மனு ஸ்ம்ருதியில், குற்றங்கள், வழக்குகள், தண்டனைகள் ஆகியவை பற்றிய பகுதி, வழக்குகளின் தன்மை பற்றிய குறிப்புடன் தொடங்குகிறது :
‘திருப்பித் தரப்படாத கடன் தொகை; அறக்கட்டளை நிறுவப்படுவது; ஒரு சொத்திற்கு உரிமை இல்லாதவன் அதை விற்பது; கூட்டு வியாபார விஷயங்கள்; மற்றவனுக்குக் கொடுக்கப் பட்டதை திரும்பப் பெறுவது; ஒரு வேலையாளுக்கு சம்பளம் தரப்படாமல் இருப்பது; ஒப்பந்தம் அல்லது கொடுத்த வார்த்தை ஆகியவற்றின்படி செயல்படாமல் இருப்பது; விற்கப்பட்ட பொருளை, கொடுக்காமல் இருப்பது… ஆடு, மாடுகளின் சொந்தக் காரனுக்கும், அவற்றைப் பார்த்துக் கொள்பவனுக்கும் இடை யிலான விசாரணைகள்; எல்லைத் தகராறுகள்; அடிதடி; வசை மொழிகள் பேசப்படுவது; திருட்டு; கண்மூடித்தனமான செயல்; பிறன் மனை நாடுதல்; கணவன் – மனைவி கடமைகள்; பிதுரார்ஜித சொத்துப் பங்கீடு; சூதாட்டம்… ஆகியவை வழக்குகளின் காரணங் களாகும்…
‘உண்மையை பொய் வென்று விடுகிற இடமாகவும், நீதி என்ற ஊசி முனையினால் பொய்மை துளைக்கப்படாத இடமாகவும் இருக்கிற நீதிமன்றத்தில் அமர்கிறவர்கள், பாவத்தினால் பீடிக்கப் பட்டவர்கள் ஆவார்கள்…
‘ஒரு பொய்ப் புகாரை பஇவு செய்பவனுக்கு கால் பாகம்; அவன் சார்பாக பொய் கூறுகிற சாட்சிகளுக்குக் கால் பாகம்; வழக்கில் அவனுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிற நீதிபதிகளுக்கு கால் பாகம்; அந்த நாட்டின் அரசனுக்கு கால் பாகம் – என்று அதர்மத்திற் கான பாவம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது…
இன்னமும் கூட, உலக நாடுகள் எதிலும் செய்யப்படாத ஒரு சட்டம் மனுவினால் வகுக்கப்பட்டிருக்கிறது. திருட்டுப் போன ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டால், அது உரியவனிடம் சேர்ப்பிக்கப் பட வேண்டும்; இது அரசின் கடமை என்று இன்றைய சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் மனுவோ, ‘கண்டுபிடிக்கப்பட்டால்! என்று கூறவில்லை. அம்மாதிரி பொருள் ‘கண்டுபிடிக்கப்பட்டு‘ உரிய வரிடம் சேர்ப்பிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று மனுஸ்ம்ரதி கண்டிப்பு செய்கிறது; அத்துடன் விட்டுவிடவில்லை; அம்மாதிரி பொருள், உரியவரிடம் சேர்ப்பிக்கப்படாமல் இருந்தால், திருட னின் பாவம் அரசனை வந்து சேரும் என்று மனு எச்சரிக்கிறார்.
ஆட்சியின் மூலமாகவே கூட பொய் வழக்குகள் போடப்படலாம் என்பது அந்த காலத்திலேயே சிந்இிக்கப்பட்டிருக்கிறது; கண்டிக்கப் பட்டிருக்கிறது. அதே போல, ஒரு ஆதாயத்தைப் பெற்று, அதன் காரணமாக வழக்குத் தள்ளிப் போடப்படுவதற்கு, அரசு வழி செய்யக் கூடாது என்றும் மனுஸ்ம்ருதி கூறுகிறது :
‘அரசனோ, அரசு அலுவலர்களோ, பேராசையின் காரண மாக, பொய் வழக்குப் போடுவதும், ஆதாயத்திற்காக ஒரு வழக்கு விசாரணையை தள்ளிப் போடுவதும் கூடாது‘.
அதாவது ஆட்சியாளர்களின் இம்மாதிரி கூடாத அணுகு முறைகள், ஏதோ இன்று திடீரென்று தோன்றிவிட்ட வக்ரங்கள் அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம், இந்த மாதிரி செயல்கள் அப்போதும் நடந்திருக்க வேண்டும்; அதனால்தான் இதற்கென்று குறிப்பாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, இந்த அணுகுமுறை சுண்டிக்கப்பட்டிருக்கிறது.
கடன் வாங்கியவர், ‘வாங்கவே இல்லை‘ என்று கூறி மறுத் தால், கடன் கொடுத்ததாகக் கூறி, அதைத் திரும்பப் பெறுவதற்காக வழக்கு போடுகிறவன் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அப்படி சமர்ப்பித்தால், கடன் இருப்பித் தரப்பட வேண்டும் என்கிற உத்திரவு இடுவதோடு மட்டுமல்லாமல், கடன் வாங்கியவன் மீது அபராதமும் விதிக்க வேண்டும்… சாட்சிகளாக சிலரைக் குறிப் பிட்ட வாத, பின்னர் அந்த சாட்சிகளை கொண்டு வர: முடியவில்லை என்று சொன்னால், அப்போது அவனுடைய வழக்குத் தள்ளுபடி யாகும்…
‘வழக்கில் சம்பந்தப்பட்டவரோடு, அல்லது அவர்களுடைய உறவினர்களோடு, பண விஷயங்களில் தொடர்புடையவர்கள்; அவர்களுடைய எதிரிகளுடன் அம்மாதிரி தொடர்பு உடையவர்கள்) நோயுற்றவர்கள்; குற்றங்களைப் புரிந்தவர்கள்; ஏற்கெனவே ஒரு வழக்கில் பொய் சாட்சி அளித்தவர்கள்- ஆகியோர்சாட்சிகளாக ஏற்கத் தகாதவர்கள்…’
இவ்வாறெல்லாமும், இன்னமும் பல விதிமுறைகளின் மூலமாகவும், சாட்சிகள் பற்றி மனுஸ்ம்ருதி விரிவாகப் பேசுகிறது. இன்றைய “எவிடென்ஸ் ஆக்ட்’டின் ஆரம்பம் அன்றே மனுவினால் செய்யப்பட்டிருக்நெது என்று கூட சொல்லி விடலாம். அவ்வளவு விவரமாக இந்த அம்சம் மனுவினால் அலசப்பட்டிருக்கிறது. சாட்சிகள் உண்மை கூற வேண்டியதன் அவசியத்தைப் பெரிதும் வலியுறுத்துகிற மனுஸ்ம்ருதி, ஒரு விஷயத்தில் சாட்கெள் பொய் சொல்வதையும் ஏற்கிறது என்பது வியப்புக்குரிய விஷயம்.
‘ஒரு சூத்ரனோ, ஒரு வைசியனோ, க்ஷ்த்ரியனோ, ப்ராம்மணனோ, தனது சாட்சியத்தினால் தூக்கிலிடப்படலாம் என்கிற நிலையில் ஒரு சாட்சி பொய் சொல்வது தவறல்ல; அந்த நிலையில் பொய், மெய்யைவிட விசேஷமானது.
எதனால் இப்படி ஒரு விதிவிலக்கு ஏற்படுத்தப்பட்டது என்பது புரியவில்லை; ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியம் என்ற அடிப்படையில், இந்த விதிவிலக்கு அளிக்கப்பட் டுருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த விதிவிலக்கின் ழ் ஒருவன் பொய் சாட்சியம் அளிக்க நேர்ந்தால், அதன் பின் அதற்காக அவன் செய்ய வேண்டிய பிராயச்சித்த வழிமுறைகளும், மனுஸ்ம்ருதியிலேயே விளக்கப்பட்டிருக்கின்றன.
வட்டி விகிதங்கள், அடமானம், விற்பனை போன்றவற்றிற்கான விதிமுறைகளும் இந்த ஸ்ம்ருதியில் வகுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய சட்டத்தில் ‘அட்வர்ஸ் பொஸஷன்’ என்ற ஒரு அம்சம் உண்டு. அதாவது ஒருவன் ஒரு சொத்தை குறிப்பிட்ட காலத்திற்கு, ஆட்சேபணைகள் எதையும் சந்திக்காமல் அனுபவித்து வந்இருந்தால்- அதுவே அவனுக்குச் சொத்துரிமையைத் தந்துவிடும். இப்படி ஒரு விதிமுறை மனுஸ்ம்ருதியில் கூறப்பட்டிருப்பது, அந்த காலத் இலேயே சட்ட சிந்தனை எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
‘ஒரு சொத்தின் சொந்தக்காரன், பத்து வருடங்களுக்கு வேறு: ஒருவன் அந்த சொத்தை அனுபவிப்பதை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தால் – அப்போது அந்த சொத்துக்குரியவன் அந்த சொத்தைத் இரும்பிக் கேட்க முடியாது‘.
இவ்வாறு ‘அட்வர்ஸ் பொஸஷன்’ தத்துவத்தைக் கூறிவிட்டு, அதற்கு ஒரு விதிவிலக்கையும் மனுஸ்ம்ருஇி ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சொத்துக்குரியவன் சிறுவனாகவோ (மைனர்), அறிவு வளர்ச்சி இல்லாதவனாகவோ (இடியட்) இருந்தால், அப்போது அவன் பத்து வருடம் பேசாமல் இருந்தான் என்பதால், அவனுடைய சொத்தை அனுபவித்தவன் அதில் உரிமை கோர முடியாது – என்று மனுஸ்ம்ருதி விதித்திருக்கிறது.
இதுவும் கூட இன்றைய சட்ட சிந்தனையே. மைனர்கள், மனவளர்ச்சி இல்லாதவர்கள் ஆகியோர் ஒப்பந்தம் செய்து கொள்ளத் தகுதி இல்லாதவர்கள் என்று இன்றைய சட்டம் கூறுகிறது. அதாவது, சட்ட நிர்பந்தங்களிலிருந்து அம்மாதிரியானவர்களுக்கு இன்று விதிவிலக்கு இருக்கிறது; இது அன்றே விஇக்கப்பட்டிருக்கிறது என் பதுதான் விசேஷம்.
மனுவின் சட்ட விதிகளில், இன்றைய சட்டத்தின் வேறு சில அம்சங்களையும் பார்க்க முடிகிறது. அவற்றில் ஓரிரண்டைப் பார்ப்போம்.