மோதுகின்ற இரு தரப்பினருக்கிடையே வெற்றி யாருக்கு என்பது நிச்சயமற்றது; எதிராளி வெல்லக் கூடும் என்ற சாத்தியக் கூறு யுத்தத்தில் எப்போதும் உண்டு என்பதால், யுத்தம் தவிர்க்கத் தக்கது!
– என்று கூறுகிற மனுஸ்ம்ருதி மேலும் இவ்வாறு சொல்நிறது :
ஸாம்ன தானேன பேதேன
ஸமஸ்தைரதவா ப்ருதக்
விஜேதும் ப்ரயதேதாரின்
ந யுத்தேன கதாசன.
சமாதானப் பேச்ச, நிதியைத் தருவது, பிளவைத் தோற்று விப்பது என்பனவற்றை தனித்தனியாகவோ, கூட்டாகவோ பிரயோகம் செய்து, எதிரியை வெல்வதற்கு முயல வேண் டும்; யுத்தத்தினால் வெல்வதற்கு முயற்சிப்பது என்பது ஒருபோதும் கூடாது.
த்ரயானாம் அபி உபாயாநாம்
பூர்வோக்தாநாம் அஸம்பவே
ததா யுத்யேத ஸம்பன்னோ
விஜயேத ரிபூன்யதா
மேலே கூறப்பட்ட மூன்று வழிமுறைகளும் பலன் தர வில்லை என்றால், அப்போது எதிரியை வெற்றி கொள்ளும் வகையில் முழுமையாக தயார் செய்து கொண்டு யுத்தம் புரிய வேண்டும்.
யுத்தத்தைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம் என்று கூறுகிற மனுஸ்ம்ருஇ, தவிர்க்க முடியாத நிலையில் யுத்தத்தின் அவசியத்தை ஏற்கிறது. யுத்தம் புரிவதற்கான வழிமுறைகளையும் இந்த ஸ்ம்ருதி வர்ணிக்கிறது :
‘யுத்தத்தில் புறமுதுகு காட்டாத அரசன், தனது ஆயுளின் முடிவில் ஸ்வர்க்கத்தை அடைகிறான்… யுத்தத்தில் விஷம் தோய்ந்த அம்புகளினாலோ, முட்கள் பொருத்தப்பட்ட ஆயுதங்களினாலோ எதிரியை வீழ்த்த முனையக் கூடாது… உறங்கிக் கொண்டிருப்பவனையோ, நிராயுதபாணியாக இருப்பவனையோ, யுத்தத்தில் பங்கேற்காமல் பார்வையாளனாக இருப்பவனையோ – தாக்கக் கூடாது… யுத்தத்திலிருந்து தப்பி ஓடுகிறவனையும், மடிந்து விட்ட உறவினனை நினைத்து துக்கத்தில் ஆழ்ந்து விட்டவனையும், படுகாயமுற்றவனையும் தாக்கக் கூடாது…
“தன்னுடைய பலவீனங்களை எதிரி அறிந்து கொண்டு விடா மல் மறைத்துக் கொண்டு, எதிரியின் பலவீனங்களை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்; ஆமை தனது அவயவங்களை உள்ளே இழுத்துக் கொள்வது போல, தனது பலவீனங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.
“நாரை போல, தனக்கு சாதகமானதையே எதிர்நோக்க வேண்டும்; சிறுத்தையைப் போல பாய வேண்டும்; சிங்கம் போல எதிரியை பலமாகத் தாக்க வேண்டும்; முயலைப் போல, நெருக்கடியில் நொடியில் பின்வாங்கவும் வேண்டும்…
‘தன்னைவிட பலம் மிகுந்த எதிரியிடம், நேரத்திற்குத் தகுந்த வாறு – சகப்பது, சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வது, யுத்தம் புரிவது, இடர் தாக்குதல் செய்வது, கூட்டு வைத்துக் கொள்வது என்ற வழிமுறைகளில் எது பொருத்தமோ, அதைக் கையாள வேண்டும்…
‘அண்டை நாடு, எதிரியாக உருவெடுக்கக் கூடும் என்பதை அரசன் உணர்ந்திருக்க வேண்டும்; அதே போல அண்டை நாட்டின் நட்பு நாட்டையும் எதிரியாக உருவெடுக்கக் கூடிய நாடாகவே உணர வேண்டும். அண்டை நாட்டிற்கு அருகில் இருக்கிற நாடு நட்புறவு கொள்ளத்தக்கது; இவ்வாறு இல்லாத நாடுகள் பெரும் கவனத்திற்கு உரியவை அல்ல…
‘ஒரு நாட்டுடன் யுத்தம் நேரிடுகிறபோது மேற்சொன்ன எதிரி நாடு, நட்பு நாடு, கவனத்திற்கு உரியதல்லாத நாடு ஆகிய எதுவும், எதிர்பாராத நடவடிக்கைகள் மூலம் தன்னை ஏமாற்றி விடக் கூடிய சூழ்நிலை ஏற்படாதவாறு அரசன் பார்த்துக் கொள்ள வேண்டும்…
‘மார்கழி, பங்குனி, சித்திரை – ஆகிய மாதங்கள், ஒரு அரசன் தனது எதிரியை நோக்கி தனது படையை நடத்திச் செல்வதற்கு உரிய மாதங்கள்…
மேற்கண்ட மாதங்கள் அல்லாத மற்ற மாதம் ஏதாவது ஒன்றில், எதிரி நாட்டில் நிலவக் கூடிய சோதனையான சூழ்நிலையின் காரணமாக, வெற்றி நிச்சயம் என்ற நிலை தோன்றினால், அப்போது ஒரு அரசன், உடனடியாக தனது படைகளை நடத்திச் சென்று அந்நாட்டின் மீது படையெடுத்துவிட வேண்டும்…
மனுஸ்ம்ருதியில் யுத்தங்களை நடத்துகிற முறைகள் பற்றிச் சொல்லியிருப்பதில் ஒரு சிறிய பகுதியையே நாம் இங்கே பார்த்தோம். படையின் எந்தெந்தப் பிரிவினர் எப்படி எப்படி செயல்பட வேண்டும் என்பது உட்பட, போர் முறைகள் மிகவும் விரிவாக மனுஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளன. இந்த விஷயத்திலும் சரி, அடுத்து வருகிற பகுதிகளிலும் சரி, நாம் முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு.
மனுஸ்ம்ருதி இயற்றப்பட்ட காலம், நிச்சயமாக நிர்ணயம் ஆகவில்லை. அதில் கண்டுள்ள சிந்தனையின் பரப்பையும், ஆழத்தையும் கண்டு, அதை வைத்துக் கொண்டே ‘இது மிகவும் முந்தைய காலத்தில் இயற்றப்பட்டது அல்ல‘ என்ற முடிவிற்கு மேலை நாட்டவர் வந்துவிட்டனர். அதனால் அது இயற்றப்பட்ட காலம், அவர்களால் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதையே நாமும் ஏற்றுக் கொண்டு விட்டோம். அவ்வளவு பின்னுக்குத் தள்ளப்பட்டும் கூட, இதன் தோற்றம் ‘கி.மு. இரண்டாவது நூற் றாண்டிலிருந்து, கி.பி. இரண்டாவது நூற்றாண்டுக்குள்! என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், மேற்கண்ட கால அளவிற்கு மிகவும் முந்தையது என்று ஏற்கப்பட்டுள்ள மஹாபாரதத்திலேயே, மனுஸ்ம்ருதி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அதாவது, இது மிகப் பழமை யான நூல். அப்படிப்பட்ட நூலில் உள்ள சிந்தனைகள் எவ்வளவு ஆழமுடையவையாக இருக்கின்றன என்ற நினைப்பை மனதில் வைத்துக் கொண்டு இதன் பகுதிகளைப் படிக்க வேண்டும். அப்போது தான், மற்ற பல நாடுகள் யுத்த முறைகள், சட்டம், நிர்வாகம், அமைச்சரவை… போன்றவை பற்றி சிந்திக்கத் தொடங்குவதற்கு மிகவும் முன்னதாகவே, நமது நாட்டில் இந்த சிந்தனைகள் பெரிதும் வளர்ந்திருந்தன என்பதை நம்மால் உணர முடியும்.
உதாரணமாக, ‘நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும்; அவர்கள் நீதிமன்றத்தில் பொய் கூறினால், அதற்கு தண்டனை உண்டு…’ என்பதெல்லாம் இன்று, சர்வசாதாரணமான தகவல்களாகத் தெரியும். ஆனால் உலக நாடுகள் பலவும் இவை பற்றி யோசிப்பதற்கு முன்பாக, இங்கே இதற்கான வழிமுறை கள் கூட வகுக்கப்பட்டு விட்டன என்பது பெருமைக்குரிய விஷயம்தானே!
நிர்வாகம் பற்றி மனுஸ்ம்ருதி கூறியுள்ளவற்றில் ஒரு சில பகுதிகள் :
ராஜ்யம் ஒழுங்காக நடத்திச் செல்லப்படுவதற்காக நூறு, ஆயிரம் என்ற அளவில் கிராமங்களைக் கொண்ட பகுதிகளுக்கும் தலைமை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்…
‘ஒரு கிராமத்திற்கு தலைமை அதிகாரியாக இருப்பவர், அந்த இராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய வழக்குகளை விசாரிக்கலாம்; தனக்கு அதிகாரமில்லாத வழக்குகளை அந்தத் தலைமை அதிகாரி, பத்து கிராமங்களின் தலைவரின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும்; தன்னுடைய அதிகாரம் பற்றிய நிச்சயமில்லாத தன்மை நிலவினால், அப்போது பத்து கிராமங்களின் தலைவர், சம்பந்தப்பட்ட வழக்கை நூறு கிராமங்களின் தலைவருடைய விசாரணைக்கு அனுப்ப வேண்டும்; அதே போன்ற நிலையில் வழக்கு, ஆயிரம் கிராமங்களின் தலைவருக்கு அனுப்பப் பெற வேண்டும்…
‘நகரங்களில் நியமிக்கப்படும் அதிகாரிகள், அங்கு நடக்கும் பணிகளை மேற்பார்வையிட வேண்டும்; அரசனால் நியமிக்கப் பட்டவர்கள், சில நேரங்களில் மோசடி செய்யக் கூடும்; அம்மாதிரியான அதிகாரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது அரசனின் கடமை…
‘தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கும் அதிகாரிகள், மற்றும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பெறும் அதி காரிகள் ஆகியோரிடமிருந்து, அவர்களுடைய சொத்துக்களை அரசன் பறிமுதல் செய்து, அவர்களை நாடு கடத்த வேண்டும்…
அட்டைகள் மெதுவாக ரத்தத்தை உறிஞ்சுகின்றன; கன்றுக் குட்டிகள் மெதுவாக பசுவின் பாலைக் குடிக்கின்றன; வண்டுகள் மெதுவாக மலர்களிலிருந்து தேனை சேர்க்கின்றன; அதே போல அரச னானவன், வரியை கொஞ்சம் கொஞ்சமாகப் பெற வேண்டும்…
‘ஒரு பொருளை வியாபாரி பெற்ற விலை; அதை அவன் விற்கும் விலை; போக்குவரத்து செலவு; பொருளைப் பாது காப்பதற்கு ஆன செலவு – ஆகியவை ஒருபுறம்; காடுகள், மலைப் பகுதிகள், நதிகள் முதலியவற்றையும் சேர்த்து, பலவற்றை நிர்வகிக்க அரசுக்கு ஏற்படும் செலவு ஒருபுறம். இவை இரண்டையும் பற்றி தீவிரமாக சிந்தித்து, அரசன் தனது வரிவிதிப்பு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும்…
‘சிறு வியாபாரிகளாகிய வசதியற்றவர்கள் மீது விதிக்ஃப்படுகிற வரி, பெயரளவில்தான் இருக்க வேண்டும்…
‘ஆதரவளிக்க யாரும் இல்லாதவர்களுடைய சொத்துக்களை, அரசன் தனது பராமரிப்பில் வைத்திருந்து, அவர்கள் உரிய வயதை அடைந்தவுடன் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்…
‘அதே போல, மக்கட்பேறு இல்லாத தனி பெண்மணிகள், நெருங்கிய உறவினர்கள் இல்லாத பெண்மணிகள், விதவைகள், நெடுந்தூரம் உள்ள நாடுகளுக்குச் சென்றுள்ள கணவனை உடைய பெண்மணிகள்- ஆகியோரின் சொத்துக்களையும் அரசன் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்’…
மேற்கூறப்பட்ட வகையான நிலைகளில் உள்ள பெண்மணி களின் சொத்தை அபகரித்துவிட முயல்கிற அவர்களுடைய ஆண் உறவினர்களை, திருடர்களாக பாவித்து, அரசன் தண்டனை அளிக்க வேண்டும்…
பெண்களை மிகக் கேவலமான நிலையில் வைத்து விட்ட நூல் – என்று விமர்சிக்கப்படுகிற மனுஸ்ம்ருதி, பெண்கள் மீது காட்டியுள்ள உண்மையான அக்கறை மேற்கண்ட பகுதிகளில் தெளிவாகிறது. மேலெழுந்தவாரியாகப் பார்த்து, விவரம் அறியா மலே விமர்சனம் செய்வது பெரும் தவறாக முடியும் என்பதற்கு – மனுஸ்ம்ருதி பற்றிய பல அரசியல்வாதிகளின் விமர்சனங்களே சான்று.
மேலே கண்டவாறு நிர்வாகம், வரிகள், பெண்களின் சொத்துக் கள்- போன்ற விஷயங்கள் பற்றி கூறியுள்ள மனுஸ்ம்ருஇி, வழக்குகள் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.