரமானதுமல்ல; உள்ளும் புறமும் அதற்கில்லை; அது எதையும் உண்பதுமில்லை, எதனாலும் உண்ணப்படுவதுமில்லை.
இந்த அழிவற்றதன் கட்டளையினால்தான் சூரியனும், சந்திரனும் தங்களுடைய இடங்களில் நிற்கிறார்கள்; இந்த அழிவற்றதன் கட்டளையினால்தான் வானமும், பூமியும் தங்கள்: தங்கள் நிலைகளில் உள்ளன; இந்த அக்ஷரத்தை (அழிவற்றதன்) அறிந்து கொள்ளாமலேயே ஒருவன், எத்தனை ஹோமங்கள் செய்தாலும், எத்தனை யாகங்கள் செய்தாலும், அவை எல்லாமே ஒரு முடிவு உள்ளவையே. இந்த அக்ஷரத்தை அறியாமலே, ஒருவன் இவ்வுலகை விட்டுச் சென்றால், அவன் ‘க்ருபணன்’ ஆகிறான். இதை அறிந்து கொண்டு ஒருவன் இவ்வுலகை விட்டுச் சென்றால், அவன் ப்ரம்மஞானம் எய்தியவனாகக் கருதப்படு கிறான்”.
(மேலே குறிப்பிடப்பட்ட யாக்ஞவல்கயரின் விளக்கத்தில் வருகிற ‘க்ருபணன்’ என்ற சொல்லிற்குப் பரிதாபத்திற்கு உரிய வன் என்று பொருள்; தனது மனிதப் பிறவியை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணாக்கியதால் – அவன் க்ரு பணன், பரிதாபத்திற்கு உரியவன்.)
யாக்ஞவல்கியர், அக்ஷரம் என்பதற்கு அளித்த விளக்கம் – பரம் பொருளை பற்றிய பேச்சு. நிர்குணம் – அதாவது எந்த வர்ணனைக்கும் உட்படாத, எந்த ஒரு அளவோ, நிறமோ, உருவமோ கூறப்பட முடியாதது நிர்குணம்; அதாவது வர்ணிக்கக் கூடிய குணம் எதுவும் இல்லாதது. இதுவே பரம்பொருளின் தன்மை. (அதுவே பல உருவங்களில் நாம் வழிபடும்போது, நமக்குச் சற்குணமாகக் காட்சி அளிக்கிறது. அதாவது நல்ல தன்மையுடைய உருவமாகிறது.)]
‘அழிவற்ற அந்தப் பரம்பொருளில்தான் எல்லாமே கோர்க்கப் பட்டிருக்கின்றன” – என்பது யாக்ஞவல்கியர் அளித்த பதிலின் சுருக்கம்.
யாக்ஞவல்கியர் அளித்த விளக்கத்தை, நாம் ஒரளவு பார்த்து விட்டதால், அந்தத் தத்துவத்தையே முழுமையாகப் புரிந்து கொண்டு விட்டோம் என்று நினைப்பதற்கு இடமில்லை. மின்சாரம் எப்படி இயங்குகிறது என்று ஒரு விஞ்ஞானி அளித்துள்ள விளக் கத்தைப் படித்தால், ‘சரி; ஸ்விட்சைப் போட்டால் விளக்கு எரியும்” என்று பலரும் புரிந்து கொள்வோம்; சிலர் இதற்குக் கொஞ்சம் மேலே போய், ஒயர் வழியாக வருகிற மின்சாரம் ஸ்விட்சில் தடைப்பட்டு, அது போடப்படுகிறபோது, பல்பிற்குப் போலிறது என்று புரிந்து கொள்வோம் – இப்படி அவரவர் தகுதிக்கேற்ப ஓரளவு புரியும். விஞ்ஞானி அறிந்ததை, அவர் சொல்வதின் ஆழத்தைப் புரிந்து கொள்ள, அவர் அடைந்த பயிற்சி நமக்கும் தேவைப்படும். இதே போலத்தான் இந்தத் தொடரில் வருகிற விளக்கங்களை வாசகர்கள் அணுக வேண்டும். தத்துவத் இன் ஆழத்தை இது விளக்கி விடாது; தத்துவத்தின் அறிமுகத்தை இது செய்து வைக்கும். யாக்ஞவல்கியர், அக்ஷரம் பற்றிக் கூறிய விளக்கத்துடன் நாம் அறிமுகம் பெற்றோம்; மேலே செல்வோம்.
கார்க்கி, யாக்ஞவல்கியரின் விளக்கத்தைக் கேட்டு அவரை நமஸ்கரித்து, ”இவரை வெல்ல எவரும் இல்லை” என்று கூற, யாக்ஞவல்கியர் ”கற்றறிந்தவர்களே! என்னை யார் கேள்வி கேட்க விரும்பினாலும், கேட்கலாம். எல்லோருமே கேட்டாலும் கேட்க லாம். அல்லது உங்களில் யார் விருப்பம் தெரிவிக்கிறீர்களோ அவர்களை நான் சில கேள்விகள் கேட்கிறேன். உங்கள் அனை வரிடமும் நான் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் கேட் இறேன்!’ என்று சபையோரைப் பார்த்துச் சொன்னார். அவரைக் கேள்வி கேட்கவோ, அவரால் கேள்வி கேட்கப் படவோ எவரும் முன் வரவில்லை – என்று கூறி இந்த நிகழ்ச்சியை முடிக்கிறது, ப்ருஹதாரண்யக உபநிஷதம். கொஞ்சம் மேலே போய், ஒயர் வழியாக வருகிற மின்சாரம் ஸ்விட்சில் தடைப்பட்டு, அது போடப்படுகிறபோது, பல்பிற்குப் போலிறது