தர்ம சாஸ்த்ரங்கள் என்ற நூல்களும் இருக்கின்றன; ஸ்மிருதிகள் என்பவையும் தர்ம சாஸ்த்ரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. ஸ்மிருதிகள் என்பவை வேதம் போல் அல்லாமல், இயற்றப்பட்டவை என்பதைப் பார்த்தோம். தர்ம சாஸ்த்ரங்களைப் பார்ப்பதற்கு முன்பாக, தர்மம் என்றால் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். தர்மம் என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை ஒன்றே ஒன்றினால் விளக்கம் அளித்து விட முடியாது. நியாயம் என்று சொல்லலாம்; நேர்மையான நடத்தை என்று சொல்லலாம்: மனசாட்சியின்படி நடந்து கொள்வது என்று சொல்லலாம்; ஒழுக்கம் என்று கூறலாம்; ஒருவன் ஏற்றுக் கொண்ட வழிமுறை என்று சொல்லலாம்; சட்டம் என்று சொல்லலாம்; மத நம்பிக்கை வழி வந்த விதிமுறைகள் என்று சொல்லலாம்; கடமைகள் என்று சொல்லலாம்… இப்படி பல பொருள்களைக் கொண்டதாக இருக்கிறது தர்மம் என்கிற சொல்.
இதில் இன்னமும் விரிவாகப் போனால் அரசர்களுக்குரிய ராஜ தர்மம் இருக்கிறது; போர்க் காலத்தில் கடைப்பிடிக்கக் கூடிய யுத்த தர்மம் இருக்கிறது; ஆபத்துக் காலங்களில் ஏற்கக் கூடிய ஆபத்து தர்மங்கள் இருக்கின்றன. இப்படி சில விசேஷ சூழ்நிலைகளுக்கான தர்மமும் இருக்கிறது.
மஹாபாரதத்தில் பீஷ்மர் கூட, ‘தர்மம் என்பதற்கு ஒரு விளக்கத்தைத் தருவது கடினம்தான். மனிதர்களை உயர்த்துவது எதுவோ, அது தர்மம்; எது எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறதோ, அது தர்மம் – என்று ரிஷிகள் கூறியிருக்கிறார்கள்’ என்று தர்மத்தைப் பற்றி யுதிஷ்டிரருக்கு விளக்குகிறார். ஹிந்து நூல்களின்படியும், வழக்கு முறைகளின்படியும், தர்மம் என்ற சொல், ‘எல்லா விதமான ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பதோடு மட்டுமல்லாமல் – நற்கதியை அடைவதற்குரிய வாழ்க்கை முறையைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் – அவரவர் களின் மனசாட்சிக்கு ஒத்த நடவடிக்கைகளை ஏற்பதோடு மட்டு மல்லாமல் – மோட்ச சாதனமாகவும் கூறப்படுகிறது.
விதிமுறைகளை இயற்றியுள்ள சட்டம் போன்ற ஸ்மிருதி களும் தர்மம்தான். சில வைதீகக் காரியங்களுக்கான வழி முறைகளை விதஇக்கின்ற தர்ம சாஸ்த்ரங்கள் கூறுவதும், தர்மம்தான். வர்ண தர்மம், குல தர்மம், ஜாதி தர்மம், ஸ்வதர்மம் என்றெல்லாம் பேசப்படுகிறது. வர்ணம் வேறு, ஜாதி வேறு. வர்ணம் பிறப்பினால் உண்டாவதல்ல. ஜாதி பிறப்பினால் உண்டாவது. நான்கு வர்ணங் களுக்கென்று தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஜாதிகளுக்கு என்று தர்மங்கள் விதிக்கப்படா விட்டாலும், வழக்கு முறையில் அவை வந்து விட்டதால், அவை ஏற்கப்பட்டுள்ளன. குல தர்மம் என்பது, ஒரு குடும்பத்தின் நடைமுறை வழக்கங்களைத்தான் குறிக்கும் என்பது என்னுடைய கருத்து; ஜாதி தர்மத்திலிருந்துல், வர்ண தர்மத்திலிருந்தும் இது மாறுபட்டது என்பதால்தான், குல தர்மம் என்பது தனியே குறிக்கப்பட்டிருக்கிறது என்று கருது வதற்குத்தான் இடம் உண்டு. இதைத் தவிர ஸ்வதர்மம் என்ற ஒன்று இருக்கிறது. அதாவது அவனவன் மனசாட்சிக்கு ஏற்ப – தன் மனசாட்சியை ஏமாற்றிக் கொள்ளாமல் – இதுதான் சரி என்று ஒருவன் ஏற்கும் நடைமுறை எதுவோ, அது அவனுடைய ஸ்வ தர்மம். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
ஸீதையை அபகரித்து வந்த தன்னுடைய மூத்த சகோதர னாகிய ராவணனுடைய செயல் மிகவும் தவறானது என்பதை உணர்ந்த விபீஷணன், அவனை விட்டு விலகினான். ராமருடன் சேர்ந்து கொண்டான். கும்பகர்ணனோ, ராவணனுடைய தவறைச் சுட்டிக் காட்டினாலும், அவன் பக்கமே நின்று அவனுக்காகப் போரிட்டு உயிர் துறந்தான். இந்த இருவரில் யாருடைய செயல் மேன்மையானது? தவறான செயல் என்று தெரிந்தவுடன், அதை எதிர்த்துப் பேசியதால், ராவணனால் விபீஷணன் வெளியேற்றப் பட்டான். அத்துடன் அவன் நின்றுவிடவில்லை. போய் ராமருடன் சேர்ந்து கொண்டு, ராவணன் தரப்பை எதிர்த்துப் போரிட்டான். இது: காட்டிக் கொடுக்கும் செயலா அல்லது ஒரு மிகப் பெரிய தவறை சரி செய்கிற செயலா? ராமர் – தர்மத்தின் சின்னமாகவும், ராவணன்: – அதர்மத்தின் சின்னமாகவும் நின்று போரிடுகையில், தர்மத்தின் பக்கம் நின்று வெற்றி பெற உதவுவது மேன்மையான செயல் அல்லவா? ‘தர்மம் ஒரு பக்கம் போரிடட்டும். அதர்மம் ஒரு பக்கம் போரிடட்டும். இரண்டுக்கும் நடுவே நான் ஒன்றும் செய்யாமல் பேசாமல் இருந்து விடுகிறேன்! என்று கையாலாகாத்தனமாக ஒரு முடிவெடுக்காமல், தர்மம் வெற்றி பெற உதவுவேன் என்று, விபீஷணன் இீர்மானித்தது நல்ல செயல்தானே? இதை இப்படியும் பார்க்கலாம்.
கும்பகர்ணன், ராமர் பக்கம் போய்ச் சேரவில்லையே? ராவணன் செய்தது தவறு என்று சொன்னாலும், அவன் பக்கமே நின்று போரிட்டான்; இன்ற உப்புக்கு அவன் மோசம் தேடவில்லை; ஆனால் விபீஷணனோ, ராஜ்யத்தின் மீது ஆசைப்பட்டு ராமர் பக்கம் போய் நின்றான். இது துரோகச் செயல் அல்லவா – என்றும் இதைப் பார்க்கலாம்.
அதர்மத்தைச் சுட்டிக் காட்டியதோடு தன் கடமை இர்ந்தது என்று நினைத்து, தர்மமமோ, அதர்மமோ அண்ணனை விட்டுப் பிரிவ இல்லை என்ற தீர்மானத்துடன், அவன் பக்கமே நின்று போரிட்ட கும்பகர்ணனுடைய செயல் – அவனுடைய ஸ்வதர்மம். அவ னுடைய மனசாட்சிக்கு ஏற்ப, அவன் எடுத்த முடிவு அது. அதர்மத் தைச்சுட்டிக்காட்டி, அதன் காரணமாக வெளியேற்றப்பட்ட பிறகு, தர்மத்துடன் சேர்ந்து நின்று, தர்மத்தின் சின்னமாக விளங்கிய ராமர் வெற்றி காண உதவுவதுதான் தனது கடமை என்று விபீஷணன் நினைத்தான். அது அவனுடைய ஸ்வதர்மம். அவனுடைய மனசாட்சியின்படி அவன் எடுத்த முடிவு அது.
தாய் அன்பைக் காட்டிலும் மிஞ்சியது வேறு எதுவும் இல்லை. பெற்ற தாய் தெய்வத்திற்குச் சமமானவள். அவளுக்கு துரோகம் நினைக்கிற மாதிரி ஒரு பாவத்தை ஒரு மனிதன் செய்ய முடியாது. ஆனால் கர்ணன் என்ன செய்தான்? குந்தி அவளிடம் வந்து மன்றாடியபோது, ‘என்னைப் பெற்றவுடன் நீ ஆற்றில் விட்டு விட்டாய். தேரோட்டியின் மனைவியோ என்னை வளர்த்தாள். அவளுடைய அன்பு எப்படிப்பட்டது? என்னை எடுத்து அவள் மடியில் வைத்துக் கொண்டவுடன், அவளுக்கு தானாகவே பால் சுரந்தது. அந்த அளவுக்கு அவள் மனதில் அன்பு பொங்கியது. நான் அவளைத் தாயாக நினைப்பேனா? அல்லது என்னை அவமானச் சின்னமாகக் கருதி நட்டாற்றிலே விட்டு விட்ட உன்னை தாயாக நினைப்பேனா?’ என்று கேட்கிறான் கர்ணன். இதனால் கர்ணன் நிந்திக்கப்படவில்லை. ‘துரியோதனனுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது எதுவோ, அதைச் செய்வதுதான் என்னுடைய தர்மம்! என்று நினைத்து செயல்பட்டவன் கர்ணன். ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காகவோ, செல்வத்தை அனுபவிப்பதற்காகவோ, இன்பங்களைப் பெறுவதற்காகவோ, பயத்தை தணித்துக் கொள் வதற்காகவோ அவன் எடுத்த நிலை அல்ல இது. ‘என்னுடைய கெளரவத்தைக் காப்பாற்றிய நண்பன் துரியோதனன். அவன் இருப்தியுற நடந்து கொள்வதே எனது கடமை என்று, தனது மனசாட்சியின்படி கர்ணன் முடிவெடுத்தான். ஆகையால்தான் அது அவனுடைய ஸ்வதர்மமாயிற்று. அதனால்தான் அவன் மேன்மையுற்றான்.
தர்மங்களை எல்லாம் மிகவும் நன்றாக அறிந்த விதுரர், துரியோதனனைக் கண்டித்து வெளியேறினார். அவரும் மேன்மை யானவரே! தீமையின் பக்கம் நிற்க அவருடைய மனசாட்சி இடம் தரவில்லை. ‘அப்படியானால் இமையின் பக்கம் நின்ற கர்ணன் செய்தது அதர்மம் அல்லவா?! என்று கேட்கலாம். கர்ணன் நின்றது. அவனுடைய மனசாட்சியின்படி பார்த்தால், இமையின் பக்கம் அல்ல; உண்மையான நட்பின் பக்கம்.
மாண்டவ்யர் என்று ஒரு ரிஷி. அவர் நிஷ்டையில் இருந்த போது, அங்கே ஒரு இருடன் வந்து விட்டான். அவனைத் துரத்திக் கொண்டு, அரசனின் சேவகர்கள் வந்தார்கள். இவர், திருடனையும் கவனிக்கவில்லை. அவர்களையும் கவனிக்கவில்லை. அவர்கள் இவரை திருடன் ‘எங்கே‘ என்று கேட்க, இவர் பதில் அளிக்காமல் இருக்க, திருடனும் அகப்பட்டு விட, இவர்தான் அவனை மறைத்து வைத்தார் என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். அவர் கழுவில் ஏற்றப்படுகிறார். ஆனால் இறக்கவில்லை; கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும், நிஷ்டையிலேயே இருந்தார். தகவல் அறிந்த அரசன், பதறிப் போய், அவரைக் கழுவிலிருந்து இறக்கி, மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
மாண்டவ்யர், தர்மதேவனிடம் ‘தவறே செய்யாத எனக்கு ஏன் இந்த தண்டனை? என்று கேட்கிறார். தர்மதேவன்,
‘நீ சிறுவனாக இருந்தபொழுது, ஊசியினால் பூச்சிகளைக் குத்தினாய். அதனால் இப்பொழுது உனக்கு இந்த தண்டனை கிடைத்திருக்கிறது‘ என்று கூறுகிறான். “சிறிய வயதஇல் நான் அறியாமல் செய்த தவறு அது. பூச்சிகளை இம்மாதிரி செய்யக் கூடாது என்று தெரிந்து வைத்துக் கொண்டு, நான் அதைச் செய்யவில்லை. இப்படி அறியாமல் செய்த தவறுக்கு, இவ்வளவு பெரிய தண்டனையை நீ அளித்திருக்கிறாய். அதனால் நீ மனிதனாகப் பிறக்கக் கடவது‘ என்று மாண்டவ்யர், தர்மதேவனுக்கு சாபமிடுகிறார். தர்மதேவன், மனிதனாக – விதுரராகப் பிறந்தார். இப்படி மனிதனாகப் பிறக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏன் ஏற்பட்டது? அளவுக்கு மீறிய தண்டனையை அவன் கொடுத்தான் என்பதுதான் அவன் செய்த குற்றம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எவ்வளவு சாரம் அடங்கியிருக்கிறது! அதர்மத் இற்குத் தண்டனை விதிப்பது என்பது தர்மதேவனுக்கு உரிய தர்மம்தான்; அவனுடைய கடமைதான் அது. ஆனால், அளவுக்கு மீறிய தண்டனையைக் கொடுத்தான் என்பதால், அவன் செயல் அதர்மமாகி விட்டது. அதற்குரிய தண்டனையை அவன் அனு பவித்தான். தர்மதேவனுக்கே கூட, அதர்மப் பாதையில் செல் லும்போது, தண்டனை உண்டு.
தர்மவியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவன் ஒரு முனிவருக்கு தர்மம் என்றால் என்ன என்பது பற்றி உபதேசிக்கிறான்! அந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்.