மனு ஸ்மிருதியில், வகுக்கப்பட்டுள்ள, சட்ட விதிமுறைகளில் மேலும் ஒரு சிலவற்றைப் பார்ப்போம் :
“ஒருவன் வாங்கிய கடனுக்கு, மற்றொருவன் உத்திரவாதம் தந்திருந்தால், அப்போது, கடன் வாங்கியவன் நீதிமன்றத்தின் முன்பு வராத நிலையில், உத்திரவாதம் தந்திருப்பவன், அந்தக் கடன் தொகையை இருப்பிச் செலுத்த வேண்டியவன் ஆகிறான்! என்று கூறுகிறது மனுஸ்ம்ருதி. இன்று ‘ஷ்யூரிட்டி‘ பற்றிய விதிமுறை இத்தகையதே. இதுவும் அன்றே சிந்திக்கப்பட்டிருக்கிறது.
மனிதர்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கிற மருத்துவர்கள், இன்று சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆனால் மனுஸ்ம்ருதியில், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், மிருகங்களுக்குக் கூட ஒரு மருத்துவர் தவறான சிகிச்சை அளித்தால், அவர் தண்டனைக்குரியவர் ஆக்கப்பட்டிருக்கிறார்.
கலப்படம் செய்பவர்கள், தரம் குறைந்த பொருளை விற்பவர் கள், வெவ்வேறு பேர்களுக்கு வெவ்வேறு விலைகளில் பொருட்: களை விற்பவர்கள் – ஆகியோரும் தண்டனைக்குரியவர்கள் என்று மனுஸ்ம்ருதி கூறுகிறது.
வழக்குகள், குற்றங்கள், சாட்சியங்கள், தண்டனைகள் ஆகி யவை பற்றி மனுஸ்ம்ருதி கூறியுள்ளதில் ஒரு சிறு பகுதியைப் பார்த்தோம். குடும்பம் பற்றியும், அதில் கணவன் – மனைவி ஆகியோர் கடமை பற்றியும் மனுஸ்ம்ருதி விரிவாகப் பேசுகிறது :
பெண்களைப் பற்றி மனு மிகச் கடுமையாக பல கருத்துக்களைக் கூறியிருக்கிறார். உதாரணமாக, ‘நகைகள் மீது மோகம், படுக்கை போன்ற சுகங்களில் நாட்டம், மிதமிஞ்சிய உணர்வு, கோபம், துரோக சிந்தனை, அவதூறு பேசுவது ஆகியவை பெண்களின் இயற்கை…’ என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது.
அதே சமயத்தில், மனு பெண்களின் உயர்வையும் கூறியிருக்கிறார்.
“பெண்கள், மகனைப் பெற்றுத் தருகிறவர்கள்; வீடுகளின் விளக்கு போன்றவர்கள்; செல்வம் மற்றும் மங்களம் ஆகியவற்றின் இருப்பிடமானவர்கள்; அவர்களை கெளரவிக்க வேண்டும்; ஒரு இல்லத்தில் மனைவிக்கும், செல்வத்தின் தெய்வத்திற்கும் இடையே வித்தியாசமில்லை.
ஒருவனுக்கு மறுமணம் நடக்க மனுஸ்ம்ருதி அனுமதிக்கிறது. ஆனால் இது தொடர்பாக, சில நேரங்களில் ஒரு நிபந்தனை இருக்கிறது : கணவனின் நன்மையை விரும்புகிறவளாகவும், நன்னடத்தை உடையவளாகவும் உள்ள மனைவிக்கு, ஏதாவது ஒரு இராத நோய் வந்து விட்டால், அப்போது அவளுடைய அனுமதி பெற்று, அவளுடைய கணவன் வேறொரு பெண்ணை மணக்க லாம்; ஆனால் ஒருபோதும் எந்த நிலையிலும், முதல் மனைவியை அவன் அவமக்கக் கூடாது ‘.
‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும், அது பொதுவில் வைப்போம்” என்றார் பாரதியார். இன்று பலரும், கற்பு இரு தரப்புக்கும் வேண்டும் என்று பேசுஇறார்கள். பல நூறு வருடங்களுக்கு முன்பாக இயற்றப்பட்ட மனுஸ்ம்ருதி என்ன சொல்கிறது?
‘ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் அபசாரம் செய்யா மலும் இருவரும் இருக்க வேண்டும். அது கணவன், மனைவி ஆகியோர் முதற் கடமையாகும். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ்வது, ஒருவருக்கு ஒருவர் துரோகம் இழைப்பது ஆகியவற்றை இருவருமே தவிர்க்க வேண்டும்’ என்று சொல்கிறது மனுஸ்ம்ருதி. அதாவது, கற்பு நிலையை பொதுவில் வைப்பது, இன்று ஏதோ புதிதாகத் தோன்றிவிட்ட புரட்சிக் கருத்து அல்ல. அன்றே கூட, இதுவும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸத்வம், ரஜஸ், தமோ – குணங்கள் பற்றிய விளக்கத்துடன் ஆன்மாவை உணர வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி, மனு ஸ்ம்ருதி நிறைவு அடைகிறது.
‘ஸத்வம் – ஞானம்; ரஜஸ் – பற்று; மற்றும் விருப்பு வெறுப்பு; தமஸ் – அறியாமை. எல்லா ஜீவராசிகளிடமும் இந்த மூன்று குணங்களும் இருக்கின்றன…
‘தூய்மையான அமைதி ஸத்வம் என்று உணரப்பட வேண் டும்… ஆன்மாவிற்கு வேண்டாததும், துன்பத்துடன் இணைந்ததும், மனிதர்களை இந்திரிய இன்பங்களை நாட வைப்பதுமான குணம் ரஜஸ்; நல்லது, கெட்டது என்ற பாகுபாடு எதையும் உணராமல், இந்திரிய இன்பத்திவேயே மூழ்கி, அறியாமையில் உழல்கிற குணம் – தமஸ்…
‘வேதங்களை அறிய முற்படுவது, தவங்களைச் செய்வது, சாஸ்திர அறிவை நாடுவது, இந்திரியங்களை அடக்குவது, தர்மத் இன் பாதையில் செல்வது, தூய்மை, ஆன்ம அறிவை நாடுவது – ஆகியவை ஸத்வ குணத்தை குறிக்கும் நடத்தைகள்…
‘ஆசையினால் உந்தப்பட்டு குறிப்பிட்ட காரியத்தை முடிப்ப இல் ஈடுபாடு; பொறுமையின்மை; விலஃகப்பட்ட செயல்களில் நாட்டம்; இந்திரிய இன்பங்களில் சுகம் காண்பது – ஆகியவை ரஜோ குணத்தைக் குறிக்கும் நடத்தைகள்…
‘பேராசை; சோம்பல்; கொடுமை; விலக்கப்பட்ட வாழும் வகைகளை நாடுவது; மூடத் தன்மை – ஆகியவை தமோ குணத் தைக் குறிக்கும் நடத்தைகள்…”
‘ஸத்வம், ரஜஸ், தமஸ் – ஆகிய குண வகைகள் எல்லா மனிதர் களிடமும் இருக்கின்றன. ஒரு மனிதனிடம், இந்த மூன்றில் எது அதிகமாக இருக்றெதோ, அந்த குணமுடையவனாக அந்த மனிதன் இகழ்கிறான்… ‘
– இவ்வாறு முவ்வகை குணங்களைப் பற்றிச் கூறிவிட்டு, ஆன்ம அறிவைப் போற்றுகிறார் மனு. யாகங்கள் போன்ற வேதச் சடங்குகள் இரு வகையானவை என்று கூறுகிறார். ஒன்று ‘ப்ர வ்ருத்தம்; மற்றொன்று ‘நிவ்ருத்தம்’. மகழ்விற்கும், செழிப்பிற்கும் வழி செய்வது ப்ரவ்ருத்தம்; மோட்சம் அடைய பாதை அமைப்பது ‘நிவ்ருத்தம்’. இவ்வுலக வாழ்வில் ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்றோ, மேலுலகில் நற்கதி கிட்ட வேண்டும் என்றோ விரும்பி, அதற்காகச் செய்யப்படுகிற சடங்கு ப்ரவ்ருத்தம். வேதச் சடங்கைச் செய்வது கடமை என்றெண்ணி, எந்த ஒரு வேண்டுதலும் மனதில் இல்லாமல், அந்தச் சடங்கைச் செய்தால் – அது நிவ்ருத்தம். இரண்டாவதுதான், மோட்ச ஸாதனம், எல்லா உயிர்களிலும் தன்னையே கண்டு, தன்னிலே எல்லா உயிர்களையும் கண்டு, தன்னையே அர்ப்பணித்து விடுகிறவன்,, விடுதலை என்னும் நிலையை எய்துவான் – என்று கூறுகிறது மனுஸ்ம்ருதி.
ஆக, மனுஸ்ம்ருதி, அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கப் பட வேண்டிய வழிமுறைகலிலிருந்து, மோட்ச மார்க்கத்தை எய்துகிற வழி வரையில், பல விதிமுறைகளை வகுத்திருக்கிறது. வளர்ந்துவிட்ட இன்றைய மனித சமுதாயத்தினால், இயற்றப் பட்டுள்ள சட்டங்களின் வழிமுறைகளில் சிலவும் கூட, அன்றே மனுவினால் காணப்பட்டவை என்பது வியப்புக்குரிய விஷயம். நியாய ஸ்தலத்தில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலிருந்து, ஒரு வேலையாளுக்கு உரிய நியாயமான ஊதியம் கொடுக்கப் பட்டாக வேண்டும் என்பது வரைபில், மனு கூறியிருக்கிற பல விதி முறைகளில், ஒரு ஆழமான சமூக பொறுப்புணர்வு காணப்படுகிறது.
இதைத் தவிர, யுத்த வழிமுறைகளும், விரிவாகக் கூறப்பட்டிருக் இன்றன. எந்தெந்தப் படை, யுத்த அரங்கில் எங்கெங்கே நிறுத்தப் பட வேண்டும் என்பது உட்பட, மனு கண்ட யுத்த சாத்திரம் பல போர் முறைகளைக் கூறுகிறது. அமைச்சரவை, நிர்வாகம், வரி விதிப்பு, வர்த்தகம், பாதுகாப்பு… என்று ஆட்சியின், பொறுப்புகள் பலவற்றை வகைப்படுத்தி அவற்றிற்கான விதிமுறைகளையும் மனுஸ்ம்ருதி எடுத்து வைக்கிறது. இத்தனை பொறுப்புகளை நிர்வகிப்பதால், அரசனுக்கு மிக உயர்ந்த ஸ்தானத்தை மனுஸ்ம்ருதி அளிக்கிறது.
இவ்வளவையும் சொல்லி, ஆன்ம ஞானத்தையும் வலியுறுத்துகிற இந்த நூல் இப்போது பெரிதும் கண்டனத்திற்குள்ளாவது வருத்தத்திற்குரிய விஷயம். ‘நான்கு வர்ணங்களை சிருஷ்டி செய்து, ப்ராம்மணனுக்கு பிறப்பின் மூலமே பல சலுகைகளை தந்து விட்ட நூல் மனுஸ்ம்ருதி: என்ற எண்ணமே, இன்றைய பல கண்டனங் களுக்கு அடிப்படைக் காரணம். வர்ணங்கள் பிறப்பினால் அடையப் படுகின்றன என்ற நிலை, மனுவினால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. வர்ணங்கள், வாழும் வகையினாலும், குணத்தினாலும் அடையப் பெறுகின்றன என்கிற நிலை மாறி, அவை பிறப்பிலேயே அடையப்படுகின்றன என்கிற நடைமுறை நிலை, மனுஸ்ம்ருஇிக்கு முன்பாகவே வந்துவிட்டது. அதை மனுவும் ஏற்றிருக்கிறார். ஆனால், ஒரு வர்ணத்தைச் சார்ந்தவர், மற்றொரு வர்ணத்தை அடைய முடியும் என்றும் மனு கூறியிருக்கிறார் என்பதை நாம் பார்த்தோம்.
அது தவிர, ‘பிறப்பினால் மட்டுமே ப்ராம்மணனாக இருந்து கொண்டு, மற்றபடி ப்ராம்மணனுக்கு விதிக்கப்பட்ட மிகக் கடுமையான வாழ்க்கை முறையை மேற்கொள்ளாதவனுக்கு, மனு சலுகைகளை மறுத்திருக்கிறார். அப்படிப்பட்ட ப்ராம்மணனை மனுஸ்ம்ருதி மிகக் கடுமையாகப் பார்க்கிறது. அவனுக்கு தானம் கொடுப்பது கூட மகா பாவம் என்று கூறுகிறார் மனு.
முன்பே ஒரு அத்தியாயத்தில் நாம் பார்த்தது போல, நீதிமன்றத் இல் பதவி வகிக்கும் வாய்ப்பு, பிறப்பினால் மட்டுமே ப்ராம்மண னாக இருப்பவனுக்கு தரப்படுகிறது. மற்றபடி வாய்ப்புகள் அவ னுக்கு மறுக்கப்படுகின்றன. ஆகையால், ஒருவன் ப்ராம்மண வகுப்பில் பிறந்து விட்டால், மனு அவனை மிக உயர்ந்த நிலையில் வைக்கிறார் என்ற கருத்து மிகவும் தவறானது. இந்தத் தவறான கருத்தின் அடிப்படையில், மிகவும் அதிசயிக்கத்தக்க அற்புதமான நூலாகிய மனுஸ்ம்ருதியை கண்டனத்திற்கு மட்டுமே உரிதாக்கு வது, நமது சாதனையை நாமே இழிவுபடுத்துகிற செயலாகும். தன்னிலே மற்ற எல்லாவற்றையும் காண வேண்டும் என்ற சமப் பார்வையை வலியுறுத்துக நூல், கண்டிக்கத்தக்கது அல்ல.
மனுஸ்ம்ருதி இறுதியாகச் சொல்வது இதுவே : எல்லாவற்றி லும் தன்னையே பார்த்து, சமப் பார்வையைப் பெற்று, தன்னையே உணர்ந்தவன் ப்ரம்ம நிலையை எய்துகிறான்.