தேவ, அசுர, மனிதர்கள் பெற்ற அறிவுரை!

அடுத்து ஜனக மன்னரின்சபைக்குச்சென்ற யாக்ஞவல்கியர்‌, அங்கே ஜனகருக்கு உபதேசம்செய்த நிகழ்ச்சியை ப்ருஹதாரண்யக உபநிஷதம்விவரிக்கிறது. ஜனகர்எழுப்பிய சந்தேகங்களுக்கு விடைகள்அளிக்கையில்‌, இரு வகையான மனிதர்களைப்பற்றி யாக்ஞவல்கியர்பேசுகிறார்‌. ஆசைகளை விட முடியாமல்வாழ்கிறவன்‌, ஆசைகளை விட்டொழித்தவன்‌ – ஆகிய இரு வகையான மனிதர்கள்என்ன நிலைகளை அடைகிறார்கள்என்பதை யாக்ஞவல்கியர்ஜனகருக்கு விளக்குகிறார்‌. 

ஆசைகளை விட முடியாமல்வாழ்கிறவன்‌, தான்செய்த செயல்களுக்கு ஏற்றவாறு, மரணத்திற்குப்பிறகு மீண்டும்ஒரு பிறப்பை எய்துகிறான்‌. நல்லதையே செய்தவன்நல்ல பிறப்பு எய்துகிறான்‌. 

ஆசைகளை விட்டவனைப்பாவம்தீண்டுவதில்லை. அவன்எல்லாப்பாவங்களையும்தாண்டி நிற்கிறான்‌. பாவமற்றவனாக வும்‌, அழுக்கற்றவனாகவும்‌, சந்தேகமற்றவனாகவும்அவன்இருக்கிறான்‌. அவன்ஆன்மாவை உணர்ந்தவனாகி, தண்ணீரோடு தண்ணீர்கலப்பது போல, ப்ரம்மத்தோடு கலந்து விடுகிறான்‌. சரீரத்துடன்வாழ்கிறபோதே கூட அவன்ப்ரம்மத்தோடு, ப்ரம்மமாகவே இருந்து கொண்டிருக்கிறான்‌. ஆகையால்‌, சரீரம்விழுந்த பிறகு, அவன்ப்ரம்மத்துடனே ஐக்கியமாகி விடுகிறான்‌. அவனுக்கு மறு பிறப்பு இல்லை. இந்தக்கருத்தை யாக்ஞவல்கியர்விவரமாகக்கூறுவதை வர்ணிக்கிற ப்ருஹதாரண்யக உபநிஷதம்‌, அடுத்து தேவர்கள்‌, அசுரர்கள்‌, மனிதர்கள்சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைக்கூறுகிறது.

ஒரே விஷயத்தை வெவ்வேறு நபர்களிடம்கூறினாலும்‌ – கேட்பவர்களின்தன்மை, நிலைமை, தேவை ஆகியவற்றையொட்டி கூறப்படுகிற விஷயத்திற்கு அவரவர்களுக்கு வெவ்வேறு அர்த்தம்இட்டுகறது. ப்ரஜைகளை சிருஷ்டி செய்வதற்காக ப்ரம்மனால்படைக்கப்பட்ட ப்ரஜாபதிகள்பலர்‌. எல்லாப்படைப்புகளுக்கும்அவரே காரணம்என்பதால்‌, ப்ரம்ம தேவனும்கூட ப்ரஜாபதி என்று அழைக்கப்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சியில்ப்ரஜாபதி என்பது ப்ரம்ம தேவனைத்தான்குறிக்கும்என்று எடுத்துக்கொள்ளலாம்‌.

தேவர்கள்‌, அசுரர்கள்‌, மனிதர்கள்என்ற மூன்று வகையினரும் ப்ரஜஜாபதியை அணுகிஅதாவது தங்களுடைய தகப்பனை அணுகிதங்களுக்கு உபதேசம்செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்‌. தேவர்களிடம்ப்ரஜாபதி, ‘என்று கூறி, ‘இதைப்புரிந்து கொண்டீர்களா?! என்று கேட்டார்‌.

தேவர்கள்‌ ‘புரிந்து கொண்டோம்‌ – தாம்யதஅடக்கமாக இருங்கள்‌ – என்று சொல்இறீர்கள்‌’ என்றனர்‌.

சரிதான்‌. நீங்கள்புரிந்து கொண்டீர்கள்‌! என்று ப்ரஜாபதி கூறினார்‌. அடுத்து மனிதர்கள்அவரை அணுக, ப்ரஜாபதி அவர்களுக்கும்‌ ‘! என்று சொல்லி, ‘புரிந்து கொண்டீர்களா?! என்று கேட்டார்‌.

மனிதர்கள்‌ *புரிந்து கொண்டோம்‌ – தத்ததானம்செய்யுங்கள்‌ – என்று சொல்கிறீர்கள்‌: என்று சொன்னார்கள்‌.

ப்ரஜாபதிசரிதான்‌. நீங்கள்புரிந்து கொண்டீர்கள்‌! என்று சொன்னார்‌.

அடுத்து அசுரர்கள்அவரை அணுகினார்கள்‌. ப்ரஜாபதி அவர்களுக்கும்‌ ‘என்று கூறி, ‘புரிந்து கொண்டீர்களா?! என்று கேட்டார்‌.

அசுரர்கள்‌, புரிந்து கொண்டோம்‌. தயத்வம்‌ – தயை உடையவர்களாக இருங்கள்‌ – என்று சொல்கிறீர்கள்‌! என்றனர்‌.

ப்ரஜாபதிசரிதான்‌. நீங்கள்புரிந்து கொண்டீர்கள்‌! என்று சொன்னார்‌. 

உபதேசிக்கப்பட்டது! – என்ற ஒரு அக்ஷரம்தான்‌. இதற்குத்தேவர்களும்‌, அசுரர்களும்‌, மனிதர்களும்அவரவர்களுடைய இயல்புகளுக்கும்‌, குறைகளுக்கும்ஏற்றவாறு அர்த்தம்செய்து கொண்டனர்‌. 

தேவர்கள்அடக்கத்தில்குறைந்தவர்கள்‌. ஆகையால்‌, அவர்கள்ப்ரஜாபதி தங்களிடம்‌ ‘! என்று சொல்லியபோது, ‘தாம்யதஅடக்கமாக இருங்கள்‌” – என்பதே அதற்கு அர்த்தம்என்று புரிந்து கொண்டார்கள்‌. 

மனிதர்கள்தாராள மனம்இல்லாமல்‌, சுயநலம்உடையவர்களாக இருக்கின்ற குறையை உடையவர்கள்‌. ஆகையால்அவர்கள்ப்ரஜாபதி தங்களிடம்‌ ‘என்று சொல்லிய போது, ‘தத்ததானம்செய்யுங்கள்‌! என்று கூறியதாகப்புரிந்து கொண்டார்கள்‌. 

அசுரர்களோ, கருணையற்றவர்கள்‌. மற்றவர்களை ஹிம்சிக்கும்குறையை உடையவர்கள்‌. ஆகையால்அவர்கள்ப்ரஜாபதி தங்க ளிடம்‌ ‘என்று கூறியபோது, ‘தயத்வம்‌ – தயை உடையவர்களாக இருங்கள்என்று சொன்னதாக எடுத்துக்கொண்டார்கள்‌. 

சொல்லப்பட்ட விஷயம்ஒன்றுதான்என்றாலும்‌, அந்தக்குறிப்பிலிருந்துஅவரவர்கள்தங்கள்குறைகளை உணர்ந்தவர்களாக இருந்ததால்‌ – அவரவர்நிலைக்கு ஏற்ப அர்த்தம்புரிந்து கொண்டார்கள்‌. 

இந்த நிகழ்ச்சி பற்றிய விளக்கங்களில்ஒரு விவரம்தரப்படுகிறது. : மனிதர்களிடையே கூட எல்லா குணங்களும்பொருந்தி இருந்தும்‌, அடக்கமின்மை என்ற குறையை உடைய வர்கள்‌; பல நற்குணங்கள்இருந்தாலும்‌, கருமித்தனம்என்ற குறையை உடையவர்கள்‌; பல சக்திகள்பெற்றிருந்தாலும்‌, பிறரை ஹிம்சிக்கும்குறையை உடையவர்கள்‌ – என்று வெவ்வேறு வகையானவர்கள்உண்டு. இப்படி மனிதர்கள்முறையே தேவ குணம்‌, மனித குணம்‌, அசுர குணம்படைத்தவர்களாக இருக்கிறார்கள்‌,

ஆகையால்தேவர்களுக்கும்‌, அசுரர்களுக்கும்‌, மனிதர்களுக்கும்ப்ரஜாபதி கூறிய அறிவுரையை எல்லா மனிதர்களுமே புரிந்து கொண்டு நடக்க வேண்டும்‌. ஏனென்றால்இது மனித இனத்இற்கே கூட பொருந்துகிற அறிவுரை. இந்த நிகழ்ச்சியின்மூலம்அறிவுறுத்தப்படுவது அடக்கம்‌, தானம்‌, தயைஎன்ற மூன்று நற்குணங்கள்‌. இவ்வாறு விளக்கங்கள்தரப்பட்டுள்ளன. இது ஆதிசங்கரர்அளித்துள்ள விரிவுரையை ஒட்டிய விளக்கம்‌.

இந்த உபநிஷதத்தின்இறுதிப்பகுதியில்ஒரு மந்த்ரம்வரு இறது. ‘நோயினால்பீடிக்கப்பட்டு, அதன்காரணமாக வருந்து வது கூட, உண்மையிலேயே ஒரு பெரும்தவமாகும்‌ – என்று எந்த மனிதன்அறிவறானோ, அவன்உயர்ந்த உலகை அடை கிறான்‌! என்று இந்த மந்த்ரம்சொல்கிறது.

பல மகான்கள்செய்த தவங்கள்பற்றிய வரலாறுகளை புரா ணங்களிலும்‌, இதிஹாசங்களிலும்படிக்கிறோம்‌. அவர்கள்உடலை வருத்திக்கொண்டார்கள்‌. எதற்காக? இந்தச்சரீரத்தின்மீது இருக்கும்ஆசை, அதன்மீது உள்ள அபிமானம்ஒழிய வேண்டும்‌ – அதற்காக. இந்தச்சரீரத்தை ஒட்டிய பாவங்களை விலக்க வேண்டும்என்ற எண்ணம்பரிபூரணமாக உண்டாவதற்காக.

இந்த மந்த்ரத்தைப்பற்றி பேசுகையில்காஞ்சி மஹா ஸ்வாமி கள்‌, ‘உடம்பிற்கு ஜுரம்‌, நோய்நொடி என்று வந்தால்‌, உடனே டாக்டரை சென்று பார்த்து, அதை எப்படியாவது இர்த்துக்கொண்டு விட வேண்டும்என்று முனையாமல்‌, அந்த நோயின்அல்லது ஜுரத்தின்கொடுமையை அனுபவித்து விட வேண்டும்‌. அது ஒரு தபஸ்மாதிரி ஆகும்‌! என்று கூறியிருக்கிறார்‌. இது நம்மால்எல்லாம்முடிகிற காரியம்இல்லைதான்‌.

முன்காலத்தில்பார்த்திருக்கிறோம்‌. பல பெரியவர்கள்தலை வலி, வயிற்று வலி, ஜுரம்போன்றவை வந்தால்‌, உடனே டாக்டரைச்சென்று பார்க்க மாட்டார்கள்‌. அதை அனுபவித்து விடுவார்கள்‌. அந்த மாதிரி நம்மால்இப்போது இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு மாத்திரையைப்போட்டுக்கொண்டு, வந்த நோயைச்சரிப்படுத்தத்தான்நாம்முனைகிறோம்‌. இதற்கு விதிவிலக்காக யாராவது ஒரு சிலர்இருப்பார்களோ, என்னவோ தெரியாது. ஆனால்‌, பொதுவாக இதுதான்நமது வழி. ஆகை யால்மஹா ஸ்வாமிகள்சொன்ன மாதிரி, இந்தத்தவத்தை மேற்கொள்வது என்பது நமக்குக்கடினம்‌. 

அதே சமயத்தில்நாம்செய்யக்கூடியதும்ஒன்று இருக்கிறது என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஒரு நோய்நொடி என்று வந்தால்‌, என்னதான்நாம்மருந்து மாத்திரைகளைச்சாப்பிட்டாலும்கூட, அது சில நாட்கள்தொடரத்தான்செய்கிறது. அந்தச்சில நாட்களில்‌, நாம்யார்யார்மீதோ மனதளவிலோ, வாயளவிலோ பழி போடுகிறோம்‌. ‘டாக்டர்சரியில்லை; வர வர மருந்துகள்போலியாகவே இருக்கின்றன; உணவுப்பொருட்கள்எல்லாம்ஒரே கலப்படம்‌; சுற்றுப்புறம்ஒரே அசுத்தம்‌; காரியாலயத்தில்இன்னார்ஜுரத்துடனே வந்ததால்‌, அவரிடமிருந்து தொற்றிக்கொண்டு விட்டதுஎன்றெல்லாம்பழிகளை வாரி வழங்கிக்கொண்டே இருக்கிறோம்‌. நமது நோய்அல்லது ஜுரம்சரியாகப்போகிற வரையில்‌, பலருக்குச்சாபமிட்டுக்கொண்டு இருக்கிறோம்‌. அதற்குப்பதிலாக மனதளவில்‌ ‘நாம்செய்த பாவங்களுக்குப்பிராயச்சித்தம்செய்ய ஒரு சந்தர்ப்பமாக, இந்த நோய்அல்லது இந்தக்காய்ச்சல்நமக்கு வந்திருக்கிறது. இதை நாம்ஓரளவாவது அனுபவிப்பதால்‌, நம்முடைய பாவத்திற்கு ஓரளவு பிராயச்சித்தமாவது செய்ததாக இருக்கும்‌” என்று நாம்இர்மானித்துக்கொண்டாலே போதும்‌. வந்து விட்ட ஜுரத்தை அல்லது நோயை முழுமையாக அனுபவித்து விடுவது என்ற தவத்தை நம்மால்மேற்கொள்ள முடியா விட்டாலும்கூட, ‘நமது பாவத்இற்குப்பிராயச்சித்தம்செய்யக்இடைத்த ஒரு சந்தர்ப்பம்இதுஎன்ற அளவில்அதை புரிந்து கொண்டாலே போதும்‌. வேறு உயர்ந்த பலன்களுக்காக இல்லா விட்டாலும்‌ – மருந்து, மாத்திரைகளையும்மீறி, நோய்நீடிக்கிற ஒரு சில நாட்களில்‌, எல்லோரையும்தூற்றிக்கொண்டிருக்காமல்நமது மனம்ஒரு அமைதியான நிலையை அடைவதற்காவது இது உதவும்‌. 

இதன்பின்னர்இல்லறத்தில்உள்ளவர்கள்கடைப்பிடிக்கக்கூடிய சில கர்மங்கள்விளக்கப்படுகின்றனஅதாவது யாகங்கள்‌, ஹோமங்கள்போன்றவை. இதிலிருந்து நாம்ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்‌. உபநிஷதங்கள்‌, கர்மங்களை மீறிய, அந்த எல்லையைத்தாண்டிய தத்துவ ஞானத்தை விளக்க முற்படுகின்றன; ஆனாலும்கூட, வேதங்களில்கூறப்பட்ட சில கர்மாக்கள்‌, ஹோமங்கள்போன்றவற்றைச்செய்வதால்இல்லறத்தில்ஈடு பட்டுள்ளவர்களுக்கு விளையக்கூடிய நற்பயனையும்எடுத்துச்சொல்கின்றன. அவை எல்லாம்ஆரம்பப்படிகள்‌. அவற்றைக்கடக்காமலேயே மிக உயர்ந்த நிலையாகிய ஆன்ம உணர்வுக்கு நாம்ஏறிக்குதித்து விட முடியாதுஎன்பதால்அந்த ஆரம்பப்படிகளும்கூட விளக்கப்படுகின்றன

வேதங்கள்வேறு, உபநிஷதங்கள்வேறு; வேதங்களைப்புறக்கணித்துத்தோன்றியவைதான்உபநிஷத்துகள்என்ற மேலை நாட்டவரின்கருத்துக்கு, இது முரண்பாடாக இருக்கிறது. வேதங்களில்கூறப்பட்டுள்ள யாகங்கள்போன்றவற்றின்முக்கியத்துவத்தையும்ஏற்றுக்கொண்டே, உபநிஷதங்கள்‌, அதற்கு அடுத்தபடியாக, ப்ரம்ம ஞானத்தை உணர்த்துவதற்கு முயற்சிக்கின்றன. உபநிஷதங்களைப்பற்றிய நமது பார்வையை முடித்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்குப்போவதற்கு முன்பாக, ஒரு சில வார்த்தைகள்.