மனுஸ்ம்ருதி, இன்று இருக்கிற வகையில் மனுவினால்தான் இயற்றப்பட்டதா அல்லது, ப்ருகு என்ற முனிவரால் இயற்றப் பட்டதா என்ற ஒரு சர்ச்சை, ஆராய்ச்சியாளர்களிடையே இருந்து வந்திருக்கிறது. மனு இயற்றிய மனுஸ்ம்ருஇதான் இன்று நம் மிடையே இருக்கிற நூல் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் சிலர் ‘மனுஸ்ம்ருதியிலேயே மனு கூறுவதாக ஒரு விளக்கம் வருகிறது; என்னிடமிருந்து இந்த ஸ்ம்ருதி நூலை முழுமையாகக் கற்று அறிந்துள்ள ப்ருகு அதைக் கூறுவார்! என்று தன்னை அணுகிய ரிஷிகளிடம் மனு கூறினார் என்று அந்த வாக்கியம் அமைந்திருக்கிறது. ஆகையால் இந்த நூல் ப்ருகு இயற்றியதே” என்று வாதிட்டிருக்கிறார்கள்.
ஆனால் மற்ற பல் ஆராய்ச்சியாளர்கள் ”இல்லை; ப்ருகு கூறியிருப்பது அனைத்தும் மனுவிடம் இருந்து அவர் கற்றவையே என்பதால், இது மனு இயற்றிய நூலே” என்று வாதம் புரிகிறார்கள்.
இரு சாராருமே, இந்த நூலில் கண்டுள்ளவை எல்லாம் மனுவின் கருத்துக்களே என்பதை ஏற்கிறார்கள். சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப் போல, சிருஷ்டியை வர்ணித்து விட்டு, குற்ற விசாரணை, சொத்துரிமை உட்பட – ஆன்ம உணர்வை எய்துவது வரை பல விஷயங்கள் பற்றி மனுஸ்ம்ருதி வழிமுறைகளை வகுக்கிறது. வினாடிகள், நிமிடங்கள், நாழிகை, தினம், வருடம் போன்ற காலக் கணக்குகள் கூறப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் நான்கு யுகங்களின் கால அளவுகளும், பல யுகங்களை உள்ளடக்கிய மன்வந்தர கால அளவும் விளக்கப்பட்டு, இதுவரை எண்ணற்ற மன்வந்தரங்கள் வந்து போய் விட்டன என்று கூறப்படுகிறது.
‘நற்குணம் க்ருத யுகத்தில் நான்கு கால்களில் நின்றது; அந்த யுகத்தில் மனிதர்கள் தவறான வழியில் சம்பாதிக்கவில்லை. அதன் பின்னர், மனிதர்கள், கலைகளையோ செல்வத்தையோ அடைய, நேர்மையற்ற வழிமுறைகளை மேற்கொள்ளத் தொடங்கவே, க்ருத யுகத்திற்கு அடுத்து வந்த யுகங்களில், தர்மம் ஒவ்வொரு காலாக இழந்தது; இருட்டு, பொய் – ஆகியவற்றின் காரணமாகவும், நேர்மையான தொழிலை நடத்துவதில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாகவும், யுகங்கள் க$ணித்தன. இவ்வாறாக, தர்மம் ஒவ்வொரு அடுத்த யுகத்திலும் பலவீனம் அடையிறது ‘.
இவ்வாறு கூறிவிட்டு மனுஸ்ம்ருதி, ஒவ்வொரு யுகத்திலும் புண்யத்தைத் தேடும் வழியை வர்ணிக்கிறது.
‘முதலாவது யுகமாகிய க்ருத யுகத்தில், தவம் மேன்மை யானது; த்ரேதா யுகத்தில் ஞானம் மேன்மையானது; த்வாபர யுகத்தில் யாகங்கள் செய்வது மேன்மையானது; கலியுகத்தில் தானம் செய்வது மேன்மையானது ‘.
கடுமையான தவம் புரிவதோ, மிகவும் முயற்சித்து உண்மையான ஞானத்தைப் பெறுவதோ, சிரத்தையுடன் மேன்மையான யாகங்களைச் செய்வதோ கலியுகத்தில் தேவை இல்லை; மிக எளிதாக புண்ணியம் தேட, தானம் செய்வது மேன்மையுறும் வழியாக கலியுகத்திற்குக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. காலத்திற்குத் தகுந்தாற் போல, மேன்மை‘ பெறுகிற வழிமுறை எளிதாக்கப் பட்டுவிட்டது!
ஒருவன் க்ருத யுகத்தில் தவம் செய்து பெற்ற உயர்வை, த்ரேதா யுகத்தில் ஞானத்தை அடைந்து பெற்ற உயர்வை, த்வாபர யுகத்தில் யாகங்கள் செய்து பெற்ற மேன்மையை – கலியுகத்தில் தானம் செய்வது மூலமாகவே பெற்று விடலாம். பலவீனமானவர்களுக்கு ‘ஹாண்டிகேப்! தருவது பந்தயங்களின் வழிமுறை; கலியுகத்தில் தர்மரீதியாக மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பதால், அவருக்கு ஸ்ம்ருதி நூல் அளித்திருக்கிற ஹாண்டிகேப் இது!
இதையடுத்து, சர்ச்சைக்குரியதாகி விட்ட, நான்கு வர்ணப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ‘ப்ராம்மணன் படைப்புக் கடவுளின் வாயிலிருந்தும், க்ஷத்ரியன் தோள்களிலிருந்தும், வைச்யன் தொடையிலிருந்தும், சூத்ரன் காலிலிருந்தும் தோன்றினான்! என்று புருஷ ஸுக்தத்தில் கூறப்பட்டிருப்பதை, மனுஸ்ம்ருதியும் கூறுகிறது.
இது பற்றி ஏற்கெனவே நாம் பார்த்தோம். காலிலிருந்து தோன்றியது சூத்ரன் மட்டும் அல்ல; பூமியே கூட படைப்புக் கடவுளின் காலிலிருந்து தோன்றியதுதான். ‘பூமி தோன்றிய அங்கம் எதுவோ, அதிலிருந்து சூத்ரன் தோன்றினான் என்பது எப்படி இழிவாகும்?’ என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். வேதம் ஓதுதல் அவன் கடமை என்பதால், ப்ராம்மணனுக்கு வாயும்; தோள் வலிமை காட்டுவது அவன் கடமை என்பதால் க்ஷ்த்ரியனுக்கு தோளும்; சமுதாயத்திற்கு வன்மை அளிக்கும் வகையில், வர்த்தகம் புரிவது அவன் கடமை என்பதால் வைசியனுக்கு தொடையும்; தனது பணிகளால் சமூகத்தைத் தாங்கி நிற்பது கடமை என்பதால் சூத்ரனுக்கு காலும், தோற்றுவாய்களாகக் கூறப்பட்டிருக்கின்றன என்று பலர் விளக்கி இருக்கார்கள்; அது மட்டுமல்ல – எல்லோரமே ஒரே விராட புருஷனின் அங்கங்களே என்பதைக் காட்டவும், இந்த தோற்றுவாய்களைப் பற்றிய விவரம் பயன்படுகிறது.
மேலும், பிறப்பில் எவனும் எந்த வர்ணத்தையும் சார்ந்தவன் ஆகி விடுவதில்லை என்பதை இந்தத் தொடரில் ஏற்கெனவே பார்த்தோம். இதை வலியுறுத்திப் பல பகுதிகள், புராணங்களிலும், இதிஹாசங்களிலும், மனுஸ்ம்ருதியிலும் கூட வருகின்றன. ஆகை யால் இந்த வர்ணப் பிரிவுகள் – பகவத் தையில் சொல்லப் பட்டிருப்பது போல – குணத்தையும், வாழும் வகைகளையும் பொறுத்ததே. இதைக் கூறுகிற மனுஸ்ம்ருதி வாசகங்களையும் நாம் பின்னர் பார்க்க இருக்கிறோம்.
ப்ராம்மணனுக்கு மனுஸ்ம்ருதி, சமூக அந்தஸ்தில் உயர்ந்த இடத்தைத் தருகிறது என்பது மறுக்க முடியாதது.
பூதானாம் ப்ராணின: ச்ரேஷ்டா:
ப்ராணினாம் புத்திர்ஜீவிந:
புத்திமத்ஸு நரா: ச்ரேஷ்டா
நரேஷு ப்ராம்மணா: ஸ்ம்ருதா:
படைக்கப்பட்டவற்றில், அசையும் தன்மை உடையவை உயர்ந்தவை; அசையும் தன்மை உடையவற்றில் புத்தி சக்தி படைத்தவை உயர்ந்தவை; புத்தி சக்தி கொண்ட படைப்பு களில் மனிதர்கள் உயர்ந்தவர்கள்; மனிதர்களில் ப்ராம்மணர் கள் உயர்ந்தவர்கள்.
இப்படி மனுஸ்ம்ருதி கூறியிருப்பதால், அது பிறப்பில் பேதம் கற்பித்து விட்டது என்ற முடிவிற்கு வருவது சரியாக இருக்காது, எந்த விதிமுறையாகட்டும், சட்டமாகட்டும் – அது பயன்படுத்துகிற சொற்கள் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குகிற பகுதிகள், அந்த சட்டத்திலேயே இருக்கும். மனு ஸ்ம்ருதியில் ப்ராம்மணன் உயர்ந்தவனாகக் கூறப்படுகிறபோது, ‘ப்ராம்மணன்’ யார் என்பது பற்றி மனுஸ்ம்ருதி கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். மனுஸ்ம்ருதியில் ஆங்காங்கே இது பற்றிய விளக்கம் இடம் பெறுகிறது. இரண்டாவது அத்தியாயத்திலேயே கூறப்படுவது இது :
”பெண்ணிடம், அலி பலன் அளிக்க முடியாதவன்; இரண்டு பசுக்கள் சேர்வதால் பலன் இல்லை; மூடனுக்கு அளிக்கப் படுகிற தானம் பயனற்றது; இதே போல, வேதங்களைக் கற்றறியாத ப்ராம்மணன் பயனற்றவன்.
“மரத்தினால் செய்யப்பட்ட யானை, பெயரளவில் மட் டுமே யானை; தோலினால் செய்யப்பட்ட மான், பெயரள வில் மட்டுமே மான்; வேதங்களைக் கற்றறியாத ப்ராம்மணன் பெயரளவில் மட்டுமே ப்ராம்மணன்?”
இப்படிப்பட்ட ப்ராம்மணனுக்கு, மனுஸ்ம்ருதி, உயர்வை அளிக்கவில்லை; சலுகைகளைக் காட்டவில்லை. மனுஸ்ம்ருதி இயற்றப்பட்டபோது, பிறப்பின் மூலமே வர்ணங்கள் என்ற நிலை தோன்றி விட்டாலும் கூட, மனுஸ்ம்ருதி பிறப்பினால் மட்டுமே ப்ராம்மணனாக இருப்பவனைக் கடுமையாக நிந்திப்பதோடு நில்லாமல், அவனை யாகம் போன்றவற்றிலிருந்து ஒதுக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், அவனுக்கு சலுகைகளைக் காட்ட வும் மறுத்துள்ளது. ஆகையால் மனுஸ்ம்ருதி, பிறப்பிலேயே பேதம் கற்பித்த நூல் என்ற விமர்சனம் நியாயமற்றது.
மனுஸ்ம்ருதி மேலும் சொல்கிறது :
“வேதங்களைக் கற்றறியாமல், நடைமுறை வாழ்வில் உள்ள மற்ற கல்விகளை கற்க முற்படுகிற ப்ராம்மணன், அவனுடைய வாழ்நாளிலேயே, தன் சந்ததிகளோடு சூத்ரன் ஆகிறான்.
இப்படியெல்லாம் சொல்வதினால் சூத்ரன் என்பது இழிவான நிலை என்றாகி விடவில்லை. சூத்ரர்களுக்கு வேதக் கல்வி மறுக்கப்பட்டது. மற்ற எல்லா கல்விகளும் அவனுக்கு இறந்தே இருந்தன. செல்வம் ஈட்டுவது அவனுடைய உரிமையாகக் கூறப் பட்டிருக்கிறது.
‘ப்ராம்மணனுக்கு செல்வத்தைப் பற்றிய நினைவே வரக் கூடாது. அதன் காரணமாக நேரிடும் அவமதிப்பை அவன் பொருட்படுத்தக் கூடாது என்பது மட்டுமல்ல – அம்மாதிரியான அவமதிப்பை அவன் பெருமையாகக் கருத வேண்டும் – என்றும் மனுஸ்ம்ருதி விதித்திருக்கிறது. ப்ரம்மசாரியாக இருக்கும் போது தேன், மலர்கள், வாசனை இரவியங்கள், இத்திப்புகள் போன்ற வற்றை அவன் நாடக் கூடாது; குடை, செருப்பு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது; நடனம், சங்கதம் போன்றவற்றில் அவன் ஈடுபாடு கொள்ளக் கூடாது; பிச்சை எடுத்துத்தான் உணவு உட் கொள்ள வேண்டும்.
இப்படி பல கடும் நிபந்தனைகளை ஏற்று ப்ரம்மசர்யம் இருந்து, பின்னர் அவன் இல்லறத்தில் புகும்போது, மீண்டும் கடுமையான நிபந்தனைகளை அவன் ஏற்க வேண்டும். அப்படி எல்லாம் வாழ்ந்தவனுக்குத்தான் மனுஸ்ம்ருதி உயர்வைக் கூறியது. இதில் தவறு காண்பதற்கில்லை. வாழ்க்கையையே, ஒரு விரதம் ஆக்கிக் கொண்டவனுக்கு, ஒரு சமூகம் மதிப்பளிக்கத்தான் செய்யும்; அதைத்தான் மனுஸ்ம்ருதி கூறுகிறது.
இந்த விஷயம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிவரும் என்பதால், இந்தக் கட்டத்தில் இதை இத்துடன் நிறுத்தி, அடுத்த விஷயத்திற்குப் போவோம்.
”அன்னை, தந்தை, ஆச்சார்யன் – ஆகிய மூவரையும் துதித்து வாழ்பவன், எல்லா தர்மங்களையும் துதிப்பவன் ஆகிறான்; இந்த மூவரைப் பழிப்பவன், எல்லா தர்மங்களை யும் பழித்தவன் ஆகிறான்.
”இந்த மூவரும் வாழ்கிற வரையில், அவன் வேறு பக்தியை செலுத்த வேண்டியதில்லை; அவர்களுக்கு பணிவுடன் சேவை செய்து, அவர்களுக்கு இனியதைச் செய்வதே ஒருவனின் கடமை. அவர்களுக்கு பணி செய்வதே அவனுடைய முதல் கடமை; மற்ற தர்மங்கள் இரண்டாம் பட்சமே.
”நூறு வருடங்கள் முயன்றாலும், ஒரு மகனால் தன் னுடைய தாய், தந்தையர் தனக்காகப் பட்ட கஷ்டங்களுக்கு ஈடு செய்ய முடியாது… தாய், தந்தை, ஆச்சார்யன் – ஆகி யோருக்கு எப்போதும் ஒருவன் நன்மை செய்ய வேண்டும்; இந்த மூவரின் மனநிறைவில், எல்லா வகையான தவங்களும் பூர்ணத்துவம் அடைகின்றன ”.
தாய், தந்தை, குரு– ஆகியோருக்கு பணி செய்வதை இப்படி வலியுறுத்துகிற மனுஸ்ம்ருதி, திருமணங்கள் பற்றிகூறுவதைஅடுத்துப் பார்ப்போம்.