ப்ரம்ம ஸூத்ரம்!

ஒரு பழத்தைப்பிழிந்து, அதனுடைய ரஸத்தை மட்டும்எடுப்பது போல, உபநிஷதங்களில்கூறப்பட்டிருக்கும்தத்துவங்களை எடுத்து, மிகவும்சுருக்கமாக அவற்றை அளிக்கிறது, ப்ரம்ம ஸூத்ரம்என்கிற நூல்‌. இது பாதராயணர்இயற்றியது. வியாஸருக்குத்தான்இப்படி பாதராயணர்என்ற பெயரும்உண்டு. பதரி என்ற இலந்தை மரத்கடியில்இருந்ததால்‌, வியாஸருக்கு. பாதராயணர்என்ற பெயரும்வந்தது என்று கூறப்படுகிறது

இவர்இயற்றியுள்ள ப்ரம்ம ஸுத்ரங்கள்என்கிற நூல்‌, 555 ஸூத்ரங்களைக்கொண்டது. மிகவும்சுருக்கமாக, அதே சமயத்இல்சந்தேகத்துக்கு இடமில்லாமல்‌, தத்துவங்களை எடுத்துச்சொல்வதுஸூத்ரம்‌. உபநிஷதங்களின்அடிப்படையில்‌, அவற்றை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு – ‘ஜீவன்என்பது யார்‌? அவன்வாழ்கிற உலகம்என்பது என்ன? இதற்கெல்லாம்ஆதாரமான உண்மை தத்துவம்எது?! – என்ற விஷயங்களை ஆராய்ந்து, சுருக்க மாக விளக்குவது ப்ரம்ம ஸூத்ரம்‌. 

வேதத்தின்இறுதிப்பகுதியில்வருவது உபநிஷதங்கள்என்பதை ஏற்கெனவே பார்த்தோம்‌. அவற்றின்தத்துவங்களைக்கூறு வதால்‌, இதற்கு உத்தர மீமாம்ஸை என்ற பெயரும்உண்டு. ‘உத்தரஎன்றால்‌, பின்னர்வருவது. வேதங்களில்சொல்லப்பட்டிருக்கும்யாகங்கள்போன்ற கர்மங்களை விளக்குகிற, கர்ம காண்டப்பகுதிகளை எடுத்துக்கொண்டு அவற்றின்தத்துவங்களை ஜைமினி என்பவர்எடுத்துச்சொன்னார்‌; அது பூர்வ மீமாம்ஸை. ‘பூர்வஎன்றால்முதலில்வருவது. பின்னால்வருகிற ஞான காண்ட மாகய; உபநிஷதங்களின்தத்துவத்தை எடுத்துச்சொல்வதால்‌, வியாஸர்இயற்றியது உத்தர மீமாம்ஸை எனும்ப்ரம்ம ஸுத்ரம்‌. இது இறுதியாக ஸந்யாச தர்மத்தின்மேன்மையை எடுத்துச்சொல்வதால்‌, இதற்கு பிக்ஷ£ ஸுத்ரம்என்ற பெயரும்உண்டு

ப்ரம்ம ஸுத்ரம்மிகவும்சுருக்கமாக விஷயங்களை எடுத்துச்சொல்கிறது என்று மேலே பார்த்தோம்‌. சுருக்கமாக என்றால்‌, எவ்வளவு சுருக்கமாக? ஒரு சில உதாரணங்களைப்பார்ப்போம்‌. ஆரம்பமே இப்படி அமைந்திருக்கிறது

அதாதோ ப்ரம்ஹஜிஞாஸா 

இனி ப்ரம்மத்தைப்பற்றிய ஆய்வு

ஜன்மாதி அஸ்ய யத

இவ்வுலகிற்கு, உற்பத்தி முதலியன எதனிடமிருந்தோ, அதுவே ப்ரம்மம்‌”. 

இறுதிப்பகுதியிலும்இவ்வாறே வருகிறது

கர்மங்களை (யாகங்கள்போன்றவற்றை) செய்வதன்முக்இயத்துவத்தை வற்புறுத்திவிட்டு, ப்ரம்ம ஸுத்ரம்இவ்வாறு சொல்கிறது

அத்யயனமாத்ரவத

வேதத்தை முறைப்படி பயின்றவர்களுக்கு மட்டும்தான்‌ (யாகங்கள்கூறப்பட்டன; உபநிஷதங்கள்மூலம்ஞானம்பெற்றவர்களுக்கு அல்ல)” 

அவிசேஷாத்‌ 

(கர்மங்களை முறையே செய்து கொண்டு, நீண்ட காலம்வாழ வேண்டும்‌! என்று பொதுவாக சொல்லப்பட்டதால்‌) அது ஞானியைக்கட்டுப்படுத்தாது. அவனைப்பற்றி குறிப்பாக ஒன்றும்சொல்லவில்லை.

இவை ஒரு சில உதாரணங்களே. இந்த மாதிரி 885 ஸுூத்ரங்களைக்கொண்டது ப்ரம்ம ஸுத்ரம்‌. இவ்வளவு சுருக்கமாக அமைந்திருப்பதால்‌, இதற்கு விளக்கங்கள்தேவைப்படுகின்றன. மற்றவர்களைத்தவிர, ஆதிசங்கரர்‌, ஸ்ரீ ராமானுஜர்‌, ஸ்ரீ மத்வர்‌ – ஆகியோர்இதற்கு விளக்கங்கள்எழுதி இருக்கொர்கள்‌. அவரவர்கள்இந்த ப்ரம்ம ஸுத்ரங்களை தங்கள்சித்தாந்தத்தின்கோணத்திலிருந்து நோக்கிஇருக்கிறார்கள்‌. ஆதிசங்கரரின்பார்வை அத்வைதப்பார்வை; ஸ்ரீ ராமானுஜரின்பார்வை விசிஷ்டாத்வைதப்பார்வை; ஸ்ரீ மத்வரின்பார்வை த்வைதப்பார்வை

இந்த மூன்று தத்துவங்களும்என்ன சொல்கின்றன என்பதை ஏற்கெனவே நாம்பார்த்திருக்கிறோம்‌. அந்தந்த சித்தாந்தங்களின்கோணங்களிலிருந்து அவரவர்கள்‌. இவற்றை ஆராய்ந்தாலும்‌, பரம்பொருளாகிய ப்ரம்மமே இறுதி உண்மை என்று நிலைநாட்டு வதலும்‌, அந்த நிலையை அடைவதுதான்மோட்சம்என்று எடுத்துச்சொல்வதிலும்‌, இவர்களிடையே வித்தியாசங்கள்இல்லைஎன்று மூன்று விளக்கவுரைகளையும்ஆராய்ந்த பண்டிதர்கள்கூறியிருக்கிறார்கள்‌. 

ப்ரம்மம்என்ற பரம்பொருளின்தத்துவத்தை ஆராய்வதால்‌, ப்ரம்ம ஸூத்ரம்என்று பெயர்பெற்ற இந்த நூல்‌, இறுதி உண்மை ப்ரம்மமே என்றும்‌, அதை உணர்வதால்ஒருவன்பிறப்பு, இறப்பு எனும்சக்கரத்தில்இருந்து விடுபடுகிறான்என்றும்கூறுஇது. இதற்கு ஆதாரமாக வேதங்களின்ஞான காண்டத்தைச்சார்ந்த உப நிஷதங்களை, ப்ரம்ம ஸூத்ரம்எடுத்துச்சொல்கிறது. தர்க்க வாதத்இனாலோ, வேறு வழிமுறைகளினாலோ, ப்ரம்மத்தை உணர்ந்து விட முடியாது; இந்த்ரியங்களின்மூலமாக பெறப்படுகிற தகவல்களை வைத்துக்கொண்டுதான்அறிவுப்பூர்வமான ஒரு வழிமுறை யைக்கண்டுபிடிக்க முடியும்‌; ஆனால்ப்ரம்மமோ, இந்த்ரிய உணர்வுகளுக்கு எல்லாம்அப்பாற்பட்டது; ஆகையால்‌, அனுபவித்து உண்மையைக்கண்டவர்களான ரிஷிகள்இயற்றியுள்ள உபநிஷ தங்களே, ப்ரம்மத்தை உணர்வதற்கான வழி

நான்கு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கிற ப்ரம்ம ஸுத்ரத்தில்‌ – ‘இனி ப்ரம்மத்தைப்பற்றி ஆய்வு செய்துஎன்று தொடங்கு முதல்அத்தியாயம்‌, ப்ரம்மத்திடமிருந்தே அனைத்தும்தோன்றின என்றும்‌, அனைத்துமே அவனுள்ளேயே உறை இன்றன என்றும்‌, இறுதியில்அவனிடமே இவை அனைத்தும்ஐக்கியமாகும்என்றும்விளக்குகிறது.

வேறு சிலருடைய கருத்துக்களையும்கூட, பாதராயணர்‌ (வியாஸர்‌) எடுத்துச்சொல்கிறார்‌. சிலருடைய கருத்திலிருந்து மாறுபடுவதற்கான காரணங்களையும்விளக்குகிறார்‌. உபநிஷதங்களில்முரண்பாடுகள்போல தோற்றம்அளிக்கக்கூடியவற்றை எல்லாம்முறைப்படுத்தி, தெளிவாக்கி 8ர்செய்வதால்‌, இந்த அத்தி யாயத்திற்குசமன்வயாத்யாயம்‌” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது அத்தியாயத்தின்பெயர்‌, ‘அவிரோத அத்தி யாயம்‌? வேதாந்தத்திற்கு விரோதமாகஅதாவது உபநிஷதக்கருத்துக்கள்வகைப்படுத்துகிற தத்துவங்களுக்கு எதிராககூறப்பட்டுள்ள அபிப்பிராயங்களைச்சந்தித்து, வேதாந்தக்கருத்துக்களே ஏற்கத்தக்கவை என்று நிலைநிறுத்துகிற அத்தியாயம்இது. உபநிஷதங்களிலே வருகிற சிருஷ்டி பற்றிய விளக்கங்கள்முரண்பட்டவை அல்ல என்றும்இந்த அத்தியாயம்எடுத்துச்சொல்கிறது.

கர்மம்ஒன்றுதான்கடைப்பிடிக்கத்தக்கது என்றும்‌, எக்காரணம்கொண்டும்அது விடத்தக்கதல்ல என்றும்வாதிட்டும்‌, அதைத்தவிர மனிதர்களுக்கு வழி எதுவும்கிடையாது என்றும்‌ ‘ஸாங்க்யம்‌” என்ற தத்துவம்கூறுகிறது. இதுதான்‌ ‘பூர்வ மீமாம்ஸை. இது ப்ரம்மத்தின்மேல்வைக்கப்பட வேண்டிய நம்பிக்கையையும்‌, பக்தியையும்பற்றி எதுவும்பேசவில்லை. சொல்லப்போனால்‌, ஈச்வரன்இல்லை என்று வாதிடுகிற தத்துவமாகவே, இது பார்க்கப்பட்டது. கர்மாவே ஆரம்பமும்‌, முடிவும்என்று கூறுகிற இந்த ஸாங்க்ய தத்துவத்தைச்சந்இத்து, அதை எதிர்கொண்டு, ப்ரம்மத்தைப்பற்றி விளக்கி, வேதாந்தத்தத்துவங்களை நிலைநாட்டுகிறது ப்ரம்ம ஸத்ரம்‌.

ப்ரம்ம ஸுத்ரத்தின்மூன்றாவது அத்தியாயம்‌ – ‘சாதனாத்யாயம்‌” என்ற பெயரைக்கொண்டது. மறுபிறப்பு, கனவு, உபநிஷதங்களில் கூறப்பட்டிருக்கிற பல வித்யைகள்எனும்பயிற்சி முறைகள்‌, சில சடங்குகளைப்பற்றிய விளக்கங்கள்‌, ப்ரம்மச்சர்யம்‌, இல்லறம்‌, ஸந்யாசம்‌ – போன்ற நிலைகளில்கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள்‌, ப்ராயச்சித்தம்‌… போன்றவற்றைப்பற்றியெல்லாம்இந்தப்பகுதி கூறுகிறது.

நாலாவது பகுதி – ‘பலாத்யாயம்‌” என்ற பெயர்கொண்டது. மரணம்எய்திய பிறகு ஒருவன்செல்லுகிற பாதையைப்பற்றி பேசுறெ பகுதி இது. கர்ம பலன்களை மூன்று விதமாகப்பிரிக்க லாம்‌. ஒன்றுசஞ்சித கர்மம்‌. அதாவது, பல பிறவிகளில்நாம்செய்த காரியங்களுடைய பலாபலன்களின்மொத்த மூட்டை இது: ஞானம்எய்தியவன்இதை அழித்து விடுகிறான்‌. இன்னொன்றுப்ராரப்த கர்மம்‌. இது ஏற்கெனவே இந்தச்சரீரத்துக்கு உண்டான பலன்களை அளிக்கத்தொடங்கி விட்ட முந்தைய கர்மம்‌; இந்தப்பிறவிக்கே அதுதான்காரணம்‌; இதை அனுபவித்தேதான்அழிக்க முடியும்‌. ‘ஆகாமீ கர்மம்‌! என்பது மூன்றாவது வகையான கர்மம்‌. இது உண்மையான ஞானம்எய்திய பிறகு, ஒருவன்செய்கிற செய்கைகளின்பலன்‌; இது அவனிடம்ஒட்டாது.

நாம்எளிமையாகப்புரிந்து கொள்வதற்காக, இந்த மூன்று கர்மாக்களை இப்படிப்பார்க்கலாம்‌. ப்ராரப்த கர்மம்என்பதுநமக்கு வந்துவிட்ட நோய்போன்றது. இதை அனுபவித்துத்தான்ஆக வேண்டும்‌. சஞ்சித கர்மம்என்பதுபலவிதமான நோய்களுக்கு இடம்தருகிற நமது உடற்கூறு போன்றது; சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்மூலமும்‌, ஒழுங்கு முறைக்கு உட்‌ 1 பட்ட வாழ்வின்மூலமும்இந்த நோய்கள்இனி நம்மை அணுகாமல்பார்த்துக்கொள்ள முடியும்‌; ஆகாமீ கர்மம்என்பதுதடுப்பு ஊசிகளை ஏற்கெனவே போட்டுக்கொண்டு விட்ட மனிதனை அணுகுகிற நோய்‌; அது அவனை அண்டாது.

ஸந்யாச தர்மத்தைப்பற்றியும்‌, ப்ரம்ம ஸூத்ரம்பல விளக்கங்களைச்சொல்கிறது. யாகம்போன்றவற்றை ஸந்யாசிகள்செய்யக்கூடாது என்றும்சொல்வதற்கில்லை; செய்துதான்தீர வேண்டும்என்றும்சொல்வதற்கில்லை; அவரவர்விருப்பப்படி நடந்து கொள்ளலாம்‌. ஞானம்அடைந்தவனுக்குக்கர்மங்கள்நாசம்அடைகின்றன. ஸந்யாச ஆச்ரமத்தை அடைந்தவன்‌, அதிலிருந்து விலகுதல்கூடாது. அம்மாதிரி விலயயவர்களுக்கு, ப்ராயச்சித்தம்உண்டு என்றும்‌, இல்லை என்றும்இரண்டுவித அபிப்பிராயங்கள்‌. இருக்கின்றன என்றாலும்கூட, எந்த வகையாக இருந்தாலும்‌, ஸந்யாச நிலையை அடைந்து விட்டு, அதிலிருந்து விலகியவர்ஒதுக்கத்தக்கவரே.

இவ்வாறெல்லாம்கூறுகிற ப்ரம்ம ஸுத்ரம்‌, ப்ரம்மத்தை உணர்ந்தவன்மோட்ச நிலையை அடைந்து, அதன்பிறகு மீண்டும்பிறப்பு எய்துவதில்லை என்று கூறி முடிகிறது. ப்ரம்ம ஸுத்ரத்திற்கு ஹிந்து மத நூல்களில்ஒரு மிக உயர்ந்த இடம்அளிக்கப்பட்டிருக்கிறது. உபநிஷதங்கள்‌, பகவத்இதை, ப்ரம்ம ஸூத்ரம்‌ – ஆகிய மூன்றும்‌ “ப்ரஸ்தானத்ரயம்‌’ – மூன்று தத்துவங்கள்‌ – என்று ஒன்றாக வைக்கப்பட்டு, போற்றப்படுகின்றன.

வேதத்தில்யாகங்கள்போன்றவற்றை வர்ணிக்கிற கர்ம காண்டம்‌; அதை அடுத்து ஒருபடி மேலே போய்‌, தத்துவங்களை விளக்குகிற உபநிஷதங்களைக்கொண்ட ஞான காண்டம்‌; அந்த உபநிஷதங்களின்அடிப்படையில்வ்யாஸர்அருளியுள்ள ப்ரம்ம ஸுத்ரம்‌ – ஆகியவற்றை இதுவரை நாம்பார்த்தோம்‌. இவை ஹிந்து மதத்தின்அடிப்படை தத்துவங்களை எடுத்துச்சொல்பவை, விளக்குதிறவை.

இன்னும்பல தத்துவ நூல்கள்உள்ளன என்றாலும்‌, இவை மூன்றும்அடிப்படையானவை. எல்லாத்தத்துவ நூல்களையும்நம்மால்பார்க்க இயலாது. ஏனென்றால்‌, அப்படிப்பார்த்து, ஜள வாவது அவற்றைப்புரிந்து கொள்வது என்று ஆரம்பித்தால்‌, இந்த ஆயுள்போதுமோ, போதாதோ! அதனால்இந்தத்தத்துவ விளக்கங்களை இந்த அளவில்நிறுத்திக்கொண்டு, அடுத்த கட்டத்துக்குப்போவது சரியாக இருக்கும்என்று நினைக்கிறேன்‌.

(இத்துடன்‌ முதற்‌ பாகம்‌ முற்றுப்‌ பெறுகிறது.)