குடிசையின் ஓர் புறத்தில், விரட்டிகளை உடைக்க ஒரு கல் காணப்படுகிறது; மற்றொருபுறம் தர்ப்பைக் கட்டுகள்; ஈரக் கட்டைகள் உலர்வதற்காக கூரையின் மீது போடப்பட்டு, அதனால் குடிசையின் கூரை, அழுந்திக் கிடக்கிறது. இந்த பாழடைந்த குடிசைதான் சாணக்கியனின் இல்லம்.
இது ‘முத்ராராக்ஷஸம்’ என்னும் சரித்திர நாடக நூலில், சாணக்யர் எனப்படும் கெளடில்யரின், எளிமையான வாழ்க்கை முறையை விளக்குகிற வாசகம் :
‘ஓஹோ! இதுதான் இந்நாட்டு அரசனுடைய பிரதம மந்திரியின் வீடோ! என்று ஒருவன் பரிகாசமாகக் கேட்க, சாணக்யர் சொல்கிறார்: ‘ஒரு நாட்டின் பிரதம அமைச்சன், குடிசையில் வாழ்ந்தால், அந்நாட்டு பிரஜைகள் மாளிகைகளில் வாழ்கிறார்கள்; பிரதம அமைச்சனே வானளாவிய கட்டிடத்தில் வாழத் தொடங்கினால், அந்நாட்டு மக்கள் குடிசைகளில் வாழ்வார்கள்.
இப்படி ஒரு தியாக மனப்பான்மையுடன், சேவை ஒன்றையே பெரிதாக நினைத்து வாழ்ந்த சாணக்யன், நந்தர்களை வீழ்த்தி, சந்திர குப்தனை மன்னன் ஆக்கினான். சாணக்யனைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளைப் பார்த்தால், தியாகம் – கோபம்; பெருந்தன்மை – கர்வம்; தன்னம்பிக்கை – சந்தேகம்; பேரன்பு – கடுமை… என்ற பல மாறுபட்ட குணாதிசயங்கள் அவனிடம் இருந்திருப்பதை உணர முடிகிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட சாணக்யனிடம் முக்கிய மாக விளங்கிய குணாதிசயம் – தனக்கென்று எதையுமே விரும்பாத ஒரு யோகியின் மனப்பாங்கு. இப்படிப்பட்டவனுக்கு அசாத்ய மான அறிவு தீட்சண்யம் இருந்ததால், அவனால் ஒரு சாம்ராஜ்யத் தையே ஸ்தாபிக்க முடிந்தது. விஷ்ணுகுப்தன், சாணக்யன் என்ற பெயர்களையுடைய கெளடில்யர் எழுதிய ராஜநீதி சாஸ்இரம்தான். அர்த்தசாஸ்திரம்.
தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற சொற்றொடரில் வர்ணிக்கப்படுகிற நான்கு நிலைகளில் ‘அர்த்தம்’ என்பதற்கு செல்வம் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அர்த்தசாஸ்திர நூலில் இது இன்னமும் விரிவான பொருளுடன் பயன்படுத்தப் படுகிறது. இந்த நூலின் ஆரம்பமே இதைத் தெளிவாக்குகிறது :
‘பூமியை அடைவதற்கும், பாதுகாப்பதற்கும், பல ஆச்சார்யர். களால் இயற்றப்பட்ட அர்த்தசாஸ்திர நூல்களை ஒருங்கிணைத்து, இயற்றப்பட்ட நூல் இந்த அர்த்தசாஸ்இரம்”,
இந்த ஆரம்பத்இலிருந்தே இரண்டு விஷயங்கள் புரிகின்றன. ஒன்று : கெளடில்யனின் அர்த்தசாஸ்திரம், இந்த விஷயம் பற்றிய முதல் நூல் அல்ல; கெளடில்யருக்கு முன்பாகவே பலர் அர்த்த சாஸ்திர நூல்களை இயற்றி இருக்கிறார்கள். இரண்டு : அர்த்த சாஸ்திரம் என்பது பூமியை பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும் வழி முறைகளைக் கூறுகிறது – அதாவது இது ஒரு ராஜநீதி நூல், நிர்வாக நூல், யுத்த சாஸ்இரம்.
தனக்கு முன்பாகவே இருந்து வந்த அர்த்தசாஸ்திர நூல்களை: ஒருங்கிணைத்துத் தருவதாக கெளடில்யர் கூறினாலும், பலரிட மிருந்து தான் மாறுபடுவதை, இந்த நூவில் அவர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். தனக்கு முந்தையவர்கள் ஒரு விஷயம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சொல்லி விட்டு, தன்னுடைய கருத்து அவற்றிலிருந்து மாறுபட்டது என்பதையும் கெளடில்யர் குறிப்பிடுகிறார்.
ஆக, இது ஒரு தொகுப்பு நூல் அல்ல; முந்தைய கருத்துக்களை யும் கவனிக்கிற, புதிய விளக்க நூல். இந்த அணுகுமுறை, அர்த்தசாஸ்திரத்தின் தொடக்கத்திலேயே காணப்படுகிறது. தர்க்கம் (தத்துவம்); வேதங்கள்; பொருளீட்டல் (பொருளாதாரம்): நிர்வாகம் – இவை வித்யைகள் என்று கூறிவிட்டு, கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம் மேலும் சொல்கிறது :
‘மனுவை மட்டுமே ஏற்பவர்கள், வேதங்கள், பொருளாதாரம், நிர்வாகம் – ஆகியவை மட்டுமே வித்யைகள் என்று கூறுகின்றனர்; ஏனென்றால் தத்துவம் என்பது, வேதங்களின் ஒரு பகுதியே என்பது அவர்கள் எண்ணம். பிரஹஸ்பதியை ஏற்பவர்களோ, பொருளாதார மும், நிர்வாகமும் மட்டுமே வித்யைகள் என்று கருதுகிறார்கள்; அவர்கள் கூற்றின்படி, மற்றவை வேதத்தின் அங்கங்களே, தண்டநீதி எனப்படும், நிர்வாக சாஸ்திரமே வித்யை என்பது, உசனஸ் ஸின் வழியை ஏற்பவர்களின் கருத்து. ஆனால் கெளடில்யனோ முதலில் கூறப்பட்ட நான்குமே வித்யைகள் என்று கூறுகிறான்; அவற்றின் உதவி கொண்டு, ஆன்மீக ரீதியாகவும், நடைமுறை பலன்கள் ரீதியாகவும், ஒருவன் மேன்மை பெறலாம் என்பதால், இவை நான்கும் வித்யைகள் ஆகின்றன“.
இப்படி எடுத்த எடுப்பிலேயே, மற்ற தத்துவ விதிகளிலிருந்து, தான் மாறுபடுவதை கெளடில்யர் விளக்கி விடுகிறார். இந்த அணுகுமுறை, அவருடைய நூல் முழுதும் வியாபித்திருக்கிறது. பல இடங்களில், ‘கெளடில்யன் சொல்கிறான்! என்று கெளடில்யரே எழுதுகிறார். இது அக்கால இலக்கியங்களின் வழிமுறை.
இந்த நூல் பற்றி ஆராய்ச்சிகள் நடத்திய சில மேலைநாட்டு அறிஞர்கள், இதை மாக்கிவில்லியின் ‘தி பிரின்ஸ்! என்ற நூலுடன் ஒப்பிடுகிறார்கள். மாக்கிவில்லி, இத்தாலியில் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு அரசியல் தத்துவவாதி. இவர் அங்கே ஒரு பகுதியின் ஆட்சியிலும் பதவி வகித்தார். இவருடைய ‘ பிரின்ஸ்! – இன்றைய உலதின் பெரும் கண்டனத்திற்குள்ளான நூல். ‘எந்தவித தர்ம நியாயத்தையும் நினைத்துப் பார்க்காமல், தன்னை வளர்த்துக் கொள்வதிலேயே, ஒரு அரசன் கவனமாக இருக்க வேண்டும் மக்களின் அன்பைப் பெறுவதை விட, அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதுதான் அரசனுக்கு நல்லது… ‘ என்றெல்லாம் அறிவுரை கூறுகிற நூல், மாக்கிவில்லியின் ‘தி பிரின்ஸ்’.
ஆனால் அர்த்தசாஸ்திரம் இப்படிப்பட்ட நூல் அல்ல. எதிரிகளை வீழ்த்துவதிலும், அழிப்பதிலும் தயை தாட்சண்யமற்ற அணுகுமுறையை அர்த்தசாஸ்இரம் வற்புறுத்துகிறது. தந்இரம், நம்ப வைத்து ஏமாற்றுவது, திடீர் தாக்குதல் என்ற வழிமுறைகள் – ஏன், ஏவல், பில்லி, சூன்யத்தையும் கூட – கடைப்பிடித்து, ஒரு அரசன் தனது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று கெளடில்யர் கூறுகிறார். ஆனால் தன் நாட்டு மக்களை பாதுகாப்பதில் அரசனுக்கு பெரும் கடமைகளை அவர் விதிக்கிறார். ‘தன் மக்களிடத்தில் கருணை; எதிரிகளிடத்தில் கடுமை! என்பதே அர்த்தசாஸ்திரம் ஒரு அரச னுக்கு எடுத்துக் சொல்கிற வழிமுறை. இது மாக்கிவில்லியின் நூலில் இல்லை எனும்போது, இந்த இரண்டு நூல்களை சமமாகப் பார்ப்பது சரியல்ல.
தன் நாட்டு மக்களிடம் அரசன் நடந்து கொள்ள வேண்டிய விதத்தை கெளடில்யர் அணுகுகிற விதத்திற்கு ஒரு உதரணம் – இயற்கையின் சீற்றங்களின்போது, அரசனுக்கு அர்த்தசாஸ்திரம் விதிக்கிற வழிமுறை : இயற்கையின் சிற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தந்தையாக இருந்து அரசன் உதவிகளைச் செய்ய வேண்டும்’ என்று கெளடில்யர் விதிக்கிறார்.
இது மட்டுமல்லாமல், தீயினால் விபத்துக்கள் நேரிடாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும் விவரிக்கப்படுகிறது. கோடை காலங்களில் தெரு ஓரங்களில் எல்லாம், தண்ணீர் குடங்கள் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதிலிருந்து, வீடுகளின் உள்ளே, அடுப்பைப் பற்ற வைக்காமல் நெருப்பு மூட்டுவதை வெளியே செய்ப வேண்டும் என்பது வரை, பல அணுகுமுறைகள் கூறப்படுகின்றன. நெருப்பை அணைப்பதற்கான உபகரணங்கள் பட்டியலிடப்பட்டு, அவை எல்லா வீடுகளிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது, நகர அதிகாரியின் கடமை என்பதும் கூறப்படுகிறது
மழைக் காலங்களில், நீர் நிலைகளின் அருகே உள்ள இராமங் களைச் சார்ந்த மக்களை, வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இவற்றை சரியாக நடைபெற வைப்பது அரசனின் கடமை என்றும் கெளடில்யர் விதித்இருக்கிறார்.
இவ்வளவு விவரமாக அரசனின் கடமைகளைப் பார்க்கிற இந்த நூலில் எத்தனை நிர்வாக அம்சங்கள் எடுத்துரைக்கப்பட்டிருக்கின் றன என்பது வியப்புக்குரிய விஷயம். என்னென்ன விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன என்பது, இந்த நூலின் ஆரம்பத் இல் கெளடில்யராலேயே பட்டியலிடப்பட்டிருக்கிறது. ‘வித்யை களின் விவரங்கள்; பெரியோர் நட்பு; இந்திரியங்களை அடக்குவது; அமைச்சர்களை நியமிப்பது; அதிகாரிகள் நியமனம்; அமைச்சர் களின் நேர்மையை சோதிப்பது; உளவுத் துறையினர் நியமனம்; தன் நாட்டில் பலவித ஆசை காட்டுதல்களுக்கு மயங்கி விடக் கூடிய வர்களை கண்காணிப்பது – அத்தகையவர்கள் எதிரி நாட்டில் இருப்பதை கவனித்து அவர்களை தனது வசம் இழுப்பது; அயல்நாடு செல்லும் தூதுவரின் தகுதிகள்; அரசனின் பாதுகாப்பு; விவசாயத் இற்கு உதவாத நிலங்களை விற்பது; கோட்டை நிர்மாணம்; வரி விதிப்பு; கணக்குகள் மற்றும் ஆவணங்கள் துறை; வசூல் ஆகிவிட்ட வரியை மோசடி செய்து பெற்றவர்களிடமிருந்து அதைக் கைப்பற்று வது; தொழிற்சாலைகள் மற்றும் உலோகச் சாலைகள்; வனத்துறை; விவசாயத் துறை; அளவுகள் மற்றும் எடைகள் துறை; துணி வகைகள் துறை; மதுபான கட்டுப்பாடு; நகர அதிகாரிகள் கடமைகள்… என்பவை இந்த நூலின் ஒரு பகுதி. இது தவிர, நிதி நிர்வாகம், அயல்நாட்டு உறவு, யுத்த சாஸ்திரம்… போன்றவை பல்வேறு பகுதிகளில் மிகவும் விவரமாக வர்ணிக்கப்பட்டிருக் இன்றன. இறுதியில், ஏவல் மூலம் எதிரியை வீழ்த்தும் விஷய மும் வருகிறது.
சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட, இந்த அதிசயிக்கத்தக்க நூலின் ஒரு சில பகுதிகளை மட்டும் நாம் பார்ப்போம்.